Tuesday, July 8, 2008

இந்துக்கடவுள்களும் இறைத்தூதர்களே! – டாக். ஜவாஹிருல்லாவின் கருத்திற்கு குவைத் தமுமுக ஒப்புதல்!

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்..

தவ்ஹீத் பிரச்சாரம் எங்களுடைய வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கிறது என்று கூறி அரசியலில் ஓட்டுப் பொறுக்குவதற்காக தமுமுகவினர் அவ்வப்போது சமுதாயத்திற்கு துரோகம் செய்து வருவதை தமிழக முஸ்லிம்கள் அறிந்துள்ளனர்.

மாநில அரசு தமிழக முஸ்லிம்களுக்கு எப்பேர்ப்பட்ட அநீதி இழைத்தாலும் அதற்கு எதிராக நாங்கள் ஒன்றும் செய்யமாட்டோம் என்று தனது செயல்பாடுகளின் மூலம் டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக ஆரம்பம் முதலே நிரூபித்து வருகிறது.

தமிழக முஸ்லிம்களின் இடஒதுக்கீடு விசயத்தில் தமிழக அரசு செய்த துரோகத்திற்கு எதிராக பேச திராணியற்ற டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக தமிழக அரசோடு இணைந்து தமிழக முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து வருவதை தமிழ்கூறும் நல்லுலகம் நன்றாக அறிந்திருக்கிறது.

இடஒதுக்கீடு விசயத்தில் தமிழக அரசு செய்தது சரிதான் என்று தொலைக்காட்சியில் போட்டி போட்டுக்கொண்டு பேட்டிக்கொடுத்த டாக். ஜவாஹிருல்லாவின் முகத்தில் அடித்தாற்போல் முதல்வர் கருணாநிதியே இடஒதுக்கீடு விசயத்தில் முஸ்லிம்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அதற்கு இன்றுவரை டாக். ஜவாஹிருல்லாவால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. அந்த ஆளுதான் இப்படி பயந்து நடுங்குகிறார் என்றால் அவரது ரசிகர்களால் கூட அதற்கு வியாக்கியானங்கள் தந்து நியாயப்படுத்திட முடியவில்லை.

இப்படி சர்வ சாதாரணமாக முஸ்லிம் சமுதாயத்திற்கு எதிராகவும், ஏகத்துவ கொள்கைக்கு எதிராகவும் துரோகம் செய்து வரும் டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக தனது அரசியல் பிரவேசத்திற்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு தேவை என்பதால் அரசியல் கட்சியினரோடு படுகேவலமான முறையில் சமரசம் செய்து கொண்டும், மாற்று மதத்தினரை கவர வேண்டும் என்பதற்காக இஸ்லாமிய சட்ட திட்டங்களுக்கு எதிராகவும் தற்பொழுது முழுவீச்சில செயல்பட்டு வருகிறது.

இந்திய வரலாற்றில் எந்த ஒரு முஸ்லிம் அரசியல்வாதியும் சொல்லத்துணியாத ஒரு கருத்தை கேவலம் ஒட்டுக்களை பெறுவதற்காக டாக். ஜவாஹிருல்லா தற்பொழுது சொல்லி வருகிறார். இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது என்று டாக். ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்.

இந்துக்கள் இறை அவதாரங்களாக கருதுவது இராமரையும், கிருஷ்ணரையும்தான். அப்படி என்றால் இராமரையும், கிருஷ்ணரையும் டாக். ஜவாஹிருல்லா இறைதூதர்கள் என்று சொல்கிறார். ஜவாஹிருல்லாவிற்கு அரசியல் ஆசையில் அறிவு கொஞ்சம் கொஞ்சமாக மழுங்கி வருகிறது என்பதை இதை பார்ப்பவர்கள் யாவரும் அறிவர். ஆனால், அவரால் மூளை கழுவிவிடப்பட்ட அவரது ரசிகர்கள் இல்லை.. இல்லை.. அவர் சொல்வது சரிதான் என்ற வாதத்தை முன் வைக்கின்றனர்.

குவைத்தில் இருக்கும் தமுமுக-வை சேர்ந்தவர்கள், இந்துக் கடவுளர்களெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைத்தூதர்கள். மற்றவர்கள் ஜின்கள். இதில் குழம்பினால் உலகில் தோன்றிய முதல் மனிதன் முஸ்லிமா இல்லையா? என்று எதிர் கேள்வி கேட்டு முஸ்லிம்களை ஆச்சரிப்படுத்துகிறார்கள். அதற்கு ஆதாரமாக குர்ஆனையும் ஹதீஸையும் விளங்காத அந்த மூடர்கள் எதையும் முன்வைக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

திருக்குர்ஆனில் 25 நபிமார்களின் பெயர்களை குறிப்பிட்டு இவர்களெல்லாம் நபியாக இருந்தனர் என்று இறைவன் குறிப்பிடுகிறான். அப்படியிருக்க, இந்துக்கடவுள்களெல்லாம் குர்ஆனில் சொல்லப்படாத இறைத்தூதர்கள் என்று சொல்வதற்கு குவைத் தமுமுக-வை சேர்ந்த அந்த அறிவுகெட்ட மூடர்கள் கொஞ்சம் கூட அச்சப்படவில்லை.

அல்லாஹ் அவனது திருமறையில் சொல்லாத ஒன்றை, அவனுடைய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அறிவித்துத்தராத ஒன்றை சொல்வதற்கு இந்த துரோகிகளுக்கு எப்படித்தான் தைரியம் வந்ததோ?

அல்லாஹ்வும், அவனது தூதரும் அறிவித்து தராத ஒன்றை நீ எந்த அடிப்படையில் சொல்கிறாய் என்று டாக். ஜவாஹிருல்லாவின் சட்டையை பிடித்து கேட்க தமுமுகவில் ஒருவர் கூடவா இல்லை?

அரசியல் கட்சி ஆரம்பித்து ஓட்டு பொறுக்குவதற்காகவும், சுயநலத்திற்காகவும், தங்களுடைய விருப்பப்படி கையில் மடியில் உள்ளதை போட்டு சொல்வதற்கு இஸ்லாம் என்ன அவர்களின் அப்பன் பாட்டன் வீட்டு சொத்தா?

இஸ்லாம் காட்டித்தராத ஒன்றைச்சொல்லி பிழைப்பு நடத்த வேறு எதாவது தொழில் செய்து பிழைக்கலாமே என்று அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கின்றனர். மந்திரி பதவிக்காக மேடைகளில் நாடகமாடிவரும் டாக். ஜவாஹிருல்லாவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் பதில் சொல்வதற்குதான் வக்குமில்லை, துப்புமில்லை.

15 comments:

அபூ அப்திர்ரஹ்மான் said...

“தமிழக அரசு செய்த துரோகத்திற்கு எதிராக பேச திராணியற்ற டாக். ஜவாஹிருல்லாவின் தமுமுக தமிழக அரசோடு இணைந்து தமிழக முஸ்லிம்களுக்கு துரோகம் செய்து வருவதை”

“குர்ஆனையும் ஹதீஸையும் விளங்காத அந்த மூடர்கள்”

அன்பரே! அஸ்ஸலாமு அலைக்கும். விமர்சனம் என்பது நல்லெண்ணத்துடன் அமையட்டும். முஸ்லிம் சமூகத்துக்கு நலம் நாடு விதத்தில் உங்கள் விமர்சனம் இல்லை. மாறாக துவேசத்தை வளர்ப்பதாக உள்ளன. ஒரு முஸ்லிமைத் திட்டுவது பாவமாகும் என்ற நபிமொழியைப் படிக்கவில்லையா? தவறான கொள்கைகள் விமர்சிக்கப்படவேண்டும். ஆனால் அதில் கண்ணியம் இருக்க வேண்டும். நயவஞ்சகனின் அடையாளமாக நபி (ஸல்) அவர்கள் கூறியது அவன் வாதிட்டால் வரம்பு மீறுவான் என்பதாகும். உங்கள் எழுத்துக்களில் வரம்பு மீறுதல்கள் காணப்படுகின்றன. அவை தேவைதானா? அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றுத் தருமா? என்று சிந்தியுங்கள்.

டாக்டர் ஜவாஹிருல்லாஹ் கூறியது போன்று இந்துக் கடவுள்கள் யாரும் இஸ்லாம் கூறும் இறைதூதர்கள் இல்லை என்ற தலைப்பில் நீங்கள் குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்துடன் கட்டுரை வடித்திருந்தால் நலமாக இருக்கும். அல்லது டாக்டர் ஜவாஹிருல்லாவைத் தொடர்பு கொண்டு எதன் அடிப்படையில் இவ்வாறு கூறினீர்கள் என்று கேட்டிருக்கலாம். அதைவிடுத்து இப்படிப்பட்ட கீழ்தரமான விமர்சனங்கள் தேவையா?

“இஸ்லாம் காட்டித்தராத ஒன்றைச்சொல்லி பிழைப்பு நடத்த வேறு எதாவது தொழில் செய்து பிழைக்கலாமே என்று அறிவு ஜீவிகள் கேள்வி கேட்கின்றனர். மந்திரி பதவிக்காக மேடைகளில் நாடகமாடிவரும் டாக். ஜவாஹிருல்லாவிற்கும், அவரது ரசிகர்களுக்கும் பதில் சொல்வதற்குதான் வக்குமில்லை, துப்புமில்லை.”

யார் அந்த அறிவு ஜீவிகள்? எப்போது அவரைத் தொடர்பு கொண்டு கேட்டனர்?

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

// இஸ்லாம் காட்டித்தராத ஒன்றைச்சொல்லி பிழைப்பு நடத்த // அப்படின்னா நீங்க பிழைப்புக்காகத்தான் இஸ்லாத்தை பரப்பிக்கொண்டிருக்கிறீர்களா.... அடப்பாவிகளா...!

Abutasneem said...

Dear Brother, can you kindly show the evidence that where he said like taht

Kumari Muslim said...

சகோதரர் அபூ அப்திர்ரஹ்மான் அவர்களுக்காக..

உங்கள் எழுத்துக்களில் வரம்பு மீறுதல்கள் காணப்படுகின்றன. அவை தேவைதானா?

இடஒதுக்கீடு விசயத்தில் டாக். ஜவாஹிருல்லா தமிழக அரசோடு இணைந்து துரோகம் செய்தார் என்று சொல்வது கீழ்தரமான விமர்சனமாக உங்களின் மென்மையான இதயத்திற்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவர் சமுதாயத்திற்கு எவ்வளவு பெரிய துரோகத்தை செய்தார் என்பதை கணக்கிட தவறுவதாலேயே தங்களுக்கு இப்படி தெரிந்திருக்கிறது. இன்னபிற இயக்கங்கள் வலிமையாக சுட்டிக்காட்டிய பின்பு தமிழக அரசே தான் செய்த துரோகத்தை ஒப்புக்கொண்டது. இவைகளை சிந்தித்துப்பார்ப்பவர்கள் குமரி முஸ்லிம் வலைப்பூவின் விமர்சனத்தை கீழ்தரமான விமர்சனம் என்றோ அல்லது வரம்பு மீறிய விமர்சனம் என்றோ சொல்ல மாட்டார்கள்.

நிறைவு செய்யப்பட்ட இஸ்லாமிய மார்க்கத்தில் தன் விருப்பம் போல் எதை வேண்டுமானாலும் சொல்ல ஒரு முஸ்லிமிற்கு அனுமதி கிடையாது. அப்படியிருக்க இந்துக்கடவுள்களும் இறைதூதர்கள்தான் என்று உலக ஆதாயங்களுக்காக ஒருவர் சொன்னால் அவரை சமுதாயத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவது சமுதாய நலனில் அக்கறை கொண்டவர்களின் கடமை. சமுதாயத்திடம் வருத்தம் தெரிவித்து இறைவனிடம் மன்னிப்பு கோர வேண்டியவர்கள், நாங்கள் சொன்னது சரிதான் என்று (குவைத் தமுமுக) மென்மேலும் பாவம் இழைக்கிறார்கள். அதனடிப்படையிலேயே அவர்களை குர்ஆனையும் ஹதீஸையும் விளங்காத மூடர்கள் என்று குமரி முஸ்லிம் விமர்சனம் செய்திருக்கிறது. அது நியாயமான விமர்சனம் தானே அன்பரே?

Kumari Muslim said...

சகோதரர் அப்துல் அவர்களுக்காக...

Dear Brother, can you kindly show the evidence that where he said like that?

தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற இதழிற்கு அதன் வாசகர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு டாக். ஜவாஹிருல்லா பதில் கொடுக்கும் போதே இந்த விசமத்தனமான கருத்தை பரப்பியுள்ளார். அதை பெருமையாக அவரது கட்சி இணையதளத்திலும் போட்டிருக்கிறார். தங்களின் வேண்டுகோளுக்கிணங்க அதற்கான லிங்க்கள் கீழே தரப்பட்டுள்ளன.

http://www.tmmk.in/news_images/tx/12A.jpg


http://3.bp.blogspot.com/_SCGkZrALo-g/SFbmwE8SjyI/AAAAAAAAAHc/6xr-VDqkCH0/s1600-h/jawa1.doc.jpg

Kumari Muslim said...

குவைத் தமுமுக என்ற பெயரில் மறுமொழியிடும் மூடருக்காக...

//இஸ்லாம் காட்டித்தராத ஒன்றைச்சொல்லி பிழைப்பு நடத்த// அப்படின்னா நீங்க பிழைப்புக்காகத்தான் இஸ்லாத்தை பரப்பிக்கொண்டிருக்கிறீர்களா.... அடப்பாவிகளா...!

மூடர் யாரை கேட்கிறார் என்று தெளிவில்லை. இருந்தாலும் தூய்மையான முறையில் துணிவோடு இஸ்லாத்தை பரப்புபவர்கள் பிழைப்பிற்காகத்தான் பரப்புகிறார்கள். அது இவ்வுலக வாழ்விற்கு பிறகு ஏற்படக்கூடிய மறுமை வாழ்விற்கான பிழைப்பிற்காக. இவருடைய தலைவர் டாக். ஜவாஹிருல்லா போல் தேர்தலில் பிழைக்க வேண்டும் என்பதற்காக அல்ல. அது மிகவும் கேவலமான பிழைப்பு.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும். குவைத் தமுமுக ஒப்புதல் என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ந்து விட்டோம். உண்மையில் தமுமுகவினராகிய எங்களிடம் தொடர்பு கொள்ளாமல் தாமாகவே குவைத் தமுமுக பெயரில் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுகின்றார். தலைமையும் இவைகளை கண்டுகொள்வதாக இல்லை. மனம்போன போக்கில் அவர் செயல்படுகின்றார்.

அப்துர்ரஹ்மான்

SAMEER AHAMED said...

அஸ்ஸலாமு அலைக்கும்

அறிவுக்கெட்ட இந்த இணையத்தலமே! டாக்டர். ஜவாஹிருல்லாஹ் சுட்டிக்காட்டிய சொல்களுக்கும் நீங்கள் பரப்பிவரும் வதந்திகளுக்கும் சம்பந்தம் இருக்கின்றதா?

அவர் சுட்டிக்காட்டியதிலிருட்ந்து பலரும் உணர்ந்தார்கள், அவர் என்ன சொல்ல முயன்றார் என்று,தெளிவான அறிவினைக்கொண்டு உன்மைகளை கண்டறிய வேண்டும். அதைவித்து,

பல நாசத்தை பரப்பிக்கொண்டிருக்கும் ஒருவரின் வேட்டியை பிடித்து மார்க்கத்தை தனக்கு மட்டும் தனி வழி என்று வசனத்தை பேசும் ஒரு மகாகவி உங்களுக்கெல்லாம். அவரின் தன்மையை ஒரு நாள் நீங்கள் அறிந்தே தீர்வீர்கள். அது மிகவும் நாசமாகவே உங்களுக்கு இருக்கும்.

நீர் உன்மையை பரப்பும் இனையத்தளம் என்றால் நான் முன்பு அனுப்பிய விமர்ச்னங்களை இங்கு சான்றாக்கு இல்லையெனில் நீரும் பொய்யர்களை சார்ந்தவனே! எமக்கும் அறியும் உங்கள் கொட்ட்ங்கள் எது வரைச்சாரும் என்று, விதிமுரையை தாண்டித்தான் நீர் எழுதுவாயின் எமக்கும் அறியும் உன்னை வெளிச்சம் போடுவதற்கு , அன்புடன் , சமீர் , அதிரை.

Kumari Muslim said...

சகோ.அப்துர் ரஹ்மான் அவர்களுக்கு..

அலைக்கும் வஸ்ஸலாம்

//குவைத் தமுமுக ஒப்புதல் என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ந்து விட்டோம்.//

ஏன் அதிர்ந்தீர்கள், குவைத் தமுமுக சொன்னது தவறு என்கிறீர்களா?

குமரி முஸ்லிம்

Kumari Muslim said...

அதிரை அன்பன் சமீர் அவர்களுக்கு,

அலைக்கும் வஸ்ஸலாம் !

தங்களுடைய எந்த மறுமொழியை குமரி முஸ்லிம் அனுமதிக்கவில்லை என்பதை குறிப்பிடுங்கள். அது நாகரீகமாக இருக்கும் பட்சத்தில் குமரி முஸ்லிம் அதை மறுபரிசீலனை செய்யும். தங்கள் தங்களுக்கே சொந்தமான கீழ்தரமான சொற்றொடர்கள் அதில் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதை பிரசுரிக்க முடியாது என்பதை வருத்தத்துடன் குமரி முஸ்லிம் தெரிவித்துக்கொள்கிறது.

விதிமுறையாக நீங்கள் எதை கருதுகிறீர்கள் என்பதை முதலில் சொல்லுங்கள். பிறகு நீங்கள் கூறும் விதிமுறையை தாண்டி குமரி முஸ்லிம் என்ன எழுதியது என்பதையும் ஆதாரங்களுடன் பட்டியலிடுங்கள். நீங்கள் கூறும் விதிமுறையை குமரி முஸ்லிம் ஏற்றுக்கொண்டால் இன்ஷா அல்லாஹ் நீங்கள் சுட்டிக்காட்டும் தவறுகளை தம்மால் முடிந்தவரை குமரி முஸ்லிம் திருத்திக்கொள்ள முயற்சி செய்யும்.

தாங்கள் கோபத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பவராக இருப்பதாலேயே குமரி முஸ்லிமை வெளிச்சம் போட்டுவிடுவேன் என்றும், சற்று வித்தியாசமாக ஒருமையில் அழைத்தும் எழுதியிருக்கிறீர்கள். வெளிச்சத்தில் போடுங்கள் அல்லது இருட்டில் போடுங்கள். உங்களால் முடிந்த எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள். ஆனால் நிதானமாக செய்திகளை உட்கொள்ளவும், நிதானமாக கருத்துக்களை வெளிப்படுத்தவும் பழகிக்கொள்ளுங்கள் என்று மட்டும் குமரி முஸ்லிம் உங்களை கேட்டுக்கொள்கின்றது.

-குமரி முஸ்லிம்

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

ஏற்கனவே சில இந்து புராண மந்திரங்கள் நபிகள் நாயகம் ஸல் இந்து மத வேதங்களில் இறைக்கோட்பாடு
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்கள் இந்து மதத்தின் வேதங்களாகும்.யஜூர் வேதம் (32:3) ---------------------------"ந தஸ்ய ப்ரதிமா அஸ்தி" அவனை உருவகிக்க முடியாது, அவன் தான் தோன்றி. நமது வணக்க வழிபாடுகளுக்கு தகுதியுள்ளவன். உருவமற்ற அவனின் கீர்த்தி மிகப்பெரிது. வானில் உள்ள அத்தனை கோள்களின் இயக்கங்களையும் தன்னகத்தே வைத்துள்ளவன். (தேவிசந்த் - யஜூர் வேதம் பக்கம் 377)அவன் உருவமற்றவன். தூய்மையானவன். ஓளிமயமான உருவமற்ற, காயமற்ற, பாவங்களற்ற, தூய்மையான பாவங்கள் அண்டாத ஞான வடிவானவன். அவன் நித்திய ஜீவன். 40:8(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 538)"அன்தாதம் ப்ரவிசன்த்தியே அசம்புத்தி முபாஸ்தே" இயற்கைப் பொருட்களை வணங்குவோர் இருளில் புகுவர் (காற்று, நீர், நெருப்பை வணங்குவோர்) அவர்கள் மேலும் இருளில் மூழ்குவர். எவர் படைக்கப்பட்ட பொருளை வணங்குகிறாரோ (மரம் சூரியன், சிலை வணங்குவோர்) இருளில் மூழ்குவர். 40:9(யஜீர்வேத சம்ஹிதா- ரால்ப் வு.ர். கிரிப்ட் பக்கம் 538)அதர்வண வேதம் (20:58:3)(புத்தகம் 20, அத்தியாயம் 58, சுலோகம் 3)'தேவ் மஹா ஓசி" கடவுள் மகா பெரியவன்குர்ஆன் கூறுகிறது:...அவன் மிகவும் பெரியவன் மிகவும் உயர்ந்தவன் (13:9)ரிக் வேதம் (1:164:46) மிகப் பழம்பெரும் வேதம், ரிக்வேதம் கற்றறிந்த துறவிகள் ஓரிறையை பல பெயர் கொண்டு அழைத்தனர். அவர்கள் கடவுளை வருணன், இந்திரன், மித்திரன், சூரியன், அக்னி என பல பெயர்களில் அழைத்தனர். இவை அனைத்தும் அவனின் தன்மைகளை சிறப்பை உணர்த்துவதாக இருந்தன. கடவுளின் 33 தன்மைகளை ரிக் வேதம் குறிப்பிடுகிறது. அதில் ஒரு தன்மை பிரம்மா(படைப்பவன்) என்ற தன்மையை 2:1:3ல் குறிப்பிடுகிறது.குறிப்பு: இஸ்லாம் படைக்கும் தன்மையை "காலிக்" எனக் கூறுகிறது. ஆனால் சிலர் கூறுகிற பிரம்மாவுக்கு 4-தலைகளும் 4-கைகளும் உண்டு, என்ற இத்தோற்றத்தை உருவகத்தை இஸ்லாம் மறுக்கிறது. மேலும் யஜூர் வேதத்தின் 32:3-ன் கூற்றுப்படி ''அவனை உருவகிக்க முடியாது" என்ற சுலோகத்ததுக்கும் ப்ரம்மாவுக்கு 4-தலைகளும், 4-கைகளும் உள்ளன என்ற வாதம் முரண்படுகின்றது.ரிக் வேதம் (2:2:3)விஷ்ணு-பாதுகாப்பவன், உணவளிப்பவன் எனும் கடவுளின் தன்மையைக் கூறுகிறது. இஸ்லாம் இத்தன்மையை ''ரப்" என அரபியில் அழகுபட கூறுகிறது. ஆனால் சிலர் கூற்றுப்டி விஷ்ணு 4 கரங்களைக் கொண்டவன் ஒரு கையில் சக்கரம் மற்றொரு கையில் சூலம், பறவையை வாகனமாய் கொண்டவன் என்று உருவகப்படுத்துவதை இஸ்லாம் மறுக்கிறது.குறிப்பு:- யஜூர் வேதத்தின் 40:8ன் படி அவன் உருவமற்றவன் என்ற விளக்கத்திற்கு முரணானது.ரிக் வேதம் (8:1:1)''மா சிதான்யதியா ஷன்ஸதா" அவனையன்றி யாரையும் வணங்காதீர்கள், அவன் மட்டுமே வணக்கத்திற்குரியவன்.(ரிக் வேத சம்ஹிதி 9-ம்பாகம், பக்கம் 1, 2 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)ரிக் வேதம் (5:81:1)படைக்கும் அவன் மிகப்பெரும் கீர்த்தியாளன்.(ரிக்வேத 6-ம்பாகம், பக்கம் 1802, 1803 சத்ய ப்ரகாஷ் சரஸ்வதி)குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)ரிக் வேதம் (3:34:1)கடவுள் மிகப்பெரும் கொடைத் தன்மை கொண்டவன் எனக் கூறுகிறது.குர்ஆன் கூறுகிறது: (அவன்) அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் (1:2)யஜூர் வேதத்தின் (40:160)எங்களை நல்வழியில் செலுத்து. எங்களின் பாவங்களைப் போக்கு, பாவங்கள் நரகில் சேர்க்கும் ''யஜூர் வெது சம்ஹிதி-ராலப்" (யஜீர்வேத சம்ஹிதி- ரால்ப் T.H. கிரிப்ட் பக்கம் 541)குர்ஆன் கூறுகிறது: நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!, அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல. நெறி தவறியோர் வழியுமல்ல. (குர்ஆன் 1:5, 6&7)ரிக் வேதம் (6:45:16)''யா எக்கா இட்டமுஸ்ததி" தனித்தவனான இணையற்ற அவனுக்கு எல்லாபுகழும்.இந்து வேதாந்தமான பிரம்ம சூத்திரம்''ஏகம் ப்ரஹம் த்வித்ய நாஸ்தே எநன் நா நாங்தே கின்சான்" கடவுள் ஒருவனே, இருவர் இல்லை, இல்லவே இல்லை! இல்லவே இல்லை. சிறிது கூட இல்லை!ஆக இந்து வேதங்கள், புராணங்களைக் கற்றறிந்தால் கூட ஓரிறைக் கொள்கை உறுதியாகக் கூறப்பட்டதை நன்கு உணரலாம்.இப்படி மற்ற மதங்களும் அல்லாஹ் ஒருவன் என்றும் அவனை அல்லாது மற்றதை கல்லை,மரத்தை வேறு எதையும் வணக்குதல் கூடாது என்றும் மட்டுமே கூறி இருக்க,அன்புள்ளம் கொண்ட இந்து நண்பர்களே,சிந்தியுங்கள்.உங்கள் முன் எடுத்துக்காட்டப்படுவது அனைத்தும் இந்து மத வேத நூல்களில் உள்ளவைதாம்.சந்தேகமிருப்பின் சமஸ்கிருத வேத விற்பன்னர்களிடம் கேட்டு உண்மை படுத்திக்கொள்ளுங்கள்.வாருங்கள் நண்பர்களே,நாம் எல்லாரும் ஒன்றுகூடி நம் அனைவரையும் படைத்த ஒரே அல்லாஹ்வை வணங்குவோம் மறுமையில் சுவனத்தை சுவைப்போம்,இன்ஷா அல்லாஹ்.

அன்பு குமரிமுஸ்லீம் அவர்களே.., மேலுள்ளதை விளங்கிகொள்ளுங்கள். அல்லாஹ்வைத்தான் இந்துக்கள் அவர்கள் கடவுளர்களாக மாற்றி விட்டார்கள். உருவங்களும், உடல்களும் கொடுத்துவிட்டார்கள். இதைத்தான் டாக்டர். ஜவாஹிருல்லாஹ் கூறியிறுப்பார். இதை படித்து தான் குவைத்தமுமுகவும் ஒப்புதல் அளித்தது. பிஜெவுக்கு உங்களைப்போன்றவர்கள் ஜால்ரா, உங்களுக்கு
//அஸ்ஸலாமு அலைக்கும். குவைத் தமுமுக ஒப்புதல் என்ற செய்தியை பார்த்ததும் அதிர்ந்து விட்டோம். உண்மையில் தமுமுகவினராகிய எங்களிடம் தொடர்பு கொள்ளாமல் தாமாகவே குவைத் தமுமுக பெயரில் செய்திகளையும் விமர்சனங்களையும் வெளியிடுகின்றார். தலைமையும் இவைகளை கண்டுகொள்வதாக இல்லை. மனம்போன போக்கில் அவர் செயல்படுகின்றார்.

அப்துர்ரஹ்மான்//
இவர்கள் ஜால்ராக்கள். இவர் என்ன குவைத் நிர்வாகியா, இல்லை உண்மை தமுமுககாரரா. போலிகளையும், துரோகிகளையும் அடையாளம் காட்டும் பணிக்கு தலைமை முழு சுதந்திரம் கொடுத்துள்ளது. அப்துல்ரஹ்மான் மாதிரி போலிகளை அல்லாஹ் எப்படி காண்பித்து கொடுக்கின்றான் பாருங்கள்.
மேலுள்ள விளக்கத்தை அறியாமையிலிருக்கும் அபுநூறாவுக்கும் விளக்குங்கள். நீங்கள் சொன்னால் தான் அவர் கேட்பார். இந்த பதிவு இங்கு பதியப்படும் என்று நம்புகின்றேன். பிறகு உங்கள் இஷ்டம்.

ABU NOORA said...

Mr. Amanulla.
இன்னவர் சொன்னால் இன்னவர் கேட்பார் என்ற ரெக்கமன்டேஷன் தத்துவம் வேண்டுமானால் தமுமுகவுக்கும் திமுகவுக்கும் இருக்கலாம். அதற்காக அடுத்தவர் மூலமாக தூது விட வேண்டிய நிலை அமானுல்லாவுக்கு. நம்மை பொறுத்தவரை நல்லதைச் சொன்னால் கேட்கவேண்டும். அல்லதைச் சொன்னால் தட்டிக்கேட்க வேண்டும் என்ற கொள்கையுடையவன். எனவே யார் நல்லதைச் சொன்னாலும் ஏற்றுக் கொள்வேன். ஏன். அமானுல்லா கூட நல்லதை சொல்லத்துவங்கினால் அதை ஒப்புக்கொள்ளும் பக்குவம் நமக்குண்டு!
Abu Noora

Unknown said...

அன்பான தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் அவர்களுக்கு,
கீழே உள்ள உங்கள் தலைவர் செய்தியை பாருங்கள்..

**இஸ்லாம் கூறும் இறைதூதரின் நோக்கமும் இந்து மதம் கூறும் இறை அவதாரத்தின் நோக்கமும் ஒன்றாக இருப்பதிலிருந்து இறை தூதர்களைத்தான் இந்துக்கள் இறை அவதாரங்கள் என்கிறார்கள் என்று விளங்கி கொள்ள முடிகிறது என்று டாக். ஜவாஹிருல்லா கூறியிருக்கிறார்**

அன்பர்களே, ஒரு முறைக்கு இரு முறை படியுங்கள்.

உங்கள் தலைவராவது இராமனையும், கிருஷ்ணனையும் நபி என்றார். ஆனால் நீங்கள் சிறிதும் தயங்காமல் அல்லாஹ் என்று குர்ஆன் வசனங்களை உங்கள் வசதிக்கு இப்படி அநியாயமாக வழைத்து எழுதி இருக்கிறீர்கள்.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடாதீர்கள். அது பெரும் குற்றம். அது நரகில் கொண்டு போய் உங்களை சேர்க்கும். நீங்கள் இவ்வளவு தெளிவாக புரிந்து வைத்துள்ளீர்கள் தவரானதை....

எந்த மனிதர்களும் யாருக்கும் உதவிடாத அந்த நாளை கண்டு அஞ்சிக்கொள்ளுங்கள்.
முடிந்தாள் மீண்டும் ஒரு முறை படித்து பாருங்கள், ஏனெனில் அது தமிழில்தான் எழுதப்பட்டது.
கண்மூடித்தணமாக செயல்படாதீர்கள். அது உங்கள் ஈமானை திண்றுவிடும். ஒரு முறை சிந்தித்து பாருங்கள் அதுவே உங்களுக்கு சால சிறந்தது.

அல்லாஹ் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பனாக....(ஆமீன்)
வஸ்ஸலாம்.

மு.அமீர் ஹூஸைன்.

Unknown said...

அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்பார்ந்த குமரி முஸ்லீம் இணைய சகோதரர்களே..

நான் எழுதிய (குவைத் தமுமுக) விமர்சனத்தில் ஸலாம் கூற மறந்து விட்டேன். தயவு செய்து எனக்காக எழுதி விடுங்கள்.

வஸ்ஸலாம்
மு.அமீர் ஹூஸைன்.

Unknown said...

Assalamu Alaikkum to All.

Try to publish you original name and address.

when we open the website, the contact detail is displayed skmadhani@gmail.com. but this JAQH president's ID. Why do you foolish others.

Are you a Muslim?


If so, please provide a evidence from Quarn or Hadees that, is this the correct way of spread Islam (DAWA). If you are a real muslim, please drop all this nonsence and use your web knowledge to DAWA.
you have no rights to talk about others.
May Allah Bless you.

Abdullah.