ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...
குமரி முஸ்லிம் வலைப்பூவில் வரும் கட்டுரைகள் கடுமையாக இருக்கின்றன, ஒற்றுமையை குலைக்கின்றன. நம்மிடையே பிளவுகள் கூடாது ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றெல்லாம் வாசகர்கள் மறுமொழி இட்டனர்.
அவர்களிடம் குமரிமுஸ்லிம், ஒற்றுமை என்றால் என்ன? ஒற்றுமை என்பது எதன் அடிப்படையில் இருக்க வேண்டும்? பல தெய்வ கொள்கையுடையவனும் ஒரு தெய்வ கொள்கையுடையவனும் கொள்கையால் ஒன்றுபட முடியுமா? கப்ரு வணங்கிகளும் அல்லாஹ்வை மட்டுமே வணங்குபவர்களும் கொள்கையால் ஒன்று பட முடியுமா? என்றெல்லாம் கேள்வியை எழுப்பியது!
தங்களுடைய அமைப்பிற்கு சுன்னத் வல் ஜமாஅத் என்று பெயரை வைத்துக் கொண்டு சுன்னத்துக்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகின்றனர் சிலர். மற்றும் சிலர் குர்ஆன் ஹதீஸ்தான் தங்களுடைய அமைப்பு என்று கூறிக் கொண்டு, மனோ இச்சையை பின்பற்றி வருவதோடு அதை நியாயப்படுத்தியும் வருகின்றனர். இது போன்று செயல்படுபவர்களிடம் உள்ள தவறுகளை பிற அமைப்புகள் சுட்டிக்காட்டும் பொழுது அது குர்ஆனுக்கும் ஹதீஸூக்கும் உட்பட்டிருந்தால் தன்னுடைய தவறை உணர்ந்து உடனடியாக தவறை திருத்திக் கொள்வதுதான் நபிவழி. மாறாக, நீ சொல்லி நான் கேட்பதா எனும் பாணியில் புதிய வியாக்கியானங்களை கூறும் பொழுதுதான் அவைகளுக்கிடையில் பிளவுகள் ஏற்படுகின்றன. எனவே இவ்வாறு பிடிவாதமாக இருப்பவர்களின் செயல்பாடுகளை மக்களுக்கு எத்தி வைக்கவேண்டும் என்ற பணியை குமரி முஸ்லிம் தொடர்ந்து செய்து வருகின்றது.
அந்த வகையிலே பெருநாள் தொழுகையை பற்றிய ஒரு கட்டுரையை 'தூதருக்கு கட்டுப்படுவோம்' எனும் தலைப்பில் குமரி முஸ்லிம் இரு பாகங்களாக வெளியிட்டு இருந்தது. அதாவது பெருநாள் தொழுகையானது பள்ளிவாசல்களில் நடத்தபட்டு வருகின்றன. ஆனால் திடலில் தொழுவதுதான் நபிவழி எனவே அதை பின்பற்ற குமரி மாவட்டம் கோட்டாறில் பெருநாள் தொழுகையை திடலில் நடத்த குமரி டி.என்.டி.ஜே ஏற்பாடு செய்தது. இதை வரவேற்பதற்கு பதிலாக ஜாக் மாநில தலைவர் கமாலுதீன், தன்னுடைய பெருநாள் உரையில் இதை மறுத்ததோடு மட்டுமல்லாமல் குமரி டி.என்.டி.ஜே -ஐ மிகவும் தரக்குறைவாக விமர்சித்தார். அதோடு அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று கூறி ஏதோ நபிகள் நாயகம் தவறு செய்துவிட்டதாகவும் தான் கூறுவதுதான் சரி எனவும் கமாலுதீன் பேசினார்.
எனவே இவருடைய இன்றைய கூற்றுக்களையும் அன்றைய ஜாக்கின் கூற்றுக்களையும் ஆதாரங்களோடு நாம் வெளியிட்டு இருந்தோம். அவர்களுடைய எழுத்திலிருந்தே ஆதாரங்களை வெளியிட்டதால் ஆடிப்போன ஜாக், ஆகஸ்டு மாத அல்ஜன்னத் பத்திரிகையில் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளது.
பெருநாள் தொழுகையை நபி(ஸல்) அவர்கள் மைதானத்தில் திறந்த வெளியில் தொழுதுள்ளார்கள், திறந்த வெளியில் சென்று தொழுமாறு தனது தோழர்களுக்கு கட்டளையும் இட்டுள்ளார்கள். இது சரியான ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபணமானதாகும். காலாகாலமாக முஸ்லிம்கள் நடைமுறைபடுத்தியும் வருகின்றனர். இதை ஒரு உண்மையான சுன்னாவின் மீது நம்பிக்கையுள்ள யாரும் நிராகரிக்க மாட்டார்கள்.
என்று எழுதியுள்ளார்கள். அல்ஹம்துலில்லாஹ்! இதற்காகத்தான் குமரி முஸ்லிம் பாடுபட்டு வருகின்றது. இதுநாள் வரை நிராகரித்து வந்த எஸ்.கே, இன்று குமரி முஸ்லிம் ஆதாரங்களை வெளியிட்டதும் ஒத்துக்கொண்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே!
மனோ இச்சையை பின்பற்றக்கூடிய இதுபோன்ற இயக்கங்கள் அல்லாஹ்விற்கு பயந்து தங்களுடைய தவறுகளை திருத்திக் கொள்ளுமானால் வெகு சீக்கிரமே அனைத்து இயக்கங்களும் குர்ஆன் ஹதீஸ் வழியில் ஒன்றுபட முடியும்.
ஆனால், கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்களே அதுபோல, அல்ஜன்னத் புதிய வியாக்கியானத்தையும் கொடுத்துள்ளது. எனவே நம்மால் சில கேள்விகளையும் முன்வைக்க முடியும்.
1) பெருநாள் தொழுகையை மைதானத்தில் தொழக்கூடாது என்று நாம் கூறியதாக ஒரு வதந்தியையும் பொய்யையும் பரப்பி வருகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்
2) பெருநாள் குத்பாவிலே என்ன பேசினோம் என்று எஸ்.கமாலுதீனுக்கு மறந்து போயிருக்கலாம். ஏனென்றால், அன்று டி.என்.டி.ஜேக்கு எதிராகவும் நபி (ஸல்) அவர்களுக்கு எதிராகவும் பேசியது எஸ்.கே அல்ல, எஸ்.கே உருவில் வந்த ஷைத்தான். நாம் என்ன பேசுகிறோம் என்பது பெரும்பாலான நேரங்களில் அவருக்கே தெரியாது. எனவே நாங்கள் அவர் பேசியவற்றை ரிக்கார்டு செய்து வைத்திருக்கன்றோம். பெருநாள் குத்பாவிலே கோட்டாறு அஷ்ரஃப் பள்ளியிலே அத்தனை மக்கள் மத்தியில் சொன்ன கடுஞ்சொற்களை அல்லாஹ்வின் மீது அச்சமின்றி வதந்தி என சொல்லும் எஸ்.கே அவர்களே! நாங்கள் தயாராக இருக்கிறோம்! பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யுங்கள்! பொதுமேடையிலே நீங்கள் பேசிய பெருநாள் உரையை ஆடியோவாக மக்கள் மத்தியிலே நாங்கள் வெளியிடுவோம் இன்ஷாஅல்லாஹ்!
3) அந்த காலத்தில் பள்ளி சிறியதாக இருந்தது எனவே நபி(ஸல்) அவர்கள் திடலில் தொழுதார்கள், இப்பொழுதுதான் பள்ளி விசாலமாக இருக்கிறதே எனவே பள்ளியில் தொழுவோம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?
4) எங்கு வேண்டுமானாலும் தொழலாம் ஈமான் தான் முக்கியம் என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?
5) இவர்களுக்கு திடலில்தான் தொழவேண்டுமென்றிருந்தால் கப்ரு வணங்கிகள் பாவாகாஸிம் பள்ளியிலே தொழுகிறார்களே அங்கு போய் அவர்களை பின்பற்றி தொழவேண்டியதுதானே என்று எஸ்.கே கூறினாரா அல்லது வதந்தியா?
6) திடல் தொழுகை என்று நோட்டீஸ் அடித்தது தவறாம் திடலில் தொழுகை என்பதுதான் சரியாம்! திடல் தொழுகை என்ற பெயரில் ஒரு தொழுகை இல்லையாதலால் அதைத்தான் நாம் எதிர்த்தோம் என்று கூறியுள்ளனர்.
கொஞ்சம் கூட அல்லாஹ்வின்மீது அச்சமின்றி இருக்கும் ஜாக் வகையறாக்களே!அந்த அறிவிப்பு போஸ்டரில் 'நபி (ஸல்) அவர்கள் நோன்பு பெருநாளிலும் ஹஜ்ஜூ பெருநாளிலும் பள்ளியில் தொழாமல் திடலுக்கு செல்பவர்களாக இருந்தனர்' என்ற ஹதிஸல்லவா அச்சிடப்பட்டிருந்தது. இது புதுத் தொழுகையா?
7)வெளியிடப்பட்ட துண்டு பிரசுரத்தின் இரண்டு பக்கங்களிலும் பெருநாள் தொழுகை பற்றிய ஹதீஸ்களல்லவா வெளியிடப்பட்டிருந்தது! அது புதுத் தொழுகையா?
உங்களிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச நன்மையையும் மறுமையில் அல்லாஹ் பறித்து, அந்த குமரி டி.என்.டி.ஜே சகோதரர்களிடம் கொடுத்து விடுவானே என்ற சிறிதளவு பயமாவது இருந்தால் இத்தகைய அபாண்டத்தை கூறுவீர்களா?
8)திறந்த வெளியில் பெருநாள் தொழுவது சுன்னத்தாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் இதை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படத்தான் செய்யும்.பெருநாள் தொழுகை அன்று மழை பெய்து கொண்டிருக்குமானால் தொழமுடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.என்று எழுதியுள்ளார்கள்.
இஸ்லாத்தைப் பற்றிய சாதாரண அறிவு பெற்றிருக்கும் ஒருவனுக்கு கூட தெரிந்துள்ள விஷயம், மார்க்க அறிவு சற்றும் இல்லாத அபு புஷ்ரா என்ற கூமுட்டைக்கு தெரியவில்லையே என்பது வியப்பாக இருக்கிறது. ஆனால், இதை வெளியிட்ட கமாலுதீனோ மார்க்க அறிவு பெற்ற மாமேதையல்லவா? மதனியல்லவா? அவருக்கும் ஹதீஸை நாம்தான் சொல்லித்தர வேண்டுமா?
மழை நேரங்களில் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் தொழவும் அனுமதி உண்டு.மழை காலங்களில் பாங்கு சொல்லப்படும் பொழுது 'உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அறிவிக்கப்பட்டதும் உண்டு. நின்று தொழுவது கட்டாயம், ஆனால் இயலாதவன் உட்கார்ந்து தொழலாம், அதற்கும் இயலாதவன் படுத்துக் கொண்டே தொழலாம், அதற்கும் இயலாதவன் சைகை மூலமாக தொழலாம் இவையெல்லாம் நிர்ப்பந்தத்தின் அடிப்படையிலுள்ளவை. ஆடை இருப்பவன் ஆடையுடன் தொழலாம், ஆடையே இல்லாதவன் அப்படியே கூட தொழலாம், அது அவனுடைய நிலையை பொறுத்தது. ஆனால் கோட்டாறில் அஷ்ரஃப் பள்ளியிலே தொழுவது நிர்பந்தமா? மாநாடு நடத்திய ISED பள்ளியிலே தொழுகை நடத்த முடியாதா? ரோட்டில் நடத்த முடியாதா? கோட்டாறிலே திடலே இல்லையா? ஏன்? அந்த டி.என்.டி.ஜே சிறார்கள் திடலை ஏற்பாடு செய்துள்ளனர். கோட்டாறில் உங்களால் ஒரு திடலை ஏற்படுத்த முடியவில்லையா? அந்த அளவிற்கு பலவீனப்பட்டு விட்டீர்களா?
9)திறந்த வெளியில் தொழுவது சுன்னத் என்று இன்று சொல்லும் நீங்கள், அன்று அவர்கள் நடத்திய பெருநாள் தொழுகையை திடலில் போய் ஏன் தொழவில்லை? ஜாக் வெறியா? சுன்னத்தை விட ஜாக் வெறி மேலோங்கி விட்டதாலா?
இப்படி உங்களால் பதிலளிக்க முடியாத எத்தனையோ கேள்விகள் கேட்க முடியும். ஆனாலும் சுன்னத்தை ஒத்துக்கொண்ட காரணத்தினால் அவற்றையெல்லாம் ஓரமாக வைத்துவிடுவோம். இனிவரும் காலங்களில் இணைந்து செயல்படுவோம். திடலை ஏற்பாடு செய்யுங்கள். ஊர் முழுவதும் ஒரே திடலிலே ஒன்றுபட்டு தொழுவோம் இன்ஷாஅல்லாஹ்!