Wednesday, December 31, 2008

இருதலைக்கொள்ளி எறும்பாய் ஈழத்தமிழர்கள்...!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம் செய்வார்கள். அது தங்களை பலப்படுத்திக் கொள்ளவே தவிர மக்களின் துயர நிலையை கருத்தில் கொண்டல்ல. இது பல காலமும் நடந்தே வந்துள்ளது. இப்போது அவர்கள் போர் நிறுத்தம் என்று அறிவித்திருப்பதும் அவ்வாறான ஓர் உள்நோக்குடன்தான். அவர்களின் இந்த தந்திரத்தை அறிந்து கொண்டுதான் ராஜபக்சே போர்நிறுத்தம் செய்ய மறுக்கின்றார்.

இலங்கை பேரினவாத அரசும் சரி, புலிகளும் சரி மக்களை கொன்று குவிப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர்.

திலும் சிங்கள ராணுவம் கொன்று குவித்த தமிழர்களை விட புலிகள் கொன்ற தமிழர்கள்தான் அதிகம். ஈழத்தின் மாண்பார்ந்த தலைவர்களையெல்லாம் விண்ணுலகிற்கு அனுப்பிய பெருமை புலிகளையே சாரும். இவர்களின் பாசிச போக்கால்தான் மனம் வெறுத்து கருணா போன்ற தளபதிகள் கூட சிங்கள அரசின் பக்கம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. தோளோடு தோள் நின்று சிங்கள ராணுவத்தை எதிர்த்திருக்க வேண்டிய எத்தனையோ சக போராளிகளையும் கொன்று குவித்தவர்கள் புலிகள் (பத்மநாபா, சபாரத்தினம், உமா மகேஸ்வரன்).

புலிகளின் ரசிகர்களாக விளங்கும் நம் தமிழக தலைவர்களுக்கு அப்பாவி தமிழர்களின் மீது ஒரு இழவு பரிவும் கிடையாது. அங்கு புலிகள் அடிபட்டால் இங்கு இவர்களுக்கு வலிக்கும். 'அய்யய்யோ தமிழர்களை கொல்கிறார்களே' என்று கூப்பாடு போடுவார்கள். இப்போதும் இதுதான் நடக்கிறது. சில அரசியல்வாதிகளாலும் சில சினிமாக்காரர்களாலும் தான் இன்று ஈழப்பிரச்சனை முன்னெடுக்கப் படுகிறதே தவிர தமிழக மக்களுக்கு இதில் பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது.

வழக்கம் போல இதுபோன்ற பிரச்சனைக்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்து ஜாலி கொண்டாடும் நம் மாணவர்கள் கூட, இம்முறை அவ்வாறு வெளிவந்து போராட்டம் எதுவும் நடத்தவில்லை என்பதிலிருந்தே ஈழ விஷயமாக நமது மக்கள் எத்தகைய அசிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். மாறாக, சில ஊடகங்கள் ஏதோ தமிழகமே பொங்கி எழுந்திருப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைத்து வருகிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன என்பதை மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடிக்க வேண்டும்.

- கே.எஸ்.முஹம்மது ஷூஐப், காயல்பட்டினம்.


மனித நேயத்துடன் அணுகவேண்டிய ஈழத்தமிழர் பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போக்கு எப்போதும் நிலவி வந்துள்ளது என்பதுதான் உண்மை.

இன்றைய இலங்கை தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. ஒருபுறம் இனவெறி பிடித்த சிங்கள ராணுவம்: மற்றொரு புறம் இனவெறி இயக்கமான ஜேவிபி: இன்னொரு பக்கம் எல்டிடிஇ எனும் பயங்கரவாத இயக்கம். இடையில் மாட்டிக்கொண்ட இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் ஈழத் தமிழர்கள்.

ஒரு காலத்தில் செல்வா, குட்டிமணி, ஜெகன் போன்ற தியாகிகள் பலர் தாங்கள் அரணாக இருந்து தமிழ் மக்களை காத்தார்கள். ஆனால் இன்று அப்பாவி தமிழ் மக்களை அரணாக நிறுத்திக் கொண்டு ஒரு கோழைத்தனமான போரை விடுதலைப்புலிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒளிவது, பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பதுங்கியிருந்து தாக்குவது, கோவில்கள், அனாதை இல்லங்களில் தஞ்சமடைந்து தாக்குவது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிருக்கு உலை வைப்பது இவர்கள்தாம்.

இவர்களால் இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம். விடுதலைப்புலிகளின் கடந்த கால வரலாறு என்ன? சீறி சபா ரத்தினத்தை கொன்றது, பத்பநாபாவைக் கொன்றது, சாந்தமான அறிவாளி ஐயா அமிர்தலிங்கத்தை கொன்றது. டெலோ மற்றும் டெஸோ போன்ற அமைப்புகளை இல்லாமல் செய்தது எல்லாம் இவர்கள் தானே?ஆகவே இவர்களை அடக்கி வைத்து, இலங்கை தமிழர்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களுக்கு ஆதரவு அளித்து உதவுவதே இந்திய அரசு செய்ய வேண்டிய பணி.

- எ.எஸ்.ஜாஹிதா சித்தீக், அருவங்காடு


நன்றி : சமரசம்

Thursday, December 18, 2008

மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மீது அவதூறு

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனியோ இல்லை இல்லை அவை அனைத்தும் எங்களுடைய சொத்து என்று கூறிவருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தொழுகை நடக்கும் பள்ளிவாசல்களை பூட்டுவதையும் வழக்கு தொடர்வதையும் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனி வழக்கமாக கொண்டுள்ளது.

பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு இன்னும் இடிக்க வேண்டிய பள்ளிகள் மூவாயிரம் உள்ளன என்று சங்பரிவார் கூறுவதை போல, கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் போன்ற பல பள்ளிவாசல்களை கைப்பற்றுவது அல்லது பூட்டுவது என்ற முயற்சியில் இறங்கிய ஜாக், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தவ்ஹீத் மர்கஸ், பிர்தௌஸியா நகரிலுள்ள தவ்ஹீத் மர்கஸ், புதுத்தெரு மஸ்ஜிதுல் அஷ்ரஃப் போன்ற பல பள்ளிவாசல்கள் தங்களுடைய கைப்பற்ற வேண்டிய பட்டியலில் இருப்பதாகவும் கூறுகிறது. அவற்றை அபகரிக்க, ஆதாரங்களை பலமாக்க, முன்னரே தயாராகிவிட்டது. பல ஆண்டுகளாக ஜாக்கின் மௌலவிதான் இமாமாக இருக்கிறார் என்று கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கில் உமரியை ஆதாரமாக காட்டியது போல் இந்த பள்ளிகளிலும் தங்களுடைய மௌலவிகளை தொழவைக்க செய்து வருகின்றது.

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை'' என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (திருக்குர்ஆன் 9:107)

சொத்துக்காக அடித்துக் கொள்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும், பள்ளிவாசலில் தொழுகையை தடை செய்யாதவரைக்கும் ஓ.கே.

ஆனால், மேலப்பாளையம் மஸ்ஜித் முபாரக்கை அபகரிக்க அல்லது பூட்ட முயற்சித்த ஜாக், மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை மிகவும் அசிங்கப்படுத்தியுள்ள விபரம் நம் கவனத்திற்கு வந்துள்ளது.


'மேலப்பாளையத்தில் ஜாக் பள்ளிவாசலை அபகரிக்க ததஜ சதி' என அல்ஜன்னத்தில் எழுதியுள்ள கமாலுதீன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'தற்போது மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் உரியவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்கள், பிள்ளைகளுடன் பள்ளியில் குடியிருக்கின்றனர். அங்கேயே சமையல் காரியங்களை செய்து வருகின்றனர். மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனர்.'

அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (திருக்குர்ஆன் 16:105)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2:42)

அன்றைய தினத்தில் எந்த பெண்களுமே மஸ்ஜிதுர் ரஹ்மானில் இல்லை, பெண்கள் தங்குவதற்கு இது தர்ஹா அல்ல, அல்லாஹ்வின் பள்ளி இது. அல்லாஹ்வின் பள்ளியில் பெண்கள் தங்குவதற்கு ரமலான் கடைசி பத்தில் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் இந்த சம்பவம் நடந்தது ரமலான் கடைசி பத்திலும் அல்ல என்று மேலப்பாளையம் ஊர்மக்கள் கூறுகின்றனர். ஆனால், பெண்களை பள்ளிவாசலில் குடிவைத்ததாக ஜாக்கின் கமாலுதீன் சொல்கிறார். மேலும் ததஜ பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கமாலுதீன் சொல்கிறார்.

பெண்களை வைத்து தவறான வழக்கு என்றால் என்ன?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று அந்த மேலப்பாளையம் தவ்ஹீத் சகோதரிகளை வைத்து வழக்கு தொடருவதற்காக, ததஜ அப்பெண்களை பள்ளிவாசலில் வைத்திருந்ததா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்கள் கையை பிடித்து இழுத்தார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை பள்ளிவாசலில் வைத்து கற்பழித்து விட்டார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நடத்தை கெட்ட பெண்கள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை கூற அஞ்சுவார்களே?

• இப்படி சொல்லக்கூடியவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருக்க முடியுமா?

அல்லாஹ் மூமின்களைப்பற்றி குறிப்பிடும் போது,

'அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்;. மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (திருக்குர்ஆன் 25:72) என்று கூறுகிறான்.

ஆனால், மேலப்பாளையம் தவ்ஹீத் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களையே இழிவுபடுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொய்சாட்சி சொல்லக்கூடியவர்கள் தான் மேலப்பாளையம் பெண்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களின் மானத்தை அடகு வைத்து பொய்வழக்கு தொடருபவர்கள் தான் மேலப்பாளையம் முஸ்லிம் சகோதரிகள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.
(திருக்குர்ஆன் 58:2)

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்;. மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 2:10)

நம்முடைய மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை இவ்வளவு தரம் தாழ்த்தி கூறி இருக்கிறார். அதைக் கண்டு கொதித்தெழுந்து கமாலுதீனை கண்டிக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இது ஏதோ கோஷ்டி சண்டை என எண்ணி மௌனமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த கமாலுதீன் இன்று மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு கப்ரு வணங்கிகளோடு கைகோர்த்துக் கொண்டும் மார்க்கப் பிரச்சாரத்தை விட மார்க்கத்தின் பெயரால் சொத்து சேர்ப்பதையே பிரதானமாகவும் கொண்டுள்ளதால் சத்தியம் அவருடைய கண்களை மறைக்கின்றது.

(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 16:117)

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 25:70)

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். (திருக்குர்ஆன் 25:71)

Wednesday, December 3, 2008

தமுமுகவும் பாஜகவும் இணைகிறதா?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமுமுகவை உருவாக்கிய தவ்ஹீத்வாதிகள் வெளியேறியதோடு மெல்ல மெல்ல அதன் வீரியம் குறைந்து ஏற்கனவே சோரம்போய்விட்ட முஸ்லிம்லீக் போன்ற ஒரு அரசியல் கட்சியாகவே இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு முஸ்லிம்களை எதிர்க்கும், முஸ்லிம்களை கொன்று குவிக்கும் விடுதலைப்புலிகள் மற்றும் சங்பரிவாரின் ஊதுகுழலாக தமுமுக மாறிக் கொண்டிருக்கின்றது.


• தன்னை வளப்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தமுமுக, அரசியல் ஆதாயத்திற்காக ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாத கப்ரு வணங்கிகளை ஆதரித்தது.


• இஸ்லாத்தின் எதிரியான ஷேக் அப்துல்லா ஜமாலியின் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது.


• கன்னிபீவி தர்ஹாவுக்கு போஸ்டர் அடித்து கொடுத்து தர்ஹா வழிபாட்டை ஊக்குவித்தது.


• இந்த கப்ரு வணங்கிகளை மட்டும் நம்பி அரசியலில் இறங்கினால் தமக்கு பதவிகள் கிடைப்பது சந்தேகமே எனக்கருதி இந்துக்களையும் கவரும் திட்டத்தை தீட்டியது.


• இந்துக்களின் கடவுளர்களும் இஸ்லாமிய இறைதூதரும் ஒன்றுதான், நாங்கள் தூதர் என்று குறிப்பிடுகிறோம், நீங்களோ இறை அவதாரம் என்று நினைக்கின்றீர்கள் அவ்வளவுதான் என்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கூறி முஸ்லிம் சமுதாயத்தை அதிர்ச்சியுறச் செய்தது தமுமுக.


• தான் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என வைத்தால் மாற்று மதத்தவர்களின் ஓட்டு கிடைக்காதல்லவா? எனவே முஸ்லிமை தூக்கிவிட்டு வேறு பெயரை வைத்தது.


• அரசியல் ஆசை கண்களை மறைத்தவுடன் சொந்த சமுதாய நலனை தூக்கி வீசியது. இட ஒதுக்கீட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தபோது எதிர்க்காமல் இருந்த தமுமுக, செஞ்சோற்று கடன் தீர்க்க அதை நியாயப் படுத்தவும் செய்தது.


• முஸ்லிம்களுக்கு சொந்தமான வக்ஃபு வாரிய நிலங்கள் அபகரிக்கப் பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


• இப்படியாக சமுதாயநலனை புறந்தள்ளிய தமுமுக இன்று ஒருபடி மேலே போய் முஸ்லிம்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் துணிந்துவிட்டது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த வந்த பகுதியான மூதூரை கைப்பற்ற திட்டமிட்ட விடுதலைபுலிகள் காலங்காலமாக அங்கிருந்த முஸ்லிம்களை வெளியேறும்படி பள்ளிவாசல் மௌலவிகளுக்கு எச்சரிக்கை செய்தார்கள். மூதூரில் ஊடுருவிய விடுதலைபுலிகள் அதை தங்கள் வசப்படுத்தினர். விடுதலைபுலிகளின் கொடுமை தாங்காமல் அகதியாக சென்று கொண்டிருந்த முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர்.

(மக்கள் உரிமை 2006 டிசம்பர் 29 )

என்றெல்லாம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பேட்டியை வெளியிட்ட தமுமுக இன்று அவர்களுக்காக ஆதரவு கொடுக்கிறது.


தமுமுகவின் பொது செயலாளர் ஹைதர் அலி வீடுதலைபுலிகளுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஆதரவாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். சில கட்சிகள் அதில் கலந்து கொள்ளவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட இடத்திலிருந்து நடத்தும் அவர்களுடைய பத்திரிகையிலும் எழுதியுள்ளனர்.


1990-ம் ஆண்டு ஒருநாள் விடுதலை புலிகள் திடீரென 'வட மாகாணத்திலிருந்து 24 மணி நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற வேண்டும் இல்லையெனில் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை' என்றனர். நாங்கள் எங்களது வீடுகள். நகைகள், பணம், வீட்டு உபகரண பொருட்கள், தளவாடங்கள் என அத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டு எங்கள் பிள்ளைகளை மட்டும் எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக 12 மைல்களுக்கு அப்பால் உள்ள இக்கிரி கொல்லா என்ற முஸ்லிம் பகுதிவரை நடந்தே வந்தோம்.

இது தமுமுகவிலுள்ள ஆளூர் ஷாநவாஸ் இன்றளவும் அகதிகளாக இருக்கும் இலங்கை முஸ்லிம்களிடம் எடுத்த பழைய பேட்டி.


விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பின் ரவூப் ஹக்கீமும் - பிரபாகரனும் கூட்டாக அறிக்கை தந்தனர். அவ்வறிக்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று முஸ்லிம்களிடம் வரிவசூல் செய்யக்கூடாது, முஸ்லிம்களின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறைந்தபாடில்லை. வாழைச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் கருவறுக்கப் பட்டுள்ளனர். பல முஸ்லிம்கள் புலிகளால் கடத்தப் பட்டுள்ளனர். இன்னும் வரிவசூல் தொடர்கிறது.

- இது தமுமுகவிலுள்ள ஆளூர் ஷாநவாஸ் எழுதிய பழைய கட்டுரை.


அன்று இவ்வாறெல்லாம் எழுதிய தமுமுகவினர் இன்று விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த மனித சங்கிலியிலும் கலந்து கொண்டு தங்களுடைய முஸ்லிம் விரோத போக்கை பகிரங்கப் படுத்தியுள்ளனர். பதவிக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த சமுதாயத்தை கொன்று குவித்தவர்களை காப்பாற்ற துடிக்கும் தமுமுக, இன்று அதைவிட கொடுமையான ஒரு செயலையும் செய்துள்ளது.


முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சங்பரிவாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது தவறு என்று மாபெரும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றது.

கேள்வி: மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது?

பதில்: எது எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு அளவு கோல் உள்ளது. ஒரு அநீதி நடந்து உரிய நடவடிக்கை இல்லாத போது அதற்காக போராட்டம் நடத்த வேண்டும். ஒரு அநீதி நடந்து அது குறித்த விசாரணைகளும், நடவடிக்கைகளும் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது அதை சரியாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆர்ப்பாட் டம் நடத்துவது கேலிக் கூத்தாக பார்க் கப்படும். மாலேகான் விவகாரத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகை யில் அதிகாரிகள் குழு சரியான திசையில் புலனாய்வை நகர்த்தி வரு கிறது. இதை கண்காணித்துஇ அங்கே தவறுகள் நிகழும் பட்சத்தில் தான் அதை எச்சரிக்கும் விதமாக கவன ஈர்ப்புக்காக போராட்டங்களை நடத்த வேண்டும். இப்போது போராட்டம் நடத்துவது என்பது அறிவுடைமை ஆகாது.


- இது தமுமுக இணையதளத்தில் வெளிவந்த செய்தி


தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன?


மாலேகான் குண்டு வெடிப்பின் போது முஸ்லிம் தீவிரவாதிகள்தான் குண்டு வைத்தார்கள்கள் என்று கூறி பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்தும் இது முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி என்றே கூறியது. ஆனால் இன்று அந்த குண்டுவெடிப்பு மட்டுமல்ல இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, பஜ்ரங்தள் உட்படவுள்ள சங்பரிவார் அமைப்புகள் தான் செய்தன என்று போலீஸாரின் புலன்விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.


கோத்ரா ரயில் எரிப்பும் அதனை தொடர்ந்து மனித வேட்டை நடத்திய மோடியின் தலைமையிலான சங்பரிவார் அயோக்கியர்களை குஜராத் அரசு தப்பவிட்டது மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாத்துக் கொண்டிருப்பது போல மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அது கேலிக்கூத்து என்றும் அறிவுடைமை அல்ல என்றும் தமுமுக கூறுகிறது. இதன்மூலம் உண்மை குற்றவாளிகளான சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்படுவதை விரும்பாத தமுமுக அந்த சங்பரிவாருக்கு ஆதராவான நிலையை எடுத்துள்ளது.


எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லாதபோதும் முஸ்லிம்களின் மீது பழிபோட்ட மீடியாக்கள், அந்த குண்டுவெடிப்புகள் அனைத்தையும் சங்பரிவார்தான் செய்துள்ளது என்று தீவிரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை செய்து சங்பரிவார் அமைப்பிலுள்ள பலரை காவல்துறை கைது செய்தும் கூட அதை மீடியாக்கள் செய்தியாக கூறவில்லை. அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. இதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையிலான முஸ்லிம்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அதை கொச்சைப்படுத்தி கேலிகூத்து என குறிப்பிட்டுள்ளது தமுமுக. இதன்மூலம் மீடியாக்கள் செய்வது சரிதான் எனக்கூறுகின்றது தமுமுக.


தமுமுகவினர் கொள்கையில் உறுதி இல்லாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. உதாரணமாக டிசம்பர் 6 போராட்டத்தை கூறலாம்.


இடஒதுக்கீட்டிற்காக விரக்தி அடைந்த குஜ்ஜார் மக்களை போல ஒருபோதும் முஸ்லிம்கள் பலாத்காரத்தில் இறங்கக்கூடாது. முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்காக தமுமுக காட்டும் அறவழிதான் சிறந்த வழி..... இடஒதுக்கீட்டிற்காக முஸ்லிம்கள் தண்டவாளத்தை பெயர்க்கவேண்டாம். சாலை மறியல் செய்ய வேண்டாம். ராஜதந்திரமாக செயல்பட்டாலே பல வெற்றிகளை பெற முடியும். - M.H.ஜவாஹிருல்லாஹ்

(மக்கள் உரிமை – ஜூலை 25-31 2008)


என்று அன்று எழுதியவர்கள் இன்று அதற்கு நேர்மாறாக டிசம்பர் 6 க்காக ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். இப்படிப்பட்ட பச்சோந்திகளின் தலைமையின் கீழ் இன்னும் சிலர் ஒட்டிக்கொண்டிருப்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.


அடுத்ததாக புலிகளுக்கு ஆதரவு கொடுத்ததை நியாயப்படுத்தி அவர்கள் எழுதியுள்ளதை பாருங்கள். இந்த மனிதாபிமான நிகழ்வில் நாம் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தால், நமது சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்ராயம் உருவாக்கியிருக்கும். முஸ்லிம்கள், தங்கள் பிரச்சனைகளுக்கு மட்டும் தான் நீதி கேட்பார்கள் என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும்.

அடத்தூ... வெட்கங்கெட்டவர்களே!

முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படிக்கூற நா கூசவில்லையா? முஸ்லிம்களை முன்னேற்றுவதென்பது பெயரில் மட்டும்தானா?

ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு பாதிக்கப் பட்டாலும் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அது பாலஸ்தீனமாக இருந்தாலும், தமிழ் ஈழமாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமையாகும். இதை மத, இன, தேசம், மொழி என பேதம் பார்ப்பது இஸ்லாமிய நெறி முறையல்ல.


இப்படி பொடி வைத்து பேசுவது எதற்காக! மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பிரக்யா சிங்குக்காக குரல் கொடுப்பதற்காகவா? என்ற கேள்வியோடு இந்த தமுமுகவினர் அரசியலில் பி.ஜே.பியுடன் கூட்டணிக்கு தயார் ஆகிவிட்டார்கள் போலும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அடுத்த செய்தி சிரிக்கக்கூடிய செய்தியாக வந்தது.


தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அளவுகோல், கேலிக்கூத்து, அநீதி நடைபெறவில்லை, அறிவுடைமை ஆகாது என்றெல்லாம் சொன்னவர்கள் இரண்டே நாட்களில் அதற்கு நேர்மாறாக,

மாலேகான் மற்றும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காரணமான சங்பரிவார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்த இருக்கிறது. - தமுமுகவின் இணையதளம்


என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.


தடுமாறும் தமுமுகவினரே! நீங்கள் எழுதிய பதிலை நீங்களாவது படியுங்கள். உங்களுக்கு மறந்திருக்குமானால் இதோ!


கேள்வி: மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரு கின்றனர். இதற்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது?பதில்: எது எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு அளவு கோல் உள்ளது. ஒரு அநீதி நடந்து உரிய நடவடிக்கை இல்லாத போது அதற்காக போராட்டம் நடத்த வேண்டும். ஒரு அநீதி நடந்து அது குறித்த விசாரணைகளும்இ நடவடிக்கைகளும் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது அதை சரியாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆர்ப்பாட் டம் நடத்துவது கேலிக் கூத்தாக பார்க் கப்படும். மாலேகான் விவகாரத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகை யில் அதிகாரிகள் குழு சரியான திசையில் புலனாய்வை நகர்த்தி வரு கிறது. இதை கண்காணித்துஇ அங்கே தவறுகள் நிகழும் பட்சத்தில் தான் அதை எச்சரிக்கும் விதமாக கவன ஈர்ப்புக்காக போராட்டங்களை நடத்த வேண்டும். இப்போது போராட்டம் நடத்துவது என் பது அறிவுடைமை ஆகாது.

Saturday, November 1, 2008

மவ்லூது ஓதும் இமாமை பின்பற்றி தொழலாமா?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


கேள்வி: மவ்லூது ஓதும் இமாமை பின்பற்றி தொழலாமா? எங்கள் பகுதியில் தவ்ஹீதுவாதிகள் இரண்டு விதமான கருத்தில் உள்ளனர். ஒரு சாரார் 'மவ்லூது ஓதக்கூடியவர் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்: எனவே அவரை பின்பற்றி தொழுவது கூடாது' என்கின்றனர். மற்றொரு சாரார் 'தொழும் நிலையில் அவர் இணை வைக்கவில்லை: ஆகையால் அவரை பின்பற்றி தொழலாம்' என்கின்றனர். இதில் ஏதாவது ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். அது எது என்பதை விளக்கவும்.

பதில்: நீங்கள் குறிப்பிட்டது போன்று இரண்டு கருத்தில் ஒன்றுதான் சரியாக இருக்க முடியும். இரண்டு கருத்துமே சரியானது தான் என்று கூற முடியாது.

ஷிர்க் என்றால் என்ன? அதன் விளைவு எவ்வளவு கொடியது என்பதை சரியாக புரியாதவர்கள் தான் ஷிர்க்கையும் மற்ற சாதாரண பாவங்கள் போல கருதி, அதை செய்யக்கூடியவர்களின் பின்னால் தொழுவது குற்றமில்லை என்ற தவறான முடிவுக்கு வந்து விடுகின்றனர். ஒரு மனிதனை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றக் கூடியது எது? என்பதை இவர்கள் சரியாக புரியவில்லை! முஸ்லிமானவன் ஷிர்க்கான காரியத்தை செய்வதன் மூலம் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விடுகிறான். அந்த பாவத்திற்காக வருந்தி, அதிலிருந்து விடுபட்டு பாவமன்னிப்புக் கோரி திரும்பவும் அந்த பாவத்தை செய்யமாட்டேன் என்று உறுதி கூறினால் தான் மீண்டும் இஸ்லாமிய வட்டத்திற்குள் வந்தவனாக கருதப்படுவான். இது தான் அடிப்படை. இந்த அடிப்படையை சரியாக புரிந்து விட்டால் இந்த கேள்விக்கு எளிதில் விடை கிடைத்துவிடும்.

மவ்லூது பாடல்களில் இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற நிறைய விஷயங்கள் உள்ளன. அவற்றை தெளிவாக உணர்த்திய பின்பும் பிடிவாதமாக அதை செய்து வருவதை பார்க்கிறோம். இதன் மூலம் அவர்கள் இதை அறியாமையினால் செய்யவில்லை: மாறாக அறிந்தே செய்கிறார்கள் என்பது உறுதிப்படுகிறது.

நாகூர் ஆண்டவரே! என்னை காப்பாற்றும் எனக்கு நீண்ட ஆயுளைத் தாரும் என்றும் காப்பாற்றி கரை சேர்க்கும் கவ்து முஹ்யித்தீனே! என் கை பிடித்து காப்பாற்றும்! நீர் தான் இரட்சிப்பவர் என்றும் கூறுபவர்கள், பாடுபவர்கள், அவர் வந்து காப்பாற்றுவார் என்ற நம்பிக்கையில் தான் பாடுகிறார்கள். இப்படி நம்பிக்கைக் கொண்டு அல்லாஹ்வை தொழக்கூடியவரின் தொழுகை எவ்வாறு ஏற்றுக் கொள்ளப்படும்?

மவ்லூது ஓதும் போது மட்டுமே அவர் ஷிர்க் செய்கிறார். தொழும் நேரத்தில் ஷிர்க் செய்யவில்லையே என்ற கேள்வியே தவறானது என்பதை புரிய வேண்டும்.

மேலும் மவ்லூதில் உள்ள ஷிர்க்கான கொள்கைகளையெல்லாம் அதை ஓதுகின்ற நேரத்தில் மட்டும் அவை சரியான கொள்கை என அவர் நம்பி விட்டு, தொழும்போது அவற்றை தவறானவை என்றா நம்புகிறார்? அப்படியானால் அவர் இரு கொள்கையுடைய முனாஃபிக் (நயவஞ்சகர்களின்) பட்டியலில் இடம் பெற்று விடுகிறார். இப்படிப் பட்டவர்கள் மிகவும் ஆபர்தானவர்கள் என்பதை அவதானிக்க வேண்டும்.

திருடியவனின் கையை வெட்ட வேண்டும் என்று சட்டம் உள்ளது (5:38) கையை வெட்டப் போகும் போது அவன் திருடவில்லை, முன்னரே திருடிவிட்டான். அந்த பிரிவினரின் கூற்றுப்படி பார்த்தால் கையை வெட்டக் கூடாதே! விபச்சாரம் செய்வோரை கசையடி அடிக்க வேண்டும், கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது இஸ்லாமிய சட்டம். ஆனால், தண்டனை கொடுக்கப் போகும் போது அவன் அந்த தவறை செய்யவில்லையே! அவர்களின் சொற்படி தண்டனை கொடுக்க முடியாதே!

ஒருவர் தொழும்போது மட்டும் ஷிர்க்கான செயலை செய்யாமல் இருந்தால் போதும் அவரை பின்பற்றி தொழலாம் என்று கூறுவது பெரிய தவறாகும். இறைவனுக்கு இணை வைத்தல் என்பது செயலாலும் ஏற்படும், நம்பிக்கையினாலும் ஏற்படும். அல்லாஹ்வுக்கென்று தனித்துவமான சில பண்புகள் மனிதர்களுக்கும் உண்டு என நம்புவது இறைவனுக்கு இணை வைத்தலாகும். இந்த நம்பிக்கை இதயத்துடன் தொடர்புடையது. இது எல்லா நேரத்திலும் இதயத்தில் இருக்கவே செய்யும். எனவே இப்படிப்பட்ட நம்பிக்கையை இதயத்தில் வைத்திருப்பவர் பின்னால் தொழுவது கூடாது என்பது மிக மிகத் தெளிவு.

Tuesday, October 21, 2008

தனிப்பள்ளிவாசல் ஏன்?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


அத்தஹியாத்தில் விரல் அசைத்தல் தொடர்பாக வரும் ஹதீஸை கொச்சைப்படுத்தி ஜாக் கொடுத்துள்ள ஃபத்வாவிற்கு மறுப்பாக இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது.

//தொழுகையில் அத்தஹியாத்தில் விரலை அசைக்க வேண்டுமா? சிலர் விரலை அசைக்காமல் நீட்டி வைக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன?//

என்ற வாசகரின் கேள்விக்கு பதிலளித்த ஜாக், அதன்மூலம் தனது அறியாமையை பட்டவர்த்தனமாக பறைசாற்றியுள்ளது.

//ஃஸஹீஹ் முஸ்லிம் பாகம் - 1 ல் நபித் தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எண் - 1016 விரல் நீட்ட பலவீனமான ஆதாரமாக உள்ளது.

அதே நபித்தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் ஹதீஸ் எண் -
1017 விரலால் சைகை செய்ய ஆதாரமாகவும் உள்ளது.

இரண்டுமே முஸ்லிம் நூலில் உள்ள ஹதீஸ்கள் தான். தொப்பி போட்டும் தொழலாம், போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம், நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை.//

என்று பதிலின் ஆரம்பத்திலேயே ஜாக் குறிப்பிடுகின்றது.

சைகை செய்ய சொல்லும் ஹதீஸ்தான் ஆதாரமானது என்று அவர்களே பதிலில் கூறிவிட்டு, தொப்பி போட்டும் தொழலாம் போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம் நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை என்று கூறுவது அறியாமையின் மொத்த உருவம் தான் ஜாக் என்பதை அப்பட்டமாக்குகிறது.

இந்த பதிலை அளித்தவருக்கு இபாதத்தின் அடிப்படை தெரியவில்லை என்பதை அவரே அவருடைய பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

தொப்பி என்பது ஓர் ஆடை. அதுவும் மேலதிகமான ஆடை. அதை சிலர் இபாதாவாக, அறியாமல் கருதுகின்றனர். ஆடைகளை பொறுத்தவரை நாட்டுக்கு நாடு வேறுபடும். சவுதியில் தொப்பி போட்டு, அதற்கு மேல் துணி, அதற்கு மேல் வளையம் போடுவார்கள். இது அவர்களின் கலாச்சாரம். இவ்வாறு அணிந்து தொழலாமா? என எம்மைக் கேட்டால், அணிந்தும் தொழலாம் அணியாமலும் தொழலாம் என்று தான் பதிலளிப்போம்.

ஆனால், தொழுகையில் விரல் ஆட்டலாமா? நீட்டலாமா? என்று கேட்டால், நபியவர்கள் எப்படி தொழுதார்கள் என்பதை பார்ப்போம். ஏனெனில், தொழுகை என்பது இபாதத். அந்த முக்கியமான எல்லைக்குள் நின்றுதான் தொழுகையை ஒரு முஃமின் நோக்குவான். கபடவாதிகள் எப்படி வேண்டுமானாலும் பதில் கூறத்துணிவான்! அல்குர்ஆன், ஹதீஸ் இவ்விரண்டை மட்டும் பின்பற்றும் முஃமின் அதன் எல்லைக்குள் நின்று தான் நோக்குவான். இதன் அடிப்படையில்தான், ஆட்டியும் தொழலாம், நீட்டியும் தொழலாம் என்று மழுப்பாது, மறைக்காது, மற்றவர்களுக்கு அஞ்சாது தவ்ஹீத்வாதிகள் உண்மையை போட்டு உடைக்கின்றனர்.

விரல் ஆட்டியும் தொழலாம் நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை என்று கூறுவது அப்பட்டமான அபத்தவாதமாகும். ஏனெனில், விரல் அசைப்பது சுன்னத் என்ற போது, இதனால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப் படுகிறது என்ற காரணத்தைக் கூறியே கடுமையாக எதிர்த்தனர். ஒருவர் ஆட்டியும் மற்றவர் ஆட்டாமலும் இருந்தால் இதே நிலை தொடரவே செய்யும். ஆட்டியும் நீட்டியும் தொழலாம் என்ற மனோஇச்சையான பஃத்வாவை விட நபிவழி எது என்று நோக்குவோம்.

'நபி(ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடைமீது வைத்தார்கள். பின்பு தனது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள்.(நடுவிரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்.'

அறிவிப்பவர் : வாயில் பின் ஹூஜைர் (ரலி)

ஆதார நூல்கள் : நஸயி -879, தாரமீ -1323, அஹ்மத் -18115, இப்னு ஹூஸைமா 354/1, இப்னு ஹிப்பான் 170/5, தப்ரானி கபீர் 35/22, பைஹகீ 310/1, ஸூனனுல் குப்ரா இமாம் நஸயீ 376ஃ1, அல்முன்தஹா இப்னுல் ஜாரூத் 62/1

//தொழுகை என்பது எல்லோரும் ஒரே சீராகச் செய்ய வேண்டிய வணக்கம். அனைவரும் ஒன்றாக நெஞ்சிலே கை கட்டுகிறார்கள். ஒன்றாகவே கையை உயர்த்துகிறார்கள். ஒன்றாகவே குனிகிறார்கள். நிமிர்கிறார்கள். ஸஜ்தா செய்கிறார்கள். ஆயினும் விரல் அசைப்பதில் மட்டும் வித்தியாசப்படுகிறார்கள்//

என்று எழுதியுள்ளார்கள். இவர்கள் கூறுவது உண்மையல்ல என்பது சாதாரண அறிவு படைத்த ஒருவரால் கூட உணர்ந்து கொள்ள முடியும். ஏனெனில், உலகம் முழுதும் உள்ள தொழுகை முறையை நாம் உற்று நோக்குவோமாயின், பல்வேறு வித்தியாசங்களை அவதானிக்க முடிகிறது. தக்பீர் சொல்லி கை கட்டுவது முதல் ஸலாம் கொடுப்பது வரை பல்வேறு வித்தியாசங்கள் உள்ளன. எனினும் இவர்கள் விரல் அசைப்பதில்தான் வித்தியாசப்படுகிறார்கள் என்று அப்பட்டமாக முழுபூசணிக்காயை சோற்றில் மறைக்கப் பார்க்கின்றனர்.

தவ்ஹீத்வாதிகள் (குர்ஆன்,ஹதீஸை மட்டும் பின்பற்றுபவர்கள்) தக்பீர் சொல்லி நெஞ்சில் கைகட்டுகின்றனர். நபிவழியை பின்பற்றுகின்றனர். ஆனால், பித்அத்வாதிகளின் தொழுகை இதற்கு நேர் மாறாக உள்ளது. சில மத்ஹப்வாதிகள் ருகூவு செய்துவிட்டு நிமிராமல் ஸூஜூது செய்கின்றனர். ருகூவுக்கு பின் சிலர் கையை உயர்த்துவதில்லை. பின்பாஸை பின்பற்றுவோர் ருகூவுக்கு பின்னரும் நெஞ்சில் கை கட்டுகின்றனர். இவைகள் வித்தியாசமில்லையா?

அடுத்து இவர்கள் விரல் ஆட்டும் ஹதீஸை கொச்சைப் படுத்துகின்றனர். ஒவ்வொருவரும் அவரவர் விளங்கியவாறு விரலை அசைக்கின்றனர். இதில் எந்த தவறும் இல்லை. இதைவிட இவர்கள் ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்து விடுகின்றனர்.

//தன் அருகில் பள்ளி முத்தவல்லி வந்து அமர்ந்து விட்டால் விரல் அசைவு அடக்கி வாசிக்கிறது.//

ஆரம்பத்தில் தவ்ஹீத் துளிர்விட்டபோது, அதை விளங்கியவர்கள் தொழுகையில் விரல் அசைத்ததற்காக பல்வேறு கொடுமைகளை அனுபவித்தார்கள். இன்றும் அதற்காக ஊர்விலக்கம், அடிதடி என பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றார்கள்.

//நீட்டுவதே தொழுகையில் சீராக உள்ளது என்பதே என் கருத்து. விரல் ஆட்டாமல் இருந்தால் தொழுகை கூடாதா? இதனை பெரிய பிரச்சனை ஆக்கிக் கொள்ளாதீர்கள்//

//ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால் தான் உட்பூசல்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்//.

விரலை நீட்டுவதே என் கருத்து என்று சுன்னத்திற்கு மாற்றமான தன் கருத்தை திணிக்க முனைந்துவிட்டு, விரல் ஆட்டும் சுன்னத்தை மக்கள் முன் வைக்கும்போது, 'ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால்தான் உட்பூசல் உருவாகின்றன என்று தனது நபிவழி விரோதபோக்கை அப்படியே கக்கி விடுகின்றனர்.

விரல் அசைப்பது நபிவழி என்ற ஒரே காரணத்திற்காகத் தான் பலர் அந்த சுன்னாவை செய்துவருகின்றார்களே தவிர, எந்த தனிமனிதருக்காகவும் செய்யவில்லை என்பது இவர்களுக்கே தெரியும். எனினும், இதை நபிவழி என்பதில் விட்டுக் கொடுக்காமல் இருப்பவரை பார்த்து, பல்வேறு வழிகெட்ட கூட்டங்களுடன் கூட்டிணைந்து கும்மாளமிடும் ஜாக் பரிவாரங்கள், போகிற போக்கில் பி.ஜே குர்ஆன் ஹதீஸ் மட்டும்தான் இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்கிறார், அவர் எதை சொன்னாலும் எதிர்க்க வேண்டும் என்ற மனக்குழப்பத்தில், குர்ஆன் ஹதீஸ் அல்லாத வேறு வழிகாட்டலும் வேண்டும் என்று இவர்கள் போனாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை.

அடுத்ததாக, விரல் அசைப்பது சின்ன பிரச்சனை என்று நபிவழியை கொச்சைப்படுத்தி வரலாற்று திரிபு வாதத்தையும் முன் வைக்கின்றனர்.

//சின்னஞ்சிறு விசயங்களுக்கு எல்லாம் சர்ச்சை செய்து வந்ததால் கொடிகட்டி பறந்த முஸ்லிம்கள் ஐரோப்பாவிலும் அதன் தலைநகர் ஸ்பெயினிலும் சிதறி சின்னாபின்னப் பட்டு அழிந்தனர் என வரலாறு சுட்டிக் காட்டுகிறது.//

இஸ்லாத்தின் சின்ன ஒரு விஷயத்தைக் கூட பின்பற்றாத நிலையில்தான் அவர்கள் சின்னாபின்னப் படுத்தப் பட்டார்கள்.
800 ஆண்டுகள் இஸ்லாத்தில் சின்னது, பெரியது என்று பாராமல் பின்பற்றிய போது ஆட்சி அவர்களிடம் இருந்தது. சின்னது தொடக்கம் பெரியது வரை விட ஆரம்பித்தபோது(அல்லாஹ்வையும் நபியின் வழிமுறைகளையும் புறக்கணித்தபோது) சீரழிந்து போனார்கள் என்பதே வரலாற்று உண்மை.

சின்ன சின்ன விஷயங்களுக்காக முஸ்லிம்கள் சின்னாபின்னப்பட்டு விட்டனர் என்று வருத்தப்படும் ஜாக், ஊர் ஊராக பள்ளிவாசல் கட்டுவது ஏன்? ஒரு ஊரில் நான்கு பள்ளி வாசல் இருந்தாலும் ஐந்தாவதாக ஒரு பள்ளிவாசலை கட்டுவது ஏன்? ஊரெல்லாம் மதரஸாக்கள் இருந்தபோதும் தனி மதரஸா உருவாக்குவது ஏன்?

ஒரு சுன்னாவை இல்லை என்று மறைப்பதற்காக எத்தனையோ உளறல்களையும் பொய்களையும் வரலாற்று திரிபு வாதங்களையும் அள்ளிக்கொட்டி தமது அறியாமையை வெளிப்படுத்தியுள்ளது ஜாக். இது பற்றி சுட்டிக்காட்டிய பின்னும் இன்றுவரை இந்த விஷக்கருத்திலிருந்து ஜாக் பின்வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஜே குர்ஆன்,ஹதீஸிலிருந்து ஒரு கருத்தை உள்ளது உள்ளபடி சொல்லும் போது பாய்ந்து பிராண்டும் நடுநிலை வேடதாரிகள், ஜாக் விஷயத்தில் ஏனோ வாலாட்டும் நாயாக நடந்து கொள்கின்றனர். அனைவருக்கும் அல்லாஹ் நேர்வழிகாட்ட போதுமானவன்.

அபூதி, இலங்கை

Monday, October 13, 2008

அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பித்அத்! -ஜாக் ஃபத்வா!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

நபி(ஸல்) அவர்களின் கருத்தை பிறர் மீது திணிப்பதால் உட்பூசல்கள் உருவாகின்றன. விரலை ஆட்டாவிட்டால் தொழுகை கூடாதா? விரலை நீட்டுவதுதான் சீராக உள்ளது என்பதே என் கருத்து என்று ஜாக்கின் மாநில தலைமையகத்திலிருந்து ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி ஃபத்வா கொடுத்துள்ளார்.

புதுப்பேட்டை ஜாக் மர்கஸின் இமாமாகவும் ஜாக்கின் மாநில பேச்சாளருமான ரஹ்மத்துல்லாஹ் ஃபிர்தௌஸி, வெளியிட்டுள்ள ஃபத்வா :

கேள்வி : தொழுகையில் அத்தஹியாத்தில் விரலை அசைக்க வேண்டுமா? சிலர் விரலை அசைக்காமல் நீட்டி வைக்கிறார்கள். இதற்கு ஆதாரம் என்ன?

பதில் : ஸஹீஹ் முஸ்லிம் பாகம் - 1 ல் நபித் தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் எண் - 1016 விரல் நீட்ட பலவீனமான ஆதாரமாக உள்ளது.

அதே நபித்தோழர் இப்னு உமர்(ரளி) அவர்கள் ஹதீஸ் எண் - 1017 விரலால் சைகை செய்ய ஆதாரமாகவும் உள்ளது.

இரண்டுமே முஸ்லிம் நூலில் உள்ள ஹதீஸ்கள் தான். தொப்பி போட்டும் தொழலாம், போடாமலும் தொழலாம் என்பவர்கள் விரல் ஆட்டியும் தொழலாம் : நீட்டியும் தொழலாம் என்று கூறி இருந்தால் பிரச்சனை எழ வாய்ப்பே இல்லை.

உலகெங்கிலும் பர்ளு, சுன்னத் என்பது கூடுதல் - குறைவு இன்றி ஒரே சீராக இருக்கும். பித்அத் மட்டுமே ஊருக்கு ஊர் வித்தியாசப்படும்.

தொழுகை என்பது எல்லோரும் ஒரே சீராகச் செய்ய வேண்டிய வணக்கம். அனைவரும் ஒன்றாக நெஞ்சிலே கை கட்டுகிறார்கள். ஒன்றாகவே கையை உயர்த்துகிறார்கள். ஒன்றாகவே குனிகிறார்கள். நிமிர்கிறார்கள். ஸஜ்தா செய்கிறார்கள். ஆயினும் விரல் அசைப்பதில் மட்டும் வித்தியாசப்படுகிறார்கள். ஆட்டுவதா? நீட்டுவதா? இதில் ஏதேனும் ஒன்றுதான் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கற்றுத் தந்திருக்க முடியும். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரல் ஆட்டி இருந்தால் எப்படி ஆட்டி இருப்பார்கள் என்ற கேள்வி எழுகிறது.

ஒருவர் வேகமாக விரல் ஆட்டுகிறார். ஒருவர் மெதுவாக ஆட்டுகிறார். ஒருவர் பக்கவாட்டி ஆட்டுகிறார். ஒருவர் வட்டமாக ஆட்டுகிறார். ஒருவர் நீட்டி மடக்கி, நீட்டி மடக்கியும் விரல் ஆட்டுகிறார். தன் அருகில் பள்ளி முத்தவல்லி வந்து அமர்ந்து விட்டால் விரல் அசைவு அடக்கி வாசிக்கிறது. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விரல் அசைத்திருந்தால் ஒரு முறை தான் கையாண்டு இருப்பார்கள். அது எந்த முறை? அது தெரியும் வரை நீட்டுவதே தொழுகையில் சீராக உள்ளது என்பதே என் கருத்து. விரல் ஆட்டாமல் இருந்தால் தொழுகை கூடாதா? இதனை பெரிய பிரச்சனை ஆக்கிக் கொள்ளாதீர்கள். நாட்டில் நாம் சந்திக்க வேண்டிய பிரச்சனைகள் ஏராளம் உள்ளது.

சின்னஞ்சிறு விசயங்களுக்கு எல்லாம் சர்ச்சை செய்து வந்ததால் கொடிகட்டி பறந்த முஸ்லிம்கள் ஐரோப்பாவிலும் அதன் தலைநகர் ஸ்பெயினிலும் சிதறி சின்னாபின்னப் பட்டு அழிந்தனர் என வரலாறு சுட்டிக் காட்டுகிறது. கருத்து வேறுபாடுகள் உலக இறுதி நாள் வரை இருந்தே தீரும். ஒருவரின் கருத்தை பிறரின் மீது திணிப்பதால் தான் உட்பூசல்கள் உருவாகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக தவ்ஹீதிலிருந்து தடம் புரண்டு சென்றுவிட்ட ஜாக், திடல் தொழுகையில் தவறை உணர்ந்து திருந்திக் கொண்டது போல விரல் அசைப்பதிலும் தன்னை திருத்திக் கொண்டு நபிவழி நடக்க இறைவனை இறைஞ்சுவோம்.

Monday, September 22, 2008

குமரி முஸ்லிமின் முதல் வெற்றி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


குமரி முஸ்லிம் வலைப்பூவில் வரும் கட்டுரைகள் கடுமையாக இருக்கின்றன, ஒற்றுமையை குலைக்கின்றன. நம்மிடையே பிளவுகள் கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வாசகர்கள் மறுமொழி இட்டனர்.

அவர்களிடம் குமரிமுஸ்லிம், ஒற்றுமை என்றால் என்ன? ஒற்றுமை என்பது எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்? பல தெய்வ கொள்கையுடையவனும் ஒரு தெய்வ கொள்கையுடையவனும் கொள்கையால் ஒன்றுபட முடியுமா? கப்ரு வணங்கிகளும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களும் கொள்கையால் ஒன்று பட முடியுமா? என்றெல்லாம் கேள்வியை எழுப்பியது!

தங்களுடைய அமைப்பிற்கு சுன்னத் வல் ஜமாஅத் என்று பெயரை வைத்துக் கொண்டு சுன்னத்துக்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகின்றனர் சிலர். மற்றும் சிலர் குர்ஆன் ஹதீஸ்தான் தங்களுடைய அமைப்பு என்று கூறிக் கொண்டு, மனோ இச்சையை பின்பற்றி வருவதோடு அதை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்று செயல்படுபவர்களிடம் உள்ள தவறுகளை பிற அமைப்புகள் சுட்டிக்காட்டும் பொழுது அது குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் உட்பட்டிருந்தால் தன்னுடைய தவறை உணர்ந்து உடனடியாக தவறை திருத்திக் கொள்வதுதான் நபிவழி. மாறாக, நீ சொல்லி நான் கேட்பதா எனும் பாணியில் புதிய வியாக்கியானங்களை கூறும் பொழுதுதான் அவைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு பிடிவாதமாக இருப்பவர்களின் செயல்பாடுகளை மக்களுக்கு எத்தி வைக்கவேண்டும் என்ற பணியை குமரி முஸ்லிம் தொடர்ந்து செய்து வருகின்றது.

அந்த வகையிலே பெருநாள் தொழுகையை பற்றிய ஒரு கட்டுரையை 'தூதருக்கு கட்டுப்படுவோம்' எனும் தலைப்பில் குமரி முஸ்லிம் இரு பாகங்களாக வெளியிட்டு இருந்தது. அதாவது பெருநாள் தொழுகையானது பள்ளிவாசல்களில் நடத்தபட்டு வருகின்றன. ஆனால் திடலில் தொழுவதுதான் நபிவழி எனவே அதை பின்பற்ற குமரி மாவட்டம் கோட்டாறில் பெருநாள் தொழுகையை திடலில் நடத்த குமரி டி.என்.டி.ஜே ஏற்பாடு செய்தது. இதை வரவேற்பதற்கு பதிலாக ஜாக் மாநில தலைவர் கமாலுதீன், தன்னுடைய பெருநாள் உரையில் இதை மறுத்ததோடு மட்டுமல்லாமல் குமரி டி.என்.டி.ஜே -ஐ மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அதோடு அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று கூறி ஏதோ நபிகள் நாயகம் தவறு செய்துவிட்டதாகவும் தான் கூறுவதுதான் சரி எனவும் கமாலுதீன் பேசினார்.

எனவே இவருடைய இன்றைய கூற்றுக்களையும் அன்றைய ஜாக்கின் கூற்றுக்களையும் ஆதாரங்களோடு நாம் வெளியிட்டு இருந்தோம். அவர்களுடைய எழுத்திலிருந்தே ஆதாரங்களை வெளியிட்டதால் ஆடிப்போன ஜாக், ஆகஸ்டு மாத அல்ஜன்னத் பத்திரிகையில் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் மைதானத்தில் திறந்த வெளியில் தொழுதுள்ளார்கள், திறந்த வெளியில் சென்று தொழுமாறு தனது தோழர்களுக்கு கட்டளையும் இட்டுள்ளார்கள். இது சரியான ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபணமானதாகும். காலாகாலமாக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்தியும் வருகின்றனர். இதை ஒரு உண்மையான சுன்னாவின் மீது நம்பிக்கையுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள்.

என்று எழுதியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இதற்காகத்தான் குமரி முஸ்லிம் பாடுபட்டு வருகின்றது. இதுநாள் வரை நிராகரித்து வந்த எஸ்.கே, இன்று குமரி முஸ்லிம் ஆதாரங்களை வெளியிட்டதும் ஒத்துக்கொண்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே!

மனோ இச்சையை பின்பற்றக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் அல்லாஹ்விற்கு பயந்து தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ளுமானால் வெகு சீக்கிரமே அனைத்து இயக்கங்களும் குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒன்றுபட முடியும்.

ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்களே அதுபோல, அல்ஜன்னத் புதிய வியாக்கியானத்தையும் கொடுத்துள்ளது. எனவே நம்மால் சில கேள்விகளையும் முன்வைக்க முடியும்.

1) பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழக்கூடாது என்று நாம் கூறியதாக ஒரு வதந்தியையும் பொய்யையும் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
2) பெருநாள் குத்பாவிலே என்ன பேசினோம் என்று எஸ்.கமாலுதீனுக்கு மறந்து போயிருக்கலாம். ஏனென்றால், அன்று டி.என்.டி.ஜேக்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் பேசியது எஸ்.கே அல்ல, எஸ்.கே உருவில் வந்த ஷைத்தான். நாம் என்ன பேசுகிறோம் என்பது பெரும்பாலான நேரங்களில் அவருக்கே தெரியாது. எனவே நாங்கள் அவர் பேசியவற்றை ரிக்கார்டு செய்து வைத்திருக்கன்றோம். பெருநாள் குத்பாவிலே கோட்டாறு அஷ்ரஃப் பள்ளியிலே அத்தனை மக்கள் மத்தியில் சொன்ன கடுஞ்சொற்களை அல்லாஹ்வின் மீது அச்சமின்றி வதந்தி என சொல்லும் எஸ்.கே அவர்களே! நாங்கள் தயாராக இருக்கிறோம்! பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்! பொதுமேடையிலே நீங்கள் பேசிய பெருநாள் உரையை ஆடியோவாக மக்கள் மத்தியிலே நாங்கள் வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்!

3) அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

4) எங்கு வேண்டுமானாலும் தொழலாம் ஈமான் தான் முக்கியம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

5) இவர்களுக்கு திடலில்தான் தொழவேண்டுமென்றிருந்தால் கப்ரு வணங்கிகள் பாவாகாஸிம் பள்ளியிலே தொழுகிறார்களே அங்கு போய் அவர்களை பின்பற்றி தொழவேண்டியதுதானே என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

6) திடல் தொழுகை என்று நோட்டீஸ் அடித்தது தவறாம் திடலில் தொழுகை என்பதுதான் சரியாம்! திடல் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை இல்லையாதலால் அதைத்தான் நாம் எதிர்த்தோம் என்று கூறியுள்ளனர்.

கொஞ்சம் கூட அல்லாஹ்வின்மீது அச்சமின்றி இருக்கும் ஜாக் வகையறாக்களே!அந்த அறிவிப்பு போஸ்டரில் 'நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜூ பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்' என்ற ஹதிஸல்லவா அச்சிடப்பட்டிருந்தது. இது புதுத் தொழுகையா?

7)வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தின் இரண்டு பக்கங்களிலும் பெருநாள் தொழுகை பற்றிய ஹதீஸ்களல்லவா வெளியிடப்பட்டிருந்தது! அது புதுத் தொழுகையா?

உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நன்மையையும் மறுமையில் அல்லாஹ் பறித்து, அந்த குமரி டி.என்.டி.ஜே சகோதரர்களிடம் கொடுத்து விடுவானே என்ற சிறிதளவு பயமாவது இருந்தால் இத்தகைய அபாண்டத்தை கூறுவீர்களா?

8)திறந்த வெளியில் பெருநாள் தொழுவது சுன்னத்தாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இதை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படத்தான் செய்யும்.பெருநாள் தொழுகை அன்று மழை பெய்து கொண்டிருக்குமானால் தொழமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.என்று எழுதியுள்ளார்கள்.

இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு பெற்றிருக்கும் ஒருவனுக்கு கூட தெரிந்துள்ள விஷயம், மார்க்க அறிவு சற்றும் இல்லாத அபு புஷ்ரா என்ற கூமுட்டைக்கு தெரியவில்லையே என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால், இதை வெளியிட்ட கமாலுதீனோ மார்க்க அறிவு பெற்ற மாமேதையல்லவா? மதனியல்லவா? அவருக்கும் ஹதீஸை நாம்தான் சொல்லித்தர வேண்டுமா?

மழை நேரங்களில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தொழவும் அனுமதி உண்டு.மழை காலங்களில் பாங்கு சொல்லப்படும் பொழுது 'உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அறிவிக்கப்பட்டதும் உண்டு. நின்று தொழுவது கட்டாயம், ஆனால் இயலாதவன் உட்கார்ந்து தொழலாம், அதற்கும் இயலாதவன் படுத்துக் கொண்டே தொழலாம், அதற்கும் இயலாதவன் சைகை மூலமாக தொழலாம் இவையெல்லாம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலுள்ளவை. ஆடை இருப்பவன் ஆடையுடன் தொழலாம், ஆடையே இல்லாதவன் அப்படியே கூட தொழலாம், அது அவனுடைய நிலையை பொறுத்தது. ஆனால் கோட்டாறில் அஷ்ரஃப் பள்ளியிலே தொழுவது நிர்பந்தமா? மாநாடு நடத்திய ISED பள்ளியிலே தொழுகை நடத்த முடியாதா? ரோட்டில் நடத்த முடியாதா? கோட்டாறிலே திடலே இல்லையா? ஏன்? அந்த டி.என்.டி.ஜே சிறார்கள் திடலை ஏற்பாடு செய்துள்ளனர். கோட்டாறில் உங்களால் ஒரு திடலை ஏற்படுத்த முடியவில்லையா? அந்த அளவிற்கு பலவீனப்பட்டு விட்டீர்களா?

9)திறந்த வெளியில் தொழுவது சுன்னத் என்று இன்று சொல்லும் நீங்கள், அன்று அவர்கள் நடத்திய பெருநாள் தொழுகையை திடலில் போய் ஏன் தொழவில்லை? ஜாக் வெறியா? சுன்னத்தை விட ஜாக் வெறி மேலோங்கி விட்டதாலா?
இப்படி உங்களால் பதிலளிக்க முடியாத எத்தனையோ கேள்விகள் கேட்க முடியும். ஆனாலும் சுன்னத்தை ஒத்துக்கொண்ட காரணத்தினால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவோம். திடலை ஏற்பாடு செய்யுங்கள். ஊர் முழுவதும் ஒரே திடலிலே ஒன்றுபட்டு தொழுவோம் இன்ஷாஅல்லாஹ்!

Sunday, September 7, 2008

கருணாநிதியின் காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய அராஜகம்.

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இரத்தக்காட்டேறியாக முஸ்லிம்களின் இரத்தத்தை குடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் கருணாநிதியின் காவல்துறை, அவ்வபோது முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அதை தணித்துக் கொண்டு இருந்து வருகிறது. கோவை கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்களை துவம்சம் செய்ய சரியான சந்தர்ப்பங்கள் எதுவும் அமையவில்லையே என்ற ஏக்கம் கருணாநிதியின் காவல்துறைக்கு நெடுநாட்களாக இருந்து வந்துள்ளது என்பது சமீபத்தில் வேலூரில் முஸ்லிம்கள் மீது நடத்திய காட்டுத்தனமான தாக்குதலின் மூலம் தெரிய வருகிறது.

சங்பரிவாரத்தின் ஊதுகுழலாக செயல்படும் 'தினமலம்' என்ற பத்திரிகை முஸ்லிம்களை கேலி செய்தும், பயங்கரவாதியாக சித்தரித்தும் அடிக்கடி செய்திகள் வெளியிட்டு வருவது அதனுடைய வாடிக்கை. இதனால், பெரும்பாலான முஸ்லிம்கள், இப்பத்திரிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.

முஸ்லிம்களை எவ்வாறு சீண்டிய போதும் அவர்கள் நம்மை கண்டு கொள்ளவில்லையே என்று கருதிய 'தினமலம் நாளிதழ்', முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வரைந்து கேலி செய்தது. இச்செய்தி முஸ்லிம்களிடம் தீயென பரவியது. அதனையொட்டி வெகுண்டெழுந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், த.த.ஜ, தமுமுக, மனித நீதி பாசறை, சுன்னத் வல் ஜமாஅத், முஸ்லிம் லீக் என்ற தங்களுடைய இயக்க வேறுபாடுகளையெல்லாம் மறந்து, பொதுமக்களுடன் வேலூரில் 'தினமலம்' பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது போன்ற ஒரு தருணத்திற்காக காத்திருந்த கருணாநிதியின் காவல்துறையினர், ஒரு சமுதாயத்தின் கண்ணியமிக்க தலைவரை, உலக முஸ்லிம்கள் அனைவராலும் உயிருக்கும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த பார்ப்பன கும்பலை சேர்ந்த அயோக்கியர்களால் நடத்தப்படும் தினமலம் பத்திரிகை ஆசிரியரை கைது செய்து, நாயை போல அடித்து நடுத்தெருவில் இழுத்துச் செல்வதற்கு பதிலாக, முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்துள்ளனர்.

நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய தலைவரை அவமதித்த பத்திரிகையின் மீது நடவடிக்கை எடு என கோரிக்கை கோஷமெழுப்பிய முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியுள்ளனர். பொதுவாக கூட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினரால் லேசான முறையில் தடியடி நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வேலூரில் கருணாநிதியின் காவல் துறையால் நடத்தப்பட்ட தடியடி, திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாகத்தான் கருத முடிகிறது. ஏனெனில் தடியடி நடத்திய போலீஸாரின் கண்களில் கொலைவெறியை பார்க்க முடிந்தது.

ஒரே அடியில் இவனை கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, இரண்டு கைகளாலும் தடியை பிடித்து, தன் தலைக்கு மேல் உயர்த்தி படுவேகமாக ஒரு முஸ்லிம் சகோதரனின் நடு மண்டையிலே 'நச்' என்று அடித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த எவரும் இந்த கருணாநிதியின் காவல்துறையினரை சபிக்காமல் இருக்க மாட்டார்கள். பாவம் அடிவாங்கிய அச்சகோதரர் தற்பொழுது என்ன நிலையில் உள்ளாரோ என்று தெரியவில்லை.

போலீஸாரின் அடியால் கீழே தடுமாறி விழுந்தவர்கள் ஐயோ, அம்மா என்று கதறியபோதும், கருணாநிதியின் காவல்துறையினா,அவர்களை தனது பூட்ஸ் கால்களால் சரமாரியாக மிதித்து துவம்சம் செய்தனர்.

சில சகோதரர்களை நாயை இழுத்து செல்வது போல தரதரவென இழுத்து சென்றனர்.

ஒரு முஸ்லிம் சகோதரனை ஐந்து போலீஸார் சுற்றி நின்று அடித்த காட்சி கண்களில் நீரை வரவழைத்தது.

தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஒரு நிமிட இச்செய்தியிலேயே இத்தனை கொடூரம் என்றால், சம்பவம் நடைபெற்ற இடம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று நினைக்கும் பொழுது நல்லவர்களின் நெஞ்சம் சற்று கனக்கவே செய்யும். இவ்வளவு கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் செய்த தவறுதான் என்ன?
காவல்துறையின் கொடூர தாக்குதல்களில் சில...










உச்சந்தலையில் ஓங்கி அடிக்கும் கயவர்கள்



ஏவி விடப்பட்ட நாய்களைப்போல் நடந்து கொண்ட கருணாநிதியின் இக்காவல்துறையினர் இவ்வராஜகத்தின் வழியாக மற்றொரு செய்தியையும் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். முஸ்லிம்களாகிய நீங்கள் என்னதான் நேர்மையாக நடந்து கொண்டாலும் நாங்கள் உங்களை காவு கொடுக்காமல் விடமாட்டோம் என்பதே அச்செய்தி.

தோளில் கைபோட்டு இனிக்க இனிக்க பேசி படுகுழியில் தள்ளிவிடுவது கருணாநிதியின் வாடிக்கையான ஒன்றுதானே? அப்பேர்பட்ட முஸ்லிம்களின் பாதுகாவலரான(!?) கருணாநிதியின் பொறுப்பில் உள்ள காவல்துறையின் இச்செயல் குறித்து கருணாநிதி என்ன செய்ய போகிறார்? என்று அனைவரும் காத்திருக்க, அவரோ காவல்துறை குறித்து அருமையான(!?) ஒரு செய்தியை நாளிதழ்களுக்கு கொடுத்துள்ளார்.

தமிழக காவல்துறை தனது 150-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பு மிக்க வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் சொந்தமான தமிழக காவல் துறை, தனது சீரிய மக்கள் பணியிலும், திறமையிலும் உலக காவல்துறை வரிசையில் உயரிய இடத்தைப் பெற்று வந்துள்ளது என்றால், அது மிகையாகாது என்று 07-09-2008 அன்றைய நாளிதழ்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். கருணாநிதி இப்படித்தான் செய்தி கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் சாமானிய மக்களின் உணர்வுகளும் அவர்களுடைய வலிகளும் அவருக்கு தெரியுமா என்ன?

குடும்பச்சண்டை காரணமாக மதுரையில் சில உயிர்கள் போக காரணமாயிருந்த கருணாநிதியின் மகனையும், அதனையொட்டி பல்வேறு காட்டுமிராண்டித்தனத்தையும் செய்த அவரது கட்சி ஆதரவாளர்களையும் கருணாநிதியின் பொறுப்பில் உள்ள காவல்துறை இதுபோன்று நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கருணாநிதிக்கு இவ்வராஜகத்தின் அளவு என்ன என்பது தெரிந்திருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி மரணமடைந்துவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டு அதனையொட்டி சில ஊர்களில் அவரது கழக கண்மணிகள் அராஜகத்திலும், பொதுச் சொத்திற்கு சேதம் ஏற்படுத்தவும் செய்தனர். அப்பொழுது அப்பகுத்தறிவு(!?)வாதிகளை நோக்கி இக்காவல்துறையின் லத்திகள் சுழற்றியிருந்தால் கருணாநிதிக்கு முஸ்லிம்களின் இந்த வலி என்னவென்று தெரிந்திருக்கும்.

கருணாநிதியின் இரயில் மறியல் போராட்டத்தை, கள்ளக்குடியில் புகுந்த கருணாநிதி வாழ்கவே என்று கூத்தாடிகளின் பின்னணி பாடகர் நாகூர் ஹனீபா பாட்டு பாடி சிலாகித்தார். நின்றுவிட்ட இரயில் முன்பு படுத்து இரயில் மறியல் செய்த தியாகி(!?) கருணாநிதியை அப்பொழுது அங்கிருந்த காவல்துறையினர் இதுபோன்று நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கருணாநிதிக்கு முஸ்லிம்களின் மனதில் ஏற்பட்டுள்ள ரணத்திற்கு என்ன மருந்து தரலாம் என்று தெரிந்திருக்கும்.

கருணாநிதி பா.ஜ.க.வோடு உறவு கொண்டிருந்த காலத்தில் பா.ஜ.க.வை திருப்திபடுத்துவதற்காக தமிழக முஸ்லிம்களை சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கினார். யாரோ ஓரிருவர் செய்த தவறுகளைகூட மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க முயற்சி செய்தார். பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் படைத்த இறைவனிடம் கையேந்தியது. ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் கேவலம் ஒரு அரசியல்வாதிக்கு இத்தனை அகங்காரமும், வலிமையும் இருந்தால் ஆதி முதல் அழிவுநாள் கடந்தும் ஆட்சி செய்யப்போகும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எத்தனை வலிமை இருக்க வேண்டும். கருணாநிதியின் ஆட்சி மண்ணைக் கவ்வியதும் அந்த இறைவன் அவருக்கு மிகப்பெரிய இழிவை கடந்த ஆட்சியில் ஏற்படுத்தினான். அய்யோ.. கொல்றாங்கோ.. கொல்றாங்கோ.. என்று கருணாநிதி கூவிக்கூவி கத்தியதை இந்த சமுதாயம் சப்தமில்லாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

அதே வழியில் இந்த புனித ரமலான் மாதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்த வலிமைமிக்க அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும். அப்பொழுது கீழ்கண்ட பிரார்த்தனைகளையும் நினைவில் நிறுத்தி உள்ளச்சத்தோடு அந்த ரப்பிடம் நாம் கேட்டால் அல்லாஹ் நாடினால் இந்த பாவிகளை தண்டிப்பான்.

இறைவா! எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக!

எங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து கேலி செய்யும் அனைத்து அயோக்கியர்களையும் இறைவா நாங்கள் உன் பொறுப்பில் விட்டுவிடுகிறோம். அவர்களுக்குரியதை அவர்களுக்கு கொடுப்பாயாக!

அகில உலகிற்கும் அருட்கொடையாய் வந்துதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுத்தவர்கள் மீதும் அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் குறிப்பாக காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள கருணாநிதி மீதும் இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
வீடியோ காட்சிகள் :

மிருகத்தனமான அடி

ஒரு முஸ்லிம் சகோதரனின் அலறல்

Wednesday, September 3, 2008

குர்ஆன்,ஹதீஸ் போர்வைக்குள் ஒரு குள்ளநரி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று சொல்லும் ஒரு அமைப்பின் மாநில தலைவர் ஆற்றிய உரை இது...

பெருநாள் என்பது இஸ்லாமிய காலண்டரை அடிப்படையாக வைத்துத்தான் பெருநாள். ஆங்கில காலண்டரை அடிப்படையாக வைத்து முன்கூட்டியே தீபாவளி மாதிரி அல்லது மற்ற பண்டிகைகளை மாதிரி காலண்டரில் போட்டு அதை பின்பற்றுகிற மாதிரி உள்ள அமைப்பில் இஸ்லாம் ஃபாலோ பண்ணப் படவில்லை.

இப்பொழுது ஒரு காலகட்டம்வரை, நபிகளார்(ஸல்) அவர்களுடைய காலத்தில் முஹம்மது நபி அவர்கள், இந்த பெருநாளை அனுஷ்டிக்க வேண்டிய முறை பற்றி அவர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். சொல்லும் போது என்ன சொன்னார்கள்? நீங்கள் ரமலான் பூர்த்தியாக்கிய பிறகு அடுத்த மாதத்துடைய பிறையை நீங்கள் பார்த்து விட்டீர்களென்றால் அடுத்த நாள் நீங்கள் நோன்பு கொண்டாடுங்கள், என்று சொன்னார்கள். ரமலானை, 29-ல் நீங்கள் இருக்கும் போது நீங்கள் பிறையை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. பிறையை பாருங்கள். பிறை உங்களுக்கு தென்பட்டுவிட்டால் அடுத்தநாள் நோன்பு நோறுங்கள். பிறை உங்களுக்கு தென்படாவிட்டால் அந்த மாதத்தை 30 ஆக பூர்த்தி பண்ணி அதற்கு அடுத்த நாள் பெருநாள் வையுங்கள், என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது, நபிகளாருடைய காலத்தில் இப்படித்தான் அவர்கள் சொல்ல முடியும். அன்றைய காலத்திலே விஞ்ஞான கணிப்புகளோ வானவியல் சாஸ்திரங்களோ ஆராய்ச்சிகளோ செய்து அறியக்கூடிய அளவிற்கு உண்டான காலம் அன்றைக்கு இருக்கவில்லை.


ஆனால் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. எல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்து, கோளங்களுடைய நுணுக்கங்கள், சூரியன் எப்படி சுழலுகிறது, சந்திரன் எப்படி சுழலுகிறது, சூரிய கிரகணம் என்றைக்கு வரும், சந்திர கிரகணம் என்றைக்கு வரும் எல்லாம் துல்லியமாக இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பல மாதங்களுக்கு முன்னாலேயே இன்றைக்குத்தான் சூரிய கிரகணம் வரும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையிலே அரபி மாதங்களையும் இன்றைக்குத்தான் ஒன்று, இன்றைக்குத்தான் 30 அல்லது 29 என்று துல்லியமாக சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது.

இப்படிப்பட்ட காலங்களில் இஸ்லாமியர்களில் ஒருசாரார், நமக்கு துல்லியமாக கணக்கை தெரியக்கூடிய அளவிற்கு உண்டான எல்லா உபகரணங்களும் இருக்கின்றன, எல்லா கருவிகளும் இருக்கின்றன. அதனடிப்படையிலே நாம் நிர்ணயித்து பெருநாளை நாம் கொண்டாட வேண்டியதுதான் என்ற அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு மாற்றம் வராது, இந்த அறிவியல் ஆராய்ச்சி சொல்வதற்கு இதுவரை மாற்றமாக வரவில்லை, அவர்கள் சொல்லக்கூடிய எல்லாமே கரெக்டாக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது, அந்த அடிப்படையிலே அதை எடுத்து ஃபாலோ பண்ண வேண்டுமென்று சொல்கிறார்கள்.


ஆனால் இவ்வாறு சொல்லக்கூடியவர்களுக்கு மாற்றமாக இன்னொரு சாரார் என்ன சொல்கிறார்களென்றால், இல்லை, அந்த அறிவியல் கண்டுபிடிப்புகளால் முடியாது. நாம் பிறையை பார்த்து தான் நாம் ஒன்று என்று தீர்மானிக்க வேண்டும், என்று சொல்லுகின்ற பொழுது முதல் பிறையை பார்ப்பது ரொம்ப கஷ்டம். இரண்டாம் பிறை தான் கண்ணுக்கு தெரியும். அதனால் ஒருநாள் வித்தியாசம் வருகிறது. பிறையை பார்த்துத்தான் பெருநாள் கொண்டாட வேண்டும், அதுதான் நபி சொல்லி இருக்கிறார்கள் என்று விளங்கக்கூடியவர்கள் ஒருநாளை பிற்படுத்துகிறார்கள். இதுதான் வித்தியாசமே தவிர, இதனால் வேறு எந்த விதமான குழப்பமும் கிடையாது. இனி போகப்போக, எதிர்காலத்தில், ஒரு காலகட்டத்தில் இப்படித்தான் இருந்தார்கள், பலவிதமான விஷயங்களில் அறிவியலுக்கு மாற்றமாக சிலர் செயல்பட்டு கொண்டிருந்தார்கள். நாளாவட்டத்தில், போகப்போக இந்த அறிவியல் வளர்ச்சி முன்னேற, முன்னேற ஒரு காலகட்டத்தில் எல்லா முஸ்லிம்களும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கு, இப்படித்தான் சரி, அது சரியாக இருக்கிறது, அதையே நாம் ஃபாலோ பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்து எல்லோரும் ஒரே நாளாக வைக்கக்கூடிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இது ஜாக் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி மதுரையில் ஆற்றிய உரை.


இந்த உரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள். நபியால் அப்படித்தான் சொல்ல முடியும். ஏனென்றால் அவர்களுடைய காலம் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலம். நம்முடைய காலமோ விஞ்ஞானத்தின் மூலமாக அனைத்தையும் சாதித்து விட்ட காலம். எனவே, நபிகளார் பின்பற்றிய கற்கால நடைமுறையை விஞ்ஞான யுகத்தில் வாழும் நம்மால் பின்பற்ற முடியாது என்கிறார் எஸ்.கே.


'மேலும், (நபியே!) நாம் உங்களை மனித குலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் தான் அனுப்பி வைத்திருக்கின்றோம். ஆயினும் ம்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.' (அல் குர்ஆன் 34:28)


ஆனால் நபியின் எச்சரிக்கையும் நற்செய்தியும் இந்த காலத்திற்கு பொருந்தாது என்கிறார் எஸ்.கே.


'இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமை படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.'அல்குர்ஆன் (5:3)


எனக்கூறி நபி(ஸல்) அவர்கள் வாழக்கூடிய காலத்திலேயே அவர்களது கடைசி ஹஜ்ஜூடைய நேரத்திலேயே இம்மார்க்கத்தை அல்லாஹ் முழுமை ஆக்கிவிட்டான். இதில் நம்மில் எவருக்கும் சந்தேகம் உண்டா? இந்த மார்க்கம் முழுமையானது. அதனை நபி(ஸல்) அவர்கள் பூரணப்படுத்திவிட்டு போய்விட்டார்கள் என்பதில் சந்தேகம் உண்டா? அப்படி சந்தேகம் கொண்ட ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா?


அரபா பெருவெளியிலே சகல சகாபாக்களையும் கூட்டி வைத்துக் கொண்டு, 'நான் எல்லாவற்றையும் சொல்லி விட்டேனா?' என கேட்டபோது, 'ஆம் அல்லாஹ்வின் தூதரே!' என ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கி 'இறைவா! நீயே சாடசி'' என அல்லாஹ்விடம் பரம் சாட்டினார்கள்.


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புஹாரி (1739,1741-42)


ஆனால் திருவாளர் எஸ்.கே யோ மார்க்கம் முழுமை அடையவில்லை. அவருக்கு (நபிக்கு)தெரிந்ததை அவர் சொன்னார். பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சியடையும் என்பது நபிக்கு எப்படி தெரியும். தெரிந்திருந்தால் இரண்டாம் பிறையை முதல் பிறை என கொண்டாடி இருப்பார்களா? விஞ்ஞானம் தெரியாததால் அவர்கள் இரண்டாம் பிறையை தான் முதல்பிறை என கொண்டாடி இருக்கிறார்கள். அது தவறு. விஞ்ஞானம் அறிந்த நாம் நபியை பின்பற்ற முடியாது. விஞ்ஞானத்தை தான் பின்பற்ற முடியும் என்கிறார் எஸ்.கே.


'மேலும், அவர் தம் மனோ இச்சையின்படி பேசுவதில்லை. இது (அவர் மீது) இறக்கி அருளப்பட்ட வஹியே ஆகும். (அல் குர்ஆன் 53:3-4)


நபிகளார் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இறைவனிடத்தில் இருந்து வந்த வஹி எனும்போது, கண்பார்வை இழந்த அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) என்ற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது வேறொரு தேவையோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் முகத்தை சற்று சுளித்துக் கொள்கிறார்கள். அந்நேரத்திலே நபியை கண்டித்து, ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி வைக்கிறான். அதில்


'ஒரு குருடர் வந்ததற்காக இவர் முகத்தை சுளித்துக் கொண்டார்' (அல் குர்ஆன் 80:12)


என்று கண்டித்த அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள்; இரண்டாம் பிறையை முதல் பிறை என சொன்னபோது, கண்டித்திருக்க வேண்டாமா?


அல்லாஹ் மறந்து விட்டானா?


அல்லாஹ் கண்டிக்க மறந்து விட்டான் என்று சொல்கிறாரா?


அல்லது விஞ்ஞான வளர்ச்சியை அல்லாஹ் சொல்ல மறந்து விட்டானா?


உமது இறைவன் எதையும் மறக்கக் கூடியவன் அல்ல! (அல்குர்ஆன் 19:64)


அல்லாஹ்வுக்கு விஞ்ஞானம் வளரும் என்பது தெரியாதா?


வானங்களையும் பூமியையும் உருவாக்கி அது எவ்வாறு செயல்படவேண்டும், எப்போது அழிக்கப்பட வேண்டும் என அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், விஞ்ஞானம் வளரும் என்பது கூட அல்லாஹ்வுக்கு தெரியாது என்கிறாரா எஸ்.கே.


அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு மாற்றம் வராது, இந்த அறிவியல் ஆராய்ச்சி சொல்வதற்கு இதுவரை மாற்றமாக வரவில்லை, அவர்கள் சொல்லக்கூடிய எல்லாமே கரெக்டாக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது, அந்த அடிப்படையிலே அதை எடுத்து ஃபாலோ பண்ண வேண்டுமென்று சொல்கிறார் எஸ்.கே.


இதன் அர்த்தம் என்ன?


குர்ஆன், ஹதீஸை விட்டுவிட்டு அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?


அறிவியலுக்கு மாற்றம் வராதென்றால், குர்ஆன், ஹதீஸில் மாற்றம் ஏற்பட்டு விட்டதா?


குர்ஆன், ஹதீஸை ஃபாலோ பண்ணாமல், அறிவியலை ஃபாலோ பண்ணவேண்டுமா?


சகோ.கமாலுதீன் மதனி அவர்களே!


கடுமையாக தண்டிப்பவன் அல்லாஹ் என்பதை மறந்து விடவேண்டாம். அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீ;ண்டு வாருங்கள்.மக்களிடம் தவறை ஒத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுடைய இந்த விஷக்கருத்துக்களை யாரேனும் பின்பற்றுவார்களானால், பின்பற்றக்கூடிய ஒவ்வொருவரின் பாவச்சுமையையும் நீங்கள் சுமக்க வேண்டி வரும் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றோம்.

(நபியே நீர்) கூறுவீராக! உண்மையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே சரியான வழிகாட்டுதலாகும். (அவன் தரப்பிலிருந்து) அகிலங்களின் அதிபதிக்கே கீழ்ப்படியும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டுள்ளோம். (அல்குர்ஆன் 6:71)


Tuesday, August 26, 2008

காண்பதெல்லாம் கடவுளா!

ஏக இறைவனின் திருப்பெயரால்...


குமரி மாவட்டம் புது குடியிருப்பு என்ற பகுதியில் ஒரு வீட்டின் முருங்கை மரத்தில் காய்ந்து தொங்கிய காய்கள், பாம்பை போன்று வளைந்து இருந்ததாம். அந்த பகுதி மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அதற்கு தெய்வீக சக்தி இருப்பதாக எண்ணி அதை பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பயபக்தியுடன் பார்க்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இது தினகரனில் வெளியான செய்தி.


அவன் சிறுவன் தான், ஆனால் அவன் சொன்ன விஷயம் சிறியதல்ல. சீரியஸான விஷயம். அது மக்களை சிந்திக்க வைக்கும்.
இந்த செய்தியில் வந்த சில வாசகங்கள் ஆபாசமாகவும் சிலரை வருத்தப்படுத்தும் விதமாகவும் இருப்பதாக சிலர் தெரிவித்ததால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

Saturday, August 2, 2008

தடுமாறும் டாக்.ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள்


''இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது''. என்று தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் டாக்.ஜவாஹிருல்லாஹ் கூறியிருந்தார்.

தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட தமுமுக-வை களவாடிக்கொண்டும், அதிலிருந்து தவ்ஹீத்வாதிகளையே வெளியேற்றிவிட்டும், அரசியல் மோகம் கொண்டு கப்ரு வணங்கிகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள ஜவாஹிருல்லாஹ் இந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக இந்து கடவுளர்கள் தான் இஸ்லாமிய இறைதூதர்கள் என்று இட்டுக்கட்டியதை குமரி முஸ்லிம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அதற்கு பதிலளித்த ஒரு சகோதரர் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள 25 இறை தூதர்களில் இராமரும் கிருஷ்ணரும் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள 25 நபிமார்களின் பெயர்களை வெளியிட்டு அந்த 25 நபிமார்களில் டாக். ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டுள்ள இராமரும், கிருஷ்ணரும் எங்கே என்ற கேள்வியை குமரி முஸ்லிம் கேட்டிருந்தது.

இதை கண்ட ஜவாஹிருல்லாஹ் என்ன பதில் சொல்வது என விழி பிதுங்கி கொண்டிருக்கும் வேளையில், அவரால் மூளை கழுவப்பட்ட அவருடைய ரசிகர்கள் களத்தில் குதித்தனர். தனது தலைவர் சொன்னது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா, தவறா என்று கூட யோசிக்காமல் இந்து கடவுள்களெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைதூதர்கள் என்றும் டாக்.ஜவாஹிருல்லாஹ் சொன்னது சரிதான் என்றும் வாதாடி வருகின்றனர்.

ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள் சொன்னதை குமரி முஸ்லிம் பதிவு செய்து அவர்கள் (தமுமுகவினர்) அறிவீனர்கள் என்றும், அல்லாஹ் அவனது திருமறையில் சொல்லாத ஒன்றை, அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்துத்தராத ஒன்றை சொல்வதற்கு இந்த துரோகிகளுக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ? என்றும் குமரி முஸ்லிம் கேட்டிருந்தது.

இதிலும் மூக்குடைப்பட்ட ஜவாஹிருல்லாஹ்வின் (குவைத் தமுமுக) ரசிகர்கள் தங்கள் தலைவர் சொன்னது குர்ஆன் ஹதீஸில் இல்லாமல் இருந்தாலும் அதை எப்படியாவது நியாயப்படுத்தியே தீரவேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்கள். அப்போராட்டத்தின் உச்சகட்டமாக கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்கள்.

அன்பு குமரிமுஸ்லீம் அவர்களே.., அல்லாஹ்வைத்தான் இந்துக்கள் அவர்கள் கடவுளர்களாக மாற்றி விட்டார்கள். உருவங்களும், உடல்களும் கொடுத்துவிட்டார்கள். இதைத்தான் டாக்டர். ஜவாஹிருல்லாஹ் கூறியிறுப்பார். இதை படித்து தான் குவைத் தமுமுகவும் ஒப்புதல் அளித்தது. என்று கூறியுள்ளனர். (பார்க்க கமெண்ட்ஸ்)

இந்து கடவுளர்களெல்லாம் இஸ்லாமிய இறைதூதர்கள் என்று ஜவாஹிருல்லாஹ் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னார் என்று குமரி முஸ்லிம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதிலில்லாமல் ஜவாஹிருல்லாஹ் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆனால், குவைத் தமுமுகவோ இராமர் கிருஷ்ணரெல்லாம் இறைதூதர்கள் அல்ல அவர்கள் தான் அல்லாஹ் என்று மற்றொரு குளறுபடியை அவிழ்த்து கொட்டியுள்ளனர். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டும் என்பது இவர்கள் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கொண்டு வந்த செய்தியில்கூட இறைவன் ஒருவனே என்றுதான் கூறப்பட்டுள்ளது. தவிர அல்லாஹ்வும், இராமரும், கிருஷ்ணரும் ஒன்று என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?

இந்துக்கள், இஸ்லாம் கூறும் இறைத்தூதர்களைத்தான் அவர்களுடைய இறை அவதாரங்களாக கருதுகிறார்கள் என்று ஜவாஹிருல்லாஹ் சொன்னதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்றுதான் குமரி முஸ்லிம் கேட்டிருக்கிறது. அதையொட்டியே தனது விமர்சனத்தை குமரி முஸ்லிம் பதிவும் செய்திருக்கிறது. அதற்கு விளக்கம் தர துணிவில்லாத ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள், அசத்தியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதனால்தான் தொடர்பில்லாதவைகளை தொடர்புபடுத்த முயற்சிக்கிறார்கள். இப்படி நடந்து கொள்வதால் அவர்களுடைய கணக்கில் பாவம் சேருமே என்றுகூட அவர்கள் அஞ்சுபவர்களாக இல்லை. அப்படி அஞ்சாததனால்தான் இராமரும் கிருஷ்ணரும் இஸ்லாத்தின் இறைதூதர்கள் என்று இல்லாததை இஸ்லாத்தின் மேல் இட்டுக்கட்டுகிறார்கள். அதற்கு விளக்கம் என்ற பெயரில் தொடர்பே இல்லாமல் அல்லாஹ், இராமர், கிருஷ்ணர் எல்லாமே ஒன்றுதான் என்று வாதிடுகின்றனர்.

அரசியல் மோகம் இவர்களை எந்தளவிற்கு கீழ்தரமான செயல்களை செய்ய தூண்டுகிறது என்று பார்த்தால் இவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது. இந்த அறிவீனர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்கு பார்ப்போம்.

படைத்த இறைவனிடம் கோரிக்கை வைக்கும்பொழுது அதை எவ்வளவு பணிவுடன் வைக்க வேண்டும் என்ற சராசரி இஸ்லாமிய அறிவுகூட இல்லாமல் இறைவனுக்கு கட்டளையிடுவதுபோலும் ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள் நடந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வை முஸ்லிம்கள் அவன், இவன் என்று ஒருமையில் அழைப்பதை பயன்படுத்தி ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகள் உச்சக்கட்ட வரம்பு மீறலாகவே இருக்கிறது. இவர்கள் அரசியல் செய்வதால் வேறு யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும், இருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதை கலைத்துவிட்டு இவர்களிடம் சேர்ந்து இவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்றும் இறைவனிடம் கோரிக்கை வைக்கச் சொல்லி ஒருவருக்கு கிளாஸ் எடுத்திருக்கிறது ஒரு உதவாக்கரை. அந்த உதவாக்கரை வேறு யாருமல்ல குவைத் தமுமுகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ்வின் தீவிர ரசிகரான அமானுல்லாஹ் என்ற ஒரு அறிவீனரே.

'தமுமுகவிற்கு பலத்தை குடுறா அல்லாவே, இஸ்லாமிய எதிரிகள இல்லாம ஆக்குடா அல்லாவே, சமூகத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் குழப்பம் செய்பவர்களை திருத்துடா அல்லாவே, தமுமுக சரியா செயல்படல திராவிட கட்சிகளிடம் எங்கே விலை போயிருவாங்கலோன்னு பயந்து அவசரப்பட்டு ஐடிஎம்கேவ ஆரம்பித்தது தவறுதான் அல்லாவே, இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் ஐடிஎம்கேவ கலைச்சிட்டு மமுகவோடு சேர்ந்து புதிய எழுச்சியுடன் கூடிய மலர்ச்சியை உருவாக்கனும்டா அல்லாவே, சமுதாயத்தின் பெரிய தலைகளுக்குள் இருக்கும் ஈகோ, பிரஸ்டீஜ், ஆணவம், திமிரு, நயவஞ்சகம், இன்னும் இதுபோன்று இறையும், மறையும் மறுக்கும் தீய குணங்களை இல்லாமல் ஆக்குடா அல்லவேன்னு துஆ செஞ்சிட்டு இருங்க'.

உதவாக்கரை அமானுல்லாவின் மேற்கண்ட கருத்து ஒரு மின்னஞ்சல் குழுமத்தில் பரப்பப்பட்டிருக்கிறது. அக்குழுமத்தின் மற்றொரு உறுப்பினரால் அதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (குடுறா அல்லாவே, ஆக்குடா அல்லாவே, ஆக்குடா அல்லாவே) அல்லாஹ்வைக் குறித்து இவ்வளவு மட்டமான மொழியில் எழுதியுள்ளாரே! இவர் முஸ்லிம்தானா? இதை ஏன் ஃபார்வேட் செய்கிறீர்கள்? இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது! நன்றி : அப்து

இந்த அறிவுகெட்ட உதவாக்கரைக்கு மனிதர்களின் விளக்கத்தை கொடுப்பதை விடவும் அல்லாஹ் தனது திருமறையில் கொடுக்கும் விளக்கத்தை கொடுத்தாலே போதும் என்று நம்புவோம்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (7:180)

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (7:55)

உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும் போது உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதை விட அதிகமாக அல்லாஹ்வை நினையுங்கள்! ''எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!'' எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர். அவருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. (2:200)

தான் செய்தது தவறு என்பதை மேற்கண்ட இறைவசனங்களை பார்த்த பிறகாவது அறிந்து, எல்லாம் வல்ல இறைவனிடம் அவர் மன்னிப்பு கோரினால் இன்ஷா அல்லாஹ் அது அவருக்கு பயனளிக்கலாம். ஏனெனில் மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கக்கூடியவனாக ரப்புல் ஆலமின் இருக்கிறான்.

Sunday, July 27, 2008

பீ.ஜே யை ஒழித்துக்கட்டுவோம்!

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

1400 வருடங்களுக்கு முன், அறியாமை காலத்திலே வாழ்ந்த மக்கள், சிலைகளை தங்கள் தெய்வங்களாக வணங்கி கொண்டிருந்தனர். விபச்சாரத்தை ஒரு தவறாகவே கருதாமல் இருந்தனர். படைத்தவனை மறந்து விட்டு படைப்பினங்களான சூரியனையும் நெருப்பையும் வழிபட்டு வந்தனர். அந்த சமயத்தில் தான் அல்லாஹூதஆலா அவர்களிடத்திலே முஹம்மது (ஸல்) எனும் தூதரை அனுப்புகின்றான். அந்த தூதர் அந்த மக்களிடத்திலே அல்லாஹ்வை பற்றி அச்சமூட்டி எச்சரிக்கை செய்கின்றார். ஒழுக்கமுடன் நடக்கவேண்டுமென்றும் ஒரே இறைவனையே வணங்க வேண்டுமென்றும் மக்களுக்கு அறிவுறுத்துகின்றார்.

மக்களோடு மக்களாக நன்னடத்தையுடன் வாழ்ந்து வந்த அந்த முஹம்மதுவை(ஸல்) அந்த மக்கள் எதிரியாக கருதினர். நம்முடைய தெய்வங்களெல்லாம் பொய்யானவை என்று இவர் சொல்கிறாரே இவரை சும்மா விடக்கூடாது என்கின்றனர் ஒரு சிலர். நம்முடைய மூதாதையரின் கொள்கையை இவர் விடச்சொல்கிறாரே இவரை கொலை செய்து விடுவோம் என்கின்றனர் ஒரு சிலர். நம்முடைய பிழைப்புக்கு பங்கம் விழைவிக்கிறாரே இவரை ஒழித்துக் கட்டுவோம் என்கின்றனர் ஒரு சிலர். தங்களில் யாராவது ஒருவர் தனியாக சென்று அவரை கொலை செய்தால், அந்த சமுதாயம் பழிக்கு பழி என்று சொல்லி அவரையும் கொலை செய்து விடுமே என அஞ்சி அனைத்து கோத்திரத்தாரையும் ஒன்று கூட்டி அவர்களில் சிலரை தேர்ந்தெடுக்கின்றனர். அனைவரும் சேர்ந்து கொன்றால், இவர் அனைவருக்கும் எதிரி தான் என்பதை சொல்லி தண்டனையிலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம் என்று திட்டம் தீட்டினர். அதற்கான நாளை குறித்து, நபிகளாரின் (ஸல்) வீட்டை எதிரிகள் முற்றுகையிட்டனர். ஆனால் அல்லாஹ் நபிகளாரை பாதுகாத்து அசத்தியவாதிகளை ஏமாற்றமடைய செய்தான்.

இது நபிகளாரின்(ஸல்) மக்கா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்

எதிரிகளின் தொந்தரவினால் சொந்த நாட்டை துறந்து வேறு பகுதிக்கு சென்றபோதும் எதிரிகள் விட்டபாடில்லை. இவர் சத்தியத்தை சொல்வதால் நம்முடைய பலம் குன்றுகிறது. நம்மிடமிருப்பவர்கள் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் முஹம்மது(ஸல்)வின் அணியிலே சேர்ந்து கொண்டிருக்கின்றனர். அவருடைய அணி வலுப்பெற்றுவிட்டால் நம்முடைய பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும், வருமானம் போய்விடும், எனவே அவரை வீழ்த்துவது தான் நம்முடைய குறிக்கோள் என்று மக்கா காஃபிர்கள் சூளுரைத்தனர். பரம்பரை பரம்பரையாய் தங்களுக்குள்ளே சண்டையிட்டு கொண்டிருந்தவர்கள் கூட இதற்காக இணைந்தனர். அனைத்து குலத்தாரும் அனைத்து கோத்திரத்தாரும் ஒன்று கூடினர். எந்த அளவிற்கென்றால், இயேசுவை (ஈஸா நபி (அலை)) வேசி மகன் என்று சொன்ன யூதர்களுடன் கிறிஸ்தவர்களும் இணைந்து, மக்கா காஃபிர்களோடு சேர்ந்து கொண்டு முஹம்மதுவை (ஸல்) வீழ்த்த திட்டமிட்டனர்.

இது நபிகளாரின்(ஸல்) மதீனா வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம்

தமிழகத்திலே புரையோடி போயிருந்த இணைவைப்பை விரட்டுவதற்காக எத்தனையோ அறிஞர்கள் களமிறங்கி போராடினர். நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதன் காரணமாக பிரிவினைகள் ஏற்பட்டது. ஆனால் அதற்காக, ஒரு அறிஞரை தங்களுக்கு பிடிக்கவில்லை என்பதற்காக மக்கா காஃபிர்கள் செய்த வேலையை ஒரு தவ்ஹீத்வாதி என்று சொல்லக்கூடியவர் செய்யலாமா? இதை படிப்பவர்களுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் அது உண்மை.

தமிழகத்திலே தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் பி.ஜெய்னுல் ஆபிதீனும் ஒருவர். முக்கியமானவரும் கூட. அவருடைய சத்திய பிரச்சாரத்தினால் தமிழக மக்கள் நரகத்தின் விளிம்பிலிருந்து தப்பித்து, சொர்க்கம் புறப்பட தங்களை ஆயத்தமாக்கிக் கொண்டனர். தன்னை சீண்டுவார் யாருமில்லை என்றதும் சினம் கொண்ட ஜாக்கின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி, மக்கா காஃபிர்கள் செய்த வேலையை செய்ய துவங்கினார். தான் ஒருவன் மட்டும் அதை செய்துகொண்டிருப்பதால் மக்களின் கோப பார்வை தம்மீது விழுந்து விடுமென்பதால், பி.ஜே யை ஒழித்துக் கட்ட வேண்டி அனைத்து இயக்கங்களுக்கும் அழைப்பு விடுத்தார். 'தன்னுடைய இயக்கத்தை சேராதவர்களை பி.ஜே, காஃபிர் என்று சொல்கிறார், இவரை இப்படியே விடக்கூடாது. எனவே அனைவரும் ஒன்று கூடுவோம்' என்று எஸ்.கமாலுதீன் மதனி, தன் கைப்பட தன்னுடைய லெட்டர்பேடில் எழுதி, கையெழுத்திட்டு அனைத்து அமைப்புகளுக்கும் இரகசியமாய் அனுப்பினார். (இப்படி எஸ்.கே எழுதவில்லை என்றோ, அழைப்பு கொடுக்கவில்லை என்றோ கூறுவாரானால் பொது மேடையிலே குமரி முஸ்லிம் ஆதாரங்களை சமர்பிக்கும் இன்ஷாஅல்லாஹ்)

அந்த அழைப்பின் பேரில் பி.ஜேயை ஒழித்து கட்டுவதற்காக பல அமைப்புகளை சார்ந்த 50-க்கும் மேற்பட்டோர் ஒரு மண்டபத்திலே ஒன்று கூடினர்.




எஸ்.கமாலுதீன் மதனி

முஜிபுர்ரஹ்மான் உமரி

கே.எம்.இக்பால் மதனி

கே.எஸ்.ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

எம்.எம்.அப்துல்காதர் உமரி

முப்தி.உமர் ஷெரிஃப் காஸிமி

கோவை.மசூது உட்பட

பிஜே யின் பிரச்சாரத்தால், வளர்ச்சியால் நம்முடைய வருமானம் தடைபடுகின்றது, பிழைப்புக்கு பங்கம் வந்துவிடும் என அஞ்சிய இன்னும் பல அமைப்புகளை சார்ந்தவர்கள் அதிலே கலந்து கொண்டு பி.ஜே யை என்ன செய்ய வேண்டும், அவரை பற்றி நாம் வெளி உலகுக்கு என்ன சொல்ல வேண்டும் என்று திட்டம் தீட்டினர்.

அங்கே என்ன பேசப்பட்டது?

என்ன திட்டங்கள் தீட்டப்பட்டது?

அந்த சூழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் சொன்னவை என்ன?

என்பதை இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் ஆதாரங்களோடு காண்போம்.

பொதுமக்கள் கவனத்திற்கு:
இவர்கள் அனாதை ஆசிரமம் நடத்துகின்றார்கள், எனவே அனாதைகளை பராமரிக்க நாம் உதவி செய்வோம், இவர்கள் அழைப்பு பணி செய்வதாக பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள், எனவே அல்லாஹ்விடத்தில் நன்மையை பெற்று தரும் அழைப்பு பணிக்காக இவர்களிடம் நன்கொடையளிப்போம் என தங்கள் செல்வங்களை வாரி கொடுப்பவர்களே! சிந்திப்பீர்!! இவர்கள் தனக்கு பிடிக்காதவனை என்ன செய்வது, அவனை எப்படி பழிவாங்குவது என்று திட்டம் தீட்டுவதற்காக மக்கள் பணத்திலே மண்டபம் எடுத்து, வந்திருந்தவர்கள் அனைவருக்கும் விருந்து படைக்கின்றனர். அங்கே என்ன நடந்தது என்பதனைத்தும் வீடியோ எடுக்கப்பட்டது. ஆனால் வெளியிடப்படவில்லை. நிதி கேட்டு உங்களிடத்திலே வரும்போது, அவர்களிடத்திலே இந்த சம்பவத்தின் சிடியை கேட்டு வாங்குங்கள். உங்கள் பணத்தை அவர்கள் எப்படி செலவிடுகிறார்கள் என்பதை உணருங்கள்.