Monday, September 22, 2008

குமரி முஸ்லிமின் முதல் வெற்றி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


குமரி முஸ்லிம் வலைப்பூவில் வரும் கட்டுரைகள் கடுமையாக இருக்கின்றன, ஒற்றுமையை குலைக்கின்றன. நம்மிடையே பிளவுகள் கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வாசகர்கள் மறுமொழி இட்டனர்.

அவர்களிடம் குமரிமுஸ்லிம், ஒற்றுமை என்றால் என்ன? ஒற்றுமை என்பது எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்? பல தெய்வ கொள்கையுடையவனும் ஒரு தெய்வ கொள்கையுடையவனும் கொள்கையால் ஒன்றுபட முடியுமா? கப்ரு வணங்கிகளும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களும் கொள்கையால் ஒன்று பட முடியுமா? என்றெல்லாம் கேள்வியை எழுப்பியது!

தங்களுடைய அமைப்பிற்கு சுன்னத் வல் ஜமாஅத் என்று பெயரை வைத்துக் கொண்டு சுன்னத்துக்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகின்றனர் சிலர். மற்றும் சிலர் குர்ஆன் ஹதீஸ்தான் தங்களுடைய அமைப்பு என்று கூறிக் கொண்டு, மனோ இச்சையை பின்பற்றி வருவதோடு அதை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்று செயல்படுபவர்களிடம் உள்ள தவறுகளை பிற அமைப்புகள் சுட்டிக்காட்டும் பொழுது அது குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் உட்பட்டிருந்தால் தன்னுடைய தவறை உணர்ந்து உடனடியாக தவறை திருத்திக் கொள்வதுதான் நபிவழி. மாறாக, நீ சொல்லி நான் கேட்பதா எனும் பாணியில் புதிய வியாக்கியானங்களை கூறும் பொழுதுதான் அவைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு பிடிவாதமாக இருப்பவர்களின் செயல்பாடுகளை மக்களுக்கு எத்தி வைக்கவேண்டும் என்ற பணியை குமரி முஸ்லிம் தொடர்ந்து செய்து வருகின்றது.

அந்த வகையிலே பெருநாள் தொழுகையை பற்றிய ஒரு கட்டுரையை 'தூதருக்கு கட்டுப்படுவோம்' எனும் தலைப்பில் குமரி முஸ்லிம் இரு பாகங்களாக வெளியிட்டு இருந்தது. அதாவது பெருநாள் தொழுகையானது பள்ளிவாசல்களில் நடத்தபட்டு வருகின்றன. ஆனால் திடலில் தொழுவதுதான் நபிவழி எனவே அதை பின்பற்ற குமரி மாவட்டம் கோட்டாறில் பெருநாள் தொழுகையை திடலில் நடத்த குமரி டி.என்.டி.ஜே ஏற்பாடு செய்தது. இதை வரவேற்பதற்கு பதிலாக ஜாக் மாநில தலைவர் கமாலுதீன், தன்னுடைய பெருநாள் உரையில் இதை மறுத்ததோடு மட்டுமல்லாமல் குமரி டி.என்.டி.ஜே -ஐ மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அதோடு அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று கூறி ஏதோ நபிகள் நாயகம் தவறு செய்துவிட்டதாகவும் தான் கூறுவதுதான் சரி எனவும் கமாலுதீன் பேசினார்.

எனவே இவருடைய இன்றைய கூற்றுக்களையும் அன்றைய ஜாக்கின் கூற்றுக்களையும் ஆதாரங்களோடு நாம் வெளியிட்டு இருந்தோம். அவர்களுடைய எழுத்திலிருந்தே ஆதாரங்களை வெளியிட்டதால் ஆடிப்போன ஜாக், ஆகஸ்டு மாத அல்ஜன்னத் பத்திரிகையில் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.

பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் மைதானத்தில் திறந்த வெளியில் தொழுதுள்ளார்கள், திறந்த வெளியில் சென்று தொழுமாறு தனது தோழர்களுக்கு கட்டளையும் இட்டுள்ளார்கள். இது சரியான ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபணமானதாகும். காலாகாலமாக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்தியும் வருகின்றனர். இதை ஒரு உண்மையான சுன்னாவின் மீது நம்பிக்கையுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள்.

என்று எழுதியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இதற்காகத்தான் குமரி முஸ்லிம் பாடுபட்டு வருகின்றது. இதுநாள் வரை நிராகரித்து வந்த எஸ்.கே, இன்று குமரி முஸ்லிம் ஆதாரங்களை வெளியிட்டதும் ஒத்துக்கொண்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே!

மனோ இச்சையை பின்பற்றக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் அல்லாஹ்விற்கு பயந்து தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ளுமானால் வெகு சீக்கிரமே அனைத்து இயக்கங்களும் குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒன்றுபட முடியும்.

ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்களே அதுபோல, அல்ஜன்னத் புதிய வியாக்கியானத்தையும் கொடுத்துள்ளது. எனவே நம்மால் சில கேள்விகளையும் முன்வைக்க முடியும்.

1) பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழக்கூடாது என்று நாம் கூறியதாக ஒரு வதந்தியையும் பொய்யையும் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
2) பெருநாள் குத்பாவிலே என்ன பேசினோம் என்று எஸ்.கமாலுதீனுக்கு மறந்து போயிருக்கலாம். ஏனென்றால், அன்று டி.என்.டி.ஜேக்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் பேசியது எஸ்.கே அல்ல, எஸ்.கே உருவில் வந்த ஷைத்தான். நாம் என்ன பேசுகிறோம் என்பது பெரும்பாலான நேரங்களில் அவருக்கே தெரியாது. எனவே நாங்கள் அவர் பேசியவற்றை ரிக்கார்டு செய்து வைத்திருக்கன்றோம். பெருநாள் குத்பாவிலே கோட்டாறு அஷ்ரஃப் பள்ளியிலே அத்தனை மக்கள் மத்தியில் சொன்ன கடுஞ்சொற்களை அல்லாஹ்வின் மீது அச்சமின்றி வதந்தி என சொல்லும் எஸ்.கே அவர்களே! நாங்கள் தயாராக இருக்கிறோம்! பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்! பொதுமேடையிலே நீங்கள் பேசிய பெருநாள் உரையை ஆடியோவாக மக்கள் மத்தியிலே நாங்கள் வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்!

3) அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

4) எங்கு வேண்டுமானாலும் தொழலாம் ஈமான் தான் முக்கியம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

5) இவர்களுக்கு திடலில்தான் தொழவேண்டுமென்றிருந்தால் கப்ரு வணங்கிகள் பாவாகாஸிம் பள்ளியிலே தொழுகிறார்களே அங்கு போய் அவர்களை பின்பற்றி தொழவேண்டியதுதானே என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?

6) திடல் தொழுகை என்று நோட்டீஸ் அடித்தது தவறாம் திடலில் தொழுகை என்பதுதான் சரியாம்! திடல் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை இல்லையாதலால் அதைத்தான் நாம் எதிர்த்தோம் என்று கூறியுள்ளனர்.

கொஞ்சம் கூட அல்லாஹ்வின்மீது அச்சமின்றி இருக்கும் ஜாக் வகையறாக்களே!அந்த அறிவிப்பு போஸ்டரில் 'நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜூ பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்' என்ற ஹதிஸல்லவா அச்சிடப்பட்டிருந்தது. இது புதுத் தொழுகையா?

7)வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தின் இரண்டு பக்கங்களிலும் பெருநாள் தொழுகை பற்றிய ஹதீஸ்களல்லவா வெளியிடப்பட்டிருந்தது! அது புதுத் தொழுகையா?

உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நன்மையையும் மறுமையில் அல்லாஹ் பறித்து, அந்த குமரி டி.என்.டி.ஜே சகோதரர்களிடம் கொடுத்து விடுவானே என்ற சிறிதளவு பயமாவது இருந்தால் இத்தகைய அபாண்டத்தை கூறுவீர்களா?

8)திறந்த வெளியில் பெருநாள் தொழுவது சுன்னத்தாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இதை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படத்தான் செய்யும்.பெருநாள் தொழுகை அன்று மழை பெய்து கொண்டிருக்குமானால் தொழமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.என்று எழுதியுள்ளார்கள்.

இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு பெற்றிருக்கும் ஒருவனுக்கு கூட தெரிந்துள்ள விஷயம், மார்க்க அறிவு சற்றும் இல்லாத அபு புஷ்ரா என்ற கூமுட்டைக்கு தெரியவில்லையே என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால், இதை வெளியிட்ட கமாலுதீனோ மார்க்க அறிவு பெற்ற மாமேதையல்லவா? மதனியல்லவா? அவருக்கும் ஹதீஸை நாம்தான் சொல்லித்தர வேண்டுமா?

மழை நேரங்களில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தொழவும் அனுமதி உண்டு.மழை காலங்களில் பாங்கு சொல்லப்படும் பொழுது 'உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அறிவிக்கப்பட்டதும் உண்டு. நின்று தொழுவது கட்டாயம், ஆனால் இயலாதவன் உட்கார்ந்து தொழலாம், அதற்கும் இயலாதவன் படுத்துக் கொண்டே தொழலாம், அதற்கும் இயலாதவன் சைகை மூலமாக தொழலாம் இவையெல்லாம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலுள்ளவை. ஆடை இருப்பவன் ஆடையுடன் தொழலாம், ஆடையே இல்லாதவன் அப்படியே கூட தொழலாம், அது அவனுடைய நிலையை பொறுத்தது. ஆனால் கோட்டாறில் அஷ்ரஃப் பள்ளியிலே தொழுவது நிர்பந்தமா? மாநாடு நடத்திய ISED பள்ளியிலே தொழுகை நடத்த முடியாதா? ரோட்டில் நடத்த முடியாதா? கோட்டாறிலே திடலே இல்லையா? ஏன்? அந்த டி.என்.டி.ஜே சிறார்கள் திடலை ஏற்பாடு செய்துள்ளனர். கோட்டாறில் உங்களால் ஒரு திடலை ஏற்படுத்த முடியவில்லையா? அந்த அளவிற்கு பலவீனப்பட்டு விட்டீர்களா?

9)திறந்த வெளியில் தொழுவது சுன்னத் என்று இன்று சொல்லும் நீங்கள், அன்று அவர்கள் நடத்திய பெருநாள் தொழுகையை திடலில் போய் ஏன் தொழவில்லை? ஜாக் வெறியா? சுன்னத்தை விட ஜாக் வெறி மேலோங்கி விட்டதாலா?
இப்படி உங்களால் பதிலளிக்க முடியாத எத்தனையோ கேள்விகள் கேட்க முடியும். ஆனாலும் சுன்னத்தை ஒத்துக்கொண்ட காரணத்தினால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவோம். திடலை ஏற்பாடு செய்யுங்கள். ஊர் முழுவதும் ஒரே திடலிலே ஒன்றுபட்டு தொழுவோம் இன்ஷாஅல்லாஹ்!

Sunday, September 7, 2008

கருணாநிதியின் காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய அராஜகம்.

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இரத்தக்காட்டேறியாக முஸ்லிம்களின் இரத்தத்தை குடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் கருணாநிதியின் காவல்துறை, அவ்வபோது முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அதை தணித்துக் கொண்டு இருந்து வருகிறது. கோவை கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்களை துவம்சம் செய்ய சரியான சந்தர்ப்பங்கள் எதுவும் அமையவில்லையே என்ற ஏக்கம் கருணாநிதியின் காவல்துறைக்கு நெடுநாட்களாக இருந்து வந்துள்ளது என்பது சமீபத்தில் வேலூரில் முஸ்லிம்கள் மீது நடத்திய காட்டுத்தனமான தாக்குதலின் மூலம் தெரிய வருகிறது.

சங்பரிவாரத்தின் ஊதுகுழலாக செயல்படும் 'தினமலம்' என்ற பத்திரிகை முஸ்லிம்களை கேலி செய்தும், பயங்கரவாதியாக சித்தரித்தும் அடிக்கடி செய்திகள் வெளியிட்டு வருவது அதனுடைய வாடிக்கை. இதனால், பெரும்பாலான முஸ்லிம்கள், இப்பத்திரிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.

முஸ்லிம்களை எவ்வாறு சீண்டிய போதும் அவர்கள் நம்மை கண்டு கொள்ளவில்லையே என்று கருதிய 'தினமலம் நாளிதழ்', முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வரைந்து கேலி செய்தது. இச்செய்தி முஸ்லிம்களிடம் தீயென பரவியது. அதனையொட்டி வெகுண்டெழுந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், த.த.ஜ, தமுமுக, மனித நீதி பாசறை, சுன்னத் வல் ஜமாஅத், முஸ்லிம் லீக் என்ற தங்களுடைய இயக்க வேறுபாடுகளையெல்லாம் மறந்து, பொதுமக்களுடன் வேலூரில் 'தினமலம்' பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது போன்ற ஒரு தருணத்திற்காக காத்திருந்த கருணாநிதியின் காவல்துறையினர், ஒரு சமுதாயத்தின் கண்ணியமிக்க தலைவரை, உலக முஸ்லிம்கள் அனைவராலும் உயிருக்கும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த பார்ப்பன கும்பலை சேர்ந்த அயோக்கியர்களால் நடத்தப்படும் தினமலம் பத்திரிகை ஆசிரியரை கைது செய்து, நாயை போல அடித்து நடுத்தெருவில் இழுத்துச் செல்வதற்கு பதிலாக, முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்துள்ளனர்.

நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய தலைவரை அவமதித்த பத்திரிகையின் மீது நடவடிக்கை எடு என கோரிக்கை கோஷமெழுப்பிய முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியுள்ளனர். பொதுவாக கூட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினரால் லேசான முறையில் தடியடி நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வேலூரில் கருணாநிதியின் காவல் துறையால் நடத்தப்பட்ட தடியடி, திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாகத்தான் கருத முடிகிறது. ஏனெனில் தடியடி நடத்திய போலீஸாரின் கண்களில் கொலைவெறியை பார்க்க முடிந்தது.

ஒரே அடியில் இவனை கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, இரண்டு கைகளாலும் தடியை பிடித்து, தன் தலைக்கு மேல் உயர்த்தி படுவேகமாக ஒரு முஸ்லிம் சகோதரனின் நடு மண்டையிலே 'நச்' என்று அடித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த எவரும் இந்த கருணாநிதியின் காவல்துறையினரை சபிக்காமல் இருக்க மாட்டார்கள். பாவம் அடிவாங்கிய அச்சகோதரர் தற்பொழுது என்ன நிலையில் உள்ளாரோ என்று தெரியவில்லை.

போலீஸாரின் அடியால் கீழே தடுமாறி விழுந்தவர்கள் ஐயோ, அம்மா என்று கதறியபோதும், கருணாநிதியின் காவல்துறையினா,அவர்களை தனது பூட்ஸ் கால்களால் சரமாரியாக மிதித்து துவம்சம் செய்தனர்.

சில சகோதரர்களை நாயை இழுத்து செல்வது போல தரதரவென இழுத்து சென்றனர்.

ஒரு முஸ்லிம் சகோதரனை ஐந்து போலீஸார் சுற்றி நின்று அடித்த காட்சி கண்களில் நீரை வரவழைத்தது.

தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஒரு நிமிட இச்செய்தியிலேயே இத்தனை கொடூரம் என்றால், சம்பவம் நடைபெற்ற இடம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று நினைக்கும் பொழுது நல்லவர்களின் நெஞ்சம் சற்று கனக்கவே செய்யும். இவ்வளவு கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் செய்த தவறுதான் என்ன?
காவல்துறையின் கொடூர தாக்குதல்களில் சில...










உச்சந்தலையில் ஓங்கி அடிக்கும் கயவர்கள்



ஏவி விடப்பட்ட நாய்களைப்போல் நடந்து கொண்ட கருணாநிதியின் இக்காவல்துறையினர் இவ்வராஜகத்தின் வழியாக மற்றொரு செய்தியையும் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். முஸ்லிம்களாகிய நீங்கள் என்னதான் நேர்மையாக நடந்து கொண்டாலும் நாங்கள் உங்களை காவு கொடுக்காமல் விடமாட்டோம் என்பதே அச்செய்தி.

தோளில் கைபோட்டு இனிக்க இனிக்க பேசி படுகுழியில் தள்ளிவிடுவது கருணாநிதியின் வாடிக்கையான ஒன்றுதானே? அப்பேர்பட்ட முஸ்லிம்களின் பாதுகாவலரான(!?) கருணாநிதியின் பொறுப்பில் உள்ள காவல்துறையின் இச்செயல் குறித்து கருணாநிதி என்ன செய்ய போகிறார்? என்று அனைவரும் காத்திருக்க, அவரோ காவல்துறை குறித்து அருமையான(!?) ஒரு செய்தியை நாளிதழ்களுக்கு கொடுத்துள்ளார்.

தமிழக காவல்துறை தனது 150-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பு மிக்க வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் சொந்தமான தமிழக காவல் துறை, தனது சீரிய மக்கள் பணியிலும், திறமையிலும் உலக காவல்துறை வரிசையில் உயரிய இடத்தைப் பெற்று வந்துள்ளது என்றால், அது மிகையாகாது என்று 07-09-2008 அன்றைய நாளிதழ்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். கருணாநிதி இப்படித்தான் செய்தி கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் சாமானிய மக்களின் உணர்வுகளும் அவர்களுடைய வலிகளும் அவருக்கு தெரியுமா என்ன?

குடும்பச்சண்டை காரணமாக மதுரையில் சில உயிர்கள் போக காரணமாயிருந்த கருணாநிதியின் மகனையும், அதனையொட்டி பல்வேறு காட்டுமிராண்டித்தனத்தையும் செய்த அவரது கட்சி ஆதரவாளர்களையும் கருணாநிதியின் பொறுப்பில் உள்ள காவல்துறை இதுபோன்று நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கருணாநிதிக்கு இவ்வராஜகத்தின் அளவு என்ன என்பது தெரிந்திருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி மரணமடைந்துவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டு அதனையொட்டி சில ஊர்களில் அவரது கழக கண்மணிகள் அராஜகத்திலும், பொதுச் சொத்திற்கு சேதம் ஏற்படுத்தவும் செய்தனர். அப்பொழுது அப்பகுத்தறிவு(!?)வாதிகளை நோக்கி இக்காவல்துறையின் லத்திகள் சுழற்றியிருந்தால் கருணாநிதிக்கு முஸ்லிம்களின் இந்த வலி என்னவென்று தெரிந்திருக்கும்.

கருணாநிதியின் இரயில் மறியல் போராட்டத்தை, கள்ளக்குடியில் புகுந்த கருணாநிதி வாழ்கவே என்று கூத்தாடிகளின் பின்னணி பாடகர் நாகூர் ஹனீபா பாட்டு பாடி சிலாகித்தார். நின்றுவிட்ட இரயில் முன்பு படுத்து இரயில் மறியல் செய்த தியாகி(!?) கருணாநிதியை அப்பொழுது அங்கிருந்த காவல்துறையினர் இதுபோன்று நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கருணாநிதிக்கு முஸ்லிம்களின் மனதில் ஏற்பட்டுள்ள ரணத்திற்கு என்ன மருந்து தரலாம் என்று தெரிந்திருக்கும்.

கருணாநிதி பா.ஜ.க.வோடு உறவு கொண்டிருந்த காலத்தில் பா.ஜ.க.வை திருப்திபடுத்துவதற்காக தமிழக முஸ்லிம்களை சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கினார். யாரோ ஓரிருவர் செய்த தவறுகளைகூட மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க முயற்சி செய்தார். பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் படைத்த இறைவனிடம் கையேந்தியது. ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் கேவலம் ஒரு அரசியல்வாதிக்கு இத்தனை அகங்காரமும், வலிமையும் இருந்தால் ஆதி முதல் அழிவுநாள் கடந்தும் ஆட்சி செய்யப்போகும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எத்தனை வலிமை இருக்க வேண்டும். கருணாநிதியின் ஆட்சி மண்ணைக் கவ்வியதும் அந்த இறைவன் அவருக்கு மிகப்பெரிய இழிவை கடந்த ஆட்சியில் ஏற்படுத்தினான். அய்யோ.. கொல்றாங்கோ.. கொல்றாங்கோ.. என்று கருணாநிதி கூவிக்கூவி கத்தியதை இந்த சமுதாயம் சப்தமில்லாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

அதே வழியில் இந்த புனித ரமலான் மாதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்த வலிமைமிக்க அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும். அப்பொழுது கீழ்கண்ட பிரார்த்தனைகளையும் நினைவில் நிறுத்தி உள்ளச்சத்தோடு அந்த ரப்பிடம் நாம் கேட்டால் அல்லாஹ் நாடினால் இந்த பாவிகளை தண்டிப்பான்.

இறைவா! எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக!

எங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து கேலி செய்யும் அனைத்து அயோக்கியர்களையும் இறைவா நாங்கள் உன் பொறுப்பில் விட்டுவிடுகிறோம். அவர்களுக்குரியதை அவர்களுக்கு கொடுப்பாயாக!

அகில உலகிற்கும் அருட்கொடையாய் வந்துதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுத்தவர்கள் மீதும் அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் குறிப்பாக காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள கருணாநிதி மீதும் இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
வீடியோ காட்சிகள் :

மிருகத்தனமான அடி

ஒரு முஸ்லிம் சகோதரனின் அலறல்

Wednesday, September 3, 2008

குர்ஆன்,ஹதீஸ் போர்வைக்குள் ஒரு குள்ளநரி

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...


குர்ஆன், ஹதீஸை மட்டுமே பின்பற்றுகிறோம் என்று சொல்லும் ஒரு அமைப்பின் மாநில தலைவர் ஆற்றிய உரை இது...

பெருநாள் என்பது இஸ்லாமிய காலண்டரை அடிப்படையாக வைத்துத்தான் பெருநாள். ஆங்கில காலண்டரை அடிப்படையாக வைத்து முன்கூட்டியே தீபாவளி மாதிரி அல்லது மற்ற பண்டிகைகளை மாதிரி காலண்டரில் போட்டு அதை பின்பற்றுகிற மாதிரி உள்ள அமைப்பில் இஸ்லாம் ஃபாலோ பண்ணப் படவில்லை.

இப்பொழுது ஒரு காலகட்டம்வரை, நபிகளார்(ஸல்) அவர்களுடைய காலத்தில் முஹம்மது நபி அவர்கள், இந்த பெருநாளை அனுஷ்டிக்க வேண்டிய முறை பற்றி அவர்கள் நமக்கு சொல்லி இருக்கிறார்கள். சொல்லும் போது என்ன சொன்னார்கள்? நீங்கள் ரமலான் பூர்த்தியாக்கிய பிறகு அடுத்த மாதத்துடைய பிறையை நீங்கள் பார்த்து விட்டீர்களென்றால் அடுத்த நாள் நீங்கள் நோன்பு கொண்டாடுங்கள், என்று சொன்னார்கள். ரமலானை, 29-ல் நீங்கள் இருக்கும் போது நீங்கள் பிறையை பார்க்க வாய்ப்பு இருக்கிறது. பிறையை பாருங்கள். பிறை உங்களுக்கு தென்பட்டுவிட்டால் அடுத்தநாள் நோன்பு நோறுங்கள். பிறை உங்களுக்கு தென்படாவிட்டால் அந்த மாதத்தை 30 ஆக பூர்த்தி பண்ணி அதற்கு அடுத்த நாள் பெருநாள் வையுங்கள், என்று சொல்லி இருக்கிறார்கள்.

இது, நபிகளாருடைய காலத்தில் இப்படித்தான் அவர்கள் சொல்ல முடியும். அன்றைய காலத்திலே விஞ்ஞான கணிப்புகளோ வானவியல் சாஸ்திரங்களோ ஆராய்ச்சிகளோ செய்து அறியக்கூடிய அளவிற்கு உண்டான காலம் அன்றைக்கு இருக்கவில்லை.


ஆனால் இன்றைக்கு விஞ்ஞானம் வளர்ச்சி அடைந்திருக்கிறது. எல்லாம் நுணுக்கமாக ஆய்வு செய்து, கோளங்களுடைய நுணுக்கங்கள், சூரியன் எப்படி சுழலுகிறது, சந்திரன் எப்படி சுழலுகிறது, சூரிய கிரகணம் என்றைக்கு வரும், சந்திர கிரகணம் என்றைக்கு வரும் எல்லாம் துல்லியமாக இன்றைக்கு கண்டுபிடிக்கப்பட்டு முன்கூட்டியே சொல்லுகிறார்கள். பல மாதங்களுக்கு முன்னாலேயே இன்றைக்குத்தான் சூரிய கிரகணம் வரும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அந்த அடிப்படையிலே அரபி மாதங்களையும் இன்றைக்குத்தான் ஒன்று, இன்றைக்குத்தான் 30 அல்லது 29 என்று துல்லியமாக சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு விஞ்ஞானம் முன்னேறி இருக்கிறது.

இப்படிப்பட்ட காலங்களில் இஸ்லாமியர்களில் ஒருசாரார், நமக்கு துல்லியமாக கணக்கை தெரியக்கூடிய அளவிற்கு உண்டான எல்லா உபகரணங்களும் இருக்கின்றன, எல்லா கருவிகளும் இருக்கின்றன. அதனடிப்படையிலே நாம் நிர்ணயித்து பெருநாளை நாம் கொண்டாட வேண்டியதுதான் என்ற அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு மாற்றம் வராது, இந்த அறிவியல் ஆராய்ச்சி சொல்வதற்கு இதுவரை மாற்றமாக வரவில்லை, அவர்கள் சொல்லக்கூடிய எல்லாமே கரெக்டாக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது, அந்த அடிப்படையிலே அதை எடுத்து ஃபாலோ பண்ண வேண்டுமென்று சொல்கிறார்கள்.


ஆனால் இவ்வாறு சொல்லக்கூடியவர்களுக்கு மாற்றமாக இன்னொரு சாரார் என்ன சொல்கிறார்களென்றால், இல்லை, அந்த அறிவியல் கண்டுபிடிப்புகளால் முடியாது. நாம் பிறையை பார்த்து தான் நாம் ஒன்று என்று தீர்மானிக்க வேண்டும், என்று சொல்லுகின்ற பொழுது முதல் பிறையை பார்ப்பது ரொம்ப கஷ்டம். இரண்டாம் பிறை தான் கண்ணுக்கு தெரியும். அதனால் ஒருநாள் வித்தியாசம் வருகிறது. பிறையை பார்த்துத்தான் பெருநாள் கொண்டாட வேண்டும், அதுதான் நபி சொல்லி இருக்கிறார்கள் என்று விளங்கக்கூடியவர்கள் ஒருநாளை பிற்படுத்துகிறார்கள். இதுதான் வித்தியாசமே தவிர, இதனால் வேறு எந்த விதமான குழப்பமும் கிடையாது. இனி போகப்போக, எதிர்காலத்தில், ஒரு காலகட்டத்தில் இப்படித்தான் இருந்தார்கள், பலவிதமான விஷயங்களில் அறிவியலுக்கு மாற்றமாக சிலர் செயல்பட்டு கொண்டிருந்தார்கள். நாளாவட்டத்தில், போகப்போக இந்த அறிவியல் வளர்ச்சி முன்னேற, முன்னேற ஒரு காலகட்டத்தில் எல்லா முஸ்லிம்களும் இந்த அறிவியல் கண்டுபிடிப்புக்கு, இப்படித்தான் சரி, அது சரியாக இருக்கிறது, அதையே நாம் ஃபாலோ பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்து எல்லோரும் ஒரே நாளாக வைக்கக்கூடிய காலங்கள் நெருங்கிக் கொண்டிருக்கிறது.


இது ஜாக் அமைப்பின் மாநில தலைவர் எஸ்.கமாலுதீன் மதனி மதுரையில் ஆற்றிய உரை.


இந்த உரையை மீண்டும் ஒருமுறை படியுங்கள். நபியால் அப்படித்தான் சொல்ல முடியும். ஏனென்றால் அவர்களுடைய காலம் விஞ்ஞான வளர்ச்சி இல்லாத காலம். நம்முடைய காலமோ விஞ்ஞானத்தின் மூலமாக அனைத்தையும் சாதித்து விட்ட காலம். எனவே, நபிகளார் பின்பற்றிய கற்கால நடைமுறையை விஞ்ஞான யுகத்தில் வாழும் நம்மால் பின்பற்ற முடியாது என்கிறார் எஸ்.கே.


'மேலும், (நபியே!) நாம் உங்களை மனித குலம் முழுவதற்கும் நற்செய்தி அறிவிப்பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் தான் அனுப்பி வைத்திருக்கின்றோம். ஆயினும் ம்களில் பெரும்பாலோர் அறிவதில்லை.' (அல் குர்ஆன் 34:28)


ஆனால் நபியின் எச்சரிக்கையும் நற்செய்தியும் இந்த காலத்திற்கு பொருந்தாது என்கிறார் எஸ்.கே.


'இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமை படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன்.'அல்குர்ஆன் (5:3)


எனக்கூறி நபி(ஸல்) அவர்கள் வாழக்கூடிய காலத்திலேயே அவர்களது கடைசி ஹஜ்ஜூடைய நேரத்திலேயே இம்மார்க்கத்தை அல்லாஹ் முழுமை ஆக்கிவிட்டான். இதில் நம்மில் எவருக்கும் சந்தேகம் உண்டா? இந்த மார்க்கம் முழுமையானது. அதனை நபி(ஸல்) அவர்கள் பூரணப்படுத்திவிட்டு போய்விட்டார்கள் என்பதில் சந்தேகம் உண்டா? அப்படி சந்தேகம் கொண்ட ஒருவர் முஸ்லிமாக இருக்க முடியுமா?


அரபா பெருவெளியிலே சகல சகாபாக்களையும் கூட்டி வைத்துக் கொண்டு, 'நான் எல்லாவற்றையும் சொல்லி விட்டேனா?' என கேட்டபோது, 'ஆம் அல்லாஹ்வின் தூதரே!' என ஒருமித்த குரலில் சொல்கிறார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை சாட்சியாக்கி 'இறைவா! நீயே சாடசி'' என அல்லாஹ்விடம் பரம் சாட்டினார்கள்.


அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் : புஹாரி (1739,1741-42)


ஆனால் திருவாளர் எஸ்.கே யோ மார்க்கம் முழுமை அடையவில்லை. அவருக்கு (நபிக்கு)தெரிந்ததை அவர் சொன்னார். பிற்காலத்தில் விஞ்ஞானம் வளர்ச்சியடையும் என்பது நபிக்கு எப்படி தெரியும். தெரிந்திருந்தால் இரண்டாம் பிறையை முதல் பிறை என கொண்டாடி இருப்பார்களா? விஞ்ஞானம் தெரியாததால் அவர்கள் இரண்டாம் பிறையை தான் முதல்பிறை என கொண்டாடி இருக்கிறார்கள். அது தவறு. விஞ்ஞானம் அறிந்த நாம் நபியை பின்பற்ற முடியாது. விஞ்ஞானத்தை தான் பின்பற்ற முடியும் என்கிறார் எஸ்.கே.


'மேலும், அவர் தம் மனோ இச்சையின்படி பேசுவதில்லை. இது (அவர் மீது) இறக்கி அருளப்பட்ட வஹியே ஆகும். (அல் குர்ஆன் 53:3-4)


நபிகளார் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு சொல்லும் இறைவனிடத்தில் இருந்து வந்த வஹி எனும்போது, கண்பார்வை இழந்த அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம்(ரலி) என்ற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களிடம் வந்தபோது வேறொரு தேவையோடு இருந்த நபி(ஸல்) அவர்கள் முகத்தை சற்று சுளித்துக் கொள்கிறார்கள். அந்நேரத்திலே நபியை கண்டித்து, ஒரு அத்தியாயத்தையே அல்லாஹ் இறக்கி வைக்கிறான். அதில்


'ஒரு குருடர் வந்ததற்காக இவர் முகத்தை சுளித்துக் கொண்டார்' (அல் குர்ஆன் 80:12)


என்று கண்டித்த அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள்; இரண்டாம் பிறையை முதல் பிறை என சொன்னபோது, கண்டித்திருக்க வேண்டாமா?


அல்லாஹ் மறந்து விட்டானா?


அல்லாஹ் கண்டிக்க மறந்து விட்டான் என்று சொல்கிறாரா?


அல்லது விஞ்ஞான வளர்ச்சியை அல்லாஹ் சொல்ல மறந்து விட்டானா?


உமது இறைவன் எதையும் மறக்கக் கூடியவன் அல்ல! (அல்குர்ஆன் 19:64)


அல்லாஹ்வுக்கு விஞ்ஞானம் வளரும் என்பது தெரியாதா?


வானங்களையும் பூமியையும் உருவாக்கி அது எவ்வாறு செயல்படவேண்டும், எப்போது அழிக்கப்பட வேண்டும் என அனைத்தையும் அறிந்தவன் அல்லாஹ் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை. ஆனால், விஞ்ஞானம் வளரும் என்பது கூட அல்லாஹ்வுக்கு தெரியாது என்கிறாரா எஸ்.கே.


அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அதற்கு மாற்றம் வராது, இந்த அறிவியல் ஆராய்ச்சி சொல்வதற்கு இதுவரை மாற்றமாக வரவில்லை, அவர்கள் சொல்லக்கூடிய எல்லாமே கரெக்டாக இதுவரை இருந்து கொண்டிருக்கிறது, அந்த அடிப்படையிலே அதை எடுத்து ஃபாலோ பண்ண வேண்டுமென்று சொல்கிறார் எஸ்.கே.


இதன் அர்த்தம் என்ன?


குர்ஆன், ஹதீஸை விட்டுவிட்டு அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா?


அறிவியலுக்கு மாற்றம் வராதென்றால், குர்ஆன், ஹதீஸில் மாற்றம் ஏற்பட்டு விட்டதா?


குர்ஆன், ஹதீஸை ஃபாலோ பண்ணாமல், அறிவியலை ஃபாலோ பண்ணவேண்டுமா?


சகோ.கமாலுதீன் மதனி அவர்களே!


கடுமையாக தண்டிப்பவன் அல்லாஹ் என்பதை மறந்து விடவேண்டாம். அல்லாஹ்விடம் தவ்பா செய்து மீ;ண்டு வாருங்கள்.மக்களிடம் தவறை ஒத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுடைய இந்த விஷக்கருத்துக்களை யாரேனும் பின்பற்றுவார்களானால், பின்பற்றக்கூடிய ஒவ்வொருவரின் பாவச்சுமையையும் நீங்கள் சுமக்க வேண்டி வரும் என்பதை உங்களுக்கு ஞாபகமூட்டுகின்றோம்.

(நபியே நீர்) கூறுவீராக! உண்மையில் அல்லாஹ்வின் வழிகாட்டுதலே சரியான வழிகாட்டுதலாகும். (அவன் தரப்பிலிருந்து) அகிலங்களின் அதிபதிக்கே கீழ்ப்படியும்படி நாங்கள் கட்டளை இடப்பட்டுள்ளோம். (அல்குர்ஆன் 6:71)