Friday, June 27, 2008

சிலை வடிப்போம் நம்ம சின்ன காந்திக்கு! - ஜாக்

அல்லாஹ்வின் திருப்பெயரால்..


'நாம் வாழுகின்ற நாடு இந்திய நாடு, பல சமுதாயத்தோடு சேர்ந்து வாழுகின்ற நாடு, எதுவாக இருந்தாலும் இஸ்லாமிய கொள்கைக்கு மாற்று கருத்து இல்லாத, இஸ்லாமிய கொள்கைக்கு புறம்பாக உள்ள செயல்களில் ஈடுபடாமல், இஸ்லாமிய கொள்கையோடு உள்ள காரியங்களில் ஒற்றுமையாக இருக்க வேண்டும்'.
இப்படி ஒரு அருமையான கருத்தை கோட்டாறு I.S.E.D பள்ளி மைதானத்தில் ஜாக் நடத்திய இஸ்லாமிய அறிவொளி மாநாட்டில் கடந்த 29-04-2007 அன்று கூறியவர் ஒரு ஓய்வு பெற்ற காவல்துறை துணை கண்காணிப்பாளர். அவருடைய பெயர் மலுக்கு முதலி என்பார்கள்.


கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜாக் அமைப்பினர் எதைச் செய்தாலும் அதில் மலுக்குவின் பங்களிப்பு இல்லாமல் இருக்காது. அந்தளவிற்கு ஜாக்கோடு இரண்டற கலந்தவர் இவர்.





சகோ.கமாலுத்தீன் அவர்களுடைய தலைமையகமான கோட்டாறு சந்தித்தெரு ஜமிய்யாவில் ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் விளக்கவுரை செய்யும் அளவிற்கு மார்க்கத்தில் அதிக பிடிப்பு(!?) மிக்கவர் இந்த மலுக்கு.


ஜாக்கை சேர்ந்தவர்கள் யாரும் அவர்கள் செய்த அடாவடித்தனத்தால் கம்பி எண்ண நேரிட்டால் அவர்களை பாதுகாத்து வெளியே கொண்டு வருவதில் இவர் திறமையானவர்.


ஜாக்கின் அடாவடித்தனத்தை யாரும் அம்பலப்படுத்தினாலோ அல்லது அவர்களின் அத்துமீறல்களை எதிர்த்தாலோ அவர்களை மிரட்டுபவர் இந்த மலுக்கு.

இப்படி பல்வேறு வகையில் ஜாக்கின் தீவிர ஆதரவாளராகவும், ஆலோசகராகவும் இருக்கக்கூடிய மலுக்கு, ஜாக் சேவை மையத்தில் உள்ளவர்தான் என்று சகோ.கமாலுத்தீன் அவர்களும் பல நேரங்களில் ஒப்புதல் அளித்துள்ளார்.



குர்ஆன், சுன்னாவை உயிர் மூச்சாக கருதுகிறோம் என்று சொல்லக்கூடிய ஜாக் அமைப்பை சேர்ந்த மலுக்கு, கடந்த ஏப்ரல் மாதம் நாகர்கோவிலில் நடந்த பச்சை ஷிர்க்கான காரியத்தில் தன்னையும் இணைத்துக்கொண்டார். மறைந்த ராஜீவ் காந்திக்கு சிலை வைப்பதற்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் சிலை வடிப்பதற்காக ஒருவரால் தொகை கொடுக்கப்படும் பொழுது தானும் புகைப்படத்திற்காக காட்சி அளிக்கிறார். அதுவே இப்பொழுது சாட்சியாகவும் மாறியிருக்கிறது.



இவர்தான் கடந்த 29-04-2007 அன்று ஜாக்கின் அறிவொளி மாநாட்டில் இஸ்லாமிய கொள்கைக்கு புறம்பாக உள்ள செயல்களில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுரை கூறுகிறார். இவரைத்தான் ஜாக்கினரும் அவர்கள் நடத்தும் பெரும்பாலான கூட்டங்களில் வாழ்த்துரை வழங்குவதற்காகவும், இன்னபிற விசயங்களுக்காகவும் மேடை ஏற்றுகின்றனர்.

இப்படி வெளிப்படையான ஷிர்க்கில் ஈடுபட்டவர் ஒரு முன்னாள் துணை காவல் கண்கானிப்பாளர் என்பதால் அவரை ஏந்தி தாங்கி நிற்கும் ஜாக்கினர் அடுத்தவர்களை பார்த்து பழிப்பதும், இழிப்பதும் தங்களுடைய இச்செயல்களை மறைப்பதற்கான முயற்சி என்பது இப்பொழுது ஆதாரங்களுடன் அம்பலமாகி விட்டது.

தவ்ஹீத் கொள்கையில் தடம்புரண்டு விட்ட ஜாக்கினர்களில் சிலரிடம் இதுபற்றி கேள்வி எழுப்பினால் அவர்கள் அப்படி செய்தார்களே, இவர்கள் இப்படி செய்தார்களே என்று கூறி அவர்கள் செய்த இந்த தவறை நியாயப்படுத்தி திரிகிறார்கள். அல்லாஹ் வெறுத்து ஒதுக்கிய ஒரு செயலை ஏன் செய்தீர்கள்? என்று கேட்டால் அடுத்தவர்களின் தவறை சுட்டிக்காட்டி உங்களின் தவறை நியாயப்படுத்துவீர்களா? மறுமையில் ஜொலிக்க வேண்டும் என்பதற்காக ஜமாஅத் நடத்துகிறீர்களா? அல்லது நான் பெரியவனா? நீ பெரியவனா? என்று மற்றவர்களின் பாவத்தோடு போட்டி போட ஜமாஅத் நடத்துகிறீர்களா?

அமெரிக்கர்களால் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு சிலை வைக்க நடந்த முயற்சியை உலக முஸ்லிம்கள் அனைவரும் எதிர்த்தனர். அப்பேர்பட்ட மார்க்கத்தில் இருந்து கொண்டு ராஜீவ் காந்திக்கு சிலை வைப்பதை சரி காணும் ஜாக்கினரே நீங்கள் சுய நினைவோடுதான் இருக்கின்றீர்களா? நாங்கள் அல்லாஹ்வை வணங்குகிறோம், அவனுடைய தூதரை வணங்குகிறோம் என்று வெறுமனே பேப்பரில் எழுதுவதாலும், மேடையில் முழங்குவதாலும் ஒரு முஸ்லிம் மறுமையில் வெற்றியடைய முடியாது.

தவ்ஹீத் கொள்கையிலிருந்து தடம்புரண்டு சென்று விட்ட ஜாக், சிலை வழிபாட்டையும் இணைவைத்தலையும் ஆதரிக்கக்கூடியதாக மாறிவிட்டது என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே எழுந்துள்ளது. காரணம் ஜாக்கின் கட்டுப்பாட்டிலுள்ள ஃபிர்தௌஸியா கல்லூரி பட்டமளிப்பு விழாவில் 'வந்தே மாதரம்' பாடுவது தவறல்ல என்றும் இதெல்லாம் ஒரு விஷயமா? மிக சாதாரண விஷயம் இது! என்று பேசப்பட்டது.

'நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான் இதை தவிர மற்ற எதையும் தான் நாடியவருக்கு மன்னிப்பான். யார் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ அவன் நிச்சயமாக மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறான்' (திருக்குர்ஆன் 4 : 48)

நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான், இது அல்லாத பாவத்தை தான் நாடியவருக்கு மன்னிப்பான். எவன் அல்லாஹ்வுக்கு இணைவைக்கிறானோ, அவன் நிச்சயம் வெகுதூரமான வழிகேட்டில் ஆகிவிட்டான் (திருக்குர்ஆன் 4 : 116)

என்று அல்லாஹ் இணைவைத்தல் மிகப்பெரிய பாவமென்று குர்ஆனில் குறிப்பிடுகிறான். ஆனால் இவர்களுக்கு இது சிறிய விஷயமாம்!

காளியை வணங்குகிறோம், துர்க்கையை வணங்குகிறோம், தாய் மண்ணை வணங்குகிறோம் என்று பாடுவது ஜாக்கிற்கு சாதாரண விஷயமாம்!

இவற்றை சுட்டிக்காட்டியபோது அதை மறுக்கவும் முடியாமல் மன்னிப்பு கேட்கவும் மனமில்லாமல் ஜாக் விழி பிதுங்கியது.

அதுபோலவே, கலைஞர் கருணாநிதி கண்ணகிக்கு சிலை வைத்ததை பெருமை பொங்க தன்னுடைய அல்ஜன்னத் இதழிலே வெளியிட்டு கலைஞரின் புகழ் பாடியவர்தான் இந்த ஜாக் தலைவர் கமாலுதீன் மதனி.


இப்பொழுது ஜாக் பேச்சாளர் சிலை வைக்கும் விழாவில் நேரடியாக கலந்து கொள்கிறார் என்றால் இவர்கள் பின்பற்றுவது குர்ஆன் ஹதீஸா? அல்லது இதுவும் குர்ஆன் ஹதீஸின் நடைமுறைதான் என்று சொல்ல வருகிறார்களா?

சகோ. கமாலுத்தீன் அவர்களின் அல்ஜன்னத் ஜூலை 2006 இதழில் வெளியிட்ட ஒரு அறிவுரையை இப்பொழுது அவருக்கே இங்கு சுட்டிக்காட்டுகிறோம்.

இதுபோன்ற காரியங்களை குர்ஆனும் நபி (ஸல்) அவர்களும் கடுமையாக கண்டித்துள்ளார்கள். இச்செயல்களை செய்பவனும், அவற்றுக்கு துணை போகக்கூடியவனும் அவற்றை ஆதரிப்பவனும் அவற்றை வெறுத்து ஒதுங்காதவனும் உண்மையான ஏகத்துவ கொள்கைவாதியாக இருக்க முடியாது. (அல்ஜன்னத் ஜூலை 2006)

அல்லாஹ்வுடைய சாபத்திற்கு காரணமான சமாதி வழிபாட்டிலிருந்து இஸ்லாமிய சமுதாய மக்களே விடுபடுங்கள், ஏகத்துவ கொள்கையுடையோரே! கொண்ட கொள்கையில் உறுதியாக இருங்கள். எக்காரணத்தை கொண்டும் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கின்ற காரியங்களுக்கு துணை போகாதீர்கள். (அல்ஜன்னத் ஜூலை 2006)

ஆகவே அவர்களுக்கு கூடுதலாக கீழ்கண்ட இறைவசனத்தையும் எச்சரிக்கையாக நினைவூட்டுகிறோம்.

அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர்களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ்வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் நரகில் அல்லாஹ் ஒன்று சேர்ப்பான் (திருக்குர்ஆன் 4:140)

Tuesday, June 24, 2008

குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கு வரும் மிரட்டல்கள்

ஏக இறைவனின் திருப்பெயரால்..

குமரி முஸ்லிம் வலைப்பூவில் பதியப்படும் கருத்துக்கள் சிலருக்கு சரியாக தெரியலாம், சிலருக்கு வெறுப்பூட்டலாம். இவர்கள் தவறான கருத்தை பரப்பியுள்ளனர் என்றுகூட சிலருக்கு தோன்றலாம். அப்படி நினைப்பவர்கள் நாகரீகமான முறையிலும், ஆதாரங்களின் அடிப்படையிலும் அதை எடுத்து வைத்தால் நிச்சயமாக குமரி முஸ்லிம் வலைப்பூ தன்னை திருத்திக் கொள்ளும் இன்ஷா அல்லாஹ். ஆதாரங்களுடன் நாகரீகமற்ற முறையில் எடுத்து வைத்தாலும் இன்ஷா அல்லாஹ் தனது தவறை அது திருத்திக் கொள்ளும். ஆனால் எதுபோன்றதொரு நாகரீகமற்ற வார்த்தைகளை குமரி முஸ்லிம் வலைப்பூவை நோக்கி சுட்டிக்காட்டுபவர் பயன்படுத்துகிறாரோ அது குமரி முஸ்லிம் வலைப்பூவாக இல்லாதபட்சத்தில் அது சுட்டிக்காட்டியவரை நோக்கியே திரும்பும். இந்நிலைக்கு குமரி முஸ்லிம் வலைப்பூ அதிக முக்கியத்துவம் கொடுக்கும்.

குறிப்பிட்டு சொல்வதாக இருந்தால் திராவிடர் கழக கூட்டத்தில் த.மு.மு.க-வினரும் கலந்து கொண்டனர் என்ற ஒரு செய்தியை நோட்டீஸ் ஆதாரங்களுடன் யூதர்களும் நாங்களும் ஒன்று – தமுமுக என்ற தலைப்பில் குமரி முஸ்லிம் வலைப்பூ பதிந்திருந்தது. ஆனால் திராவிடர் கழகம், த.மு.மு.க-வின் அனுமதி பெறாமலேயே த.மு.மு.க-வின் பெயரை நோட்டீஸில் போட்டிருக்கிறார்கள் என்ற செய்தி ஒருவரால் அறிய வந்ததும் உடனே குமரி முஸ்லிம் வலைப்பூ தனது தவறை திருத்திக்கொண்டது. அந்த பதிவிலிருந்து குறிப்பிட்ட அந்த செய்தியை நீக்கியும் கொண்டது. நாங்கள் போட்டால் போட்டதுதான் என்று குமரி முஸ்லிம் பிடிவாதம் பிடிக்கவில்லை. இப்படி ஒரு தவறு சுட்டிக்காட்டிய பிறகு அது குமரி முஸ்லிம் வலைப்பூவால் சரி செய்யப்பட்டும், அதற்கான விளக்கம் தரப்பட்ட பிறகும்கூட வேண்டுமென்றே நாகரீகமற்ற முறையில் சிலர் நடந்து வருகிறார்கள். இதை அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் எனில் அவர்களை குமரி முஸ்லிம் வலைப்பூ அவர்களுடைய பாணியிலேயே எதிர் கொள்ளும் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.


ஒரு சகோதரனிடம் ஏற்படும் தவறை சுட்டிக்காட்டுவது நல்ல சகோதரனின் அடையாளம் என்று சொல்லும் சிலர் அதை பகிரங்கமாக சொல்லக்கூடாது எனவும் சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்கள் குமரி முஸ்லிம் வலைப்பூ பற்றிய தங்களது விமர்சனத்தை மின்னஞ்சல் வழியாகவோ அல்லது மறுமொழியிட்டோ தெரியப்படுத்திடவில்லை. அவர்களும் பகிரங்கமாகவே வெளியிட்டிருக்கிறார்கள். இப்படி வெளியிட்டுவிட்டு புறம் பேசுவது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு சமம் என்ற இறைவசனத்தை வேறு மேற்கோள் காட்டி அறிவுரை செய்கிறார்கள்.

இந்த இறைவசனத்தை நன்கறிந்த அச்சகோதரர்கள் இப்படி பகிரங்கமாக குமரி முஸ்லிம் வலைப்பூவைப்பற்றி புறம் பேசுவதற்கு என்ன நியாயம் சொல்கிறார்களோ, அதே நியாயத்தை குமரி முஸ்லிம் வலைப்பூவும் சொல்வதற்கு உரிமை உண்டு. குமரி முஸ்லிம் வலைப்பூ சமுதாயத்திற்கு எதிராகவும், மார்க்கத்திற்கு எதிராகவும் நடந்து கொள்கிறது என்று அவர்கள் கருதுகிறார்கள். அப்படி கருதுவதனால்தான் அதுபற்றி வெளிப்படையாக விமர்சிக்கிறார்கள். அப்படி வெளிப்படையாக விமர்சிப்பது தனது இறந்த சகோதரனின் மாமிசத்தை உண்பதற்கு சமம் என்று அவர்கள் கருதவில்லை. ஆனால், சிலர் சமுதாயத்திற்கு எதிராகவும், மார்க்கத்திற்கு எதிராகவும் செய்யும் தவறுகளை ஆதாரங்களுடன் மக்களுக்கு அடையாளம் காட்டும் பணியை குமரி முஸ்லிம் செய்தால் அது மட்டும் புறம், இறந்த சகோதரனின் மாமிசம் என்று முத்திரையை குத்த முயற்சிக்கிறார்கள். இந்த நிலையில் நாங்கள் நடுநிலைவாதிகள் என்ற பகட்டான ஆடையை வேறு அணிந்து கொள்கிறார்கள்.

தமிழகத்தில் இருக்கக்கூடிய அமைப்புக்களில் த.த.ஜ செய்கின்ற தவறுகளை மட்டும் வலைப்பூக்களில் பதிந்தால் நாங்கள் வாய்மூடி ரசிப்போம். த.த.ஜ அல்லாத மற்ற இயக்கங்கள் செய்யும் தவறுகளை ஆதாரங்களுடன் யாரும் வெளியிட்டால் அவர்களை அசிங்கமான வார்த்தைகளில் அர்ச்சனை செய்வோம். பி.ஜே யானிகள் என்று முத்திரை குத்துவோம். தொலைத்துவிடுவேன் என்று மிரட்டுவோம். இதுதான் நீங்கள் கூறும் நடுநிலையின் அளவுகோல் என்றால் அந்த நாசமாய் போன நடுநிலையை குமரி முஸ்லிம் வலைப்பூ கண்டு கொள்ளவே செய்யாது. அநாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சிப்பவர்கள், நாங்களும் நடுநிலையாளர்கள் என்று சொல்வதை மறுபரிசீலனை செய்யுங்கள். நடுநிலை என்ற சொல்லை கொச்சைப்படுத்த முயற்சிக்காதீர்கள்.

த.மு.மு.க, ஜாக் மற்றும் இன்னபிற அமைப்புக்களின் ஏராளமான தவறுகளில் மிகச் சிலவற்றை சுட்டிக்காட்டிய உடனேயே குமரி முஸ்லிம் வலைப்பூவை எப்படியேனும் முடக்கிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு சிலர் கதறுகிறார்கள். வானத்திற்கும், பூமிக்கும் குதிக்கிறார்கள். இது ஒரு த.த.ஜ-வின் ஆதரவு வலைப்பூ என்ற புலம்பல் படுஜோராக பரப்பப்பட்டு வருகிறது. அதை ஒருபோதும் மறுப்பதற்கு இல்லை. ஆனால், குமரி முஸ்லிம் வலைப்பூ எங்கேனும் த.த.ஜ-வின் தவறுகளுக்கு வக்காலத்து வாங்கியிருக்கிறதா என்று அவர்கள் யோசிப்பதில்லை. த.த.ஜ செய்த தவறுகளுக்கு வியாக்கியானங்கள் தந்து அதை நியாயப்படுத்தியிருக்கிறதா என்றுகூட அவர்கள் புரிந்து கொள்ள தயாராக இல்லை. அந்தளவிற்கு மூளை கழுவப்பட்டவர்களாக இருந்து கொண்டு அடுத்தவர்களை பார்த்து பழிப்பது ஒரு வகை வியாதியாகி விட்டது இவர்களுக்கு.

தமிழகத்தில் பிரபலமாக இருக்கின்ற முஸ்லிம் அமைப்புக்களான TNTJ, TMMK, MNP போன்ற அமைப்புக்களில் TNTJ-வை குமரி முஸ்லிம் வலைப்பூ முதல் தரத்தில் வைத்து பார்க்கிறது. அது குமரி முஸ்லிம் வலைப்பூவின் உரிமை. இதில் எதிர் கேள்வி கேட்கும் உரிமை யாருக்கும் இல்லை. அப்படி எதிர் கேள்வி கேட்பவர்களாக யாரும் இருந்தால் குமரி முஸ்லிம் வலைப்பூவின் தொடர் கேள்விகளை அவர்களும் எதிர்கொள்வதுதான் நியாயம். ஏனெனில், அப்படி கேள்வி கேட்பவர்களோ, அல்லது அவர்களுடைய கட்சியோ எந்த நிலையிலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்கவே மாட்டார்கள்.

குமரி முஸ்லிம் வலைப்பூ TNTJ - வை முதல் தரத்தில் வைத்து பார்ப்பதால் அதைப்பற்றி விமர்சிக்காது என்று பொருள் அல்ல. அதையும் விமர்சிக்க வேண்டும் என்ற காரணத்திற்காகத்தான் அது தன்னை அடையாளப்படுத்தாமல் இருந்தது. TNTJ நிர்வாகிகளிடம் இருக்கும் தவறுகளை பூசி மொழுகி நியாயப்படுத்தும் வேலையை நிச்சயமாக குமரி முஸ்லிம் வலைப்பூ செய்யாது. TNTJ-வை மட்டுமே விமர்சிப்போம் என்ற கொள்கையில் இருப்பவர்கள் தங்கள் தங்களின் தலைமையை விமர்சிக்க தயாரா? நடுநிலை வேஷத்தை களைந்து விட்டு இதற்கு விடையளியுங்கள்.

TNTJ-வைப்பற்றியும் அதில் உள்ளவர்களைப் பற்றியும் விமர்சிக்க பல்வேறு வலைப்பூக்கள் இருந்து வருகிறது. அவ்வாறு செயல்படுகின்ற வலைப்பூக்கள் செய்கின்ற அத்துமீறல்களாலும், அநாகரீக வார்த்தைகளாலும் சிந்தனையாளர்களின் பார்வையில் மிக கீழ்தரமான மதிப்பை அவைகள் பெற்றுள்ளன. போரட்ட களத்திற்கு வரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது, மார்க்க சொற்பொழிவு கேட்க வரும் பெண்களை கீழ்த்தரமாக விமர்சிப்பது. அதில் ஏதேனும் ஒரு பெண் நமக்கு உறவினராககூட இருக்கலாம் என்ற நல்லபிப்ராயம் கூட வைக்காமல் தாறுமாறாக தரம் தாழ்ந்து விமர்சிப்பது. பிற சகோதரர்களின் கண்ணியத்தோடு சர்வ சாதாரணமாக விளையாடுவது. நியாயமான முறையில் இறைவனுக்கு அஞ்சியவர்களாக தவறுகளை சுட்டிக்காட்டி உணர்த்த வேண்டும் என்ற கவலை அந்த வலைப்பூக்களை நடத்துபவர்களிடம் கிடையவே கிடையாது.

அவர்கள் எந்த கட்சியில் அல்லது அமைப்பில் இருக்கிறார்களோ அந்த அமைப்புக்களின் தவறுகளை அடுத்தவர்கள் சுட்டிக்காட்டிவிடக்கூடாது என்ற அச்ச உணர்வினால் முன்னெச்சரிக்கையாகவே அவர்கள் அந்த வலைப்பூக்களை நடத்தி வருகிறார்கள். தெளிவான வார்த்தைகளில் சொல்வதென்றால் தமிழகத்தில் இருக்கக்கூடிய த.மு.மு.க, மனித நீதி பாசறை மற்றும் த.மு.மு.க-வை முன்பு ஹராமென்று சொல்லிவிட்டு இப்பொழுது அதனோடு ஒட்டி உறவாடும் ஜாக் போன்ற அமைப்புக்கள் எழுதப்படாத ஒப்பந்தத்தை ஏற்படுத்தி கொண்டு த.த.ஜ-வை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற நோக்கில் கூட்டாக செயல்பட்டு வருகின்றன. இந்த உண்மை நிலையை அறிந்ததாலேயே குமரி முஸ்லிம் வலைப்பூ ஜனனித்தது.

யார், யாரோ செய்த காரியங்களை நினைவில் வைத்துக்கொண்டு குமரி முஸ்லிம் வலைப்பூ மீது அவதூறு சுமத்துவது அறிவுடைமையாக இருக்காது. குமரி முஸ்லிம் வலைப்பூ கீழ்த்தரமான வேலை செய்கிறது என்று சொல்பவர்கள் அதை முதலில் நிரூபியுங்கள். பிறகு குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கு எச்சரிக்கை விடுங்கள். மிரட்டுங்கள். குமரி முஸ்லிம் வலைப்பூவை மிரட்டுபவர்கள், அதற்கு எச்சரிக்கை செய்பவர்கள் உங்கள் வலைப்பூவை எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். நாங்கள் அப்படி செய்து விடுவோம், இப்படி செய்து விடுவோம் என்ற கோஷங்கள் தேவையில்லை. உங்களால் முடிந்ததை செய்யுங்கள். உங்களுடைய வார்த்தைகள் நியாயமாக, நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் அதை குமரி முஸ்லிம் வலைப்பூவும் ஆதரிக்கும். ஆனால் நீங்கள் செய்வது மார்க்கத்திற்கும், சமுதாயத்திற்கும் துரோகம் என்ற பட்சத்தில், நீங்கள் என்ன, அது யாராக இருந்தாலும் குமரி முஸ்லிம் வலைப்பூ ஒரு கை பார்க்கும்.

அதுபோல, ஒருவரைப்பற்றிய குற்றச்சாட்டுக்களை, வருடக்கணக்கில் சுற்றலில் விட்ட செய்தியை எடுத்து வந்து அதையே நீயும் போடு என்று குமரி முஸ்லிம் வலைப்பூவிடம் மல்லுக்கு நிற்பது எந்த வகையிலும் நியாயமில்லை. தான் எது செய்ய வேண்டும், எது செய்யக்கூடாது என்று தீர்மானிக்கும் உரிமை மற்றவர்களைவிடவும் குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கே உண்டு. அதை யாரும் நிர்பந்தப்படுத்தக் கூடாது. நிர்பந்தப்படுத்தவும் முடியாது.

குமரி முஸ்லிம் வலைப்பூ செய்யும் காரியத்தில் தவறுகளை சுட்டிக்காட்டும் உரிமை பார்வையாளர்கள் அனைவருக்கும் இருக்கிறது. சுட்டிக்காட்டல் நியாயமானதாக இருக்கும் பட்சத்தில் அதை ஏற்று திருத்திக்கொள்ளும் பக்குவமும், நெஞ்சுறுதியும் அல்லாஹ்வின் கருணையால் குமரி முஸ்லிம் வலைப்பூவிற்கு நிறையவே உண்டு. அதனால், மிக நிச்சயமாக குமரி முஸ்லிம் வலைப்பூ தனது காரியத்தை நிறுத்தவே நிறுத்தாது. அது தொடர்ந்து தனது காரியத்தை செய்யும். யாரும் யாரையும் அதை நிறுத்து, இதை நிறுத்து என்று கட்டளையிடுவது நாகரீகமான செயல் அல்ல. குர்ஆன் மற்றும் சுன்னாவை முன்னிறுத்திய சுட்டிக்காட்டல்களால் மட்டுமே குமரி முஸ்லிம் வலைப்பூவை பணிய வைக்க முடியும். அநாகரீக வார்த்தைகளால் அர்ச்சனை செய்தவர்களும், குமரி முஸ்லிம் வலைப்பூவை மிரட்டிவிட்டோம் என்று தமக்குள்ளேயே மகிழ்பவர்களும் இதை ஒருமுறைக்கு இருமுறை படித்துக்கொள்ளுங்கள்.

Saturday, June 21, 2008

தூதருக்கு கட்டுப்படுவோம் - பாகம் 01

ஏக இறைவனின் திருப்பெயரால்...

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கப்ரு வழிபாடு கூட கூடும் என்று ஜாக்கை சேர்ந்தவர்கள் சொல்லாமலிருக்க நாம் பிரார்த்தனை செய்வோம் என்று ஏகத்துவம் மாத இதழில் ஒருமுறை எழுதியிருந்தார்கள். என்னதான் இருந்தாலும் இவர்கள் எல்லை மீறி விமர்சிக்கிறார்களோ என்று சிலர் எண்ணினார்கள். ஆனால், அவர்களுடைய (ஜாக்) ஒரு சில செயல்பாடுகளை பார்க்கும் பொழுது கிட்டத்தட்ட அதற்கு நெருக்கமான நிலைக்கு அவர்கள் வந்துவிட்டார்களோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுதல்.

ஒரு முஸ்லிமிற்கு பல்வேறு கருத்துக்கள் இருக்கலாம், அதனையொட்டி அவன் எந்த ஒரு காரியத்தையும் தன் விருப்பம்போல தேர்வு செய்தும் கொள்ளலாம். ஆனால், அவருடைய அந்த விருப்பத்திற்கு மாற்றமாக அல்லாஹ்வோ, அவனுடைய தூதரோ ஒரு முடிவை முன்வைத்தால் அந்த முஸ்லிம் தனது விசயத்தை அப்படியே புறம் தள்ள வேண்டும். அப்படி செய்பவரே வழி கெடாதவர்.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (33:36)

பெருமானாரின் பெருநாள் தொழுகை.

பெருநாள் தொழுகையானது திடலில்தான் நடத்தப்பட வேண்டும். அதுதான் நபி வழி என்பது குர்ஆன், சுன்னாவை விளங்கிய அனைத்து முஸ்லிம்களும் அறிந்தது. ஏனெனில் பெருநாள் என்பது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான ஒரு நாள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜூப்பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையை துவக்குவார்கள். அறிவிப்பவர்: அபு ஸஹீத் அல் குத்ரி. நூல்: புகாரி 956

கன்னிப்பெண்களும், மாதவிடாய் ஏற்பட்டிருக்கக்கூடிய பெண்களும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு வரவேண்டும் என்றும், அவர்கள் தொழுகையில் கலந்து கொள்ளாமல் பெருநாள் உரையை கேட்க வேண்டும் என்றும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கன்னிப்பெண்களையும், மாதவிடாயுள்ள பெண்களையும் (தொழும் மைதானத்திற்கு) புறப்படச்செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். மாதவிடாயுள்ள பெண்கள் தொழுமிடத்தை விட்டும் விலகியிருப்பார்கள். அறிவிப்பவர்: உம்மு அதிய்யா (ரலி) நூல்: புகாரி

தன்னிடம் இரண்டு ஆடைகள் வைத்திருக்கும் பெண்கள், ஆடையில்லாத பெண்களுக்கு அதை கொடுத்து அவர்களையும் பெருநாள் தொழுகை நடக்கும் திடலுக்கு அழைத்து வரட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் எங்களில் ஒருத்திக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் இருப்பது குற்றமா என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'அவளது தோழி தனது உபரியான மேலங்கியை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும். அவள் நன்மையான காரியங்களிலும், முஸ்லிம்களுடைய பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்' என்று கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம்) அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி) நூல் : புகாரி

மேற்கண்ட திருமறை வசனத்தில் இருந்தும், முஹம்மது நபி (ஸல்) அவர்களுடைய போதனையிலிருந்து,
பெருமானார் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை திடலிலேயே தொழுதுள்ளார்கள் என்பதும்.

திடலுக்கு (தொழ) வரும்படி கன்னிப்பெண்களுக்கும், மாதவிடாய் உள்ள பெண்களுக்கும் கட்டளையிட்டார்கள் என்பதும்.

இதற்கு மாற்றமாக ஒரு புதிய கருத்தைச் சொல்ல எந்த ஒரு முஸ்லிமிற்கும் அருகதை இல்லை என்பதும் நம்மால் விளங்கி கொள்ள முடிகிறது.

அல்லாஹ்விற்கும், அவனுடைய தூதருக்கும் மாறு செய்யும் 'ஜாக்'கர்கள்:

குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு என்கிற ஊரில் வலியுறுத்தப்பட்ட இந்த சுன்னத்தை பேணாமல் உதாசீனப்படுத்தி வரும் ஜாக்கினரின் செயலை த.த.ஜ வினர் உட்பட பலர், பலமுறை சுட்டிக்காட்டியும் அவர்கள் அதை திருத்திக் கொள்ளவில்லை. ஆரம்பத்தில் தொழுகை நடத்த திடல் இல்லை என்று பொய்க்காரணம் கூறி புறக்கணித்து வந்தனர்.(மாநாடு நடத்துவதற்கு மட்டும் அவர்களுக்கு திடல் கிடைக்கும்)

இவர்கள் திருத்திக்கொள்ளாத நிலையில், குமரி மாவட்ட தவ்ஹீத் ஜமாஅத்தினர் பெருநாள் தொழுகையை திடலில் நடத்த தீர்மானித்தனர். நீண்ட ஒரு தோட்டத்தை சமன் செய்து, அந்த இடத்தில் பெருநாள் தொழுகை நடக்கும் என அறிவிப்பு செய்தனர்.

மேலும், பெருநாள் தொழுகையை ஏன் திடலில் தொழவேண்டும் என்பது பற்றிய நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் அடங்கிய பிரசுரங்களையும் வெளியிட்டனர். போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. பேனர்களும் கட்டப்பட்டன.

தாங்கள் செய்யாததை எவரும் செய்யக்கூடாது என்ற அடிப்படையில் கோட்டாறு அஷ்ரப் பள்ளிக்கு வெளியே ரோட்டில் வைத்துகூட நோட்டீஸ் விநியோகம் செய்ய ஜாக்கினரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போஸ்டர்கள் கிழிக்கப்பட்டன. இரவோடு இரவாக வரவேற்பு பேனர்களும் களவாடப்பட்டன.

அல்லாஹ்வை வணங்குவதற்கும், அவனுடைய தூதரின் செய்திகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி நேர்வழியின்பால் மக்களை அழைப்பதற்கும் கட்டப்பட்ட கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் பி.ஜே மீது அவதூறு கூறாத வெள்ளி மேடையே கிடையாது எனும் அளவிற்கு தரம் தாழ்ந்து செயல்படுபவர்கள் இந்த ஜாக் அமைப்பினர். இதுபோன்ற இவர்களுடைய அத்துமீறலினால் (இதைவிட அது பரவாயில்லை என்ற எண்ணத்தில்) தூரமாக இருக்கக்கூடிய சுன்னத் வல் ஜமாஅத்தின் கீழ் உள்ள மணிமேடை கலாச்சார பள்ளிக்கு தொழ செல்பவர்களும் அங்கு ஏராளம் உண்டு. அந்த அஷ்ரப் பள்ளியின் முன்புதான், நபி (ஸல்) அவர்கள் வழியில் ஒரு தொழுகைக்கு அழைப்பு விடுத்து வினியோகம் செய்யப்படும் பிரசுரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள் இந்த ஜாக்கினர்.

திடல் இல்லை, அதனால்தான் திடலில் தொழுகை நடத்தவில்லை என்று ஆரம்பத்தில் கூறியவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை சேர்ந்தவர்கள் திடலை ஏற்பாடு செய்து அழைப்பு கொடுத்தவுடன் அவர்களுடன் சேர்ந்து ஜாக்கினரும் தொழுதிருக்க வேண்டும். அல்லது இன்னொரு திடலை ஏற்பாடு செய்து அவர்கள் அங்கு தனியாக தொழுகை நடத்திருக்க வேண்டும். ஏனெனில் ஆரம்பத்தில் ஜாக்கினர் திடல் இல்லை என்றுதான் சொன்னார்களே தவிர திடல் தொழுகையே கூடாது என்று கூறவில்லை.

ஆனால் ஜாக்கினரின் இறுமாப்பினால் அவர்களை அவர்களே பாவத்தின் பக்கம் தள்ளிச் சென்றனர். த.த.ஜ சொல்லி நாம் கேட்க வேண்டுமா என்ன? அது அல்லாஹ்வின் கூற்றாயிற்றே? அதுபற்றி எங்களுக்கு என்ன? அடப்பாவிகளா! அது நபிகளாரின் நடைமுறையாயிற்றே? அதுபற்றியெல்லாம் நாங்கள் கவலைப்படமாட்டோம் என்று சொல்லும் விதமாக ஜாக்கினர் அவர்களுடைய செயல்களை அமைத்துக் கொண்டனர்.

ஜாக்கின் மாநில தலைவரான சகோ. எஸ்.கமாலுதீன் அவர்கள் பெருநாளன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்குபின் 'நபிவழியில் பள்ளியில்(?!) தொழுகை நடைபெறும் அனைவரும் வாருங்கள்' என்று மக்களுக்கு அழைப்பு விடுத்தார். நபிவழியில் பள்ளியில் தொழுகை நடைபெறும் என்று அழைப்பு விடுத்த சகோ.கமாலுத்தீன் அவர்களே, மேற்கண்ட நபி மொழிகளில் பெருமானார் (ஸல்) அவர்கள் திடலில்தான் தொழுதுள்ளார்கள் என்பதற்கான உங்களுடைய விளக்கம் என்ன? தவறுகளை சுட்டிக்காட்டினால் நன்றியோடு ஏற்று அதை திருத்திக் கொள்வேன் என்று சொன்ன ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களே உங்களுடைய தலைவரின் இந்த கூற்று குறித்து உங்களின் பதில் என்ன?

உங்களுக்கு எதிரானவர்களோ அல்லது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினரோ அவர்களுடைய மேனியில் சந்தனத்தை பூசிக்கொண்டால் அவர்களுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்ற கருத்து கொண்ட நீங்கள், சாக்கடையைத்தான் உங்கள் மேனியில் பூசிக் கொள்வீர்களோ? அல்லாஹ்வுடைய வாக்குக்கும், அவனுடைய தூதருடைய வழிமுறைக்கும் எதிரான கருத்து கொள்ள உங்களுக்கு துணிவு கொடுத்தவன் யார்?

கோட்டாறு ஜாக்கினருடைய மார்க்கத்திற்கு புறம்பான இச்செயலை அவர்களில் சிலரே உணர ஆரம்பித்தனர். இவர்களால் புறக்கணிக்கப்பட்டு வரும் ஒரு நபி வழிக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தினர் உயிரூட்டினர் என்றால் அது மிகையல்ல. இதை அறிந்த கோட்டாறு மக்கள் அன்றைய தினம் பெருநாள் தொழுகைக்கு பெரும் திரளாக திடலில் கலந்து கொண்டனர்.

இது கண்ட ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்கள் அன்றைய தனது பெருநாள் உரையில் பெருமானாரின் கூற்று பற்றி என்ன சொன்னார் தெரியுமா?

குர்ஆன் ஹதீஸை தன் பெயரிலே கொண்ட அமைப்பின் தலைவரல்லவா! என்ன சொல்லி இருப்பார்?

(இன்ஷா அல்லாஹ் விரைவில்...)

Thursday, June 19, 2008

வாருங்கள்! வழிகெடுவோம்!! அழைக்கிறது த.மு.மு.க

ஏக இறைவனின் திருப்பெயரால்..
தமுமுக தவ்ஹீதுக்கும் சமுதாயத்திற்கும் எதிராக செயல்படுவதில் தான் எப்போதும் முதல் தரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அவ்வப்போது சமுதாயத்திற்கு எதிராகவும், இஸ்லாத்திற்கு எதிராகவும் எதையேனும் செய்து கொண்டு இருப்பதனை தமிழ்கூறும் நல்லுலகம் அறிந்திருக்கிறது.

கருணாநிதியின் அரசு எந்த ஒரு துரோகத்தை செய்தாலும், அதற்கு எதிராக குரல் கொடுக்கும் திராணியை த.மு.மு.க இழந்திருக்கிறது.

கருணாநிதியிடமிருந்து பெற்றதற்கு விசுவாசமாக இடஒதுக்கீடு விசயத்தில் ரோஸ்டர் முறை, பூஸ்டர் முறை என்று வெளிப்படையாக சமுதாயத்திற்கு துரோகம் இழைத்தது.

கப்ரு வணங்கிகளின் கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்கி த.மு.மு.க தனது தொண்டர்களை அனுப்பி மகிழ்ந்தது.

கன்னிபீவி தர்ஹாவுக்கு அழைப்பு கொடுத்து நாங்களும் உங்களை சேர்ந்தவர்கள்தான் என்று காட்டி கொண்டது.

அல்லாஹ் வெறுக்கக்கூடிய வட்டி அடிப்படையிலான தொழிலை உயர்த்திப்பிடிக்கும் பீஸ் மாநாட்டிற்கு தனது தொண்டரணியை அனுப்பி சந்தோசப்பட்டது.

அரசியல் கட்சி துவங்கும் ஆசையில் இந்து மக்களின் ஆதரவிற்காக ராமரும், கிருஷ்ணரும் இறைத்தூதர்கள் என்ற பொய்யான செய்தியை சுயநலம் கருதி சொல்லி வருவது.

இப்படி சமுதாயத்திற்கு எதிராகவும், இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிராகவும் தன்னை நகர்த்திச் செல்லும் த.மு.மு.க-வினர், மீண்டும் தன்னை தவ்ஹீதிற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபித்துள்ளனர்.

முத்துப்பேட்டையில் த.மு.மு.க-வின் ஒன்றியச் செயலாளரான ஹூமாயுன் கபீர் என்பவர் கடந்த ஆண்டின் முத்துப்பேட்டை கந்தூரி விழாவிற்கு அழைப்பு விடுத்து டிஜிட்டல் போர்டு வைத்துள்ளார். இது அறிந்த தவ்ஹீத் சகோதரர்கள் அவரிடம் இப்படி செய்வது தவறு என்பதை உணர்த்தியுள்ளனர். அதற்கவர் இது எனக்கு அறியாமல் நிகழ்ந்த தவறு, இனி இதுபோல் நிகழாமல் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லியுள்ளார்.

ஆனால் கடந்த ஆண்டு அவர் பொய்யுரைத்துள்ளார் என்பது இந்த ஆண்டின் கந்தூரி விழாவிற்கு அவர் வழக்கம் போலவே வார்டு மெம்பரான அவரின் மனைவி போட்டோவை போட்டு அழைப்பு கொடுத்துள்ளார். இதையும் பலமுறை அவருக்கு எடுத்துச் சொல்லியும் அதை அவர் கண்டு கொள்ளவே இல்லை.

கப்ரு வணங்கிகளின் கூட்டத்திற்கு தொண்டர்களை அனுப்பி விட்டு அது தெரியாமல் நிகழ்ந்து விட்டது, இனி நடக்காது என்று சொன்ன த.மு.மு.க இதற்கு என்ன பதில் சொல்ல போகிறது?

அதுபோல் கன்னிபீவி தர்ஹாவிற்கு அழைப்பு விடுத்து த.மு.மு.க-வால் ஒட்டப்பட்ட போஸ்டர்களை ஆதாரங்களுடன் விமர்சித்த போது அதுவும் தவறாக நடந்து விட்டது, இனிவரும் காலங்களில் தர்பியா செய்து திருத்திவிடுவோம் என்று சொல்லி, இருக்கின்ற சில தவ்ஹீத்வாதிகளை தக்க வைத்துக்கொண்ட தமுமுகவின் தற்போதைய பதில் என்ன?

இப்பொழுது முத்துப்பேட்டையில் நடந்திருக்கும் நிகழ்வு கடந்த ஆண்டே சுட்டிக்காட்டப்பட்டும் அது திருத்திக்கொள்ளப்படாமல் மீண்டும் செய்யப்பட்டிருப்பதன் மூலம் த.மு.மு.க தனது தவ்ஹீதிற்கு எதிரான யுத்தத்தை முடுக்கிவிட்டிருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.

த.மு.மு.க ஏகத்துவ சிந்தனை கொண்ட ஒரு அமைப்புத்தான் என்று எண்ணி இதற்கு மேலும் அதனுள் இருக்கும் அன்புக்குறித்தான சகோதரர்களே! சிந்தியுங்கள! உங்களுடைய செயல்களை நீங்களே பாழாக்கி கொள்ளாதீர்கள! த.மு.மு.க தலைமை இதை திட்டமிட்டே செய்கிறது என்பதை கடந்த நிகழ்வுகளின் வாயிலாக அறிவுடையோர் அறிந்து கொள்வார்கள்.

அல்லாஹ்வை அஞ்சும் விதத்தில் அஞ்சுங்கள்! அவனை மட்டுமே பொறுப்பாளனாக்கி கொள்ளுங்கள்! அல்லாஹ் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.

தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெய பாவத்தையே கற்பனை செய்தார் (அல்குர்ஆன் 04:48)

...நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள்! பாவத்திலும், வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன் 05:02)

Tuesday, June 17, 2008

வெங்காயம் நாயுடுவின் வேடிக்கை விளையாட்டு!!

கடலூர் மாநாட்டில் கனிமொழி பேசும்போது, மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகம் இன்னொரு குஜராத் மாநிலமாக மாறிவிடும், என்றார். குஜராத் மாநிலத்தில் அப்படி என்ன குறை உள்ளது. இங்காவது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. அங்கு அந்த பேச்சுக்கே இடம் இல்லை. கருணாநிதி முதல்வராக இருந்த காலத்தில் தான் கோவையில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதுபோல், அங்கு எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லையே என்று பா.ஜ.க-வின் மூத்த தலைவர் வெங்காயம் நாயுடு கனிமொழிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். நன்றி - தினமலர்.

கோவையில் குண்டு வெடிப்பு நடந்தது கருணாநிதி ஆட்சியில்தான் என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை. அது அப்போதைய கருணாநிதி அரசின் கையாளாகாத தனம் என்பதையும் யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால் கோவையில் குண்டு வெடிப்பிற்கு காரணமாக இருந்த பின்னணிகளை தனது சங்க்பரிவார தந்திரம் கொண்டு இருட்டடிப்பு செய்துவிட்டு வெறுமனே குண்டு வெடித்தது என்று மட்டும் சொன்னால் அது வெங்காயம் நாயுடுவின் வேடிக்கை விளையாட்டாகவே கருத முடியும். இது மீண்டும், மீண்டும் ஒரு சமுதாயத்தை குற்றப்பரம்பரையாக சித்தரிக்க எடுத்துக் கொண்ட முயற்சியும் ஆகும்.

கோவை கலவரத்தின் பின்னணி.

கோவையில் போக்குவரத்து காவல் துறை அதிகாரி ஒருவர் சில முஸ்லிம் பெயர்தாங்கி போக்கிரிகளால் கொல்லப்படுகிறார்.

இது ஒரு சமுதாயத்திற்கு எதிராக நடத்தப்பட்ட கொலை போன்ற தோற்றத்தை கொடுத்து அன்றைய கோவை காவல்துறையினர் செயல்பட்டனர்.

இதை அறிந்த கோவையை சேர்ந்த அனைத்து முஸ்லிம் ஜமாஅத்தினரும் கொலையாளிகளை நாங்கள் ஆதரிக்கவில்லை என்றும் அவர்களுக்கு எதிரான சட்டப்பூர்வ நடவடிக்கைகளுக்கு நாங்கள் அனைவரும் ஒத்துழைப்போம் என்றும் வாக்களித்தனர்.

ஆனால், காவல் துறையினர் இந்து தீவிரவாதிகளோடு கைகோர்த்து கொண்டு ஒட்டு மொத்த முஸ்லிம்களுக்கும் எதிராக கலவரத்தை தூண்டி விட்டு வேடிக்கை பார்த்தனர்.

அந்த கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர்.

வீதிகளில் வைத்து இந்து தீவிரவாதிகள் முஸ்லிம்களை வெட்டினார்கள். அவர்கள் உயிருக்கு போரடிக்கொண்டிருக்கும் நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டால், மருத்துவமனை வளாகத்தில் ஏற்கனவே எதிர்பார்த்து நிற்கும் மற்றொரு இந்து தீவிரவாத கும்பல் அவர்கள் மீது பெட்ரோல் ஊற்றி கொளுத்தி முழுமையாக அவர்களை கொலை செய்தனர்.

முஸ்லிம் பெண்கள் வீதியில் நடமாடும் போது அவர்களை இடைமறித்த காவல்துறையினர் உடையில் இருந்த சில வேசிகளுக்கு பிறந்ததுகள் 'என்னடி இரண்டு குண்டு வெச்சிருக்கே' என்று கேவலமாக நடந்து கொண்டனர். அவர்களுடைய தாய், மனைவி மற்றும் பெண் பிள்ளைகள் எல்லாம் வைத்திருந்தது வெடிகுண்டு தான் என்பது அப்பொழுது அந்த மடச்சாம்பிராணிகளுக்கு தெரிந்திருக்கவில்லை.

சோதனை என்ற பெயரில் பெண்கள் மட்டுமே இருக்கும் வீடுகளுக்குள் புகுந்து அத்துமீறல்களை கட்டவிழ்த்து விட்டனர் கோவை காவல்துறையினர்.

19 உயிர்களை பறிகொடுத்த சமுதாயத்திற்கு ஆறுதல் சொல்ல ஒரு ஓட்டு பொருக்கியும் கோவைக்கு வரவில்லை. மாறாக எங்களுக்கு ஆறுதல் சொல்லுங்கள் என்று பிச்சை கேட்காத குறையாக சென்ற முஸ்லிம் தலைவர்களை கேவலப்படுத்தி அனுப்பினார் அன்றைய தமிழக முதல்வர் மு.கருணாநிதி.

முஸ்லிம்களின் பாதுகாவலன் என்ற போர்வையில் இருந்து கொண்டே பண்டாரம், பரதேசி என்று இவரால் விமர்சிக்கப்பட்ட வெங்காயம் நாயுடுவின் வகையறாக்களான அன்றைய இந்து தீவிரவாதிகளோடு கைகோர்த்துக் கொண்டு முஸ்லிம்களை கொன்றொழித்தார் கருணாநிதி.

இப்படியொரு அநியாயத்தை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத சில முஸ்லிம்கள் கருணாநிதிக்கு அரசியல் ரீதியாக செருப்படி கொடுப்பதை விடவும், கோவையில் குண்டு வைப்பதே சிறந்தது என்ற தவறான முடிவை எடுத்ததாக கருதப்படுகிறது.

சட்டத்தை இப்படி கையில் எடுத்துக் கொள்வது தவறு என்று அப்பொழுதே தமிழகத்தில் இருக்கக்கூடிய அனைத்து முஸ்லிம் அமைப்புக்களும் குண்டு வெடிப்பிற்கு கண்டனம் தெரிவித்தது. குண்டு வெடிப்பை ஆதரிக்கின்ற ஒரு முஸ்லிம் அல்லது ஒரு முஸ்லிம் அமைப்பு கூட தமிழகத்தில் இல்லவே இல்லை.

அந்த குண்டு வெடிப்பிற்கு பிறகும் கருணாநிதியின் காட்டுதர்பார் அடங்கவில்லை. குண்டு வெடிப்பிற்கு காரணமானவர்கள் என்று அதில் கொஞ்சமும் தொடர்பில்லாதவர்களை கைது செய்து சிறையில் அடைத்தது. அவர்களில் பலரை நீதிமன்றம் தற்பொழுது விடுதலை செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அன்றைய தமிழக அரசும், சில இந்து தீவிரவாதிகளும், வலிமையற்ற ஒரு சமுதாயத்தின் மீது களங்கம் சுமத்தி அதிகார துஷ்பிரயோகமும், அடக்குமுறையும், அராஜகத்தையும் கட்டவிழ்த்து விட்டதாலேயே சிலர் உணர்ச்சிப்பூர்வமாக சிந்தித்து தவறான வழிக்கு சென்றனர்.

இவற்றையெல்லாம் மறைத்து விட்டு கருணாநிதி ஆட்சியில்தான் குண்டு வெடித்தது என்று பொத்தம் பொதுவாக போகிற போக்கில் விடுகிறார் வெங்காயம் நாயுடு. அப்பேர்பட்ட கருணாநிதியோடுதான் முந்திய நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தனர் இந்த வெங்காயம் நாயுடுவின் கட்சியான பா.ஜ.க.

இவர் சொல்வதையெல்லாம் வாய்மூடி கேட்டிருக்க இது ஒன்றும் ரவுடி மோடி பிறந்த பூமி அல்ல. பகுத்தறிவை பட்டி தொட்டியெல்லாம் பரப்பிய தந்தை பெரியார் பிறந்த பூமி.


-அறிவழகன்

Monday, June 16, 2008

இராமரும் கிருஷ்ணரும் இறைதூதர்கள் தான் - டாக்.ஜவாஹிருல்லாஹ்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

இராமரும் கிருஷ்ணரும் இறைதூதர்கள் தான் - டாக்.ஜவாஹிருல்லாஹ்

புதிய அரசியல் மோகத்தில் திளைத்திருக்கும் ஜவாஹிருல்லாஹ், பதவியை அடைவதற்காக இந்துக்களின் ஓட்டை பெறும் நோக்கத்தில் இஸ்லாமும் இந்துமதமும் ஒன்று என்ற ரீதியில் தற்போது தன்னுடைய வியூகத்தை அமைத்துக்கொண்டு வருகிறார். இந்துமதத்தின் அவதாரபுருஷர்கள் அதாவது, கடவுளின் அவதாரங்கள்தான் இஸ்லாத்தின் இறைத்தூதர்கள் என்று பகிரங்கமாக கூறுகிறார். ராமர், கிருஷ்ணர் போன்றோரைத்தான் இந்து மக்கள் அவர்களின் அவதாரபுருஷர்கள் என்று நம்புகிறார்கள்.இவர்கள் இறைதூதர்கள் என்று ஜவாஹிருல்லாஹ் எந்த அடிப்படையில் கூறுகிறார்?

''இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது''. என்று தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் கேள்வி திருவிழா பகுதியில் கும்பகோணத்தை சேர்ந்த சம்பந்தம் என்ற இந்து சகோதரர் கேட்ட கேள்விக்கு ஜவாஹிருல்லாஹ் பதிலளிக்கும் போது கூறுகிறார்.

பூமியில் எப்பொழுதெல்லாம் அக்கிரமம் தழைத்தோங்குகிறதோ அப்பொழுதெல்லாம் கடவுள் மனித வடிவில் அவதாரமெடுப்பார் என்பதுதான் இந்துக்களின் நம்பிக்கை. அப்படித்தான் கடவுள் ராமராக வந்தார் என்றும் கிருஷ்ணராக வந்தார் என்றும் அவர்கள் நம்புகின்றனர்.
இந்த நம்பிக்கைதான் இஸ்லாமிய நம்பிக்கையா?
ஜவாஹிருல்லாஹ்வின் நம்பிக்கையும் இதுதானா?
வெண்ணெய் திருடியதாகவும் குமரி பெண்களுடன் கொஞ்சி குலாவியதாகவும் இந்துக்கள் நம்பும் கோகுலத்து கிருஷ்ணனை இஸ்லாமிய இறைதூதராக சொல்லும் துணிச்சல் ஜவாஹிருல்லாஹ்வுக்கு எப்படி வந்தது?.

மலையை பெயர்த்து ஒரு கையில் தூக்கிக்கொண்டு பறக்கும், வாலுள்ள வானரப்படைகளை துணையாக கொண்டு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படும் கற்பனை கதாநாயகன் ராமரை இறைதூதர் என்று இவர் எந்த அடிப்படையில் கூறுகிறார்?.

மனிதன் தனக்கு தோன்றுவதையெல்லாம் கூறுவது இஸ்லாம் ஆகாது குர்ஆனில் கூறப்பட்டவையும் நபிகளார்(ஸல்) அவர்களின் நடைமுறை மட்டுமே இஸ்லாமாகும். நபிகளாரின் செவிலிதாயை தலித் சமுதாய பெண் என்று ஹைதர் அலி கூறியதாக தங்கம் என்ற பத்திரிகை வெளியிட்ட செய்தியை பார்த்து முஸ்லிம் சமுதாயம் கொதித்து போயிருக்கும் நிலையில் எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதுபோல் மார்க்க அறிவற்ற ஜவாஹிருல்லாஹ்வின் பேட்டி அமைந்துள்ளது.

ஓட்டு பொறுக்குவதற்காக இஸ்லாத்தின்மீது களங்கம் கற்பிக்கும் ஜவாஹிருல்லாஹ், அல்லாஹ்விடம் தவ்பா செய்து சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லையேல் இந்துக்களை குளிர்விக்க நினைக்கும் ஜவாஹிருல்லாஹ்வை முஸ்லிம்கள் கை கழுவ போவது உறுதி.

குறிப்பு: நான் கொடுத்த பதிலை தமிழன் எக்ஸ்பிரஸ் நிருபர் மாற்றி எழுதிவிட்டார் என்று வழக்கம்போல அந்தர்பல்டி அடிப்பாரேயானால் இந்த செய்தியை தங்களுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் பெருமையுடன் வெளியிட்டது எப்படி?.

அல்லாஹ்வின் பாதையைக் கேலியாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது. (31 :6)


Sunday, June 15, 2008

வேதம் ஓத முயற்சிக்கும் பா.ஜ.க இல.கணேசன்!!

எந்த ஒரு மதத்தினரது உணர்வுகளையும் புண்படுத்துகின்ற வகையில் பேசுவதோ எழுதுவதோ சைகை காட்டுவதோ கூடாது என சட்டம் தெளிவாக சொல்லியிருக்கின்ற போதிலும் தொடர்ந்து இந்து மத உணர்வு பகிரங்கமாக பொது இடங்களில் புண்படுத்தப்பட்டு வருகிறது. பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் நாத்திக விழா என்ற பெயரில் தீமிதித்தல் போன்ற இந்து மத பழக்கங்களை விமர்சனம் செய்வதற்கு முனைந்துள்ளனர். நன்றி - மாலைமலர்

இப்படி சொல்லியிருப்பவர் யார் தெரியுமா?

தேச தந்தையாக கருதப்படுகின்ற மகாத்மா காந்தி அவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு அந்த பழியை முஸ்லிம்கள் மீது போட்டு நாட்டில் மிகப்பெரிய கலவரத்தை தோற்றுவித்த சங்க்பரிவார கும்பலைச் சேர்ந்த சாணக்கியர்.

1980-களிலும், அதற்கு முந்திய மற்றும் பிந்திய சில காலங்களிலும் தமிழகத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஊர்களில் மேடைகளை போட்டு முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவாக பேசிய காட்டுமிராண்டி கூட்டத்தில் இவரும் ஒருவர்.

கரசேவை என்ற பெயரில் அயோக்கியர்களை அழைத்துச் சென்று அயோத்தியில் பாபர் மஸ்ஜிதை இடித்த கட்சியின் தமிழக தலைவர்.

அதனையொட்டி திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கருவறுத்த கும்பலின் இரத்த உறவுக்காரர்.

குஜராத்தில் ஹிந்து கரசேவகர்கள் சென்ற ரயிலை இவர்களே கொழுத்தி அவர்களை கொன்றுவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு அதன் மூலமாக மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் உயிர்களை கொன்றொழித்த மனிதாபிமானமற்றவர்களை கொண்ட கட்சிக்கு சொந்தக்காரர்.

தென்காசியில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இவர்களே குண்டை வீசி விட்டு அந்த பழியையும் முஸ்லிம்கள் மீது போட்டு நடுநிலை சிந்தனை கொண்ட ஹிந்து மக்களிடம் அனுதாபம் தேட முயன்று தோற்றுப்போன கயவர்களின் நம்பிக்கைக்குறியவர்.

இன்றளவும் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் வினாயகர் சதுர்த்தி என்ற பெயரில் பிறமதத்தினரின் நம்பிக்கைகளையும், அவர்களின் வழிபாட்டு முறையையும் கேலி செய்யும் மானங்கெட்டவர்களின் மாண்புமிகு இவர்.

இப்படி பிற மதத்தினரை கொன்றும், அவர்களது உணர்வுகளை புண்படுத்துகின்ற வகையில் பேசியும், எழுதியும், சைகை செய்தும் வருகின்ற ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி மற்றும் பஜ்ரங்தள் போன்ற அமைப்புக்களின் தீவிர ஆதரவாளரான தமிழக பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் இல.கணேசன் அவர்கள் இப்படி இந்திய சட்டம் குறித்து வேதம் ஓதுவது சரியா? இவரோடு இந்து முன்னணி தலைவர் இராமகோபாலன் அவர்களும் சேர்ந்து ஒத்து ஊதுவது சரியா?

சாத்தான்கள் வேதம் ஓதுவதில் எந்த நியாயமும் இல்லை. இதுபோன்று, வேதம் ஓத முயற்சிப்பது சாத்தான் தான் என்பதை மக்களும் இப்பொழுது அறியாமலில்லை.
-அறிவழகன்.

Friday, June 13, 2008

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

முஸ்லிம் பெண்கள் சினிமாவில் நடிக்கலாம்!


யூசுஃப் அல் கர்ளாவியை ஓர் மார்க்க அறிஞராக காண்பிக்க, மார்க்கத்தின் அடிப்படைகள் தெரியாத சில கனவுலக இயக்கங்கள் முயற்சிக்கின்றன. யூசுஃப் அல் கர்ளாவிக்கு எப்படி இஸ்லாத்தின் அடிப்படைகளும் ஒழுக்கப்பண்பாடுகளும் தெரியவில்லையோ அதேபோல அவரது விசிறிகளுக்கும் தெரியவில்லை. இவர் எழுதிய பல நூல்களில், கட்டுரைகளில் யூத, கிறஸ்தவர்களுக்கு கூஜா தூக்கும் நிலை தாராளமாக காணக்கூடியதாக உள்ளது. உலகத்தில் ஒழுக்கக்கேட்டையும் பண்பாட்டு சீரழிவையும் பரப்புபவர்களில் யூத, கிறிஸ்தவர்கள் முன்னிலை வகிக்கின்றனர். இவர்களுடைய பிரதான தொழிலான இசையும் சினிமாவும் யூசுஃப் அல் கர்ளாவிக்கு ஹலாலாக தெரிகிறது.

இசையும் சினிமாவும் ஹலால் என்று தனது ஃபத்வா முஆஸிராவில் குறிப்பிடுகின்றார் இவர்.

இசை ஹலால் என்று 'அல் ஹலால் வல் ஹராம்' என்ற புத்தகத்தில் பக்கம் 391-ல் குறிப்பிடுகின்றார்.

முஸ்லிம் பெண்கள் நாடகங்கள் மற்றும் சினிமாவில் பங்கேற்பது தடையில்லை என்று குறிப்பிடுகிறார். (ஜரீததுல் அக்பார் எண் 401)

ஒழுக்கத்தையும் பண்பாட்டையும் குழிதோண்டி புதைக்கும் வெறித்தனமான ஆடலுடன் கூடிய பாடல் காட்சிகளுடன் வெளிவரும் இன்றைய சினிமாவின் நிலையை கொஞ்சம் மனக்கண்முன் நிறுத்தி பாருங்கள்.

தொப்புளில் ஆம்லெட் போடுவதும், பம்பரம் விடுவதும், டூ பீஸ் நீச்சல் உடையுடன் பெண்களை அலையவிட்டு காமவெறியாட்டம் புரிவதும் படுக்கை அறை காட்சிகளை அப்பட்டமாக காண்பிக்கும் சினிமா, இவருக்கு ஹலாலாம். பணத்திற்காக முக்கால் நிர்வாணமாக நடிக்கும் இந்த சினிமாவில் முஸ்லிம் பெண்களும் பங்குபெறலாமாம். கிழவனைக்கூட பாலியல் துஷ்பிரயோகம் செய்யத்தூண்டும் இசையையும் சினிமாவையும் ஹலால் என்பவன் உண்மையில் இஸ்லாத்தை நேசிப்பவனாக இருக்கவே முடியாது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து 'எனக்கு விபச்சாரம் செய்ய அனுமதி தாருங்கள்' என்று கேட்டார். அதற்கு நபியவர்கள் அவரை அழைத்து, 'உன்னுடைய தாயுடனோ அல்லது சகோதரியுடனோ யாரும் விபச்சாரம் செய்வதை நீர் விரும்புவீரா?' என்று கேட்டார்கள். அதற்கு அவர், 'நான் விரும்பமாட்டேன்' என்று கூறினார்.அப்போது நபியவர்கள் 'நீர் யாருடன் விபச்சாரம் செய்ய விரும்புவீரோ,அவளுடைய சகோதரனும் உறவினரும் இதை விரும்பமாட்டார்கள்' என்று கூறினார்கள்.

சினிமாவையும் பாடலையும் ஹலால் என்று கூறும் யூசுஃப் அல் கர்ளாவி, தனது மகளை, மனைவியை சினிமாவில் நடிக்க அனுமதிப்பாரா? தினம் ஒரு அந்நியனோடு படுக்கையறை காட்சிகளில் முக்கால் நிர்வாணமாய் நடிக்க சம்மதிப்பாரா? அல்லது இவரை பின்பற்றும் நவீன கிலாஃபத் கோஷதாரிகளே! இஸ்லாமிய ஆட்சியை உலகம் முழுவதும் கொண்டுவர துடிக்கும் இரகசிய காவலர்களே! உங்கள் குடும்பத்தினரை இதுபோல் சினமாவில் நடிக்க அனுமதிப்பீர்களா?
அவர்கள் உமக்குப் பதிலளிக்கா விட்டால் அவர்கள் தமது மனோ இச்சைகளையே பின்பற்றுகின்றனர் என்பதை அறிந்து கொள்வீராக! அல்லாஹ்விடமிருந்து கிடைத்த நேர் வழியின்றி தனது மனோ இச்சையைப் பின்பற்றியவனை விட வழி கெட்டவன் யார்? அல்லாஹ் அநீதி இழைக்கும் கூட்டத்திற்கு நேர் வழி காட்ட மாட்டான்.
(திருக்குர்ஆன் 28:50)

Saturday, June 7, 2008

ஹைதர்அலிக்கு டாக்டர் பட்டம்?!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஹைதர் அலிக்கு டாக்டர் பட்டம்?!

முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இடஒதுக்கீடு என்பது பெயரளவில்தான் இருக்கிறது. இது நடைமுறைபடுத்த படவில்லை. கலைஞர் முஸ்லிம்களை வஞ்சித்துவிட்டார் எனக்கூறி தமிழ்நாடு அரசு பணிகளுக்கான பணியாளர்கள் தேர்வில் முஸ்லிம்களின் சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் போராட்டத்திற்கு தயாரானது.

அதுபோல தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகமும் தன் பங்கிற்கு இதுபற்றி தேர்வாணைய குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் முதலமைச்சரிடம் புகார் செய்யப்பட்டுள்ளதாகவும் தன்னுடைய அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. மேலும் அதை தமிழக அரசு சரிசெய்யாத பட்சத்தில் சமுதாய மக்களின் மனசாட்சியை பிரதிபலிக்கும் வகையில் தமுமுக தனது நிலைபாடுகளை மாற்றிக்கொள்ள தயங்காது என்பதை அறிவித்து கொள்கிறோம். இடஒதுக்கீடு உரிய வகையில் அமுல் படுத்தப்பட வேண்டும் என்பதே தமுமுகவின் லட்சியம் அதில் சமரசம் இல்லை எனவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதை படித்தவுடன் தமுமுக தொண்டர்கள் புளகாங்கிதமடைந்தனர். தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்காக தமுமுக எதுவுமே செய்யவில்லை என்று குறைகூறி கொண்டிருந்தவர்களே! இதோ பாருங்கள்! போராட தயாராகிவிட்டது எங்கள் தலைமை! என்று தொண்டர்கள் கூப்பாடு போட்டனர். அதுவும் தான் கூட்டணி வைத்திருக்கின்ற ஆளும் கட்சிக்கு எதிராக போர்பிரகடனம் செய்ய துணிந்த தமுமுகவை நடுநிலையாளர்களும் பாராட்டினர். ஆனால் அடுத்த தினம் இவர்களின் தலையில் இடி விழுந்ததுபோல் தமுமுக இணையதளத்திலிருந்த அந்த செய்தி காணாமல்போய்விட்டது.

இணையதளத்திலிருந்து அதை நீக்கிவிட்டால் மக்களுக்கு தெரியாது என தமுமுக தலைமை நினைத்துக்கொண்டது. ஆனால் சூழ்ச்சிக்காரனுக்கெல்லாம் சூழ்ச்சிகாரனாகிய அல்லாஹ் இவர்களை அடையாளம் காட்டுவதற்காக சிலரிடத்தில் அந்த செய்தியை விட்டுவைத்திருந்தான்.

காணாமல் போன அந்த செய்தி இதுதான்.


அதற்கிடையில் என்ன நடந்தது.
  • ஆளும் கட்சியால் மிரட்டப்ட்டார்களா?
  • வாரிய பதவி பறிக்கப்படும் என தகவல் வந்ததா?
  • அல்லது வழக்கமான அரசியல்வாதிகளின் பாணியில் 'நீங்கள் மௌனமாக இருந்தால் உங்களுக்கு தேவையானதை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்' என்ற தனிப்பட்ட உபசரிப்பு நடைபெற்றதா?
என மக்கள் எண்ணிக்கொண்டிருந்தவேளையில் அதை உண்மைபடுத்தும் விதமாக அடுத்த செய்தி இணையதளத்தில் சேர்க்கப்பட்டது.
அதாவது இடஒதுக்கீடு சரிசெய்யப்படவேண்டுமென்றும் உரியமுறையில் அமுல்படுத்தப்படவேண்டுமென்றும் எழுதியவர்கள், ததஜ போராட்டம் செய்யப்போவதாக அறிவித்தவுடன் அதற்கு நேர் மாற்றமாக, இடஒதுக்கீடு அளிக்கப்படும் முறையை பற்றி அறியாதவர்கள் இத்தகைய பொய்யைத் திட்டமிட்டு பரப்பி வருகின்றார்கள். கிறிஸ்த்தவர்களுக்கு மூன்றரை முஸ்லிம்களுக்கு ஒன்னரை என்று கூறி முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப் பட்டு விட்டது என்று கூறுவது தவறாகும். இடஒதுக்கீடு அடிப்படையில் புதிதாக ஆட்களை வேலையில் சேர்க்கும் போதும், கல்வி நிறுவனங்களில் மாணவர் களைச் சேர்க்கும் போதும், இதேபோல் பதவி உயர்வு அளிக்கும் போதும் காலங்காலமாக கம்யூனல் ரோஸ்டர் (சுழற்சி) முறை பின்பற்றப்பட்டு வருகின்றது. எனவே இடஒதுக்கீடு அளவு முஸ்லிம்களுக்கு குறைக்கப்பட்டு விட்டது, துரோகம் இழைக்கப்பட்டு விட்டது என்று கூறுவது தவறாகும் என்று எழுதினார்கள், அதையும் வீடியோவாக இணையத்திலே வெளியிட்டார்கள். பின்னர் டி.என்.டி.ஜே வீரியமான போராட்டத்தை நடத்தியதால் மக்கள் இவர்களை அடையாளம் கண்டவுடன் மீண்டும் பல்டி அடித்தார்கள். இணையதளத்திலிருந்த அந்த வீடியோவும் அப்புறப்படுத்தப்பட்டது. முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்ட 3.5 சதவீத இடஒதுக்கீடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் விளம்பரம் செய்த சில பணிகளில் முழுமையாக கிடைக்கவில்லை என்பதை நாம் மறுக்கவில்லை என்று அவர்களுடைய அதிகார்வபூர்வ பத்திரிகையில் (04:44 –பக்கம் 15) எழுதி ஒப்புக்கொண்டார்கள்.

அவர்கள் அப்புறப்படுத்திய வீடியோ இது
வீடியோவை பார்க்க விரும்புபவர்கள் இங்கே கிளிக் செய்யவும்

இவ்வாறு ஒவ்வொரு விஷயத்திலும் ததஜ சொல்வதும் செய்வதும் தான் சரி என ஒப்புக்கொண்டு அந்த வழியில் தங்களுடைய வியூகத்தை அமைக்கிறார்கள்.

வாழ்வுரிமை மாநாடு, தஞ்சை பேரணி ஆகியவற்றை தவ்ஹீத்வாதிகள்தான் நடத்தினார்கள், பிரிவினைக்கு பிறகு தமுமுக தமிழகத்திலே இடஒதுக்கீட்டை வலியுறுத்தி எங்காவது ஒரு இடத்தில், ஏதாவது ஒரு போராட்டத்தை நடத்தியிருக்கிறதா? அப்படி இருந்தால் எங்களிடம் அதை சொல்லுங்கள் என கேட்டபோது, மௌனம் காத்தார்கள். நாங்கள் டெல்லி பேரணி நடத்தினோமே என்று அறியாமையினால் சில தொண்டர்கள் சொன்னபோது டெல்லி பேரணி நடத்தப்பட்டது அகில இந்திய அளவில் இடஒதுக்கீடு பெறுவதற்காகத் தானே தவிர தமிழக அளவில் இடஒதுக்கீடு கேட்டு நாம் டெல்லிக்குப் படை எடுக்கவில்லை. என்று எழுதி அதுவும் தமிழக முஸ்ஸிம்களின் நலனுக்கு இல்லை என்பதை டிக்ளேர் செய்து விட்டனர். இதை இன்றும் இவர்களின் இணையதளத்தில் காணலாம்.

இப்படி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என்று பெயரை வைத்துக் கொண்டு தமிழக முஸ்லிம்களுக்கு துரோகம் செய்யும் தமுமுக, இடஒதுக்கீட்டிலுள்ள குளறுபடிகளை நீக்கிய கலைஞருக்கு, தமிழக முஸ்லிம்கள் சார்பாக நன்றி தெரிவித்துள்ளதாம். வேடிக்கையாக இருக்கிறது. இந்த வருடத்து சிறந்த நகைச்சுவையாக இதை தேர்ந்தெடுத்து ஹைதர்அலிக்கு பட்டம் கொடுக்கலாம். அடுத்த டாக்டர் அவர் தானே!

Tuesday, June 3, 2008

இம்தாதிக்கு சுட்டிக்காட்டல் - 2

ஏக இறைவனின் திருப்பெயரால்...

'ஹலால் ஹராம் பேணுவோம்'
- கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

அன்புள்ள சகோதரர் கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுக்கு...

சவுதி அரேபியாவிலுள்ள அல் ஜூபைல் அழைப்பு மையத்தில் 'ஹலால் ஹராம் பேணுவோம்' என்ற தலைப்பில் உரையாற்றி இருந்தீர்கள். அது மிகவும் அருமையான தலைப்பு. அனைவரும் அறிந்து நடக்க வேண்டிய விஷயங்களை அழகாக எடுத்து கூறியுள்ளீர்கள்.
ஆனால் ஒருவர் ஒரு விஷயத்தை கூறுவதாக இருந்தால் அதில் அவர் உண்மையாளராக இருக்க வேண்டும். இஸ்லாம் தடுத்த மதுக்கடையை நடத்தக் கூடிய ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றக்கூடியவராக இருக்க முடியாது. அதுபோலவே மதுக்கடை உரிமையாளர் ஒருவர், மற்றவர்களை பார்த்து மது குடிக்காதே என்று சொன்னால் அது வேடிக்கையாகத்தான் இருக்கும். தங்களுடைய சொற்பொழிவை கேட்ட எங்களுக்கு அதுவும் வேடிக்கையாகத்தான் இருந்தது. ஏனென்றால்,எந்த விதமான உழைப்பும் இல்லாமல் சம்பாதிப்பது வட்டியாகும் என்று அந்த உரையிலே நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள். நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள் என்ற வசனம் தான் நினைவுக்கு வந்தது.
எம்.எல்.எம் (MLM மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங்) என்ற சங்கிலி தொடர் ஹராம் என்பது அனைத்து அறிஞர்களாலும் அறிவிக்கப்பட்ட ஃபத்வா ஆகும். உழைப்பில்லாமல் பொருளீட்டக்கூடிய ஒரு செயலாகும். அதை சாதாரண ஒருவர் செய்யும்போது அறியாமையில் செய்கிறார் என்று விட்டுவிடலாம் அல்லது அவருக்கு அறிவுரை செய்யலாம். ஆனால் மெத்த படித்த மேதாவியான உங்களுக்கு பிறர் சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை. இதை நீங்கள் மட்டும் செய்தால், அந்த பாவம் உங்களோடு போகட்டும் என்று விட்டுவிடலாம். ஆனால் 'நான் நரகத்திற்கு செல்கிறேன் நீயும் துணைக்கு வா' என்று மற்றவர்களையும் அழைக்கிறீர்கள் என்றால் அதற்கு அசாத்திய துணிவு வேண்டும்.

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஸலாஹூதீன் என்பவரை எம்.எல்.எம்மில் சேரும்படி அழைப்பு விடுத்த கடிதத்திலிருந்து சில வரிகள்:

சகோதரரே! தற்போது அஜந்தா கேர் என ஒரு பெரிய நிறுவனம் இன்டர்நேஷனல் அளவில் ஒரு வியாபாரம் தொடங்கியுள்ளது.சிறிய முயற்சியில் பெரிய பலன்.பரவலாக பலர் பயன்பெறும் நல்ல திட்டமாக உள்ளது.அது சம்பந்தமாக கிளாஸ் நடந்து வருகிறது.அதில் பல ஹிந்து சகோதரர்கள் பலன் பெற்று வருகிறார்கள்.தற்போது எனக்கு தெரிந்த புளியங்குடியை சார்ந்த தவ்ஹீத் சகோதரர் அதை விளக்கி அவரும் அவர் போன்ற சில நமது சகோதரர்கள் பயனடைந்து வருவதை விளக்கி கூறினார்.அல்ஹம்துலில்லாஹ்! நல்ல முறையாக தெரிகிறது.அதாவது ஒரு நபர் இரு நபர்களை இணைக்க வேண்டும் அப்படியே சங்கிலி தொடராக செல்ல வேண்டும்.ஆரம்பமாக 750 ரூ வார லாபமாகத் தொடங்கி அதன் இறுதி கட்டமாக வாரம் 50 ஆயிரம் வரை தொடர்பு கொள்ளும் உறுப்பினர்களை பொறுத்து அதிகரிக்கும். சேரும் ஒவ்வொருவரும் ரூ3990, அஜந்தா கேர், சென்னை என DD எடுத்து அனுப்பி வைக்க வேண்டும். DD சேர்ந்த ஒரு வாரத்தில் ஆரம்பமாக 400ரூ அளவுக்கு அன்றாடம் நாம் பயன்படுத்தும் சோப்பு,ஆயில்,பேஸ்ட் பிரஸ் போன்ற பொருட்களும் அத்துடன் ஒரு புக் அனுப்புவார்கள்.அதில் எலக்ட்ராணிக்ஸ் ஐயிட்டங்கள் விலையோடு வரும் அதில் எந்த பொருள் எப்போது தேவையோ அப்போது அந்த கூப்பனை அனுப்பி வைத்தால் பொருள் வந்து சேர்ந்துவிடும். ஆக நாம் அனுப்பும் பணத்திற்கு முறையான பொருளும் நமது முயற்சி அளவிற்கு லாபமும் தொடர்ந்து கொண்டிருக்கும்.எனவே இந்த முயற்சியை எடுங்கள்.ஓய்வுநேரத்தில்,நமக்கு நல்ல பலன்.எனவே சேரும் நண்பர்களிடம் ரூ3990க்கு DD எடுத்து அனுப்பி வைத்தால் பலன் பெறலாம்.இலேசாக கருதாது முயலுங்கள் நாம் பலன் பெறுவோம்.
நண்பர்களுக்கு ஸலாம் சொல்லுங்கள்
துஆ செய்யுங்கள்
இவண்
தங்களன்புள்ள
K.S.Rahumathullah
97 A,NORTH MAIN ROAD,
ERUVADI
Or
1 6/6 வணிகர் தெரு
ஏர்வாடி




இது எப்படி ஆட்களை சேர்க்க வேண்டும் என்று கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள் ஸலாஹூதீன் அவர்களுக்கு எழுதிய வரைபடம்.



விஷயத்திற்கு வருவோம்.
வெளி உலகிற்கு உங்களை ஒரு மௌலவியாக காட்டிக்கொள்ளும் நீங்கள் செய்யும் இந்த செயல் ஹலால் தானா! சுட்டிக்காட்டிவிட்டோம்.

ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் நிறை மற்றும் குறைகளை எடுத்து வைக்கும்போது சுட்டிக்காட்டப்பட்டவைகள் இருக்கும் அந்த மனிதர், அதை திருத்திக்கொள்வதும் அப்படி இல்லாத பட்சத்தில் அதற்கான விளக்கம் தருவதும் நற்பண்பாளர்களின் சிறந்த செயலாக இருக்க வேண்டும். அதனடிப்படையில் சகோ. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்களுடைய பெயரில் எழுதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மொத்த சாராம்சம் என்னவெனில் த.த.ஜ அமைப்பும், அதன் நிர்வாகிகளும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களல்ல என்பதும், த.த.ஜ-வில் இருக்கக்கூடிய உறுப்பினர்கள் இதை உணர வேண்டும் என்ற மிகச்சிறப்பான(?!) நல்ல(?!) நோக்கமாகவே கருதிக்கொள்வோம். அந்த அடிப்படையிலேயே அவர் கீழ்கண்டவாறு கூறியிருப்பதை காண்போம்..
ஆதாரத்துடன் தவறை சுட்டிக்காட்டுபவருக்கு நன்றி கூறி திருத்தி கொள்வேன். இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள்.

என்று எழுதியிருந்தீர்கள். இப்போது அதையே உங்களிடம் கூறுகிறோம்

இம்தாதி அவர்களே! இவையெல்லாம் சுட்டிக்காட்டுவதன் நோக்கமே தவறு செய்தவர்கள், செய்பவர்கள் திருந்த வேண்டுமென்ற நல்லெண்ணத்தில்தான். தவறென தெரிந்ததும் திருந்துபவர், திருத்தி கொள்பவர், திருந்த முயற்சிப்பவர் ஆகிய அனைவரும் இறையன்பை பெற தகுதிக்குரியவர், தவறை திருத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்த நினைப்பவர் ஷைத்தானின் அடிமைகள். ஆகவே, மேற்கூறப்பட்டவைகள் அனைத்தும் உங்களுடையதுதான் என்பதில் எவ்வித சந்தேகமும் இருக்காது.எனவே உங்கள் தவறுகளுக்காக வருந்தி ஏக இறைவனிடம் மன்னிப்புக்கோரி துஆ செய்யுங்கள். அப்படியே மக்களுக்கும் அதை தெரியப்படுத்துங்கள். அப்போதுதான் நீங்கள் குறிப்பிட்டதுபோல் தவ்ஹீத்வாதிகள் அனைவரும் மீண்டும் ஒற்றுமையாக கை கோர்த்து செயல்பட ஏதுவாக இருக்கும்.
( இன்ஷா அல்லாஹ் சுட்டிக்காட்டல் தொடரும்...)
நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும் பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களை தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் பாதையை விட்டும் மக்களை தடுக்கின்றனர். அல்-குர்ஆன் 9:34