Tuesday, August 26, 2008

காண்பதெல்லாம் கடவுளா!

ஏக இறைவனின் திருப்பெயரால்...


குமரி மாவட்டம் புது குடியிருப்பு என்ற பகுதியில் ஒரு வீட்டின் முருங்கை மரத்தில் காய்ந்து தொங்கிய காய்கள், பாம்பை போன்று வளைந்து இருந்ததாம். அந்த பகுதி மக்கள் அதை ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். அதற்கு தெய்வீக சக்தி இருப்பதாக எண்ணி அதை பெண்கள், குழந்தைகள் உட்பட பலர் பயபக்தியுடன் பார்க்கின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


இது தினகரனில் வெளியான செய்தி.


அவன் சிறுவன் தான், ஆனால் அவன் சொன்ன விஷயம் சிறியதல்ல. சீரியஸான விஷயம். அது மக்களை சிந்திக்க வைக்கும்.
இந்த செய்தியில் வந்த சில வாசகங்கள் ஆபாசமாகவும் சிலரை வருத்தப்படுத்தும் விதமாகவும் இருப்பதாக சிலர் தெரிவித்ததால் அவர்களின் வேண்டுகோளை ஏற்று அந்த வாசகங்கள் நீக்கப்பட்டுவிட்டன.

Saturday, August 2, 2008

தடுமாறும் டாக்.ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள்


''இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது''. என்று தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் டாக்.ஜவாஹிருல்லாஹ் கூறியிருந்தார்.

தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட தமுமுக-வை களவாடிக்கொண்டும், அதிலிருந்து தவ்ஹீத்வாதிகளையே வெளியேற்றிவிட்டும், அரசியல் மோகம் கொண்டு கப்ரு வணங்கிகளுடன் கைகோர்த்துக் கொண்டுள்ள ஜவாஹிருல்லாஹ் இந்து மக்களின் ஓட்டுக்களை பெறுவதற்காக இந்து கடவுளர்கள் தான் இஸ்லாமிய இறைதூதர்கள் என்று இட்டுக்கட்டியதை குமரி முஸ்லிம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது.

அதற்கு பதிலளித்த ஒரு சகோதரர் குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள 25 இறை தூதர்களில் இராமரும் கிருஷ்ணரும் இருக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தார். திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ள 25 நபிமார்களின் பெயர்களை வெளியிட்டு அந்த 25 நபிமார்களில் டாக். ஜவாஹிருல்லாஹ் குறிப்பிட்டுள்ள இராமரும், கிருஷ்ணரும் எங்கே என்ற கேள்வியை குமரி முஸ்லிம் கேட்டிருந்தது.

இதை கண்ட ஜவாஹிருல்லாஹ் என்ன பதில் சொல்வது என விழி பிதுங்கி கொண்டிருக்கும் வேளையில், அவரால் மூளை கழுவப்பட்ட அவருடைய ரசிகர்கள் களத்தில் குதித்தனர். தனது தலைவர் சொன்னது குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் சரியா, தவறா என்று கூட யோசிக்காமல் இந்து கடவுள்களெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைதூதர்கள் என்றும் டாக்.ஜவாஹிருல்லாஹ் சொன்னது சரிதான் என்றும் வாதாடி வருகின்றனர்.

ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள் சொன்னதை குமரி முஸ்லிம் பதிவு செய்து அவர்கள் (தமுமுகவினர்) அறிவீனர்கள் என்றும், அல்லாஹ் அவனது திருமறையில் சொல்லாத ஒன்றை, அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்துத்தராத ஒன்றை சொல்வதற்கு இந்த துரோகிகளுக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ? என்றும் குமரி முஸ்லிம் கேட்டிருந்தது.

இதிலும் மூக்குடைப்பட்ட ஜவாஹிருல்லாஹ்வின் (குவைத் தமுமுக) ரசிகர்கள் தங்கள் தலைவர் சொன்னது குர்ஆன் ஹதீஸில் இல்லாமல் இருந்தாலும் அதை எப்படியாவது நியாயப்படுத்தியே தீரவேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார்கள். அப்போராட்டத்தின் உச்சகட்டமாக கீழ்கண்டவாறு எழுதியுள்ளார்கள்.

அன்பு குமரிமுஸ்லீம் அவர்களே.., அல்லாஹ்வைத்தான் இந்துக்கள் அவர்கள் கடவுளர்களாக மாற்றி விட்டார்கள். உருவங்களும், உடல்களும் கொடுத்துவிட்டார்கள். இதைத்தான் டாக்டர். ஜவாஹிருல்லாஹ் கூறியிறுப்பார். இதை படித்து தான் குவைத் தமுமுகவும் ஒப்புதல் அளித்தது. என்று கூறியுள்ளனர். (பார்க்க கமெண்ட்ஸ்)

இந்து கடவுளர்களெல்லாம் இஸ்லாமிய இறைதூதர்கள் என்று ஜவாஹிருல்லாஹ் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் சொன்னார் என்று குமரி முஸ்லிம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதிலில்லாமல் ஜவாஹிருல்லாஹ் தட்டுத்தடுமாறிக் கொண்டிருக்கிறார். ஆனால், குவைத் தமுமுகவோ இராமர் கிருஷ்ணரெல்லாம் இறைதூதர்கள் அல்ல அவர்கள் தான் அல்லாஹ் என்று மற்றொரு குளறுபடியை அவிழ்த்து கொட்டியுள்ளனர். ஒரு பொய்யை மறைக்க ஓராயிரம் பொய் சொல்ல வேண்டும் என்பது இவர்கள் விஷயத்தில் உண்மையாகிவிட்டது. இந்து வேதங்களில் சொல்லப்பட்டுள்ளதாக இவர்கள் கொண்டு வந்த செய்தியில்கூட இறைவன் ஒருவனே என்றுதான் கூறப்பட்டுள்ளது. தவிர அல்லாஹ்வும், இராமரும், கிருஷ்ணரும் ஒன்று என்று எங்காவது குறிப்பிடப்பட்டுள்ளதா?

இந்துக்கள், இஸ்லாம் கூறும் இறைத்தூதர்களைத்தான் அவர்களுடைய இறை அவதாரங்களாக கருதுகிறார்கள் என்று ஜவாஹிருல்லாஹ் சொன்னதற்கு என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்றுதான் குமரி முஸ்லிம் கேட்டிருக்கிறது. அதையொட்டியே தனது விமர்சனத்தை குமரி முஸ்லிம் பதிவும் செய்திருக்கிறது. அதற்கு விளக்கம் தர துணிவில்லாத ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள், அசத்தியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கிறார்கள். அதனால்தான் தொடர்பில்லாதவைகளை தொடர்புபடுத்த முயற்சிக்கிறார்கள். இப்படி நடந்து கொள்வதால் அவர்களுடைய கணக்கில் பாவம் சேருமே என்றுகூட அவர்கள் அஞ்சுபவர்களாக இல்லை. அப்படி அஞ்சாததனால்தான் இராமரும் கிருஷ்ணரும் இஸ்லாத்தின் இறைதூதர்கள் என்று இல்லாததை இஸ்லாத்தின் மேல் இட்டுக்கட்டுகிறார்கள். அதற்கு விளக்கம் என்ற பெயரில் தொடர்பே இல்லாமல் அல்லாஹ், இராமர், கிருஷ்ணர் எல்லாமே ஒன்றுதான் என்று வாதிடுகின்றனர்.

அரசியல் மோகம் இவர்களை எந்தளவிற்கு கீழ்தரமான செயல்களை செய்ய தூண்டுகிறது என்று பார்த்தால் இவர்கள் மீது பரிதாபமே ஏற்படுகிறது. இந்த அறிவீனர்கள் அல்லாஹ்விற்கு அஞ்சாமல் எப்படியெல்லாம் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கு இன்னும் ஒரு உதாரணத்தை இங்கு பார்ப்போம்.

படைத்த இறைவனிடம் கோரிக்கை வைக்கும்பொழுது அதை எவ்வளவு பணிவுடன் வைக்க வேண்டும் என்ற சராசரி இஸ்லாமிய அறிவுகூட இல்லாமல் இறைவனுக்கு கட்டளையிடுவதுபோலும் ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள் நடந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வை முஸ்லிம்கள் அவன், இவன் என்று ஒருமையில் அழைப்பதை பயன்படுத்தி ஜவாஹிருல்லாஹ்வின் ரசிகர்கள் பிரயோகிக்கும் வார்த்தைகள் உச்சக்கட்ட வரம்பு மீறலாகவே இருக்கிறது. இவர்கள் அரசியல் செய்வதால் வேறு யாரும் அரசியல் செய்யக்கூடாது என்றும், இருக்கின்ற அனைத்து முஸ்லிம் அரசியல் கட்சிகளும் அதை கலைத்துவிட்டு இவர்களிடம் சேர்ந்து இவர்களுக்கு சேவகம் செய்ய வேண்டும் என்றும் இறைவனிடம் கோரிக்கை வைக்கச் சொல்லி ஒருவருக்கு கிளாஸ் எடுத்திருக்கிறது ஒரு உதவாக்கரை. அந்த உதவாக்கரை வேறு யாருமல்ல குவைத் தமுமுகவை சேர்ந்த ஜவாஹிருல்லாஹ்வின் தீவிர ரசிகரான அமானுல்லாஹ் என்ற ஒரு அறிவீனரே.

'தமுமுகவிற்கு பலத்தை குடுறா அல்லாவே, இஸ்லாமிய எதிரிகள இல்லாம ஆக்குடா அல்லாவே, சமூகத்துக்கள் மார்க்கத்தின் பெயரால் குழப்பம் செய்பவர்களை திருத்துடா அல்லாவே, தமுமுக சரியா செயல்படல திராவிட கட்சிகளிடம் எங்கே விலை போயிருவாங்கலோன்னு பயந்து அவசரப்பட்டு ஐடிஎம்கேவ ஆரம்பித்தது தவறுதான் அல்லாவே, இன்ஷா அல்லாஹ் கூடிய சீக்கிரம் ஐடிஎம்கேவ கலைச்சிட்டு மமுகவோடு சேர்ந்து புதிய எழுச்சியுடன் கூடிய மலர்ச்சியை உருவாக்கனும்டா அல்லாவே, சமுதாயத்தின் பெரிய தலைகளுக்குள் இருக்கும் ஈகோ, பிரஸ்டீஜ், ஆணவம், திமிரு, நயவஞ்சகம், இன்னும் இதுபோன்று இறையும், மறையும் மறுக்கும் தீய குணங்களை இல்லாமல் ஆக்குடா அல்லவேன்னு துஆ செஞ்சிட்டு இருங்க'.

உதவாக்கரை அமானுல்லாவின் மேற்கண்ட கருத்து ஒரு மின்னஞ்சல் குழுமத்தில் பரப்பப்பட்டிருக்கிறது. அக்குழுமத்தின் மற்றொரு உறுப்பினரால் அதற்கு கண்டனமும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (குடுறா அல்லாவே, ஆக்குடா அல்லாவே, ஆக்குடா அல்லாவே) அல்லாஹ்வைக் குறித்து இவ்வளவு மட்டமான மொழியில் எழுதியுள்ளாரே! இவர் முஸ்லிம்தானா? இதை ஏன் ஃபார்வேட் செய்கிறீர்கள்? இது வன்மையாகக் கண்டிக்கத் தக்கது! நன்றி : அப்து

இந்த அறிவுகெட்ட உதவாக்கரைக்கு மனிதர்களின் விளக்கத்தை கொடுப்பதை விடவும் அல்லாஹ் தனது திருமறையில் கொடுக்கும் விளக்கத்தை கொடுத்தாலே போதும் என்று நம்புவோம்.

அல்லாஹ்வுக்கு அழகிய பெயர்கள் உள்ளன. அவற்றின் மூலமே அவனிடம் பிரார்த்தியுங்கள்! அவனது பெயர்களில் திரித்துக் கூறுவோரை விட்டு விடுங்கள்! அவர்கள் செய்து வந்ததற்காக அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். (7:180)

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205)

உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (7:55)

உங்களுடைய வழிபாடுகளை முடிக்கும் போது உங்கள் முன்னோர்களை நீங்கள் நினைப்பது போல், அல்லது அதை விட அதிகமாக அல்லாஹ்வை நினையுங்கள்! ''எங்கள் இறைவா! இவ்வுலகில் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!'' எனக் கேட்போரும் மனிதர்களில் உள்ளனர். அவருக்கு மறுமையில் எந்தப் பாக்கியமும் இல்லை. (2:200)

தான் செய்தது தவறு என்பதை மேற்கண்ட இறைவசனங்களை பார்த்த பிறகாவது அறிந்து, எல்லாம் வல்ல இறைவனிடம் அவர் மன்னிப்பு கோரினால் இன்ஷா அல்லாஹ் அது அவருக்கு பயனளிக்கலாம். ஏனெனில் மனிதர்களுடைய பாவங்களை மன்னிக்கக்கூடியவனாக ரப்புல் ஆலமின் இருக்கிறான்.