Sunday, September 7, 2008

கருணாநிதியின் காவல்துறை முஸ்லிம்களுக்கு எதிராக நடத்திய அராஜகம்.

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இரத்தக்காட்டேறியாக முஸ்லிம்களின் இரத்தத்தை குடிப்பதற்காக காத்துக்கொண்டிருக்கும் கருணாநிதியின் காவல்துறை, அவ்வபோது முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போட்டு அதை தணித்துக் கொண்டு இருந்து வருகிறது. கோவை கலவரத்திற்கு பிறகு முஸ்லிம்களை துவம்சம் செய்ய சரியான சந்தர்ப்பங்கள் எதுவும் அமையவில்லையே என்ற ஏக்கம் கருணாநிதியின் காவல்துறைக்கு நெடுநாட்களாக இருந்து வந்துள்ளது என்பது சமீபத்தில் வேலூரில் முஸ்லிம்கள் மீது நடத்திய காட்டுத்தனமான தாக்குதலின் மூலம் தெரிய வருகிறது.

சங்பரிவாரத்தின் ஊதுகுழலாக செயல்படும் 'தினமலம்' என்ற பத்திரிகை முஸ்லிம்களை கேலி செய்தும், பயங்கரவாதியாக சித்தரித்தும் அடிக்கடி செய்திகள் வெளியிட்டு வருவது அதனுடைய வாடிக்கை. இதனால், பெரும்பாலான முஸ்லிம்கள், இப்பத்திரிக்கையை புறக்கணித்து வருகின்றனர்.

முஸ்லிம்களை எவ்வாறு சீண்டிய போதும் அவர்கள் நம்மை கண்டு கொள்ளவில்லையே என்று கருதிய 'தினமலம் நாளிதழ்', முஸ்லிம்கள் தங்கள் உயிரினும் மேலாக நேசிக்கும் முஹம்மது நபி (ஸல்) அவர்களை வரைந்து கேலி செய்தது. இச்செய்தி முஸ்லிம்களிடம் தீயென பரவியது. அதனையொட்டி வெகுண்டெழுந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், த.த.ஜ, தமுமுக, மனித நீதி பாசறை, சுன்னத் வல் ஜமாஅத், முஸ்லிம் லீக் என்ற தங்களுடைய இயக்க வேறுபாடுகளையெல்லாம் மறந்து, பொதுமக்களுடன் வேலூரில் 'தினமலம்' பத்திரிகை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

இது போன்ற ஒரு தருணத்திற்காக காத்திருந்த கருணாநிதியின் காவல்துறையினர், ஒரு சமுதாயத்தின் கண்ணியமிக்க தலைவரை, உலக முஸ்லிம்கள் அனைவராலும் உயிருக்கும் மேலாக மதிக்கக்கூடிய முஹம்மது நபி (ஸல்) அவர்களை அவமதித்த பார்ப்பன கும்பலை சேர்ந்த அயோக்கியர்களால் நடத்தப்படும் தினமலம் பத்திரிகை ஆசிரியரை கைது செய்து, நாயை போல அடித்து நடுத்தெருவில் இழுத்துச் செல்வதற்கு பதிலாக, முஸ்லிம்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலை தொடுத்துள்ளனர்.

நாங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய தலைவரை அவமதித்த பத்திரிகையின் மீது நடவடிக்கை எடு என கோரிக்கை கோஷமெழுப்பிய முஸ்லிம்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தடியடி நடத்தியுள்ளனர். பொதுவாக கூட்டத்தை கலைப்பதற்கு காவல்துறையினரால் லேசான முறையில் தடியடி நடத்தப்படுவது வழக்கமான ஒன்றுதான். ஆனால் வேலூரில் கருணாநிதியின் காவல் துறையால் நடத்தப்பட்ட தடியடி, திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டுள்ளதாகத்தான் கருத முடிகிறது. ஏனெனில் தடியடி நடத்திய போலீஸாரின் கண்களில் கொலைவெறியை பார்க்க முடிந்தது.

ஒரே அடியில் இவனை கொன்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னுடைய சக்தியையெல்லாம் ஒன்று திரட்டி, இரண்டு கைகளாலும் தடியை பிடித்து, தன் தலைக்கு மேல் உயர்த்தி படுவேகமாக ஒரு முஸ்லிம் சகோதரனின் நடு மண்டையிலே 'நச்' என்று அடித்த காட்சியை தொலைக்காட்சியில் பார்த்த எவரும் இந்த கருணாநிதியின் காவல்துறையினரை சபிக்காமல் இருக்க மாட்டார்கள். பாவம் அடிவாங்கிய அச்சகோதரர் தற்பொழுது என்ன நிலையில் உள்ளாரோ என்று தெரியவில்லை.

போலீஸாரின் அடியால் கீழே தடுமாறி விழுந்தவர்கள் ஐயோ, அம்மா என்று கதறியபோதும், கருணாநிதியின் காவல்துறையினா,அவர்களை தனது பூட்ஸ் கால்களால் சரமாரியாக மிதித்து துவம்சம் செய்தனர்.

சில சகோதரர்களை நாயை இழுத்து செல்வது போல தரதரவென இழுத்து சென்றனர்.

ஒரு முஸ்லிம் சகோதரனை ஐந்து போலீஸார் சுற்றி நின்று அடித்த காட்சி கண்களில் நீரை வரவழைத்தது.

தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்ட ஒரு நிமிட இச்செய்தியிலேயே இத்தனை கொடூரம் என்றால், சம்பவம் நடைபெற்ற இடம் எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்று நினைக்கும் பொழுது நல்லவர்களின் நெஞ்சம் சற்று கனக்கவே செய்யும். இவ்வளவு கொடூரமான முறையில் தாக்குதல் தொடுக்கும் அளவிற்கு முஸ்லிம்களாகிய நாங்கள் செய்த தவறுதான் என்ன?
காவல்துறையின் கொடூர தாக்குதல்களில் சில...










உச்சந்தலையில் ஓங்கி அடிக்கும் கயவர்கள்



ஏவி விடப்பட்ட நாய்களைப்போல் நடந்து கொண்ட கருணாநிதியின் இக்காவல்துறையினர் இவ்வராஜகத்தின் வழியாக மற்றொரு செய்தியையும் பதிவு செய்ய முயற்சி செய்திருக்கின்றனர். முஸ்லிம்களாகிய நீங்கள் என்னதான் நேர்மையாக நடந்து கொண்டாலும் நாங்கள் உங்களை காவு கொடுக்காமல் விடமாட்டோம் என்பதே அச்செய்தி.

தோளில் கைபோட்டு இனிக்க இனிக்க பேசி படுகுழியில் தள்ளிவிடுவது கருணாநிதியின் வாடிக்கையான ஒன்றுதானே? அப்பேர்பட்ட முஸ்லிம்களின் பாதுகாவலரான(!?) கருணாநிதியின் பொறுப்பில் உள்ள காவல்துறையின் இச்செயல் குறித்து கருணாநிதி என்ன செய்ய போகிறார்? என்று அனைவரும் காத்திருக்க, அவரோ காவல்துறை குறித்து அருமையான(!?) ஒரு செய்தியை நாளிதழ்களுக்கு கொடுத்துள்ளார்.

தமிழக காவல்துறை தனது 150-வது ஆண்டில் அடியெடுத்து வைப்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறேன். சிறப்பு மிக்க வரலாற்றிற்கும், பாரம்பரியத்திற்கும் சொந்தமான தமிழக காவல் துறை, தனது சீரிய மக்கள் பணியிலும், திறமையிலும் உலக காவல்துறை வரிசையில் உயரிய இடத்தைப் பெற்று வந்துள்ளது என்றால், அது மிகையாகாது என்று 07-09-2008 அன்றைய நாளிதழ்களுக்கு செய்தி கொடுத்துள்ளார். கருணாநிதி இப்படித்தான் செய்தி கொடுப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. ஏனெனில் சாமானிய மக்களின் உணர்வுகளும் அவர்களுடைய வலிகளும் அவருக்கு தெரியுமா என்ன?

குடும்பச்சண்டை காரணமாக மதுரையில் சில உயிர்கள் போக காரணமாயிருந்த கருணாநிதியின் மகனையும், அதனையொட்டி பல்வேறு காட்டுமிராண்டித்தனத்தையும் செய்த அவரது கட்சி ஆதரவாளர்களையும் கருணாநிதியின் பொறுப்பில் உள்ள காவல்துறை இதுபோன்று நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கருணாநிதிக்கு இவ்வராஜகத்தின் அளவு என்ன என்பது தெரிந்திருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு கருணாநிதி மரணமடைந்துவிட்டார் என்ற வதந்தி பரப்பப்பட்டு அதனையொட்டி சில ஊர்களில் அவரது கழக கண்மணிகள் அராஜகத்திலும், பொதுச் சொத்திற்கு சேதம் ஏற்படுத்தவும் செய்தனர். அப்பொழுது அப்பகுத்தறிவு(!?)வாதிகளை நோக்கி இக்காவல்துறையின் லத்திகள் சுழற்றியிருந்தால் கருணாநிதிக்கு முஸ்லிம்களின் இந்த வலி என்னவென்று தெரிந்திருக்கும்.

கருணாநிதியின் இரயில் மறியல் போராட்டத்தை, கள்ளக்குடியில் புகுந்த கருணாநிதி வாழ்கவே என்று கூத்தாடிகளின் பின்னணி பாடகர் நாகூர் ஹனீபா பாட்டு பாடி சிலாகித்தார். நின்றுவிட்ட இரயில் முன்பு படுத்து இரயில் மறியல் செய்த தியாகி(!?) கருணாநிதியை அப்பொழுது அங்கிருந்த காவல்துறையினர் இதுபோன்று நாயை அடிப்பதுபோல் அடித்து இழுத்துச் சென்றிருந்தால் கருணாநிதிக்கு முஸ்லிம்களின் மனதில் ஏற்பட்டுள்ள ரணத்திற்கு என்ன மருந்து தரலாம் என்று தெரிந்திருக்கும்.

கருணாநிதி பா.ஜ.க.வோடு உறவு கொண்டிருந்த காலத்தில் பா.ஜ.க.வை திருப்திபடுத்துவதற்காக தமிழக முஸ்லிம்களை சொல்லொணாத் துன்பங்களுக்கு ஆளாக்கினார். யாரோ ஓரிருவர் செய்த தவறுகளைகூட மொத்த சமுதாயத்தின் மீதும் திணிக்க முயற்சி செய்தார். பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் படைத்த இறைவனிடம் கையேந்தியது. ஐந்து ஆண்டு காலம் ஆட்சியில் இருக்கும் கேவலம் ஒரு அரசியல்வாதிக்கு இத்தனை அகங்காரமும், வலிமையும் இருந்தால் ஆதி முதல் அழிவுநாள் கடந்தும் ஆட்சி செய்யப்போகும் எல்லாம் வல்ல அல்லாஹ்விற்கு எத்தனை வலிமை இருக்க வேண்டும். கருணாநிதியின் ஆட்சி மண்ணைக் கவ்வியதும் அந்த இறைவன் அவருக்கு மிகப்பெரிய இழிவை கடந்த ஆட்சியில் ஏற்படுத்தினான். அய்யோ.. கொல்றாங்கோ.. கொல்றாங்கோ.. என்று கருணாநிதி கூவிக்கூவி கத்தியதை இந்த சமுதாயம் சப்தமில்லாமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தது.

அதே வழியில் இந்த புனித ரமலான் மாதத்தில் பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயம் அந்த வலிமைமிக்க அல்லாஹ்விடம் கையேந்த வேண்டும். அப்பொழுது கீழ்கண்ட பிரார்த்தனைகளையும் நினைவில் நிறுத்தி உள்ளச்சத்தோடு அந்த ரப்பிடம் நாம் கேட்டால் அல்லாஹ் நாடினால் இந்த பாவிகளை தண்டிப்பான்.

இறைவா! எங்களுடைய பாவங்களை மன்னிப்பாயாக!

எங்கள் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய இறுதித்தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் குறித்து கேலி செய்யும் அனைத்து அயோக்கியர்களையும் இறைவா நாங்கள் உன் பொறுப்பில் விட்டுவிடுகிறோம். அவர்களுக்குரியதை அவர்களுக்கு கொடுப்பாயாக!

அகில உலகிற்கும் அருட்கொடையாய் வந்துதித்த முஹம்மது நபி (ஸல்) அவர்களை கேலி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் செய்த முஸ்லிம்கள் மீது தடியடி என்ற பெயரில் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் தொடுத்தவர்கள் மீதும் அதற்கு காரணமாக இருந்தவர்கள் மீதும் குறிப்பாக காவல்துறையை தன் பொறுப்பில் வைத்துள்ள கருணாநிதி மீதும் இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
இறைவா நீ உன் பிடியை இறுக்குவாயாக..
வீடியோ காட்சிகள் :

மிருகத்தனமான அடி

ஒரு முஸ்லிம் சகோதரனின் அலறல்

No comments: