Wednesday, December 31, 2008

இருதலைக்கொள்ளி எறும்பாய் ஈழத்தமிழர்கள்...!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

விடுதலைப்புலிகள் போர்நிறுத்தம் செய்வார்கள். அது தங்களை பலப்படுத்திக் கொள்ளவே தவிர மக்களின் துயர நிலையை கருத்தில் கொண்டல்ல. இது பல காலமும் நடந்தே வந்துள்ளது. இப்போது அவர்கள் போர் நிறுத்தம் என்று அறிவித்திருப்பதும் அவ்வாறான ஓர் உள்நோக்குடன்தான். அவர்களின் இந்த தந்திரத்தை அறிந்து கொண்டுதான் ராஜபக்சே போர்நிறுத்தம் செய்ய மறுக்கின்றார்.

இலங்கை பேரினவாத அரசும் சரி, புலிகளும் சரி மக்களை கொன்று குவிப்பதில் ஒருவருக்கொருவர் சளைத்தவரல்லர்.

திலும் சிங்கள ராணுவம் கொன்று குவித்த தமிழர்களை விட புலிகள் கொன்ற தமிழர்கள்தான் அதிகம். ஈழத்தின் மாண்பார்ந்த தலைவர்களையெல்லாம் விண்ணுலகிற்கு அனுப்பிய பெருமை புலிகளையே சாரும். இவர்களின் பாசிச போக்கால்தான் மனம் வெறுத்து கருணா போன்ற தளபதிகள் கூட சிங்கள அரசின் பக்கம் போக வேண்டிய நிலை ஏற்பட்டது. தோளோடு தோள் நின்று சிங்கள ராணுவத்தை எதிர்த்திருக்க வேண்டிய எத்தனையோ சக போராளிகளையும் கொன்று குவித்தவர்கள் புலிகள் (பத்மநாபா, சபாரத்தினம், உமா மகேஸ்வரன்).

புலிகளின் ரசிகர்களாக விளங்கும் நம் தமிழக தலைவர்களுக்கு அப்பாவி தமிழர்களின் மீது ஒரு இழவு பரிவும் கிடையாது. அங்கு புலிகள் அடிபட்டால் இங்கு இவர்களுக்கு வலிக்கும். 'அய்யய்யோ தமிழர்களை கொல்கிறார்களே' என்று கூப்பாடு போடுவார்கள். இப்போதும் இதுதான் நடக்கிறது. சில அரசியல்வாதிகளாலும் சில சினிமாக்காரர்களாலும் தான் இன்று ஈழப்பிரச்சனை முன்னெடுக்கப் படுகிறதே தவிர தமிழக மக்களுக்கு இதில் பெரிய ஈடுபாடு எதுவும் கிடையாது.

வழக்கம் போல இதுபோன்ற பிரச்சனைக்காக வகுப்பறையை விட்டு வெளியே வந்து ஜாலி கொண்டாடும் நம் மாணவர்கள் கூட, இம்முறை அவ்வாறு வெளிவந்து போராட்டம் எதுவும் நடத்தவில்லை என்பதிலிருந்தே ஈழ விஷயமாக நமது மக்கள் எத்தகைய அசிரத்தையுடன் இருக்கிறார்கள் என்பது தெரியவரும். மாறாக, சில ஊடகங்கள் ஏதோ தமிழகமே பொங்கி எழுந்திருப்பதாக ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைத்து வருகிறார்கள். இதன் உள்நோக்கம் என்ன என்பதை மத்திய புலனாய்வுதுறை கண்டுபிடிக்க வேண்டும்.

- கே.எஸ்.முஹம்மது ஷூஐப், காயல்பட்டினம்.


மனித நேயத்துடன் அணுகவேண்டிய ஈழத்தமிழர் பிரச்சனையை தமிழக அரசியல் கட்சிகள் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்தும் போக்கு எப்போதும் நிலவி வந்துள்ளது என்பதுதான் உண்மை.

இன்றைய இலங்கை தமிழர்களின் நிலை பரிதாபத்துக்குரியது. ஒருபுறம் இனவெறி பிடித்த சிங்கள ராணுவம்: மற்றொரு புறம் இனவெறி இயக்கமான ஜேவிபி: இன்னொரு பக்கம் எல்டிடிஇ எனும் பயங்கரவாத இயக்கம். இடையில் மாட்டிக்கொண்ட இருதலைக்கொள்ளி எறும்பாய் தவிக்கும் ஈழத் தமிழர்கள்.

ஒரு காலத்தில் செல்வா, குட்டிமணி, ஜெகன் போன்ற தியாகிகள் பலர் தாங்கள் அரணாக இருந்து தமிழ் மக்களை காத்தார்கள். ஆனால் இன்று அப்பாவி தமிழ் மக்களை அரணாக நிறுத்திக் கொண்டு ஒரு கோழைத்தனமான போரை விடுதலைப்புலிகள் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒளிவது, பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் இருக்கும் இடத்தில் பதுங்கியிருந்து தாக்குவது, கோவில்கள், அனாதை இல்லங்களில் தஞ்சமடைந்து தாக்குவது போன்ற ஈனத்தனமான செயல்களில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்களின் உயிருக்கு உலை வைப்பது இவர்கள்தாம்.

இவர்களால் இலங்கை தமிழ் மக்களுக்கு நன்மையை விட தீமைதான் அதிகம். விடுதலைப்புலிகளின் கடந்த கால வரலாறு என்ன? சீறி சபா ரத்தினத்தை கொன்றது, பத்பநாபாவைக் கொன்றது, சாந்தமான அறிவாளி ஐயா அமிர்தலிங்கத்தை கொன்றது. டெலோ மற்றும் டெஸோ போன்ற அமைப்புகளை இல்லாமல் செய்தது எல்லாம் இவர்கள் தானே?ஆகவே இவர்களை அடக்கி வைத்து, இலங்கை தமிழர்கள் நலனில் உண்மையிலேயே அக்கறை உள்ளவர்களுக்கு ஆதரவு அளித்து உதவுவதே இந்திய அரசு செய்ய வேண்டிய பணி.

- எ.எஸ்.ஜாஹிதா சித்தீக், அருவங்காடு


நன்றி : சமரசம்

Thursday, December 18, 2008

மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மீது அவதூறு

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனியோ இல்லை இல்லை அவை அனைத்தும் எங்களுடைய சொத்து என்று கூறிவருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தொழுகை நடக்கும் பள்ளிவாசல்களை பூட்டுவதையும் வழக்கு தொடர்வதையும் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனி வழக்கமாக கொண்டுள்ளது.

பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு இன்னும் இடிக்க வேண்டிய பள்ளிகள் மூவாயிரம் உள்ளன என்று சங்பரிவார் கூறுவதை போல, கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் போன்ற பல பள்ளிவாசல்களை கைப்பற்றுவது அல்லது பூட்டுவது என்ற முயற்சியில் இறங்கிய ஜாக், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தவ்ஹீத் மர்கஸ், பிர்தௌஸியா நகரிலுள்ள தவ்ஹீத் மர்கஸ், புதுத்தெரு மஸ்ஜிதுல் அஷ்ரஃப் போன்ற பல பள்ளிவாசல்கள் தங்களுடைய கைப்பற்ற வேண்டிய பட்டியலில் இருப்பதாகவும் கூறுகிறது. அவற்றை அபகரிக்க, ஆதாரங்களை பலமாக்க, முன்னரே தயாராகிவிட்டது. பல ஆண்டுகளாக ஜாக்கின் மௌலவிதான் இமாமாக இருக்கிறார் என்று கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கில் உமரியை ஆதாரமாக காட்டியது போல் இந்த பள்ளிகளிலும் தங்களுடைய மௌலவிகளை தொழவைக்க செய்து வருகின்றது.

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை'' என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (திருக்குர்ஆன் 9:107)

சொத்துக்காக அடித்துக் கொள்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும், பள்ளிவாசலில் தொழுகையை தடை செய்யாதவரைக்கும் ஓ.கே.

ஆனால், மேலப்பாளையம் மஸ்ஜித் முபாரக்கை அபகரிக்க அல்லது பூட்ட முயற்சித்த ஜாக், மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை மிகவும் அசிங்கப்படுத்தியுள்ள விபரம் நம் கவனத்திற்கு வந்துள்ளது.


'மேலப்பாளையத்தில் ஜாக் பள்ளிவாசலை அபகரிக்க ததஜ சதி' என அல்ஜன்னத்தில் எழுதியுள்ள கமாலுதீன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'தற்போது மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் உரியவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்கள், பிள்ளைகளுடன் பள்ளியில் குடியிருக்கின்றனர். அங்கேயே சமையல் காரியங்களை செய்து வருகின்றனர். மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனர்.'

அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (திருக்குர்ஆன் 16:105)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2:42)

அன்றைய தினத்தில் எந்த பெண்களுமே மஸ்ஜிதுர் ரஹ்மானில் இல்லை, பெண்கள் தங்குவதற்கு இது தர்ஹா அல்ல, அல்லாஹ்வின் பள்ளி இது. அல்லாஹ்வின் பள்ளியில் பெண்கள் தங்குவதற்கு ரமலான் கடைசி பத்தில் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் இந்த சம்பவம் நடந்தது ரமலான் கடைசி பத்திலும் அல்ல என்று மேலப்பாளையம் ஊர்மக்கள் கூறுகின்றனர். ஆனால், பெண்களை பள்ளிவாசலில் குடிவைத்ததாக ஜாக்கின் கமாலுதீன் சொல்கிறார். மேலும் ததஜ பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கமாலுதீன் சொல்கிறார்.

பெண்களை வைத்து தவறான வழக்கு என்றால் என்ன?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று அந்த மேலப்பாளையம் தவ்ஹீத் சகோதரிகளை வைத்து வழக்கு தொடருவதற்காக, ததஜ அப்பெண்களை பள்ளிவாசலில் வைத்திருந்ததா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்கள் கையை பிடித்து இழுத்தார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை பள்ளிவாசலில் வைத்து கற்பழித்து விட்டார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நடத்தை கெட்ட பெண்கள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை கூற அஞ்சுவார்களே?

• இப்படி சொல்லக்கூடியவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருக்க முடியுமா?

அல்லாஹ் மூமின்களைப்பற்றி குறிப்பிடும் போது,

'அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்;. மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (திருக்குர்ஆன் 25:72) என்று கூறுகிறான்.

ஆனால், மேலப்பாளையம் தவ்ஹீத் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களையே இழிவுபடுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொய்சாட்சி சொல்லக்கூடியவர்கள் தான் மேலப்பாளையம் பெண்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களின் மானத்தை அடகு வைத்து பொய்வழக்கு தொடருபவர்கள் தான் மேலப்பாளையம் முஸ்லிம் சகோதரிகள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.
(திருக்குர்ஆன் 58:2)

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்;. மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 2:10)

நம்முடைய மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை இவ்வளவு தரம் தாழ்த்தி கூறி இருக்கிறார். அதைக் கண்டு கொதித்தெழுந்து கமாலுதீனை கண்டிக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இது ஏதோ கோஷ்டி சண்டை என எண்ணி மௌனமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த கமாலுதீன் இன்று மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு கப்ரு வணங்கிகளோடு கைகோர்த்துக் கொண்டும் மார்க்கப் பிரச்சாரத்தை விட மார்க்கத்தின் பெயரால் சொத்து சேர்ப்பதையே பிரதானமாகவும் கொண்டுள்ளதால் சத்தியம் அவருடைய கண்களை மறைக்கின்றது.

(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 16:117)

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 25:70)

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். (திருக்குர்ஆன் 25:71)

Wednesday, December 3, 2008

தமுமுகவும் பாஜகவும் இணைகிறதா?

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தமுமுகவை உருவாக்கிய தவ்ஹீத்வாதிகள் வெளியேறியதோடு மெல்ல மெல்ல அதன் வீரியம் குறைந்து ஏற்கனவே சோரம்போய்விட்ட முஸ்லிம்லீக் போன்ற ஒரு அரசியல் கட்சியாகவே இருந்து வந்தது. ஆனால் இன்றைக்கு முஸ்லிம்களை எதிர்க்கும், முஸ்லிம்களை கொன்று குவிக்கும் விடுதலைப்புலிகள் மற்றும் சங்பரிவாரின் ஊதுகுழலாக தமுமுக மாறிக் கொண்டிருக்கின்றது.


• தன்னை வளப்படுத்திக் கொள்ள திட்டமிட்ட தமுமுக, அரசியல் ஆதாயத்திற்காக ஏக இறைவனை ஏற்றுக்கொள்ளாத கப்ரு வணங்கிகளை ஆதரித்தது.


• இஸ்லாத்தின் எதிரியான ஷேக் அப்துல்லா ஜமாலியின் கூட்டத்திற்கு பாதுகாப்பு கொடுத்தது.


• கன்னிபீவி தர்ஹாவுக்கு போஸ்டர் அடித்து கொடுத்து தர்ஹா வழிபாட்டை ஊக்குவித்தது.


• இந்த கப்ரு வணங்கிகளை மட்டும் நம்பி அரசியலில் இறங்கினால் தமக்கு பதவிகள் கிடைப்பது சந்தேகமே எனக்கருதி இந்துக்களையும் கவரும் திட்டத்தை தீட்டியது.


• இந்துக்களின் கடவுளர்களும் இஸ்லாமிய இறைதூதரும் ஒன்றுதான், நாங்கள் தூதர் என்று குறிப்பிடுகிறோம், நீங்களோ இறை அவதாரம் என்று நினைக்கின்றீர்கள் அவ்வளவுதான் என்று இஸ்லாத்தில் இல்லாத ஒன்றை கூறி முஸ்லிம் சமுதாயத்தை அதிர்ச்சியுறச் செய்தது தமுமுக.


• தான் ஆரம்பித்த அரசியல் கட்சிக்கு முஸ்லிம் முன்னேற்ற கழகம் என வைத்தால் மாற்று மதத்தவர்களின் ஓட்டு கிடைக்காதல்லவா? எனவே முஸ்லிமை தூக்கிவிட்டு வேறு பெயரை வைத்தது.


• அரசியல் ஆசை கண்களை மறைத்தவுடன் சொந்த சமுதாய நலனை தூக்கி வீசியது. இட ஒதுக்கீட்டில் கலைஞர் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தபோது எதிர்க்காமல் இருந்த தமுமுக, செஞ்சோற்று கடன் தீர்க்க அதை நியாயப் படுத்தவும் செய்தது.


• முஸ்லிம்களுக்கு சொந்தமான வக்ஃபு வாரிய நிலங்கள் அபகரிக்கப் பட்டபோது வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.


• இப்படியாக சமுதாயநலனை புறந்தள்ளிய தமுமுக இன்று ஒருபடி மேலே போய் முஸ்லிம்களை கொன்று குவித்தவர்களுக்கு ஆதரவு கொடுக்கவும் துணிந்துவிட்டது.


முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்த வந்த பகுதியான மூதூரை கைப்பற்ற திட்டமிட்ட விடுதலைபுலிகள் காலங்காலமாக அங்கிருந்த முஸ்லிம்களை வெளியேறும்படி பள்ளிவாசல் மௌலவிகளுக்கு எச்சரிக்கை செய்தார்கள். மூதூரில் ஊடுருவிய விடுதலைபுலிகள் அதை தங்கள் வசப்படுத்தினர். விடுதலைபுலிகளின் கொடுமை தாங்காமல் அகதியாக சென்று கொண்டிருந்த முஸ்லிம்களையும் கொன்று குவித்தனர்.

(மக்கள் உரிமை 2006 டிசம்பர் 29 )

என்றெல்லாம் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கத்தின் பேட்டியை வெளியிட்ட தமுமுக இன்று அவர்களுக்காக ஆதரவு கொடுக்கிறது.


தமுமுகவின் பொது செயலாளர் ஹைதர் அலி வீடுதலைபுலிகளுக்கும் இலங்கை தமிழர்களுக்கும் ஆதரவாக நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். சில கட்சிகள் அதில் கலந்து கொள்ளவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டு அபகரிக்கப்பட்ட இடத்திலிருந்து நடத்தும் அவர்களுடைய பத்திரிகையிலும் எழுதியுள்ளனர்.


1990-ம் ஆண்டு ஒருநாள் விடுதலை புலிகள் திடீரென 'வட மாகாணத்திலிருந்து 24 மணி நேரத்தில் முஸ்லிம்கள் அனைவரும் வெளியேற வேண்டும் இல்லையெனில் அவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இல்லை' என்றனர். நாங்கள் எங்களது வீடுகள். நகைகள், பணம், வீட்டு உபகரண பொருட்கள், தளவாடங்கள் என அத்தனை சொத்துக்களையும் விட்டுவிட்டு எங்கள் பிள்ளைகளை மட்டும் எடுத்துக் கொண்டு இரவோடு இரவாக 12 மைல்களுக்கு அப்பால் உள்ள இக்கிரி கொல்லா என்ற முஸ்லிம் பகுதிவரை நடந்தே வந்தோம்.

இது தமுமுகவிலுள்ள ஆளூர் ஷாநவாஸ் இன்றளவும் அகதிகளாக இருக்கும் இலங்கை முஸ்லிம்களிடம் எடுத்த பழைய பேட்டி.


விடுதலை புலிகள் அமைப்பிற்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸூக்கும் இடையே கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற ஒப்பந்தத்திற்கு பின் ரவூப் ஹக்கீமும் - பிரபாகரனும் கூட்டாக அறிக்கை தந்தனர். அவ்வறிக்கையின் முக்கியமான அம்சங்களில் ஒன்று முஸ்லிம்களிடம் வரிவசூல் செய்யக்கூடாது, முஸ்லிம்களின் நிம்மதிக்கு பங்கம் விளைவிக்கக்கூடாது என்பது தான். ஆனால் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்ட பின்னரும் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுவரும் இன்னல்கள் குறைந்தபாடில்லை. வாழைச்சேனை, மூதூர் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் கருவறுக்கப் பட்டுள்ளனர். பல முஸ்லிம்கள் புலிகளால் கடத்தப் பட்டுள்ளனர். இன்னும் வரிவசூல் தொடர்கிறது.

- இது தமுமுகவிலுள்ள ஆளூர் ஷாநவாஸ் எழுதிய பழைய கட்டுரை.


அன்று இவ்வாறெல்லாம் எழுதிய தமுமுகவினர் இன்று விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் நடந்த மனித சங்கிலியிலும் கலந்து கொண்டு தங்களுடைய முஸ்லிம் விரோத போக்கை பகிரங்கப் படுத்தியுள்ளனர். பதவிக்காக, அரசியல் ஆதாயங்களுக்காக சொந்த சமுதாயத்தை கொன்று குவித்தவர்களை காப்பாற்ற துடிக்கும் தமுமுக, இன்று அதைவிட கொடுமையான ஒரு செயலையும் செய்துள்ளது.


முஸ்லிம்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கும் சங்பரிவாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியது தவறு என்று மாபெரும் முஸ்லிம் எதிர்ப்பு பிரச்சாரத்தை செய்து வருகின்றது.

கேள்வி: மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருகின்றனர். இதற்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது?

பதில்: எது எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு அளவு கோல் உள்ளது. ஒரு அநீதி நடந்து உரிய நடவடிக்கை இல்லாத போது அதற்காக போராட்டம் நடத்த வேண்டும். ஒரு அநீதி நடந்து அது குறித்த விசாரணைகளும், நடவடிக்கைகளும் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது அதை சரியாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆர்ப்பாட் டம் நடத்துவது கேலிக் கூத்தாக பார்க் கப்படும். மாலேகான் விவகாரத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகை யில் அதிகாரிகள் குழு சரியான திசையில் புலனாய்வை நகர்த்தி வரு கிறது. இதை கண்காணித்துஇ அங்கே தவறுகள் நிகழும் பட்சத்தில் தான் அதை எச்சரிக்கும் விதமாக கவன ஈர்ப்புக்காக போராட்டங்களை நடத்த வேண்டும். இப்போது போராட்டம் நடத்துவது என்பது அறிவுடைமை ஆகாது.


- இது தமுமுக இணையதளத்தில் வெளிவந்த செய்தி


தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் என்ன?


மாலேகான் குண்டு வெடிப்பின் போது முஸ்லிம் தீவிரவாதிகள்தான் குண்டு வைத்தார்கள்கள் என்று கூறி பல முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டனர். பத்திரிகைகள் அனைத்தும் இது முஸ்லிம் தீவிரவாதிகளின் சதி என்றே கூறியது. ஆனால் இன்று அந்த குண்டுவெடிப்பு மட்டுமல்ல இந்தியாவில் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளையும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, பஜ்ரங்தள் உட்படவுள்ள சங்பரிவார் அமைப்புகள் தான் செய்தன என்று போலீஸாரின் புலன்விசாரணையில் ஒவ்வொன்றாக வெளிவந்து கொண்டிருக்கின்றன.


கோத்ரா ரயில் எரிப்பும் அதனை தொடர்ந்து மனித வேட்டை நடத்திய மோடியின் தலைமையிலான சங்பரிவார் அயோக்கியர்களை குஜராத் அரசு தப்பவிட்டது மட்டுமல்லாமல் அவர்களை பாதுகாத்துக் கொண்டிருப்பது போல மாலேகான் குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர்கள் தப்பிவிடக் கூடாது என்பதற்காக அந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று முஸ்லிம்களால் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. ஆனால் அது கேலிக்கூத்து என்றும் அறிவுடைமை அல்ல என்றும் தமுமுக கூறுகிறது. இதன்மூலம் உண்மை குற்றவாளிகளான சங்பரிவார் அமைப்பினர் கைது செய்யப்படுவதை விரும்பாத தமுமுக அந்த சங்பரிவாருக்கு ஆதராவான நிலையை எடுத்துள்ளது.


எந்த ஒரு குண்டுவெடிப்பிலும் முஸ்லிம்களுக்கு தொடர்பு இல்லாதபோதும் முஸ்லிம்களின் மீது பழிபோட்ட மீடியாக்கள், அந்த குண்டுவெடிப்புகள் அனைத்தையும் சங்பரிவார்தான் செய்துள்ளது என்று தீவிரவாத எதிர்ப்பு படையினர் விசாரணை செய்து சங்பரிவார் அமைப்பிலுள்ள பலரை காவல்துறை கைது செய்தும் கூட அதை மீடியாக்கள் செய்தியாக கூறவில்லை. அப்படி ஒரு சம்பவம் இந்தியாவில் நடந்ததாகவே காட்டிக்கொள்ளவில்லை. இதை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமையிலான முஸ்லிம்கள் கொதித்தெழுந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆனால் அதை கொச்சைப்படுத்தி கேலிகூத்து என குறிப்பிட்டுள்ளது தமுமுக. இதன்மூலம் மீடியாக்கள் செய்வது சரிதான் எனக்கூறுகின்றது தமுமுக.


தமுமுகவினர் கொள்கையில் உறுதி இல்லாதவர்கள் என்பது அனைவரும் அறிந்த செய்தி. உதாரணமாக டிசம்பர் 6 போராட்டத்தை கூறலாம்.


இடஒதுக்கீட்டிற்காக விரக்தி அடைந்த குஜ்ஜார் மக்களை போல ஒருபோதும் முஸ்லிம்கள் பலாத்காரத்தில் இறங்கக்கூடாது. முஸ்லிம்களின் கோரிக்கைகளுக்காக தமுமுக காட்டும் அறவழிதான் சிறந்த வழி..... இடஒதுக்கீட்டிற்காக முஸ்லிம்கள் தண்டவாளத்தை பெயர்க்கவேண்டாம். சாலை மறியல் செய்ய வேண்டாம். ராஜதந்திரமாக செயல்பட்டாலே பல வெற்றிகளை பெற முடியும். - M.H.ஜவாஹிருல்லாஹ்

(மக்கள் உரிமை – ஜூலை 25-31 2008)


என்று அன்று எழுதியவர்கள் இன்று அதற்கு நேர்மாறாக டிசம்பர் 6 க்காக ரயில் மறியல் போராட்டம் நடத்தப் போகிறார்களாம். இப்படிப்பட்ட பச்சோந்திகளின் தலைமையின் கீழ் இன்னும் சிலர் ஒட்டிக்கொண்டிருப்பதை நினைத்தால் மனம் வேதனை அடைகிறது.


அடுத்ததாக புலிகளுக்கு ஆதரவு கொடுத்ததை நியாயப்படுத்தி அவர்கள் எழுதியுள்ளதை பாருங்கள். இந்த மனிதாபிமான நிகழ்வில் நாம் கலந்துகொள்ளாமல் ஒதுங்கியிருந்தால், நமது சமுதாயத்தைப் பற்றி தவறான அபிப்ராயம் உருவாக்கியிருக்கும். முஸ்லிம்கள், தங்கள் பிரச்சனைகளுக்கு மட்டும் தான் நீதி கேட்பார்கள் என்ற தோற்றம் ஏற்பட்டிருக்கும்.

அடத்தூ... வெட்கங்கெட்டவர்களே!

முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரை வைத்துக் கொண்டு இப்படிக்கூற நா கூசவில்லையா? முஸ்லிம்களை முன்னேற்றுவதென்பது பெயரில் மட்டும்தானா?

ஒடுக்கப்பட்ட மக்கள் எங்கு பாதிக்கப் பட்டாலும் உரிமைகள் பறிக்கப்பட்டாலும் அது பாலஸ்தீனமாக இருந்தாலும், தமிழ் ஈழமாக இருந்தாலும் அவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமையாகும். இதை மத, இன, தேசம், மொழி என பேதம் பார்ப்பது இஸ்லாமிய நெறி முறையல்ல.


இப்படி பொடி வைத்து பேசுவது எதற்காக! மாலேகான் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட பிரக்யா சிங்குக்காக குரல் கொடுப்பதற்காகவா? என்ற கேள்வியோடு இந்த தமுமுகவினர் அரசியலில் பி.ஜே.பியுடன் கூட்டணிக்கு தயார் ஆகிவிட்டார்கள் போலும் என எண்ணிக்கொண்டிருந்த வேளையில் அடுத்த செய்தி சிரிக்கக்கூடிய செய்தியாக வந்தது.


தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க வேண்டும் என்பதற்காக அளவுகோல், கேலிக்கூத்து, அநீதி நடைபெறவில்லை, அறிவுடைமை ஆகாது என்றெல்லாம் சொன்னவர்கள் இரண்டே நாட்களில் அதற்கு நேர்மாறாக,

மாலேகான் மற்றும் நாட்டில் நடைபெற்ற பல்வேறு குண்டு வெடிப்புகளுக்கு காரணமான சங்பரிவார் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போராட்டங்களை நடத்த இருக்கிறது. - தமுமுகவின் இணையதளம்


என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.


தடுமாறும் தமுமுகவினரே! நீங்கள் எழுதிய பதிலை நீங்களாவது படியுங்கள். உங்களுக்கு மறந்திருக்குமானால் இதோ!


கேள்வி: மாலேகான் குண்டு வெடிப்பில் இந்துத்துவ சக்திகள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வரு கின்றனர். இதற்காக ஏன் ஆர்ப்பாட்டம் நடத்தக் கூடாது?பதில்: எது எதற்கு ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டும் என்று ஒரு அளவு கோல் உள்ளது. ஒரு அநீதி நடந்து உரிய நடவடிக்கை இல்லாத போது அதற்காக போராட்டம் நடத்த வேண்டும். ஒரு அநீதி நடந்து அது குறித்த விசாரணைகளும்இ நடவடிக்கைகளும் சரியான திசையில் போய்க் கொண்டிருக்கும்போது அதை சரியாக தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். அதற்கு பதிலாக ஆர்ப்பாட் டம் நடத்துவது கேலிக் கூத்தாக பார்க் கப்படும். மாலேகான் விவகாரத்தில் நாட்டில் வேறு எங்கும் இல்லாத வகை யில் அதிகாரிகள் குழு சரியான திசையில் புலனாய்வை நகர்த்தி வரு கிறது. இதை கண்காணித்துஇ அங்கே தவறுகள் நிகழும் பட்சத்தில் தான் அதை எச்சரிக்கும் விதமாக கவன ஈர்ப்புக்காக போராட்டங்களை நடத்த வேண்டும். இப்போது போராட்டம் நடத்துவது என் பது அறிவுடைமை ஆகாது.