Sunday, July 27, 2008

பீ.ஜே யை ஒழித்துக்கட்டுவோம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

1400 வருடங்களுக்கு முன், அறியாமை காலத்திலே வாழ்ந்த மக்கள், சிலைகளை தங்கள் தெய்வங்களாக வணங்கி கொண்டிருந்தனர். விபச்சாரத்தை ஒரு தவறாகவே கருதாமல் இருந்தனர். படைத்தவனை மறந்து விட்டு படைப்பினங்களான சூரியனையும் நெருப்பையும் வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் தான் அல்லாஹூதஆலா அவர்களிடத்திலே முஹம்மது (ஸல்) எனும் தூதரை அனுப்புகின்றான். அந்த தூதர் அந்த மக்களிடத்திலே அல்லாஹ்வை பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார். ஒழுக்கமுடன் நடக்கவேண்டுமென்றும் ஒரே இறைவனையே வணங்க வேண்டுமென்றும் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

மக்களோடு மக்களாக நன்னடத்தையுடன் வாழ்ந்து வந்த அந்த முஹம்மதுவை(ஸல்) அந்த மக்கள் எதிரியாக கருதினர். நம்முடைய தெய்வங்களெல்லாம் பொய்யானவை என்று இவர் சொல்கிறாரே இவரை சும்மா விடக்கூடாது என்கின்றனர் ஒரு சிலர். நம்முடைய மூதாதையரின் கொள்கையை இவர் விடச்சொல்கிறாரே இவரை கொலை செய்து விடுவோம் என்கின்றனர் ஒரு சிலர். நம்முடைய பிழைப்புக்கு பங்கம் விழைவிக்கிறாரே இவரை ஒழித்துக் கட்டுவோம் என்கின்றனர் ஒரு சிலர். தங்களில் யாராவது ஒருவர் தனியாக சென்று அவரை கொலை செய்தால், அந்த சமுதாயம் பழிக்கு பழி என்று சொல்லி அவரையும் கொலை செய்து விடுமே என அஞ்சி அனைத்து கோத்திரத்தாரையும் ஒன்று கூட்டி அவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கின்றனர். அனைவரும் சேர்ந்து கொன்றால், இவர் அனைவருக்கும் எதிரி தான் என்பதை சொல்லி தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினர். அதற்கான நாளை குறித்து, நபிகளாரின் (ஸல்) வீட்டை எதிரிகள் முற்றுகையிட்டனர். ஆனால் அல்லாஹ் நபிகளாரை பாதுகாத்து அசத்தியவாதிகளை ஏமாற்றமடைய செய்தான்.

இது நபிகளாரின்(ஸல்) மக்கா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்

எதிரிகளின் தொந்தரவினால் சொந்த நாட்டை துறந்து வேறு பகுதிக்கு சென்றபோதும் எதிரிகள் விட்டபாடில்லை. இவர் சத்தியத்தை சொல்வதால் நம்முடைய பலம் குன்றுகிறது. நம்மிடமிருப்பவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் முஹம்மது(ஸல்)வின் அணியிலே சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அவருடைய அணி வலுப்பெற்றுவிட்டால் நம்முடைய பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும், வருமானம் போய்விடும், எனவே அவரை வீழ்த்துவது தான் நம்முடைய குறிக்கோள் என்று மக்கா காஃபிர்கள் சூளுரைத்தனர். பரம்பரை பரம்பரையாய் தங்களுக்குள்ளே சண்டையிட்டு கொண்டிருந்தவர்கள் கூட இதற்காக இணைந்தனர். அனைத்து குலத்தாரும் அனைத்து கோத்திரத்தாரும் ஒன்று கூடினர். எந்த அளவிற்கென்றால், இயேசுவை (ஈஸா நபி (அலை)) வேசி மகன் என்று சொன்ன யூதர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைந்து, மக்கா காஃபிர்களோடு சேர்ந்து கொண்டு முஹம்மதுவை (ஸல்) வீழ்த்த திட்டமிட்டனர்.

இது நபிகளாரின்(ஸல்) மதீனா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்

தமிழகத்திலே புரையோடி போயிருந்த இணைவைப்பை விரட்டுவதற்காக எத்தனையோ அறிஞர்கள் களமிறங்கி போராடினர். நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக பிரிவினைகள் ஏற்பட்டது. ஆனால் அதற்காக, ஒரு அறிஞரை தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மக்கா காஃபிர்கள் செய்த வேலையை ஒரு தவ்ஹீத்வாதி என்று சொல்லக்கூடியவர் செய்யலாமா? இதை படிப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை.

தமிழகத்திலே தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் பி.ஜெய்னுல் ஆபிதீனும் ஒருவர். முக்கியமானவரும் கூட. அவருடைய சத்திய பிரச்சாரத்தினால் தமிழக மக்கள் நரகத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, சொர்க்கம் புறப்பட தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டனர். தன்னை சீண்டுவார் யாருமில்லை என்றதும் சினம் கொண்ட ஜாக்கின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி, மக்கா காஃபிர்கள் செய்த வேலையை செய்ய துவங்கினார். தான் ஒருவன் மட்டும் அதை செய்துகொண்டிருப்பதால் மக்களின் கோப பார்வை தம்மீது விழுந்து விடுமென்பதால், பி.ஜே யை ஒழித்துக் கட்ட வேண்டி அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்தார். 'தன்னுடைய இயக்கத்தை சேராதவர்களை பி.ஜே, காஃபிர் என்று சொல்கிறார், இவரை இப்படியே விடக்கூடாது. எனவே அனைவரும் ஒன்று கூடுவோம்' என்று எஸ்.கமாலுதீன் மதனி, தன் கைப்பட தன்னுடைய லெட்டர்பேடில் எழுதி, கையெழுத்திட்டு அனைத்து அமைப்புகளுக்கும் இரகசியமாய் அனுப்பினார். (இப்படி எஸ்.கே எழுதவில்லை என்றோ, அழைப்பு கொடுக்கவில்லை என்றோ கூறுவாரானால் பொது மேடையிலே குமரி முஸ்லிம் ஆதாரங்களை சமர்பிக்கும் இன்ஷாஅல்லாஹ்)

அந்த அழைப்பின் பேரில் பி.ஜேயை ஒழித்து கட்டுவதற்காக பல அமைப்புகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினர்.




எஸ்.கமாலுதீன் மதனி

முஜிபுர்ரஹ்மான் உமரி

கே.எம்.இக்பால் மதனி

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

எம்.எம்.அப்துல்காதர் உமரி

முப்தி.உமர் ஷெரிஃப் காஸிமி

கோவை.மசூது உட்பட

பிஜே யின் பிரச்சாரத்தால், வளர்ச்சியால் நம்முடைய வருமானம் தடைபடுகின்றது, பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என அஞ்சிய இன்னும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் அதிலே கலந்து கொண்டு பி.ஜே யை என்ன செய்ய வேண்டும், அவரை பற்றி நாம் வெளி உலகுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

அங்கே என்ன பேசப்பட்டது?

என்ன திட்டங்கள் தீட்டப்பட்டது?

அந்த சூழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சொன்னவை என்ன?

என்பதை இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் ஆதாரங்களோடு காண்போம்.

பொதுமக்கள் கவனத்திற்கு:
இவர்கள் அனாதை ஆசிரமம் நடத்துகின்றார்கள், எனவே அனாதைகளை பராமரிக்க நாம் உதவி செய்வோம், இவர்கள் அழைப்பு பணி செய்வதாக பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள், எனவே அல்லாஹ்விடத்தில் நன்மையை பெற்று தரும் அழைப்பு பணிக்காக இவர்களிடம் நன்கொடையளிப்போம் என தங்கள் செல்வங்களை வாரி கொடுப்பவர்களே! சிந்திப்பீர்!! இவர்கள் தனக்கு பிடிக்காதவனை என்ன செய்வது, அவனை எப்படி பழிவாங்குவது என்று திட்டம் தீட்டுவதற்காக மக்கள் பணத்திலே மண்டபம் எடுத்து, வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விருந்து படைக்கின்றனர். அங்கே என்ன நடந்தது என்பதனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை. நிதி கேட்டு உங்களிடத்திலே வரும்போது, அவர்களிடத்திலே இந்த சம்பவத்தின் சிடியை கேட்டு வாங்குங்கள். உங்கள் பணத்தை அவர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என்பதை உணருங்கள்.

கடவுள் ஏன் வரவில்லை?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஒரு நில பிரச்சனை தொடர்பான வழக்கு மூன்று ஆண்டுகளாக கோர்ட் மாறி கோர்ட் மாறி நிலுவையில் இருந்து வருகிறது. விரைவு கோர்ட்டுக்கு பிரச்சனை வந்தும் தீர்வு கிடைக்கவில்லை.

சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர்கள் ஆஜராகாததுதான் வழக்கு இழுத்தடிக்கப்படுவதற்கு காரணம்.
ஆஜராகாத அவர்கள் : கடவுள் ராமரும் மகாவீரும் தான் !

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் தான் இந்த கூத்து அரங்கேறி உள்ளது. தன்பாத் மாவட்டத்தில் உள்ளது தய்யா கிராமம். இங்கு ராமர் கோவில் உள்ளது. அங்கு மகாவீர் சிலையும் பிரதிட்சை செய்யப்பட்டுள்ளது. இந்த கோயிலையும் கோயிலுக்கு சொந்தமான நிலத்தையும், இந்த கிராமத்தை சேர்ந்த பார்வதி தேவி என்பவர் நிர்வகித்து வந்தார்.

தய்யா கிராமத்து மக்கள் புரண் சந்திர ஹல்தர் தலைமையில் சப் - ஜட்ஜ் கோர்ட்டில் கோவிலையும் கோவில் நிலத்தையும் பொது சொத்தாக அறிவிக்கக்கோரி மனு செய்தனர். வழக்கில் பிரதிவாதிகளாக தன்னையும் ராமர், மகாவீர் ஆகியோரையும் சேர்த்து விட்டார் ஹால்தார். இந்த வழக்கில், கோவிலையும் கோவில் நிலத்தையும் பொது சொத்தாக அறிவித்து உத்;தரவிட்டது சப் - ஜட்ஜ் கோர்ட். இதை எதிர்த்து மாவட்ட மற்றும் செஷன்ஸ் கோர்ட்டில் அப்பீல் செய்தார் பார்வதி தேவி. வழக்கில் எதிர்வாதிகளாக கடவுளர்களையும், ஹால்தாரையும் சேர்த்திருந்தார்.

இந்த வழக்கு விரைவு கோர்ட்டுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. விரைவு கோர்ட்டில் கடந்த பிப்ரவரி மாதம் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ராமர், மகாவீர், ஹால்தார் ஆகியோர் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டது.

பதிவுத்தபாலில் வந்த நோட்டீஸில் இருந்த முகவரியில் ராமரோ மகாவீரோ இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை.எனவே நோட்டீஸை அனுப்பிய கோர்ட் அதிகாரி ஸ்ரீராம் குமார், கோர்ட்டிடம் ராமர் மற்றும் மகாவீர் ஆகியோரின் முழு முகவரியை தெரிவிக்கும்படி கோரினார். ஆனால், கோர்ட்டுக்கு எப்படி கடவுளர் வசிக்கும் முகவரி தெரியும்?
எனவே, கோர்ட் அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது. கோர்ட் உத்தரவுப்படி, நாளிதழில் வெளியான விளம்பரம் தான் உச்சக்கட்ட காமெடி.

நாளிதழில் வெளியான விளம்பரம் இதுதான்:

கடவுளர் ராமர் மற்றும் மகாவீர் ஆகியோருக்கு தெரிவிக்கப்படுதல் யாதெனின்,
உங்கள் மீது கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் உங்களுக்கு, இந்த கோர்ட்டில் ஆஜராகும்படி உங்களது முகவரிக்கு பதிவுத்தபாலில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், நீங்கள் ஆஜராக தவறிவிட்டீர்கள். எனவே, இந்த நாளிதழின் மூலம் உங்களுக்கு தெரிவிக்கப்படுவது யாதெனின், 22ம் தேதி காலை 10.30 மணிக்கு நீங்கள் இருவரும் இந்த கோர்ட்டில் நேரில் ஆஜராகும்படி உத்தரவிடப்படுகிறது. தவறினால், இவ்வழக்கில் ஒருதலைப்பட்சமாக தீர்ப்பு வழங்க நேரிடும்.

இதுதான் நாளிதழில் வெளியான விளம்பரம்.
விளம்பரம் வெளியிட்ட பிறகும், ராமர், மகாவீர் ஆகியோர் கோர்ட்டில் ஆஜராகவில்லை என்பது சூப்பர் காமெடி.
நன்றி : தினமலர்

Wednesday, July 16, 2008

முஸ்லிம் மாணவிகளுக்கு அபராதம்

ஏக இறைவனின் திருப்பெயரால்..


கல்வி பயிலும் மாணவர்களும், விடுதியில் தங்கி படிக்கும் மாணவர்களும் முறையான காரணங்கள் இன்றி விடுப்பு எடுத்துக்கொண்டு கேளிக்கையான விசயங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டால், பள்ளி அல்லது விடுதி நிர்வாகம் அவர்கள் மீது சில ஒழுங்கு நடவடிக்கைகளை எடுப்பது பரவலாக நடைமுறையில் இருந்து வருகிறது. சில நேரங்களில் நிர்வாகம் மாணவர்களுக்கு அபராதம் விதிப்பதும் நடைமுறையில் இருந்து வருகின்ற ஒன்று.

அதுபோன்றதொரு வகையில் குமரி மாவட்டம், கோட்டாறு பகுதியில் ஜாக் தலைவர் கமாலுதீன் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் கதீஜத்துல் குப்ரா பெண்கள் அரபிக் கல்லூரியின் நிர்வாகம் அங்கு இருக்கும் சில மாணவிகள் மீது 200 ரூபாய் அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளது. இஸ்லாமிய கல்லூரியில் பயிலும் அவர்கள் மீது அபராதம் விதித்து ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அளவிற்கு, அந்த மாணவிகள் அப்படி என்னதான் தவறிழைத்து விட்டார்கள் என்று கேட்பவர்களுக்கு அதிர்ச்சியே காத்திருக்கிறது. ஏனெனில் அவர்கள் கேளிக்கையான விஷயங்களிலோ அல்லது இன்னபிற மார்க்கத்திற்கு புறம்பான விஷயங்களிலோ கலந்து கொண்டதால் இந்த அபராதம் அவர்கள் மீது விதிக்கப்படவில்லை.

கடந்த மே 10 மற்றும் 11 தேதிகளில் தஞ்சை வல்லத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டதனாலேயே அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஜாக் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் அரபிக்கல்லூரி நிர்வாகம். இது பற்றிய விஷயத்தை வெளிப்படையாக யாரிடமும் சொல்ல முடியாமல் அம்மாணவிகள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏனெனில் இது தொடர்பாக யாரும் வாய் திறந்தால் வகுப்பில் தேர்ச்சி பெற விடாமல் தடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.

குமரி மாவட்ட (ஜாக் அல்லாத) தவ்ஹீத் சகோதரர்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் பல்வேறு இடையூறுகளை ஜாக் தொடர்ந்து செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மார்க்க மற்றும் சமுதாய நலனுக்காக ஏதாவது செய்ய திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளாக பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுதெல்லாம் அப்பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதை தனது முழு நேர கடமையாக ஜாக் செய்து வருகிறது. அதற்காக தான் முன்பு ஹராம் என்று சொன்ன தமுமுக-வோடும் கைகோர்த்து செயல்படுவதில் அவர்களுக்கு எவ்வித கூச்சமுமில்லை, வெட்கமுமில்லை. ஆனால், மானங்கெட்ட ஜாக்கினர் த.த.ஜ-விற்கு எதிராக செய்யும் இடையூறே பல தருணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரமாக மாறிவிடுகிறது. மாறியும் இருக்கிறது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே!

உதாரணத்திற்கு தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடத்துவதற்காக பல விதத்திலும் த.த.ஜ பிரச்சாரம் மேற்கொண்டபோது இந்த ஜாக்கினரும், தமுமுகவினரும் சேர்ந்து பல்வேறு துவேச, அவதூறு பிரச்சாரங்களை வழக்கம்போலவே செய்தனர். அதையும் இறைவன் வழக்கம் போலவே முறியடித்து மாபெரும் மக்கள் வெள்ளத்தை குழுமச்செய்து மாநாட்டை வெற்றி பெறச்செய்தான்.

அல்லாஹ்வுடைய பள்ளியை தங்களுடைய சொத்தாக கோர்ட்டில் வாதாடிய சகோ. கமாலுதீனின் ஜாக் அமைப்பினர், ஜூம்மா மேடைகளை தங்களுடைய ஃபித்னா கூடாரமாக ஆக்கிய சகோ. கமாலுதீனின் ஜாக் அமைப்பினர், அல்லாஹ்வின் தூதர் உணர்ச்சி பூர்வமாய் உரையாற்றிய அந்த மிம்பர் மேடையை பயன்படுத்தி பிறர் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்த இந்த ஜாக்கினரின் எந்த ஒரு பிரச்சாரமும் எடுபடாததாலேயே ஜாக் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரியின் மாணவிகளிலிருந்து ஆலிமாக்கள் வரை வல்லம் மாநாட்டிலே கலந்து கொண்டார்கள். அல்ஹம்துலில்லாஹ்.

நாம் இவ்வளவு சிரமப்பட்டு ததஜ நடத்தும் தவ்ஹீத் எழுச்சி மாநாட்டை தோல்வியுற முயற்சி செய்து கொண்டிருக்கும் போது நமது கட்டுப்பாட்டில் இருக்கும் மாணவிகளும், ஆலிமாக்களுமே அந்த மாநாட்டிற்கு சென்றுள்ளனரே என்று சகோ.கமாலுதீன் அவர்களுக்கு கோபம் கொப்பளித்திருக்கிறது. அதனாலேயே மாநாட்டிற்கு சென்ற கதீஜத்துல் குப்ரா கல்லூரி மாணவிகளுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்திருக்கிறார்.

மார்க்கம் அனுமதித்த வகையில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு சென்றதற்காக இம்மாணவிகளுக்கு அபராதம் விதித்த சகோ.கமாலுதீன் அவர்கள், இஸ்லாம் வெறுத்து ஒதுக்கிய, மன்னிப்பே இல்லாத மாபெரும் குற்றம் என்று இறைவனால் எச்சரிக்கப்பட்ட ஷிர்க்கான காரியத்தில் ஈடுபட்ட மலுக்கு முதலிக்கு என்ன அபராதம் விதித்தார்? இனி வரும் காலங்களில் சந்தர்ப்பவாதம் என்று சொல்வதற்கு பதிலாக சகோ.கமாலுதீன் மதனி என்று சொல்ல வேண்டும். அந்தளவிற்கு இப்படியொரு இழிவான நிலைக்கு தங்களை தாங்களே ஜாக்கினர் தள்ளிச்செல்கின்றனர் என்பதை நினைக்கும் போது வருத்தமாகத்தான் இருக்கிறது.
அதேபோல், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கோரி நடைபெற்ற உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொள்வதற்காக முஸ்லிம்களெல்லாம் தயாராகி கொண்டிருந்த காலத்தில் இந்த ஜாக் வகையறாக்கள் மட்டும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக்கூடாது என்பதில் மிகவும் கண்ணும் கருத்துமாக இருந்தனர். அல்லாஹ்வுடைய பள்ளியை எங்களின் சொத்து என்று சற்றும் அச்சமில்லாமல் வாதாடும் இந்த மானங்கெட்ட ஜாக்கினர் தங்களது ஜூம்மா மேடைகளை த.த.ஜ நடத்தும் உரிமை மீட்பு பேரணிக்கு எதிர்ப்பு கோசமிடும் களமாக மாற்றி துவேச பிரச்சாரம் செய்தனர்.
  • காஃபிர்களிடம் கோரிக்கை வைக்கலாமா?
  • ஒரு முஸ்லிம் இட ஒதுக்கீடு கேட்கலாமா?
  • உணவளிப்பவன் அல்லாஹ், யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவனுக்கு தெரியாதா?
  • போராட்டம் செய்யலாமா?
  • இஸ்லாத்தில் ஆர்ப்பாட்டம் கூடுமா?

என்றெல்லாம் பள்ளிகள் தோறும் எஸ்.கே உட்பட ஜாக் தாயிகள்! அனைவரும் பிரச்சாரம் செய்தனர். (ஆதாரம் உண்டா என்று கேட்டு விடாதீர்கள். கூடை,கூடையாக ஆதாரம் உள்ளது. அதை அள்ளி கொட்டினால் அதுவே நூறு பக்கங்களை தாண்டும்). ஆனால் அவை அனைத்தையும் மீறி ஏராளமான குமரி மாவட்ட மக்கள் அந்த உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டனர். குறிப்பாக சொல்வதென்றால், ஜாக் ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் தமுமுகவின் மாநில நிர்வாகிகளை இன்னும் நல்லவர்களாக எண்ணும் தமுமுகவின் சில நல்ல மாவட்ட,கிளைத்தலைவர்கள் எல்லாம் கூட அந்த உரிமை மீட்பு பேரணியிலே சாரை சாரையாய் கலந்து கொண்டனர்.

ஜாக்கின் பெண் பிரச்சாரகரான ஒரு ஆலிமா (பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் அதையும் வெளியிடுவோம் இன்ஷா அல்லாஹ்) ததஜ நடத்திய முஸ்லிம்களின் உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டதற்காக கதீஜத்துல் குப்ரா பெண்கள் அரபி கல்லூரியின் முதல்வரும், கோட்டாறு அஷ்ரஃப் பள்ளியின் இமாமுமான செய்யதலி ஃபைஸி என்பவரால் கடுமையாக வசைபாடப்பட்டார். அந்த ஆலிமாவின் வீட்டிற்கே சென்று செய்யதலி ஃபைஸி இந்த வசைபாடலை பாடினார் என்றால் எந்தளவிற்கு இவர்கள் துவேசத்தை கையாளுகிறார்கள் என்பதை விளங்க முடியும். மேலும், அஷ்ரஃபியாக்கள் பேரவையில் இருந்து அந்த சகோதரியை நீக்கவும் முடிவு செய்தனர். அந்த தருணத்தில் நடந்த மார்க்க விளக்கக் கூட்டத்திலும் அந்த சகோதரி உரையாற்ற தடுக்கப்பட்டார்.

செய்யதலி ஃபைஸி.!

யார் இவர்? யாருக்கும் தெரியாது. யாரென்றே அறியப்படாமல் இருந்தவர். சகோ. பி.ஜே அவர்களால்தான் நான் தவ்ஹீதை விளங்கி கொண்டேன் என வெளியே சொல்லிக்கொண்டவர். பிறகு பி.ஜே-யை திட்டுவதாலேயே பிரபலமடைந்தவர். அப்பேர்பட்ட தளபதி தற்போது வகிக்கும் பொறுப்புகள்:

1) அஷ்ரப் பள்ளியில் இமாம்

2) கதீஜத்துல் குப்ரா மகளிர் கல்லூரியில் முதல்வர்

3)ஃபிர்தவ்ஸியா கல்லூரியில் பேராசிரியர்

4) அல் ஜன்னத் இதழின் தொகுப்பாசிரியர்

5) ஜாக்கின் மாநில துணை தலைவர்



பி.ஜே-யை திட்டுவதாலும் அவர்மீது அவதூறு கூறுவதாலும் மட்டுமே சகோ.கமாலுதீனை திருப்தி படுத்த முடியும் என்ற தந்திரத்தை ஜாக் வகையறாக்கள் தெளிவாக விளங்கி வைத்துள்ளனர். அப்படி செய்தாலே சகோ.கமாலுதீனின் ஆசியும், ஆதரவும் அவர்களுக்கு கிடைக்கும். ஜாக் வகையறாக்கள் எழுதப்படாத இத்தீர்மானத்தை ஏற்படுத்திக்கொண்டு பி.ஜே-யை வசைபாடியே பிழைப்பு நடத்தி வருகின்றனர்.

அந்த வகையிலேயே செய்யதலி ஃபைஸி-யும் செயல்பட்டு மேற்கண்ட பொறுப்புகளுக்கு வந்துள்ளார். பொது மேடைகளில் இவர் அவதூறு கூறினால் குமரி டி.என்.டி.ஜே அவரை நார் நாராக கிழித்து விடுமென்பதால் ஜாக்கின் சொத்து என்று ஜாக்கினரால் வாதாடப்படும் பள்ளியின் ஜூம்மா மேடையை பயன்படுத்த ஆரம்பித்தார். தேர்தலில் ஓட்டு கேட்டு ஜாக் பிரச்சாரகர்கள் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, இவர் அதை மறைத்து, ஜூம்மா மேடையில் ததஜவை விமர்சித்து தவ்ஹீத்வாதிகள் தேர்தலில் ஈடுபடலாமா? என்று உரையாற்றினார். மிம்பரிலிருந்து இறங்கியதும் தேர்தலில் சீட் கேட்டு ஜாக் ஆர்ப்பாட்டம் செய்த போட்டோவையும் நாளிதழையும் குமரி டி.என்.டி.ஜே அவரிடம் காட்டி அவரின் சட்டையை பிடித்தபோது 'நோ கமெண்ட்ஸ்' என்று சொன்னவர்தான் இந்த செய்யதலி ஃபைஸி.

ஜாக்கின் பொய்பிரச்சாரத்தையும் அவதூறுகளையும் தோலுரித்துக் காட்ட எஸ்.கே-ன் அலுவலகத்திற்கு முன்பாகவே பொதுமேடையிலே குமரி டி.என்.டி.ஜே வரிக்கு வரி பதில் கொடுக்கும் என்ற போஸ்டரை பார்த்து மிரண்ட செய்யதலி ஃபைஸி அன்றைய ஜூம்மாவிலே, (19-01-2007) த.த.ஜ வினரோடு ஒட்டும் உறவும் வைத்துக் கொள்ளக்கூடாது, இவர்களை தள்ளி வைக்கவேண்டும், இவர்களின் இஸ்லாம் சந்தேகத்திற்குரியது என்று கூறியதை பூனை வாயில் அகப்பட்ட எலியை போல அன்றைய ஜூம்மாவில் அகப்பட்டவர் கேட்டுக்கொண்டிருந்தனர்.

யார் அதிகமாக பி.ஜே மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்களுக்குத்தான் பதவி என்ற அடிப்படையில் மூவருக்கு மாநில தலைமை பதவி வழங்கப்பட்டது. இதுவரை ஜாக்கில் எந்த பொறுப்பிலும் இல்லாத இவரும் அதில் ஒருவர். (ஏர்வாடி சிராஜ், மசூது ஆகியோர் மற்ற இருவர்கள்) ஜாக்கிற்காக ஆரம்பத்தில் உழைத்த எத்தனையோ பேர் இருக்கும்போது சகோ.கமாலுதீன் அவர்களுக்கு பிறகு ஜாக்கின் சொத்துக்களுக்கு ஏகபோக உரிமை கொண்டாட மாநில தலைவராகும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் இந்த செய்யதலி ஃபைஸி என்று குமரி மாவட்ட முஸ்லிம்கள் பேசிக்கொள்கிறார்கள்.

ஜனவரியில் த.த.ஜ நடத்திய மாநாட்டிற்கு எப்படி போகலாம் என்று வீடு தேடி வந்து செய்யதலி ஃபைஸி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அந்த ஆலிமாவிற்கு அடுத்த ஜூம்மா-வில் செய்யதலி ஃபைஸி ஆற்றிய உரை ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில், பிப்ரவரி மாதத்தில் நடந்த அந்த ஜூம்மாவில் ஆர்ப்பாட்டம் கூடும், போராட்டம் கூடும், அது நபி வழி, பாதிக்கப் பட்டவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் போராட சொல்லி இருக்கிறார்கள் என்று வீர வசனம் பேசியதோடு மட்டுமல்லாமல் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லி கொண்டிருந்தார்.

போராட வேண்டும் என்ற அர்த்தங்களை உள்ளடக்கிய ஹதீஸ்கள் தெரியாததால்தான் முன்பு அப்படி சொல்லிவிட்டார் போலும் என்று அந்த ஆலிமா உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை இப்பொழுதாவது அறிந்து தனது தவறை திருத்திக்கொண்டாரே என்று பெருமூச்சு விட்டனர்.

ஆனால் அன்று, இஸ்லாத்தில் போராட்டம் கூடாது என்று சொன்னது த.த.ஜ ஜனவரியில் நடத்திய முஸ்லிம்களின் உரிமை மீட்பு பேரணிக்கு செல்பவர்களை தடுப்பதற்காக மட்டுமே!.

இன்று போராட்டம் கூடும் என்று சொல்வதோ தமுமுக பெப்ரவரியில் நடத்தவிருக்கின்ற மற்றொரு போராட்டத்திற்கான அனுமதியே என்பது பலருக்கும் தாமதமாகவே புரிந்திருக்கிறது.

'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 33)

ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.

இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நயவஞ்சகர்களை விட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டு வந்தார்கள். இன்றோ இவர்கள் பகிரங்கமாகச் செயல்படுகிறார்கள். (புஹாரி 7113)

இளம்பெண்ணை கடத்திய வழக்கில் த.மு.மு.க பிரமுகர் கைது

நம்நாட்டு ஊடகங்கள் முஸ்லிம்களின் செய்தி என்றால் மிகைப்படுத்தி போடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். தினத்தந்தியில் வெளியான கீழ்கண்ட இச்செய்தியும் ஊடகங்களின் மிகைப்படுத்தலாகவே இருந்தால் அது மிக்க நன்று.


தினத்தந்தி


திருவாரூர், ஜூலை 13

கூத்தாநல்லூரில் இளம்பெண்ணை காரில் கடத்த முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
கடத்த முயற்சி
கூத்தாநல்லூர் வடபாதிமங்கலம் ரோட்டை சேர்ந்தவர் நடராஜ். இவரது மகள் சங்கீதா (வயது 22). இவர் நேற்று முன்தினம் அண்ணாமலை பல்கலைகழகத்தில் எம்.காம் சேர்வதற்காக விண்ணப்பம் வாங்க திருவாரூர் வந்தார். பின்னர் விண்ணப்பம் வாங்கியவுடன் பஸ் ஏறி கூத்தாநல்லூர் வந்துள்ளார். லெட்சுமாங்குடி பஸ் நிறுத்தத்தில் சங்கீத இறங்கி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மகன் ஜெகுபர் அலி (30). இவர் த.மு.மு.க. பிரமுகர். இவரது நண்பர் சாதிக் ஆகிய இருவரும் ஒரு காரில் பின் தொடர்ந்து வந்தனர். நகராட்சி அலுவலகம் முன்பு நடந்து சென்ற சங்கீதாவை வழிமறித்து முன்னால் காரை நிறுத்தியுள்ளனர். இதில் அதிர்ச்சி அடைந்த சங்கீதாவின் கையை பிடித்து இழுத்து காரில் ஏற்றி கடத்த முயற்சி செய்துள்ளனர்.

த.மு.மு.க பிரமுகர் கைது

இதற்குள் சுதாரித்துக் கொண்ட சங்கீதா சத்தம் போட்டு கத்தினார். உடன் அக்கம் பக்கம் உள்ளவர்கள் ஓடிவந்துள்ளனர். இதனை பார்த்த ஜெகுபர் அலி சங்கீதாவை மிரட்டிவிட்டு மின்னல் வேகத்தில் காரை ஓட்டி தப்பித்து சென்றுவிட்டார்.

இது குறித்து கூத்தாநல்லூர் போலீசில் சங்கீதா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை வழக்கு பதிவு செய்து ஜெகுபர் அலியை கைது செய்து, கடத்த முயன்ற காரையும் பறிமுதல் செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சாதிக்கை தேடி வருகின்றனர்.


Tuesday, July 8, 2008

இந்துக்கடவுள்களும் இறைத்தூதர்களே! – டாக். ஜவாஹிருல்லாவின் கருத்திற்கு குவைத் தமுமுக ஒப்புதல்!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..

தவ்ஹீத் பிரச்சாரம் எங்களுடைய வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக தமுமுகவினர் அவ்வப்போது சமுதாயத்திற்கு துரோகம் செய்து வருவதை தமிழக முஸ்லிம்கள் அறிந்துள்ளனர்.

மாநில அரசு தமிழக முஸ்லிம்களுக்கு எப்பேர்ப்பட்ட அநீதி இழைத்தாலும் அதற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் என்று தனது செயல்பாடுகளின் மூலம் டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக ஆரம்பம் முதலே நிரூபித்து வருகிறது.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விசயத்தில் தமிழக அரசு செய்த துரோகத்திற்கு எதிராக பேச திராணியற்ற டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக தமிழக அரசோடு இணைந்து தமிழக முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து வருவதை தமிழ்கூறும் நல்லுலகம் நன்றாக அறிந்திருக்கிறது.

இடஒதுக்கீடு விசயத்தில் தமிழக அரசு செய்தது சரிதான் என்று தொலைக்காட்சியில் போட்டி போட்டுக்கொண்டு பேட்டிக்கொடுத்த டாக். ஜவாஹிருல்லாவின் முகத்தில் அடித்தாற்போல் முதல்வர் கருணாநிதியே இடஒதுக்கீடு விசயத்தில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதற்கு இன்றுவரை டாக். ஜவாஹிருல்லாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அந்த ஆளுதான் இப்படி பயந்து நடுங்குகிறார் என்றால் அவரது ரசிகர்களால் கூட அதற்கு வியாக்கியானங்கள் தந்து நியாயப்படுத்திட முடியவில்லை.

இப்படி சர்வ சாதாரணமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகவும், ஏகத்துவ கொள்கைக்கு எதிராகவும் துரோகம் செய்து வரும் டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக தனது அரசியல் பிரவேசத்திற்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு தேவை என்பதால் அரசியல் கட்சியினரோடு படுகேவலமான முறையில் சமரசம் செய்து கொண்டும், மாற்று மதத்தினரை கவர வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் தற்பொழுது முழுவீச்சில செயல்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றில் எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் சொல்லத்துணியாத ஒரு கருத்தை கேவலம் ஒட்டுக்களை பெறுவதற்காக டாக். ஜவாஹிருல்லா தற்பொழுது சொல்லி வருகிறார். இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது என்று டாக். ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

இந்துக்கள் இறை அவதாரங்களாக கருதுவது இராமரையும், கிருஷ்ணரையும்தான். அப்படி என்றால் இராமரையும், கிருஷ்ணரையும் டாக். ஜவாஹிருல்லா இறைதூதர்கள் என்று சொல்கிறார். ஜவாஹிருல்லாவிற்கு அரசியல் ஆசையில் அறிவு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கி வருகிறது என்பதை இதை பார்ப்பவர்கள் யாவரும் அறிவர். ஆனால், அவரால் மூளை கழுவிவிடப்பட்ட அவரது ரசிகர்கள் இல்லை.. இல்லை.. அவர் சொல்வது சரிதான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

குவைத்தில் இருக்கும் தமுமுக-வை சேர்ந்தவர்கள், இந்துக் கடவுளர்களெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைத்தூதர்கள். மற்றவர்கள் ஜின்கள். இதில் குழம்பினால் உலகில் தோன்றிய முதல் மனிதன் முஸ்லிமா இல்லையா? என்று எதிர் கேள்வி கேட்டு முஸ்லிம்களை ஆச்சரிப்படுத்துகிறார்கள். அதற்கு ஆதாரமாக குர்ஆனையும் ஹதீஸையும் விளங்காத அந்த மூடர்கள் எதையும் முன்வைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

திருக்குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களெல்லாம் நபியாக இருந்தனர் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அப்படியிருக்க, இந்துக்கடவுள்களெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைத்தூதர்கள் என்று சொல்வதற்கு குவைத் தமுமுக-வை சேர்ந்த அந்த அறிவுகெட்ட மூடர்கள் கொஞ்சம் கூட அச்சப்படவில்லை.

அல்லாஹ் அவனது திருமறையில் சொல்லாத ஒன்றை, அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்துத்தராத ஒன்றை சொல்வதற்கு இந்த துரோகிகளுக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ?

அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவித்து தராத ஒன்றை நீ எந்த அடிப்படையில் சொல்கிறாய் என்று டாக். ஜவாஹிருல்லாவின் சட்டையை பிடித்து கேட்க தமுமுகவில் ஒருவர் கூடவா இல்லை?

அரசியல் கட்சி ஆரம்பித்து ஓட்டு பொறுக்குவதற்காகவும், சுயநலத்திற்காகவும், தங்களுடைய விருப்பப்படி கையில் மடியில் உள்ளதை போட்டு சொல்வதற்கு இஸ்லாம் என்ன அவர்களின் அப்பன் பாட்டன் வீட்டு சொத்தா?

இஸ்லாம் காட்டித்தராத ஒன்றைச்சொல்லி பிழைப்பு நடத்த வேறு எதாவது தொழில் செய்து பிழைக்கலாமே என்று அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கின்றனர். மந்திரி பதவிக்காக மேடைகளில் நாடகமாடிவரும் டாக். ஜவாஹிருல்லாவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் பதில் சொல்வதற்குதான் வக்குமில்லை, துப்புமில்லை.

Thursday, July 3, 2008

நபி வழியை புறக்கணிக்கும் ஜாக்கின் கமாலுதீன்!

இக்கட்டுரையின் முதல் பாகத்தை படிக்க இங்கே க்ளிக் செய்யவும்.

ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்கள் தனது பெருநாள் உரையில் பெருமானாரின் கூற்றை மறுத்து விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி பாவத்தை அவருடைய கணக்கில் சேர்த்துக் கொண்டிருந்தார்.

அவருடைய பெருநாள் உரையில் சிலதை பாருங்கள்.

இஸ்லாத்தில் ஃபஜ்ர் தொழுகை, லுஹர் தொழுகை என 5 நேர தொழுகைகள் உண்டு. திடல் தொழுகை என்று ஒன்று உண்டா? எங்கு வேண்டுமானாலும் தொழலாம். இடம் முக்கியமல்ல, ஈமான்தான் முக்கியம்! இவர்களுக்கு (த.த.ஜ) திடலில்தான் தொழவேண்டும் என்றிருந்தால் கப்ரு வணங்கிகள் பாவாகாஸிம் ஒலியுல்லா பள்ளியில் திடலில் தானே தொழுகிறார்கள். அங்கே போய் தொழவேண்டியது தானே? நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிவாசல் சிறியதாக இருந்தது. எனவே திடலில் தொழுதார்கள். இப்போதெல்லாம் பள்ளிவாசல்கள் விசாலமாக இருக்கிறதல்லவா? பின்பு ஏன் திடலில் தொழ வேண்டும்? இப்படி கமாலுத்தீன் பேசினார் என்பதற்கு அன்று அஷ்ரப் பள்ளியில் தொழுத அனைவரும் சாட்சி.
அவர் அவருடைய பெருநாள் உரையில் இப்படி பேசியதற்கு அவருடைய அல் ஜன்னத் மாத இதழில் அவரே வேறு வார்த்தைகளில் கொடுத்த வாக்குமூலத்தை பாருங்கள்.

கேள்வி : கன்னியாகுமரி மாவட்டத்தில் த.த.ஜ ஜமாஅத்தினர் திருநபிவழியில் திடல் தொழுகை என்று ஒரு விளம்பரம் செய்திருந்தனர். இந்த பெயரில் ஒரு தொழுகை உண்டா?

பதில் : இஸ்லாத்தில் பல பெயர்களில் தொழுகை உள்ளது.பர்ள் தொழுகை, சுன்னத் தொழுகை,...ஆனால் திடல் தொழுகை என்று ஒரு பெயரில் தொழுகை இல்லை.(நவூதுபில்லாஹ்) இந்த பெயரில் ஒரு தொழுகையை நபி(ஸல்)அவர்கள் அறிமுகப்படுத்தவுமில்லை.இது நாமோ நமக்கு முன்னிருந்த நல்லோர்களோ கேட்டிராத ஒரு பெயர்,இது போன்ற புதுமை பெயர்களைக்கூறி மக்களிடையில் சிலர் பிரபலமாக நினைத்து அப்படி செய்திருக்கலாம்.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்

ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்கள் பொதுவான கேள்விகளுக்கு பதில் தருவதற்கு முன்னால் கீழ்கண்ட குர்ஆன் மற்றும் ஹதீஸ்களுக்கு பதில் தரட்டும்.

ஏக இறைவனை நேசிக்கக்கூடிய ஒரு முஸ்லிம், முஹம்மது நபி (ஸல்) அவர்களை அப்படியே பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றுபவரையே அல்லாஹ்வும் விரும்புவான், இன்னும் அவர்களுடைய பாவங்களையும் மன்னிப்பான்.

''நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன் 3:31)

இருவேறு நபர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடு வந்தால் அதற்கான தீர்வை நாடி குர்ஆன், சுன்னாவிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். கருத்து வேறுபாட்டிற்கான தீர்வை குர்ஆன் மற்றும் சுன்னா எடுத்தியம்பும் போது அதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்பதையும் அனைவரும் அறிந்து வைத்துள்ளோம். அப்படி அதை பின்பற்றாதவர்கள் நம்பிக்கையாளர்களே அல்ல என்று திருக்குர்ஆன் பிரகடனம் செய்கிறது.

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 4:65)

புனித நகரம் மக்காவில் இருக்கும் மஸ்ஜிதுல் ஹராம் அல்லாது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட மதீனாவில் இருக்கும் மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது ஆயிரம் மடங்கு நன்மை அதிகம் அளிக்கக்கூடியது.

ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட (மஸ்ஜிதுல் ஹராமை தவிர்த்து) எனது இந்த பள்ளி(மஸ்ஜிதுந் நபவி)யில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விட சிறந்ததாகும் (ஆதாரம் : புஹாரி)

மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது ஆயிரம் மடங்கு நன்மை அதிகம் என்று சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை அங்கு தொழாமல் திடலில் தொழுபவர்களாக இருந்தார்கள். மேற்கண்ட திருமறை வசனத்திற்கு (4:65) கட்டுப்பட்டவர்கள் கீழ்கண்ட நபி வழியை புறக்கணிக்க மாட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும், ஹஜ்ஜூப்பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர். அவர்கள் முதன் முதலில் தொழுகையை துவக்குவார்கள்.

அறிவிப்பவர்: அபு ஸஹீத் அல் குத்ரி. நூல்: புகாரி 956

பெருநாள் தொழுகை என்பது திடலில்தான் தொழ வேண்டும் என்பதை மேற்கண்ட குர்ஆன், சுன்னாவைவிடவும் ஒருவர் தெளிவாக சொல்ல முடியாது. அறிவாளிகளுக்கும், சிந்தனை சக்தி உள்ளவர்களுக்கும் மேற்குறிப்பிட்ட குர்ஆன் மற்றும் சுன்னாவை உள்ளடக்கிய விளக்கம் தெளிவாக இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

இஸ்லாத்தில் 5 வேளை தொழுகைகள் உண்டு, திடல் தொழுகை என்று ஒன்று உண்டா என்று கேள்வி கேட்கும் ஜாக் தலைவர் கமாலுத்தீன் அவர்களே! மேற்கண்ட நபி வழி, திடல் தொழுகை என்று ஒன்று உண்டு என்றும் அத்தொழுகைக்கு மாதவிடாய் பெண்கள் உட்பட செல்ல வேண்டும் என்பதிலிருந்தும் அது வலியுறுத்தப்பட்டுள்ளது என்பது தெளிவாகி உள்ளது. திடல் தொழுகை என்று ஒன்று இல்லை என்று நீங்கள் சொன்னது மார்க்கத்தை நீங்கள் அறிந்திராத காரணத்தினாலா? அல்லது ஒரு ஜமாஅத்தினர் மீது கொண்ட தான்தோன்றித்தனமான வெறுப்பினாலா?

மார்க்கம் எனக்கொன்றும் அறியாமலில்லை, அதை நான் அறிந்தவன்தான். ஆனால் இந்த த.த.ஜ-காரர்களை ஒரு வழி பண்ணியே தீர வேண்டும் என்பதற்காகத்தான் மார்க்கத்தில் இருக்கும் ஒன்றை இல்லை என நான் சொன்னேன் என்று நீங்கள் சொல்வீர்களா? நீங்கள் சொல்கிறீர்களோ இல்லையோ, ஆனால் உங்களை அறிந்தவர்கள் உங்களை அப்படித்தான் பார்க்கிறார்கள். ஏனெனில் அல் ஜன்னத் இதழின் 2002 நவம்பர் இதழில் பக்கம் 24 மற்றும் 25-களில் நீங்கள் அப்படித்தான் சொல்லி இருக்கிறீர்கள்.

பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழவேண்டும். நபி(ஸல்)அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஆதாரம் இல்லை. - அல் ஜன்னத் நவம்பர் 2002 பக்கம் 24,25

ஒருவர் மீது கொண்ட கோபத்தினால் அவர்களுக்கு அநீதி இழைக்க வேண்டாம் என்றுதான் இஸ்லாம் கட்டளையிடுகிறது. ஆனால், யாரோ சிலர் மீது நீங்கள் கொண்ட கோபத்திற்காக பெருமானார் (ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டி பொய்யுரைத்துள்ளீர்கள். பித்தம் தலைக்கேறிய பித்தனைப்போல் முன்னுக்குப்பின் முரணாக முரண்டு பிடித்துள்ளீர்கள். உங்களது இவ்விரட்டை நிலை கண்டு ஏகத்துவ சிந்தனையுடைய பல சகோதரர்கள் தங்கள் வருத்தத்தை பதிவு செய்து கொள்கிறார்கள். அதையும்விட கூடுதலாக கீழ்கண்ட ஹதீஸை உங்களுக்கு எச்சரிக்கையாகவும் முன் வைக்கிறார்கள்.

'என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று முஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: புஹாரி 106)

பெருமானார் (ஸல்) அவர்கள் பெருநாட்கள் தொழுகையை திடலில் தொழுதார்கள் என்று இருந்தால் அதை அப்படியே கண்மூடி நடைமுறை படுத்துவதுதான் ஒரு நம்பிக்கையாளனின் கடமை. அதுவிடுத்து அப்பொழுது பள்ளி சிறியது அதனால்தான் அப்படி தொழுதார்கள் என்று சொல்வதற்கு ஜாக்கின் தலைவர் கமாலுத்தீன் அவர்களே! உங்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. உங்களுக்கு என்ன இறைவனிடம் இருந்து வஹியா வருகிறது? அல்லாஹ் அவனுடைய மார்க்க சட்டத்தில் ஒரு மாற்றத்தை கொண்டு வர நாடினால் அதை அவனுடைய தூதர்கள் வழியாகவே அதை நிறைவு செய்திருப்பான். அப்படியிருக்க, பள்ளியில் தொழ இடமில்லாததுதான் திடலில் இறைத்தூதர் தொழ காரணம் என்று நீங்கள் சொல்வதற்கு நீங்கள் என்ன இறுதித்தூதருக்கு பிறகு வந்த தூதரா என்ன?

ஜாக்கின் தலைவருக்குத்தான் இப்படி தலையில் ஒன்றும் இல்லை என்றால் அவருடைய வாலுகளுக்கும் இப்பொழுது ஏதோ நிகழ்ந்திருக்கிறது. ஏனெனில் அவர்களும் திடல் தொழுகை தேவையில்லை என்ற நிலைப்பாட்டிற்கு தள்ளிச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் முன்பு என்ன சொல்லியுள்ளனர் என்பதை இப்பொழுது உள்ள நிலையோடு ஒப்பிட்டுப்பார்த்து திருந்திக்கொள்ள வேண்டும்.

ஜாக்கின் மாநில பேச்சாளரும் புதுப்பேட்டை ஜாக் மர்கஸ் பொறுப்பாளருமான ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி வெளியிடும் அஸ்ஸிராத் இதழிலிருந்து...

பெண்கள் உட்பட அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். அதுவும் மாதவிடாய் பெண்கள் கூட வந்துவிட வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுவதால் அனைவர் மீதும் கடமை என்பதை புரியலாம். மற்ற நேர தொழுகைகளை பள்ளிவாசலில் நாம் தொழுகிறோம். ஆனால் பெருநாட்கள் தொழுகையை மட்டும் திடலில் தொழுவது தான் நபிவழி.
- அஸ்ஸிராத் நவம்பர் 2004 பக்கம் 28,29

ஜாக்கின் மாநில பொது செயலாளர் அப்துல் காதர் உமரி எழுதி, வெளியிட்ட தொழுகை என்ற நூலிலிருந்து...

பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதுள்ளதால் பள்ளியில் தொழாமல் திடலில் தொழுவது சரியானதாகும்.

- அப்துல் காதர் உமரியின் 'தொழுகை' நூல் - பக்கம் 149

இதுபோன்ற விசயத்தில் எங்களுக்கு குர்ஆன், சுன்னா முக்கியமல்ல. நாங்கள் எங்கள் தலைவருக்குத்தான் கட்டுப்படுவோம் என்று இவர்கள் பிடிவாதமாக இருப்பார்களாயின் அவர்களை மறுமையை முன்னிருத்தி அச்சமூட்டி எச்சரிக்கிறோம். உங்கள் வாக்குகளுக்கு எதிராகவே நீங்கள் இருந்தால் இவ்வுலகத்திலும் நீங்கள் உங்களை கேவலப்படுத்திக் கொள்வீர்கள். அல்லாஹ்வுடைய தூதருடைய நடைமுறைக்கு எதிராக நீங்கள் இருப்பீர்களாயின் மறுமை நிலையை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள்.

மக்களுக்காக நாம் வேதத்தில் தெளிவுபடுத்திய பின்னர் நாம் அருளிய தெளிவான சான்றுகளையும், நேர் வழியையும் மறைப்பவர்களை அல்லாஹ்வும் சபிக்கிறான். சபிப்ப(தற்குத் தகுதியுடைய)வர்களும் சபிக்கின்றனர். மன்னிப்புக் கேட்டு (தங்களைத்) திருத்திக் கொண்டு, (மறைத்தவற்றை) தெளிவுபடுத்தியோரைத் தவிர. அவர்களை நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:159-160)

ஜாக் அமைப்பினர் த.த.ஜ-வை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அவர்களுடைய செயல்பாடுகளை குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக அமைத்துக் கொள்வதனால்தான் அவர்கள் அதே காரணத்திற்காக கப்ரு வழிபாடு கூட கூடும் என்று சொல்லாமல் இருக்க இறைவனை பிரார்த்திப்போம் என்று ஏகத்துவம் இதழில் த.த.ஜ-வினர் எழுதியுள்ளனர். இவர்களுடைய செயல்பாடுகளை பார்க்கும்பொழுது இது ஒரு நியாயமான விமர்சனமாகத்தான் கருத முடிகிறது.

யார் எந்த அமைப்பில் இருந்தாலும் குர்ஆன், சுன்னா என்று வரும்பொழுது அதில் சமரசம் செய்து கொள்ளாமல் அதற்கு உயிரோட்டம் கொடுக்கக்கூடிய நன்மக்களாக அனைவரையும் எல்லாம் வல்ல இறைவன் ஆக்கி அருள்வானாக என்று அனைவரும் பிரார்த்திப்போமாக!

-------------------------------------------------------------------------------------------------

குறிப்பு: இந்த விஷயத்தில் த.த.ஜ நபி வழிக்கு உயிரூட்டியிருப்பதனாலேயே அவர்கள் இதில் சரி காணப்படுகிறார்கள். அதனால் அவர்கள் செய்வது குர்ஆன், சுன்னாவிற்கு எதிராக இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம் என்பது பொருளல்ல.