Monday, June 16, 2008

இராமரும் கிருஷ்ணரும் இறைதூதர்கள் தான் - டாக்.ஜவாஹிருல்லாஹ்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இராமரும் கிருஷ்ணரும் இறைதூதர்கள் தான் - டாக்.ஜவாஹிருல்லாஹ்

புதிய அரசியல் மோகத்தில் திளைத்திருக்கும் ஜவாஹிருல்லாஹ், பதவியை அடைவதற்காக இந்துக்களின் ஓட்டை பெறும் நோக்கத்தில் இஸ்லாமும் இந்துமதமும் ஒன்று என்ற ரீதியில் தற்போது தன்னுடைய வியூகத்தை அமைத்துக்கொண்டு வருகிறார். இந்துமதத்தின் அவதாரபுருஷர்கள் அதாவது, கடவுளின் அவதாரங்கள்தான் இஸ்லாத்தின் இறைத்தூதர்கள் என்று பகிரங்கமாக கூறுகிறார். ராமர், கிருஷ்ணர் போன்றோரைத்தான் இந்து மக்கள் அவர்களின் அவதாரபுருஷர்கள் என்று நம்புகிறார்கள்.இவர்கள் இறைதூதர்கள் என்று ஜவாஹிருல்லாஹ் எந்த அடிப்படையில் கூறுகிறார்?

''இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது''. என்று தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் கேள்வி திருவிழா பகுதியில் கும்பகோணத்தை சேர்ந்த சம்பந்தம் என்ற இந்து சகோதரர் கேட்ட கேள்விக்கு ஜவாஹிருல்லாஹ் பதிலளிக்கும் போது கூறுகிறார்.

பூமியில் எப்பொழுதெல்லாம் அக்கிரமம் தழைத்தோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் மனித வடிவில் அவதாரமெடுப்பார் என்பதுதான் இந்துக்களின் நம்பிக்கை. அப்படித்தான் கடவுள் ராமராக வந்தார் என்றும் கிருஷ்ணராக வந்தார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கைதான் இஸ்லாமிய நம்பிக்கையா?
ஜவாஹிருல்லாஹ்வின் நம்பிக்கையும் இதுதானா?
வெண்ணெய் திருடியதாகவும் குமரி பெண்களுடன் கொஞ்சி குலாவியதாகவும் இந்துக்கள் நம்பும் கோகுலத்து கிருஷ்ணனை இஸ்லாமிய இறைதூதராக சொல்லும் துணிச்சல் ஜவாஹிருல்லாஹ்வுக்கு எப்படி வந்தது?.

மலையை பெயர்த்து ஒரு கையில் தூக்கிக்கொண்டு பறக்கும், வாலுள்ள வானரப்படைகளை துணையாக கொண்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் கற்பனை கதாநாயகன் ராமரை இறைதூதர் என்று இவர் எந்த அடிப்படையில் கூறுகிறார்?.

மனிதன் தனக்கு தோன்றுவதையெல்லாம் கூறுவது இஸ்லாம் ஆகாது குர்ஆனில் கூறப்பட்டவையும் நபிகளார்(ஸல்) அவர்களின் நடைமுறை மட்டுமே இஸ்லாமாகும். நபிகளாரின் செவிலிதாயை தலித் சமுதாய பெண் என்று ஹைதர் அலி கூறியதாக தங்கம் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியை பார்த்து முஸ்லிம் சமுதாயம் கொதித்து போயிருக்கும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் மார்க்க அறிவற்ற ஜவாஹிருல்லாஹ்வின் பேட்டி அமைந்துள்ளது.

ஓட்டு பொறுக்குவதற்காக இஸ்லாத்தின்மீது களங்கம் கற்பிக்கும் ஜவாஹிருல்லாஹ், அல்லாஹ்விடம் தவ்பா செய்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல் இந்துக்களை குளிர்விக்க நினைக்கும் ஜவாஹிருல்லாஹ்வை முஸ்லிம்கள் கை கழுவ போவது உறுதி.

குறிப்பு: நான் கொடுத்த பதிலை தமிழன் எக்ஸ்பிரஸ் நிருபர் மாற்றி எழுதிவிட்டார் என்று வழக்கம்போல அந்தர்பல்டி அடிப்பாரேயானால் இந்த செய்தியை தங்களுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் பெருமையுடன் வெளியிட்டது எப்படி?.

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது. (31 :6)


4 comments:

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது. (31 :6)
தவ்ராத் வேதம் டோரா யூதர்கலுக்கூ இன்ஜில் வேதம் கிருஸ்துவர்களுக்கு பைபிள் அதேப்போல் இந்துக்களுக்கும் சில இருக்கலாம்.அல்லாஹு திருமறையில் 25 துதர்களை கூறுகின்றான் அதில் இவர்களும் இருக்கலாம்....... எல்லாம் அறிந்தவன் அல்லாஹு ஒருவனே...
muji........dubai

Unknown said...

இறைத்தூதர்களுக்கு என்று கடுமையான ஒழுக்க பண்புகளும், நம்பகத்தன்மையும் இருக்கின்றன. முதலில் ஒழுக்க பண்பை பார்ர்போம். வெண்ணெய் திருடியதாகவும் குமரிப்பெண்களுடன் கொஞ்சி குலாவியதாகவும்,குளிக்கும் பெண்களின் ஆடையை ஒளித்து வைத்து ரசித்தவருமாக இந்துக்கள் நம்பும் கோகுலத்து கிருஷ்ணனை எந்த அடிப்படையில் இறைத்தூதராக இருக்கலாம் என்று சகோ.முஜி கூறுகிறரோ தெரியவில்லை.

அடுத்து நம்பகத்தன்மையை பார்ப்போம், வாலுள்ள குரங்கு மனித கூட்டம், மலையை பெயர்த்து தூக்கும் ஆற்றல், பறக்கும் குரங்கு, பத்தாயிரம் மனைவிகளை கொண்ட தசரதன் இப்படி எதையாவது ராமர் கதையில் நம்ப முடிகிறதா? எப்படி பார்த்தாலும் இந்துக்கள் இறை அவதாரம் என்று கருதும் ராமரும், கிருஷ்ணரும் கண்டிப்பாக அல்லாஹ் அனுப்பிய இறைத்தூதர்களாக இருக்க முடியாது என்பதுதான் எனது கருத்து.

அப்துல்லாஹ்..

Kumari Muslim said...

சகோ.முஜி அவர்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

\\அல்லாஹு திருமறையில் 25 துதர்களை கூறுகின்றான் அதில் இவர்களும் இருக்கலாம்.\\

என்று குறிப்பிட்டுள்ளீர்கள்..அந்த 25 தூதர்களின் பெயரையும் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டுள்ளான்.

அவர்களின் பெயர்களும் வசன எண்களும் பின்வருமாறு:

1) ஆதம் (அலை) (2:30)
2) இத்ரீஸ்(அலை) (19:56)
3) மூஸா (அலை) (7:145)
4) ஈஸா (அலை) (3:48)
5) ஸூலைமான் (அலை) (21:81)
6) இப்ராஹிம் (அலை) (2:124)
7) இஸ்மாயீல் (அலை) (2:125)
8) இஸ்ஹாக் (அலை) (2:133)
9) ஹாரூன் (அலை) (4:163)
10) தாவூது (அலை) (4:163)
11) நூஹ் (அலை) (4:163)
12) ஸக்கரிய்யா (அலை) (3:37)
13) யஹ்யா (அலை) (3:39)
14) அய்யூப் (அலை) (21:83)
15) யூனுஸ் (அலை) (37:147)
16) யூஸூஃப் (அலை) (12:101)
17) இல்யாஸ் (அலை) (6:85)
18) அல் யஸஃ (அலை) (6:86)
19) துல் கிப்ல் (அலை) (38:48)
20) ஷூஐப் (அலை) (7:85)
21) யஃகூப் (அலை) (19:49)
22) ஸாலிஹ் (அலை) (7:73)
23) லூத் (அலை) (7:80)
24) ஹூது (அலை) (7:65)
25) நபிகள் நாயகம் (ஸல்)

இதில் இராமர், கிருஷ்ணர் போன்ற பெயர்கள் எங்கே இருக்கிறது. இதல்லாமல் இவர்களின் பெயர்கள் குர்ஆனில் எந்த அத்தியாயத்தில் எந்த வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் எங்களுக்கு சொன்னால் நாங்கள் தவறை திருத்திக் கொள்கிறோம்!!

இவண்,

குமரி முஸ்லிம்

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அடக்கிழவியே...,
அஸ்ஸலாமு அலைக்கும்..,
இந்துக் கடவுளர்கலெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைத்தூதர்கள். மற்றவர்கள் ஜின்கள். நீங்கள் இதில் குழம்பினால் உலகில் தோன்றிய முதல் மனிதன் முஸ்லிமா இல்லையா. உங்களை அட நாதேரியே என்று திட்டத்தேனுகிறது. கண்ணியம் கருதி மரியாதை தருகின்றேன். பின்னூட்டமிட்டவர்களெல்லாம் சூதாடிகளாகவே இருக்கின்றனரே என்ன ஆச்சரியம். வேலிக்கு ஓணான் சாட்சியா..? மார்க்கத்தை வைத்து மாற்று மதத்தவருடன் சூதாடிக்கொண்டுள்ளவர்களின் கூட்டாளி, ஏவலாளி, அம்பு தானே நீங்கள். உங்கள் உடன்பிறாவா தவ்ஹீது சகோதரர்கள் எல்லாம் சூதாட்டத்தில் வென்றவர்கள். அதேபோல மார்க்கத்தை அடகு வைத்து பிஜெ பாஸிஸ சக்திகளிடம் துணைபோகின்றார். அதில் உங்களுக்கு ஏதும் எச்சம்-மிச்சம் கிடைத்துள்ளதா. அட சுயநல பேய்களா. தரம் தாழ்ந்த தவ்ஹீதை வைத்துக்கொண்டு என்ன சவடால் அடிக்கிறீர்கள். கேட்கிறவனெல்லாம் கேனயனாக ததஜவில் மட்டும் தான் இருப்பார்கள். ஊரறிய விபச்சாரம் செய்தவரை செயலாளராகவும், குர்ஆனுக்குள் காதல்கடிதம் வைத்தவரை தலைவராகவும் ஏற்றுக்கொண்டவர்கள் தானே நீங்கள். பிறகு உங்கள் புத்தி எப்படி வேலை செய்யும். நாறி நாத்தமெடுக்கும் முன்கொஞ்சம் உணர்ந்து கொள்ளுங்கள். இறைவன் சொன்ன நன்மையை ஏவியே நீங்கள் செய்து வரும் தீமைகளை தடுக்கின்றோம். திருந்திக்கொள்ளுங்கள்.
வஸ்ஸலாம்.