Thursday, April 30, 2009

தமுமுக கிளைகள் கலைக்கப் படுகின்றன. 2

ஏகனின் திருப்பெயரால்...

எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன, எத்தனையோ அமைப்புகள் இருக்கின்றன. ஆனால் முஸ்லிம்களுக்கென்று ஒரு அமைப்பு இல்லை. முஸ்லிம்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். கேட்பாரின்றி வேதனைப்படுகிறார்கள். ஒரு முஸ்லிமுக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் நாம் ஒன்றிணைய வேண்டும், அதற்கு என்னவழி என யோசித்த தமுமுகவின் முன்னாள் நிர்வாகிகள், குணங்குடி ஹனீஃபா வைத்திருந்த 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்' எனும் பெயரை தூசி தட்டி எடுத்து அதை வீரியப்படுத்தி முஸ்லிம்களை ஒன்றிணைத்தனர். அதன் காரணமாக முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் குறையத் தொடங்கின.

அதன் அமைப்பு நிர்ணய சட்டம்(பைலா)வில் பிரிவு(எ) ஆகிய 'கழகம் அரசியல் கட்சி சார்பற்றதாகவே செயல்படும். எந்த காலத்திலும் நாடாளுமன்ற, சட்டமன்ற, நகராட்சி, ஊராட்சி ஆகிய தேர்தல்களில் போட்டியிடாது' என்ற விதியின் படி பணிகளை செய்து கொண்டிருந்தது.


அதனுடைய பேச்சாளர்கள் ஒவ்வொருவரும் நாங்கள் பதவி ஆசைக்காகவோ, பணத்திற்காகவோ இந்த அமைப்பை நடத்தவில்லை, 'அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் ஒருபோதும் தேர்தலில் நிற்கமாட்டோம்' என்று அனைத்து மேடைகளிலும் முழங்கினர்.


மக்களும் அதை நம்பி அணி திரண்டனர். நாளடைவில் அதன் தற்போதைய நிர்வாகிகளுக்கு அரசியல் ஆசை ஏற்பட்டபோது இந்த அமைப்பை கட்டிக்காத்த பீ.ஜே, பாக்கர் உட்பட பலரை வெளியேற்ற திட்டமிட்டு தவ்ஹீத் பிரச்சாரத்தால் கப்ரு வணங்கிகள், தரீக்காவாதிகள், ஓதி பார்த்து பிழைப்பு நடத்தும் முஸ்லிம் பூசாரிகள், மரம், மட்டையை வணங்கும் முஸ்லிம்கள்(?!) எல்லோரும் தமுமுகவில் இணைய மறுக்கின்றனர் என்று கூறி தவ்ஹீத்வாதிகளை வெளியேற்றிவிட்டு தமுமுக எனும் இயக்கத்தை தற்போதைய நிர்வாகிகள் அபகரித்தனர். இவ்வாறு தவ்ஹீத்வாதிகளால் உருவாக்கப்பட்ட இயக்கத்தையும் இடத்தையும் அபகரித்துவிட்டு அதிலிருந்து தவ்ஹீத்வாதிகள் துரத்தப்பட்டனர். ஒருங்கிணைக்கப்பட்ட முஸ்லிம்களின் நிலை குரங்குகளின் கையில் அகப்பட்ட பூமாலை போலானது.
அந்த சூழ்நிலையில் கூட இவர்கள் அரசியல் ஆசையை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

2005 ஜூன் மாதத்தில் மக்கள் உரிமையில் வந்த ஒரு கேள்வி பதிலை பாருங்கள்.

உமர் அலி, மஞ்சக்கொல்லை

?தமுமுக, முஸ்லீம் லீக், தேசிய லீக் ஆகிய மூன்று அமைப்புகளும் இணைந்து, வரும் சட்டமன்ற தேர்தலில் ஒரு கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று தேர்தலை சந்தித்தால் என்ன?!

முஸ்லிம் லீகும் தேசிய லீகும் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகள். தமுமுக தேர்தலில் போட்டியிடாத சமுதாய இயக்கம் என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள்.அந்த இரு லீக்குகளும் குறைந்த பட்சம் இரட்டைக்குழல் துப்பாக்கிகளாக செயல்பட முன்வந்தால், அவர்கள் இருவரையும் தமுமுக வழிநடத்தி அதிகமான தொகுதிகளை அக்கட்சிகளுக்கு பெற்றுக்கொடுக்க முயற்சி செய்யும்.இதனால் நமது வாக்குகள் சிதறாத நிலை ஏற்படும். அதிகமான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களாக உருவாகும் சூழலும் ஏற்படும். இதை இரண்டு லீக்குகளும் பரந்த மனதோடு சிந்திக்க வேண்டும்.
மக்கள் உரிமை மே 27 – ஜூன் 02, 2005 பக்கம் 14

அது மட்டுமின்றி 2006 –ல் கோவையில் நடந்த செயற்குழுவில் தமுமுக தேர்தலில் போட்டியிடாது என்று தீர்மானமாகவும் கொண்டுவந்தார்கள்.
பார்க்க மக்கள் உரிமை செப்டம்பர் 22 – 28, 2006 பக்கம் 1,2,14


அமைப்பின் கட்டுக்கோப்பை மீறினால் எதிர்காலத்தில் தமுமுக நிர்வாகியாகும் வாய்ப்பை இழந்து விட நேரிடும் என அறிவிப்பு செய்கிறார் ஹைதர் அலி.

இது அவருக்கு பொருந்தாதோ?
அதற்கு அடுத்த மாதம் தமுமுகவின் விதியை மீறி தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த இராமநாதபுரம் தெற்கு மாவட்டம் கடலாடி ஒன்றிய செயலாளர் பாஹிர் அலியை பொறுப்பில் இருந்து நீக்கி சிக்கல் நகர நிர்வாகத்தையும் கலைத்தது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஒன்றியம், சோதுகுடி கிளை தலைவரான அஹமது ஜலால் மற்றும் கீழாயூர் கிளை நிர்வாகி கனி ஆகியோரையும் பதவியிலிருந்து நீக்கியது.


இவ்வாறு செய்தவர்கள் திடீரென தங்களுடைய அரசியல் எண்ணத்தை வெளியிட ஆரம்பித்தனர். அன்று அல்லாஹ்வின் மீது சத்தியமாக நாங்கள் தேர்தலில் ஒரு போதும் போட்டியிட மாட்டோம்' என்றவர்கள் அதற்காக திட்டமிட ஆரம்பித்தனர். பின்னர் திமுகவிற்கு ஆதரவளித்து திமுகவால் முஸ்லிம் சமுதாயம் பாதிக்கப்பட்ட போது கூட சமுதாயத்தின் முதுகில் குத்தி திமுகவிற்கு வெண்சாமரம் வீசி, அதனால் வக்பு வாரியம் கிடைக்கப்பெற்று அதில் சுகம் கண்ட இவர்கள் பதவிகளுக்காக பறக்க ஆரம்பித்தனர்.

முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. அனைத்து சமுதாயத்தவருக்கும் எனில் ஏற்கனவே பல கட்சிகளும் பல அமைப்புகளும் இருக்கின்றன. அனைவருக்காகவும் ஒரு அமைப்பு எனில் ஒரு முஸ்லிம் கூட இந்த அமைப்பில் இணைந்திருக்கமாட்டான். முஸ்லிம்களை வைத்து உயர்ந்து விட்டு இன்று அந்த முஸ்லிம்களையே எட்டி உதைக்கின்றனர். முஸ்லிம்களை மட்டும் வைத்திருப்பதால் நாம் பதவிக்கு வரமுடியாது என நினைத்த இவர்கள் மற்றவர்களையும் இணைக்க துவங்கினர். எனவே தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பாக ஆரம்பிக்கப்பட்ட கட்சிக்கு 'மக்கள் முன்னேற்ற கழகம்' என பெயர் சூட்டினர். அதுவும் பெயர் மாறி 'மனித நேய மக்கள் கட்சி' என்று தற்போது உலா வருகிறது.

அல்லாஹ்வின் மீது செய்த சத்தியத்தை மீறியவர்கள் எதற்கும் துணிவார்கள். அரசியல் லாபத்திற்காக சமுதாயத்தை விற்றவர்கள் இன்று திமுக, அதிமுக, சரத்குமாரின் சமுக, பாஜக என தாவித்தாவி சென்றபோதும் அனைவராலும் துரத்தி அடிக்கப்பட்டு வேறு வழியின்றி தனித்து நிற்கும் நிர்கதிக்கு தள்ளப்பட்டுள்ளனர். நேரத்திற்கொரு வாக்கு, நாளுக்கொரு பேச்சு பேசும் இவர்களைவிட பிற அரசியல் கட்சிகள் மேல் என தமுமுகவின் நிர்வாகிகள் கூண்டோடு விலகி வருகின்றனர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தென் சென்னை தலைவரான அன்வர் பாட்ஷா மற்றும் கரீம், உசேன், ஷபீ, சாவேஸ் உட்பட பலர் தமுமுகவிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்து யூனுஸ்கானுக்கு ஆதரவளிப்பதாக கூறியுள்ளனர்.

பார்க்க படம் :

இது தொடக்கம் மட்டுமே!


தொடரும்...
Special Image

Tuesday, April 28, 2009

அரசியலும் இஸ்லாமிய இயக்கங்களும்

ஏகனின் திருப்பெயரால்...

ஜாக் : தங்களை தவ்ஹீத்வாதிகள் என்று சொல்லிக்கொள்ளும் இவர்கள், அடிக்கடி ஒற்றுமை பிரசுரம் வெளியிடுவார்கள். இவர்களைவிட்டு பிரிந்த அனைவரும் பாவிகள் என்று ஃபத்வா கொடுத்தார்கள். ஜாக் அமைப்பை சாராதவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று நோட்டீஸ் அடித்தார்கள். (தேவைப்படுவோருக்கு ஆதாரம் தரப்படும்.) நபி(ஸல்) அவர்களின் நடைமுறை இந்த காலத்திற்கு பொருந்தாது என்று பொதுமேடையில் பகிரங்கமாகவே சொன்னார்கள், சொல்கிறார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸை பின்பற்றுவதாகவும் சொல்வார்கள். ததஜவினர் சந்தணத்தை பூசிக்கொண்டால், அவர்களை எதிர்க்க வேண்டும் என்பதற்காக சாக்கடையை தங்கள் மேல் பூசிக்கொள்வார்கள்.

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பீட்டர் அல்போன்ஸை ஆதரித்து 15-04-200 6 15-04-2006 அன்று ஜாக்கின் மாநில செயலாளர் மற்றும் பிரச்சார பீரங்கியான கோவை அய்யூப் கடையநல்லுரில் ஓட்டு கேட்டு பிரச்சாரம் செய்தார்.


ஏப்ரல் மாதத்தில் பகிரங்கமாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ததஜ அதிமுகவை ஆதரித்ததால் மே மாதம் அந்தர்பலடி அடிக்கிறார் கமாலுதீன்.

'நம்முடைய பேச்சு, உயிர் மூச்சு தவ்ஹீத்! தவ்ஹீத். தவ்ஹீத் தவிர வேறல்ல. அரசியல்வாதிகளுக்கு ஆள்பிடிக்கும் மாயாஜாலப்பேச்சு, அது எவர் வாயிலிருந்து வந்தாலும் அவரை இனம் காண்போம், தனிமை படுத்துவோம். இணைவைக்கும் அரசியல்வாதிகளுக்காக எந்த ஏகத்துவவாதியையும் நாம் இழந்துவிடக் கூடாது'. – அல்ஜன்னத், மே-2006 20பக்கம் 20 என்று எழுதுகிறார்கள்.

பீ.ஜே யை திட்டுகிறோம் என நினைத்துக் கொண்டு சாக்கடை குளியல் நடத்தினார்கள்.

தவ்ஹீத் என்ற பெயரில் இவர்கள் எங்கே நம்மை கொண்டு போய் தள்ளப் போகிறார்கள் என்பதை சிந்தித்து செயல்படுங்கள். அல்ஜன்னத், மே 2006, பக்கம் 48

நம்மை பொறுத்தவரை அரசியல் சாக்கடையில் விழுந்துவிட்ட அனைவரும் சமமே. அது மூன்றெழுத்து அரசியல்வாதியாயினும் சரிதான். நான்கெழுத்து அரசியல்வாதி யாயினும் சரிதான். அல் ஜன்னத் மே 2006 2006 பக்கம் 50

ஆனால் ஏகத்துவவாதிகளோ(?) இந்த கட்சிக்குத்தான் வாக்களிக்க வேண்டுமென்று துடிக்கிறார்கள்.

பணம் பத்தும் செய்யும் என்பது பழமொழி

சே! சாக்கடை நாறுகிறது! - அல் ஜன்னத் மே 2006 பக்கம் 51


இவ்வாறு எழுதியவர்கள் பித்னாவில் ஆஸ்கார் விருதுபெற்ற பஸிலுல் இலாஹியை வேட்பாளராக நியமிக்கவேண்டுமென்று கோரி நடுரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
பார்க்க படம்


அதுமட்டுமின்றி உள்ளாட்சி தேர்தலில் ஜாக்கின் துணை செயலாளரான ஏர்வாடி சிராஜ் தேர்தலிலே போட்டியிட்டு வெற்றி பெற்று இன்றும் உள்ளாட்சி பதவியில் இருக்கிறார்.

இவ்வாறு நயவஞ்சக வேடமிடும் இந்த போலிதவ்ஹீத்வாதிகளை நாம் சட்டைசெய்ய வேண்டியதில்லை.

மனித நீதி பாசறை :

ஆர்ப்பாட்டம் கூடாது, போராட்டம் கூடாது, கொடி கூடாது, ஜனநாயகம் கூடாது, அபுஜஹல் தாக்க வந்த போது நபி(ஸல்)அவர்கள் கொடிபிடித்துக் கொண்டா இருந்தார்கள் என்றெல்லாம் மற்றவர்களை நக்கலடித்தவர்கள் இன்று கொடி, ஆர்ப்பாட்டம் என்று தங்களை மாற்றி 'அதிகாரம் மக்களுக்கே' எனும் கோஷத்துடன் வாக்களிக்கவும் இரவல் கட்சிக்காக பிரச்சாரம் செய்யவும் தயாராகிவிட்டார்கள். விடியல், மனித நீதி பாசறை, பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா என பல பெயர்களில் இவர்கள் உலா வந்தாலும் இவர்களால் முஸ்லிம் சமுதாயத்திற்கு துரோகம் இழைக்கப்படவில்லை. எனவே இதையும் விட்டுவிடுவோம்.

ஜமாஅத்தே இஸ்லாமி : எம்.என்.பி யின் கொள்கையில் முக்கால் பாகத்தைக் கொண்டிருக்கும் இவர்களும் பிற மாநிலங்களில் கொடிபிடித்து அரசியல் அதிகாரத்திலும் ஈடுபடுகிறார்கள். ஒயிட் காலர் மற்றும் வி.ஐ.பிக்களுக்கு மட்டும் என தேர்ந்தெடுத்து அழைப்புபணி செய்வதால் குண்டுச்சட்டிக்குள்ளேயே குதிரையை ஓட்டிக்கொண்டிருக்கின்றனர். இவர்களால் சமுதாயத்திற்கு சாதக பாதகம் எதுவுமில்லை.

முஸ்லிம் லீக் :

அரசியலில் தனித்தன்மை இல்லாததால் இருப்பவனையும் இறந்தவனையும் வணங்கிக்கொண்டு மிகப்பெரிய இணைவைப்பை செய்து கொண்டிருக்கின்றனர். பதவிக்காக செயல்படும் இந்த பெயர்தாங்கி முஸ்லிம்களால் சமுதாயத்துக்கு எந்த நன்னையும் இல்லை.
பார்க்க : படம்

ஆனால் தமிழக முஸ்லிம் சமுதாயத்தில் இரு இயக்கங்கள் தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவ்விரு இயக்கங்களும் சமுதாயத்திற்கு செய்த, செய்கின்ற நன்மைகள் என்ன? சமுதாயத்தின் பெயரைக்கூறி சமுதாய மக்களை எவ்வாறு வஞ்சித்தன, துரோகம் செய்தன என்பதை நாம் அடுத்ததாக காண்போம்.

Sunday, April 5, 2009

ஸஹீஹ் புஹாரியை மறுக்கும் ஜாக்!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

ஜம்இயத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்(ஜாக்) அமைப்பின் மாநில தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் வெளியிடும் அல்ஜன்னத் பத்திரிகையிருந்து ஒரு கேள்விபதில்

கேள்வி : செய்வினை உண்டா? எதனால் உண்டாகிறது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு செய்வினை செய்தது உண்மையா?                 அப்துல் அலீம் - அய்யம்பேட்டை, ரிழ்வான் - ஆளூர்

பதில் : செய்வினை - சூனியம் என்பது மனிதனில் குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு கலை, இதனால் மனித உள்ளத்தில் சஞ்சலத்தை தவிர வேறு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த முடியாது. அதுவும் அல்லாஹ் நாடினால்தான் ஏற்படும் என்ற அடிப்படையைப் புரியவேண்டும்.

'உலகத்திலுள்ள ஆதிமுதல் கடைசிவரை உள்ள எல்லா மனித ஜின்களும் சேர்ந்து ஒரு மனிதனுக்கு தீங்கிழைக்க நாடி அல்லாஹ் அந்த மனிதனுக்கு நன்மையை நாடியிருந்தால் மக்களால் எந்த தீங்கிழைக்கவும் முடியாது'... என்று அல்லாஹ் கூறினான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.   (நூல் : புகாரி)

திருக்குர்ஆனின் 2 : 102 வசனத்திலும் அல்லாஹ் இவ்வாறுதான் கூறுகிறான்மேலும், 'சூனியக்காரன் எங்கு சென்றாலும் வெற்றி பெறமாட்டான்' (20 : 69) என்றும் இறைவன் கூறுகிறான்.

நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் அன்னை ஆயிஷா(ரலி) வாயிலாக ஹதீஸ் ஒன்று இடம் பெறுகிறது. அதனால் நபி(ஸல்) அவர்களுக்கு பாதிப்புகள் ஒன்றும் ஏற்பட்டதாக ஒன்றும் அறிவிக்கப்படவில்லை. மேலும் அது இறைவனின் நாட்டப்படி சில படிப்பினைகளுக்கான ஒரு நிகழ்வாகவே இருக்கிறது.

1.சூனியம் மனதில் சிறு குழப்பத்தை தவிர வேறொன்றையும் ஏற்படுத்தாது.

2.இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களும் மனிதரே, இறைத்தன்மையோ வானவர்களின் தன்மையோ அவர்களுக்கு இல்லை. இறைத்தூதர் என்பதால் மட்டுமே மனிதர்களில் மேன்மையானவர் என்ற நிலையை பெற்றுள்ளார்.

3.எவருக்கேனும் சூனியம் செய்யப்பட்டாலும் அதை அவர் அறிந்து கொள்ள முடியாது. ஏனெனில் நபி(ஸல்)அவர்களுக்கே இறைவன்தான் அறிவிக்கிறான். எனவே நமக்கு சூனியம் செய்யப்பட்டிக்குமோ என்ற வீணான சந்தேகம் குழப்பம் தேவையற்றது.

அப்படியே ஒருவன் தனக்கு சூனியம் செய்யப்பட்டதாக கருதினாலும் இவ்வுலகில் அவனுக்கு யாரும் தீர்வையோ நலத்தையோ அளிக்க முடியாது. தாயத்துகள் கட்டுவதாலோ மந்திரிப்பதாலோ அது சரியாகாது. மாறாக இறைவசனங்களான நாஸ் மற்றும் ஃபலக் 113, 114 ஆகிய அத்தியாயங்களை ஓதிக்கொள்ள வேண்டும். என்பன போன்ற படிப்பினைகளை அந்நிகழ்வு நமக்கு தருவதால் சூனியம் இன்றைய சூழலில் யாருக்கும் எந்த தீங்கையும் ஏற்படுத்தாது என்பதை அறிக!

அல் ஜன்னத்    ஆகஸ்ட் 2003

//நபி(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டதாக புகாரியில் அன்னை ஆயிஷா(ரலி) வாயிலாக ஹதீஸ் ஒன்று இடம் பெறுகிறது. அதனால் நபி(ஸல்) அவர்களுக்கு பாதிப்புகள் ஒன்றும் ஏற்பட்டதாக ஒன்றும் அறிவிக்கப்படவில்லை.//

இது அல்ஜன்னத்தில் ஜாக் மாநில தலைவர் கமாலுதீன் மதனி அவர்கள் எழுதும் வாக்கு. ஆனால் நாம் புஹாரியை திறந்தால் பாதிக்கப்பட்டதாக ஏராளமான ஹதீஸ்கள் காணக் கிடைக்கின்றன.

3175. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்களுக்கு (ஒரு குறுகிய காலத்திற்கு) சூனியம் வைக்கப்பட்டது. அதன் வாயிலாக, தாம் செய்யாத ஒரு செயலைத் தாம் செய்திருப்பதாக அவர்கள் எண்ணிக் கொள்ளும்படி அவர்களுக்கு பிரம்மையூட்டப்பட்டது

பகுதி 47          சூனியம் 88

அல்லாஹ் கூறினான்:

கணவனுக்கும் மனைவிக்கும் இடையே பிளவை உண்டு பண்ணக்கூடிய (சூனியத்)தை அவ்விருவரிடமிருந்து தெரிந்து கொண்டார்கள். அல்லாஹ்வின் நாட்டமின்றி (ந்தச் சூனியத்)தைக் கொண்டு எவருக்கும் அவர்கள் தீங்கிழைத்து விட முடியாது. தங்களுக்குப் பலனளிக்காத, தீங்கு தருகிறவற்றையே அவர்கள் கற்றுக் கொள்கிறார்கள். (ந்தச் சூனியத்)தை விலைக்கு வாங்கிக் கொள்பவனுக்கு மறுமையில் எந்தப் பேறும் இல்லை என்பதை அவர்கள் உறுதியாக அறிந்தே இருந்தனர். (திருக்குர்ஆன் 02:102)

5763. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு 'பன}ஸுரைக்' குலத்தைச் சேர்ந்த லபீத் இப்னு அஃஸம் என்பான் சூனியம் செய்தான். இதையடுத்து இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தாம் செய்திராத ஒன்றைத் தாம் செய்து கொண்டிருந்ததாகப் பிரமையூட்டப்பட்டார்கள்.

நான், 'இறைத்தூதர் அவர்களே! (ந்தப் பாளை உறைக்குள் இருப்ப)தைத் தாங்கள் வெளியே எடுக்கவில்லையா?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், 'அல்லாஹ் எனக்கு (அதன் பாதிப்பிலிருந்து) குணமளித்துக் காப்பாற்றிவிட்டான்' என்றார்கள்.

5765. ஆயிஷா(ரலி) அறிவித்தார்

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குச் சூனியம் செய்யப்பட்டது. அதையடுத்து அவர்கள் தம் துணைவியரிடம் செல்லாமலேயே அவர்களிடம் சென்று வருவதாக நினைக்கலானார்கள்.

6063 ஆயிஷா(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்களுக்கு (சூனியம் செய்யப்பட்டதால்) அவர்கள் இன்னின்னவாறு நடந்துகொண்டார்கள். அவர்கள் தம் வீட்டாரிடம் செல்லாமலேயே சென்றுவந்து விட்டதாகப் பிரமையூட்டப்பட்டார்கள்.

6391. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.

இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்டது. இதையடுத்து தாம் செய்யாத ஒன்றைத் தாம் செய்துவிட்டதாக இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பிரம்மையூட்டப்பட்டது.

 இந்த அறிவிப்புக்களெல்லாம் பொய்யானவையா? என்பது நமது கேள்வி. தன்னுடைய கருத்தை திணிக்க வேண்டுமென்பதற்காக ஹதீஸையே இல்லை என்று கூறுவது மாபெரும் பாவமாகும். குர்ஆன் ஹதீஸூக்கு சொந்தக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நாம், நம்முடைய விருப்பத்திற்கேற்ப குர்ஆன், ஹதீஸை வளைப்பதோ இருக்கின்ற வசனம் அல்லது ஹதீஸை மக்களுக்கு சொல்லாமல் மறைப்பதோ அநியாயமாகும்.

ஸஸீஹ் புஹாரியில் உள்ள ஹதீஸ்கள் நம்பகமானவை என்று அப்துல் காதர் உமரி கூறும்போது கமாலுதீன் மதனி அந்த ஹதீஸ்களை நிராகரிப்பது அல்லது திரித்து கூறுவது அல்லது ஹதீஸை மறைப்பது சரியான செயல் அல்ல.

இந்த விஷயத்தில் நமக்கு சில கேள்விகள் எழும் வேளையில், ஜாக் ஏதேனும் ஒரு முடிவை தான் எடுக்க வேண்டும்.

1.அப்துல் காதர் உமரி மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டுள்ளதா?

2.மூல நூலான ஸஸீஹ் புஹாரியில் பிழை ஏற்பட்டுள்ளதா?

3.சூனியம் சம்பந்தமாக வரும் அந்த சில ஹதீஸ்களில் மட்டும் தவறு ஏற்பட்டுள்ளதா?

4.கமாலுதீன் மதனி கூறியது போல பாதிக்கப்படவில்லை என்பது தான் சரியா?

அப்துல் காதர் உமரி மொழி பெயர்த்ததில் தவறு ஏற்பட்டுள்ளது என்று கூற வாய்ப்பில்லை. ஏனெனில் ஜமாஅத்துல் உலமா மேற்பார்வையில் ரஹ்மத் அறக்கட்டளை மொழிபெயர்த்து வெளியிட்ட புஹாரி தமிழிலும் இதே கருத்து தான் கூறப்பட்டுள்ளன.

அன்பான சகோதர, சகோதரிகளே..! இந்த நபிமொழித் தொகுப்பின் மொழியாக்கத்திற்காக சகோதரர் அப்துல் காதிர் உமரி அவர்கள் மிகவும் பாடுபட்டுள்ளார்கள். இருப்பினும், கவனக் குறைவு மற்றும் மனிதன் என்ற ரீதியில் விடுபட்டுள்ள தவறுகள் ஏதுமிருப்பின் தயவு செய்து சுட்டிக் காட்டுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றோம். இவ்வாறு முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளதால் தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்வார்கள்.

இரண்டாவதாக, ஸஹீஹுல் புகாரி என்றழைக்கப்படும் இந்த நபிமொழித் தொகுப்பில், சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகியவற்றைப் பதிவு செய்யப்பட்டுள்ளன. சுன்னா என்றழைக்கப்படும் இறைத்தூதர் (ஸல்) அவர்களால் அறிவிக்கப்பட்டுள்ள, சொல், செயல் ஆகியவற்றின் தொகுப்பையே 'ஹதீஸ்' என்றும் அழைக்கப்படுகின்றது. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மறைவுக்குப்பின் இரண்டு நூற்றாண்டுகள் கழித்து வாழ்ந்தவரான இமாம் புகாரீ (ரஹ்) அவர்களின் பெரும் முயற்சியின் காரணமாகத் தொகுக்கப்பட்டதே, இந்த நபி மொழித் தொகுப்பாகும். ஒவ்வொரு நபிமொழியும் மிகக் கவனத்துடன் குர்ஆனுடன் ஒப்பிடப்பட்டு, ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பின்பே தொகுக்கப்பட்டுள்ளது. ஸஹீஹுல் புகாரீ என்ற இந்த நபி மொழித் தொகுப்பானது, நபிமொழித் தொகுப்பு நூல்களிலேயே மிகவும் நம்பகத் தன்மை கொண்டதாகவும், மார்க்க அறிஞர் பெருமக்களின் ஏகோபித்த அங்கீகாரத்தைப் பெற்றிருப்பதும் இதன் தனிச்சிறப்பாகும்.

- இது நாம் கூறும் விளக்கமல்ல. ஜாக் பேச்சாளர்  அப்துல் காதர் உமரி ஸஹீஹ் புஹாரியை மொழிபெயர்த்து வெளியிட்ட போது அவரே கொடுத்த முன்னுரையாகும். எனவே இரண்டாவது கேள்வியிலும் நமக்கு சந்தேகமில்லை. அடித்துக் கொள்வதாக இருந்தால் ஒரே அமைப்பில் இருக்கும் உமரியும் மதனியும் தான் அடித்துக் கொள்ள வேண்டும். அல்லது வழக்கம் போல கொள்கையில் அட்ஜஸ்மென்ட் செய்தாலும் .கே.

ஜாக்கின் ஒரு பேச்சாளர் விரலசைப்பது நபி வழி என்பார், இன்னொருவரோ அது பித்அத் என்பார். கமாலுதீன் மதனியோ இரண்டும் சரி என்பார். ஒரு பேச்சாளர் குர்ஆனை எல்லோருக்கும் விளங்கும் என்று பேசுவார், கமாலுதீன் மதனியோ குர்ஆன் எல்லோருக்கும் விளங்காது, பதினாறு கலைகளை கற்றவர்களால் தான் விளங்க முடியும் என்பார். ஜாக் ஆதரவாளர்களோ இரண்டும் சரி என்பார்கள். ஒருவர் நபிகளாரை கனவில் காண முடியாது என்பார், இன்னொருவரோ நபிகளார்(ஸல்) சதக்கத்துல்லாஹ் அப்பாவின் கனவில் வந்து உமறு புலவரிடம் சீறா புராணம் எழுத சொன்னார்கள் என்பார். தலையாட்டிக்கூட்டமான ஜாக் ஆதரவாளர்களும் அப்படியா! என்று ஆச்சரியப்பட்டு போவார்கள். மேடையிலிருக்கும் இங்கிலீஸ் மௌலவி உட்பட உமரி, மதனி, முப்தி போன்ற மார்க்க அறிஞர்(?!)களெல்லாம் எந்த மறுப்பும் சொல்லாமல், யார் என்ன சொன்னா நமக்கென்ன? கூட்டம் நடத்தினோமா? அரபியில பேனர் வச்சோமா? ஃபோட்டோ எடுத்தோமா? அதை அரபு நாட்டுக்கு அனுப்புனோமான்னு இருப்பாங்க.

அடடா...விஷயம் தலைப்புக்கு வெளியில் போகுதே... சொல்ல ஆரம்பிச்சா தவ்ஹீத்வாதிகளுக்கு எதிராக ஜாக் செயல்பட்டதையும் கப்ரு வணங்கிகளுக்கு விசிறி வீசியதையும் அடுக்கிக் கொண்டே போகலாம். அவர்கள் தவறுகளை திருத்திக் கொள்ள அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம். இப்போது தலைப்புக்கு உள்ளே வருவோம்.

மூன்றாவது கேள்விக்கான பதிலும் இரண்டாவது கேள்விக்கான பதிலிலேயே அடங்கிவிடுகிறது என்றாலும் சில குறிப்பிட்ட ஹதீஸ்களை மட்டும் நிராகரிக்க ஜாக் கூறும் காரணம் என்ன? அவ்வாறு சில ஹதீஸ்களை புறந்தள்ளும் அளவு கோல் என்ன?

கடைசி கேள்விக்கான பதில் நம்மிடம் இல்லை. கமாலுதீன் மதனி ஸஹீஹ் புஹாரியை ஏன் நம்ப மறுக்கிறார் என்றோ அல்லது நபி(ஸல்) அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று ஆயிஷா(ரலி) அவர்கள் கூறும் பல ஹதீஸ்கள் புஹாரியில் இருக்கும் போது அவர் ஏன் அந்த ஹதீஸ்களை மக்களிடம் மறைக்கிறார் என்பதும் நமக்கு தெரியவில்லை.

அறியாமல் தவறு செய்திருப்பாரானால் இத்தகைய அநியாயத்தை செய்ததற்காக ஜாக் அமைப்பு அல்லாஹ்விடம் தவ்பா செய்வதோடு மக்களிடம் செய்த தவறை ஒப்புக் கொண்டு பரிகாரம் தேடவேண்டும்.

பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தான் நபிவழி என்பதை வலியுறுத்திய ததஜ, அதை செயல்படுத்திக் காட்டிய போது ததஜவின் மீது கொண்ட கோபம் காரணமாக நபிகளார்(ஸல்) அவர்கள் கூறாததை சொந்த வியாக்கியானம் செய்து, ஹதீஸ்களையே மறுத்த ஜாக், பின்னர் திருந்தி, ததஜ செய்வது தான் சரி என விளங்கி அல்லது பிடிவாதத்தை கைவிட்டு பெருநாள் தொழுகையை திடலில் தொழுவது தான் சுன்னத் என்பதை அல் ஜன்னத் பத்திரிகையில் ஒப்புக் கொண்டதோடு கோட்டாறு அஷ்ரப் பள்ளியில் இதுகாலம் வரை பெருநாள் தொழுகை தொழுது கொண்டிருந்ததை மாற்றி, கடந்த பெருநாள் தொழுகையை திடலிலேயே வைத்தது. அல்ஹம்துலில்லாஹ்!

இது போன்று ஹதீஸை மறுத்த அல்லது றைத்த விஷயத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சி கமாலுதீன் மதனி தவ்பா செய்வாரெனில் இடைவெளி விலகி நெருக்கம் அதிகமாகும். இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையே இருக்கும் மனக்கசப்புகளை மறுமையை மனதில் கொண்டு களைந்து விடுவோமானால் நம்மிடையே ஒற்றுமை மலரும்.