கடந்த மே 10 மற்றும் 11 தேதிகளில் தஞ்சை வல்லத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய தவ்ஹீத் எழுச்சி மாநாட்டில் அவர்கள் கலந்து கொண்டதனாலேயே அவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதித்துள்ளது ஜாக் அமைப்பின் கட்டுப்பாட்டில் உள்ள பெண்கள் அரபிக்கல்லூரி நிர்வாகம். இது பற்றிய விஷயத்தை வெளிப்படையாக யாரிடமும் சொல்ல முடியாமல் அம்மாணவிகள் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கின்றனர். ஏனெனில் இது தொடர்பாக யாரும் வாய் திறந்தால் வகுப்பில் தேர்ச்சி பெற விடாமல் தடுத்து விடுவார்களோ என்ற பயத்தில் மாணவிகள் கவலை அடைந்துள்ளனர்.
குமரி மாவட்ட (ஜாக் அல்லாத) தவ்ஹீத் சகோதரர்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் பல்வேறு இடையூறுகளை ஜாக் தொடர்ந்து செய்து வருகிறது. அதிலும் குறிப்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மார்க்க மற்றும் சமுதாய நலனுக்காக ஏதாவது செய்ய திட்டமிட்டு அதற்கான ஏற்பாடுகளாக பிரச்சாரம் மேற்கொள்ளும் பொழுதெல்லாம் அப்பிரச்சாரத்திற்கு இடையூறு செய்வதை தனது முழு நேர கடமையாக ஜாக் செய்து வருகிறது. அதற்காக தான் முன்பு ஹராம் என்று சொன்ன தமுமுக-வோடும் கைகோர்த்து செயல்படுவதில் அவர்களுக்கு எவ்வித கூச்சமுமில்லை, வெட்கமுமில்லை. ஆனால், மானங்கெட்ட ஜாக்கினர் த.த.ஜ-விற்கு எதிராக செய்யும் இடையூறே பல தருணங்களில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை பிரச்சாரமாக மாறிவிடுகிறது. மாறியும் இருக்கிறது. புகழ் அனைத்தும் இறைவனுக்கே!
உதாரணத்திற்கு தவ்ஹீத் எழுச்சி மாநாடு நடத்துவதற்காக பல விதத்திலும் த.த.ஜ பிரச்சாரம் மேற்கொண்டபோது இந்த ஜாக்கினரும், தமுமுகவினரும் சேர்ந்து பல்வேறு துவேச, அவதூறு பிரச்சாரங்களை வழக்கம்போலவே செய்தனர். அதையும் இறைவன் வழக்கம் போலவே முறியடித்து மாபெரும் மக்கள் வெள்ளத்தை குழுமச்செய்து மாநாட்டை வெற்றி பெறச்செய்தான்.
- காஃபிர்களிடம் கோரிக்கை வைக்கலாமா?
- ஒரு முஸ்லிம் இட ஒதுக்கீடு கேட்கலாமா?
- உணவளிப்பவன் அல்லாஹ், யாருக்கு என்ன கொடுக்க வேண்டுமென்று அவனுக்கு தெரியாதா?
- போராட்டம் செய்யலாமா?
- இஸ்லாத்தில் ஆர்ப்பாட்டம் கூடுமா?
என்றெல்லாம் பள்ளிகள் தோறும் எஸ்.கே உட்பட ஜாக் தாயிகள்! அனைவரும் பிரச்சாரம் செய்தனர். (ஆதாரம் உண்டா என்று கேட்டு விடாதீர்கள். கூடை,கூடையாக ஆதாரம் உள்ளது. அதை அள்ளி கொட்டினால் அதுவே நூறு பக்கங்களை தாண்டும்). ஆனால் அவை அனைத்தையும் மீறி ஏராளமான குமரி மாவட்ட மக்கள் அந்த உரிமை மீட்பு பேரணியில் கலந்து கொண்டனர். குறிப்பாக சொல்வதென்றால், ஜாக் ஆலிம்கள், ஆலிமாக்கள் மற்றும் தமுமுகவின் மாநில நிர்வாகிகளை இன்னும் நல்லவர்களாக எண்ணும் தமுமுகவின் சில நல்ல மாவட்ட,கிளைத்தலைவர்கள் எல்லாம் கூட அந்த உரிமை மீட்பு பேரணியிலே சாரை சாரையாய் கலந்து கொண்டனர்.
செய்யதலி ஃபைஸி.!
யார் இவர்? யாருக்கும் தெரியாது. யாரென்றே அறியப்படாமல் இருந்தவர். சகோ. பி.ஜே அவர்களால்தான் நான் தவ்ஹீதை விளங்கி கொண்டேன் என வெளியே சொல்லிக்கொண்டவர். பிறகு பி.ஜே-யை திட்டுவதாலேயே பிரபலமடைந்தவர். அப்பேர்பட்ட தளபதி தற்போது வகிக்கும் பொறுப்புகள்:
அந்த வகையிலேயே செய்யதலி ஃபைஸி-யும் செயல்பட்டு மேற்கண்ட பொறுப்புகளுக்கு வந்துள்ளார். பொது மேடைகளில் இவர் அவதூறு கூறினால் குமரி டி.என்.டி.ஜே அவரை நார் நாராக கிழித்து விடுமென்பதால் ஜாக்கின் சொத்து என்று ஜாக்கினரால் வாதாடப்படும் பள்ளியின் ஜூம்மா மேடையை பயன்படுத்த ஆரம்பித்தார். தேர்தலில் ஓட்டு கேட்டு ஜாக் பிரச்சாரகர்கள் ஊரெல்லாம் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது, இவர் அதை மறைத்து, ஜூம்மா மேடையில் ததஜவை விமர்சித்து தவ்ஹீத்வாதிகள் தேர்தலில் ஈடுபடலாமா? என்று உரையாற்றினார். மிம்பரிலிருந்து இறங்கியதும் தேர்தலில் சீட் கேட்டு ஜாக் ஆர்ப்பாட்டம் செய்த போட்டோவையும் நாளிதழையும் குமரி டி.என்.டி.ஜே அவரிடம் காட்டி அவரின் சட்டையை பிடித்தபோது 'நோ கமெண்ட்ஸ்' என்று சொன்னவர்தான் இந்த செய்யதலி ஃபைஸி.
யார் அதிகமாக பி.ஜே மீது அவதூறு கூறுகிறார்களோ அவர்களுக்குத்தான் பதவி என்ற அடிப்படையில் மூவருக்கு மாநில தலைமை பதவி வழங்கப்பட்டது. இதுவரை ஜாக்கில் எந்த பொறுப்பிலும் இல்லாத இவரும் அதில் ஒருவர். (ஏர்வாடி சிராஜ், மசூது ஆகியோர் மற்ற இருவர்கள்) ஜாக்கிற்காக ஆரம்பத்தில் உழைத்த எத்தனையோ பேர் இருக்கும்போது சகோ.கமாலுதீன் அவர்களுக்கு பிறகு ஜாக்கின் சொத்துக்களுக்கு ஏகபோக உரிமை கொண்டாட மாநில தலைவராகும் முயற்சியில் முழுவீச்சில் ஈடுபட்டு கொண்டிருக்கிறார் இந்த செய்யதலி ஃபைஸி என்று குமரி மாவட்ட முஸ்லிம்கள் பேசிக்கொள்கிறார்கள்.
ஜனவரியில் த.த.ஜ நடத்திய மாநாட்டிற்கு எப்படி போகலாம் என்று வீடு தேடி வந்து செய்யதலி ஃபைஸி திட்டியதால் மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்த அந்த ஆலிமாவிற்கு அடுத்த ஜூம்மா-வில் செய்யதலி ஃபைஸி ஆற்றிய உரை ஆச்சரியத்தை அளித்தது. அவருக்கு மட்டும் அல்ல பலருக்கும் அது ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஏனெனில், பிப்ரவரி மாதத்தில் நடந்த அந்த ஜூம்மாவில் ஆர்ப்பாட்டம் கூடும், போராட்டம் கூடும், அது நபி வழி, பாதிக்கப் பட்டவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள் போராட சொல்லி இருக்கிறார்கள் என்று வீர வசனம் பேசியதோடு மட்டுமல்லாமல் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திச் சொல்லி கொண்டிருந்தார்.
போராட வேண்டும் என்ற அர்த்தங்களை உள்ளடக்கிய ஹதீஸ்கள் தெரியாததால்தான் முன்பு அப்படி சொல்லிவிட்டார் போலும் என்று அந்த ஆலிமா உட்பட அனைவரும் நினைத்துக் கொண்டு, பரவாயில்லை இப்பொழுதாவது அறிந்து தனது தவறை திருத்திக்கொண்டாரே என்று பெருமூச்சு விட்டனர்.
ஆனால் அன்று, இஸ்லாத்தில் போராட்டம் கூடாது என்று சொன்னது த.த.ஜ ஜனவரியில் நடத்திய முஸ்லிம்களின் உரிமை மீட்பு பேரணிக்கு செல்பவர்களை தடுப்பதற்காக மட்டுமே!.
இன்று போராட்டம் கூடும் என்று சொல்வதோ தமுமுக பெப்ரவரியில் நடத்தவிருக்கின்ற மற்றொரு போராட்டத்திற்கான அனுமதியே என்பது பலருக்கும் தாமதமாகவே புரிந்திருக்கிறது.
'நயவஞ்சகனின் அறிகுறிகள் மூன்று. பேசினால் பொய்யே பேசுவான்; வாக்களித்தால் மீறுவான்; நம்பினால் துரோகம் செய்வான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். (புஹாரி 33)
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார்.
இன்றிருக்கும் நயவஞ்சகர்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நயவஞ்சகர்களை விட மோசமானவர்கள் ஆவர். (ஏனெனில்) அன்று அவர்கள் இரகசியமாகச் செயல்பட்டு வந்தார்கள். இன்றோ இவர்கள் பகிரங்கமாகச் செயல்படுகிறார்கள். (புஹாரி 7113)
1 comment:
அஸ்ஸலாமு அலைக்கும்..,
ஜாக் தாங்களை பற்றி:
// பல்வேறு துவேச, அவதூறு பிரச்சாரங்களை வழக்கம்போலவே செய்தனர்.//
தாங்கள் ஜாக்கை பற்றி:
//அல்லாஹ்வுடைய பள்ளியை தங்களுடைய சொத்தாக கோர்ட்டில் வாதாடினர், ஜூம்மா மேடைகளை தங்களுடைய ஃபித்னா கூடாரமாக ஆக்கினர், அல்லாஹ்வின் தூதர் உணர்ச்சி பூர்வமாய் உரையாற்றிய அந்த மிம்பர் மேடையை பயன்படுத்தி பிறர் மீது அவதூறுகளை அள்ளித் தெளித்தனர் //
இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் கண்டறியுங்கள். ஒற்றுமை இரண்டுமே தவ்ஹீத் அமைப்புதான்.
Post a Comment