Thursday, December 18, 2008

மேலப்பாளையம் முஸ்லிம் பெண்கள் மீது அவதூறு

ஏகன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

மஸ்ஜிதுகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகிறான், ஆனால் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனியோ இல்லை இல்லை அவை அனைத்தும் எங்களுடைய சொத்து என்று கூறிவருகிறது. இதன் காரணமாக ஆங்காங்கே தொழுகை நடக்கும் பள்ளிவாசல்களை பூட்டுவதையும் வழக்கு தொடர்வதையும் கமாலுதீன் மதனி அண்ட் கம்பெனி வழக்கமாக கொண்டுள்ளது.

பாபர் மஸ்ஜிதை இடித்துவிட்டு இன்னும் இடிக்க வேண்டிய பள்ளிகள் மூவாயிரம் உள்ளன என்று சங்பரிவார் கூறுவதை போல, கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக், மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மான் போன்ற பல பள்ளிவாசல்களை கைப்பற்றுவது அல்லது பூட்டுவது என்ற முயற்சியில் இறங்கிய ஜாக், குமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி தவ்ஹீத் மர்கஸ், பிர்தௌஸியா நகரிலுள்ள தவ்ஹீத் மர்கஸ், புதுத்தெரு மஸ்ஜிதுல் அஷ்ரஃப் போன்ற பல பள்ளிவாசல்கள் தங்களுடைய கைப்பற்ற வேண்டிய பட்டியலில் இருப்பதாகவும் கூறுகிறது. அவற்றை அபகரிக்க, ஆதாரங்களை பலமாக்க, முன்னரே தயாராகிவிட்டது. பல ஆண்டுகளாக ஜாக்கின் மௌலவிதான் இமாமாக இருக்கிறார் என்று கடையநல்லூர் மஸ்ஜிதுல் முபாரக்கில் உமரியை ஆதாரமாக காட்டியது போல் இந்த பள்ளிகளிலும் தங்களுடைய மௌலவிகளை தொழவைக்க செய்து வருகின்றது.

இன்னும் (இஸ்லாம் மார்க்கத்திற்குத்) தீங்கிழைக்கவும், குஃப்ருக்கு (நிராகரிப்புக்கு) உதவி செய்யவும், முஃமின்களிடையே பிளவு உண்டுபண்ணவும், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாய்ப் போர்புரிந்தவர்களுக்கு புகலிடமாகவும் ஆக்க ஒரு மஸ்ஜிதை முன்னர் நிறுவியவர்கள்; ''நாங்கள் நல்லதையே யன்றி (வேறொன்றும்) விரும்பவில்லை'' என்று நிச்சயமாகச் சத்தியம் செய்வார்கள் - ஆனால் அவர்கள் நிச்சயமாகப் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ்வே சாட்சியம் கூறுகிறான். (திருக்குர்ஆன் 9:107)

சொத்துக்காக அடித்துக் கொள்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும், பள்ளிவாசலில் தொழுகையை தடை செய்யாதவரைக்கும் ஓ.கே.

ஆனால், மேலப்பாளையம் மஸ்ஜித் முபாரக்கை அபகரிக்க அல்லது பூட்ட முயற்சித்த ஜாக், மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை மிகவும் அசிங்கப்படுத்தியுள்ள விபரம் நம் கவனத்திற்கு வந்துள்ளது.


'மேலப்பாளையத்தில் ஜாக் பள்ளிவாசலை அபகரிக்க ததஜ சதி' என அல்ஜன்னத்தில் எழுதியுள்ள கமாலுதீன் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

'தற்போது மேலப்பாளையம் மஸ்ஜிதுல் ரஹ்மானில் உரியவர்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காக பெண்கள், பிள்ளைகளுடன் பள்ளியில் குடியிருக்கின்றனர். அங்கேயே சமையல் காரியங்களை செய்து வருகின்றனர். மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனர்.'

அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006

நிச்சயமாக பொய்யை இட்டுக் கட்டுவதெல்லாம் அல்லாஹ்வின் வசனங்களை நம்பாதவர்கள் தாம்; இன்னும் அவர்கள் தாம் பொய்யர்கள். (திருக்குர்ஆன் 16:105)

நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (திருக்குர்ஆன் 2:42)

அன்றைய தினத்தில் எந்த பெண்களுமே மஸ்ஜிதுர் ரஹ்மானில் இல்லை, பெண்கள் தங்குவதற்கு இது தர்ஹா அல்ல, அல்லாஹ்வின் பள்ளி இது. அல்லாஹ்வின் பள்ளியில் பெண்கள் தங்குவதற்கு ரமலான் கடைசி பத்தில் மட்டுமே அனுமதி உண்டு. ஆனால் இந்த சம்பவம் நடந்தது ரமலான் கடைசி பத்திலும் அல்ல என்று மேலப்பாளையம் ஊர்மக்கள் கூறுகின்றனர். ஆனால், பெண்களை பள்ளிவாசலில் குடிவைத்ததாக ஜாக்கின் கமாலுதீன் சொல்கிறார். மேலும் ததஜ பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருப்பதாகவும் கமாலுதீன் சொல்கிறார்.

பெண்களை வைத்து தவறான வழக்கு என்றால் என்ன?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை படுக்கைக்கு அழைத்தார்கள் என்று அந்த மேலப்பாளையம் தவ்ஹீத் சகோதரிகளை வைத்து வழக்கு தொடருவதற்காக, ததஜ அப்பெண்களை பள்ளிவாசலில் வைத்திருந்ததா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்கள் கையை பிடித்து இழுத்தார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நாங்கள் பள்ளிவாசலில் தங்கி இருந்தபோது வெளியூரிலிருந்து வந்த கமாலுதீன் மதனியும் அவருடைய ஆட்களும் எங்களை பள்ளிவாசலில் வைத்து கற்பழித்து விட்டார்கள் என்று சொல்லி வழக்கு தொடர்வதற்காகவா?

• நடத்தை கெட்ட பெண்கள் கூட இப்படி ஒரு அபாண்டத்தை கூற அஞ்சுவார்களே?

• இப்படி சொல்லக்கூடியவர்கள் தவ்ஹீத்வாதிகளாக இருக்க முடியுமா?

அல்லாஹ் மூமின்களைப்பற்றி குறிப்பிடும் போது,

'அன்றியும், அவர்கள் பொய் சாட்சி சொல்லமாட்டார்கள்;. மேலும், அவர்கள் வீணான காரிய(ம் நடக்கும் இட)த்தின் பக்கம் செல்வார்களாயின் கண்ணியமானவராக (ஒதுங்கிச்) சென்றுவிடுவார்கள் (திருக்குர்ஆன் 25:72) என்று கூறுகிறான்.

ஆனால், மேலப்பாளையம் தவ்ஹீத் பெண்கள் நடத்தை கெட்டவர்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களையே இழிவுபடுத்திக் கொள்ளக்கூடிய அளவிற்கு பொய்சாட்சி சொல்லக்கூடியவர்கள் தான் மேலப்பாளையம் பெண்கள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

தங்களின் மானத்தை அடகு வைத்து பொய்வழக்கு தொடருபவர்கள் தான் மேலப்பாளையம் முஸ்லிம் சகோதரிகள் என்று சொல்கிறாரா கமாலுதீன்!

நிச்சயமாக இவர்கள் சொல்லில் வெறுக்கத்தக்கதையும், பொய்யானதையுமே கூறுகிறார்கள் - ஆனால் நிச்சயமாக அல்லாஹ் மிகவும் பொறுப்பவன், மிகவும் மன்னிப்பவன்.
(திருக்குர்ஆன் 58:2)

அவர்களுடைய இதயங்களில் ஒரு நோயுள்ளது, அல்லாஹ் (அந்த) நோயை அவர்களுக்கு இன்னும் அதிகமாக்கி விட்டான்;. மேலும் அவர்கள் பொய்சொல்லும் காரணத்தினால் அவர்களுக்குத் துன்பந்தரும் வேதனையும் உண்டு. (திருக்குர்ஆன் 2:10)

நம்முடைய மேலப்பாளையம் முஸ்லிம் பெண்களை இவ்வளவு தரம் தாழ்த்தி கூறி இருக்கிறார். அதைக் கண்டு கொதித்தெழுந்து கமாலுதீனை கண்டிக்க வேண்டிய முஸ்லிம் சமுதாயம், இது ஏதோ கோஷ்டி சண்டை என எண்ணி மௌனமாக இருந்துள்ளது.

தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த கமாலுதீன் இன்று மனோ இச்சைக்குக் கட்டுப்பட்டு கப்ரு வணங்கிகளோடு கைகோர்த்துக் கொண்டும் மார்க்கப் பிரச்சாரத்தை விட மார்க்கத்தின் பெயரால் சொத்து சேர்ப்பதையே பிரதானமாகவும் கொண்டுள்ளதால் சத்தியம் அவருடைய கண்களை மறைக்கின்றது.

(இத்தகைய பொய்யர்கள் அனுபவிப்பதெல்லாம்) சொற்ப இன்பம் தான்; (மறுமையிலோ) அவர்களுக்கு நோவினை செய்யும் வேதனையுண்டு. (திருக்குர்ஆன் 16:117)

ஆனால் (அவர்களில் எவர்) தவ்பா செய்து ஈமானுங் கொண்டு, ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கிறார்களோ - அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் நன்மையாக மாற்றிவிடுவான். மேலும், அல்லாஹ் மிக்க மன்னிப்போனாகவும், மிக்க கிருபையுடையோனாகவும் இருக்கின்றான். (திருக்குர்ஆன் 25:70)

இன்னும், எவர் தவ்பா செய்து ஸாலிஹான (நற்) செய்கைகள் செய்கின்றாரோ, அவர் நிச்சயமாக அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடியாவராவார். (திருக்குர்ஆன் 25:71)

17 comments:

ABU NOORA said...

//தமிழகத்தில் தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமானவர்களில் ஒருவராக இருந்த கமாலுதீன்//

வன்மையாக இதை மறுக்கின்றேன். தமிழகத்தில் எழுச்சி ஏற்பட்டபோது கமாலுத்தீன் மதனி சில காலங்கள் அதில் பங்கு கொண்டார் என்பதே பொருத்தமானதாக அமையும்.

கோட்டாறு கமாலுத்தீன் மதனி என்பவர் இங்கு (கோட்டாறில்) குத்பிய்யத்தைப்பற்றி காரசாரமாக பேசவேண்டாம் என்று பி ஜெவிடம் கூறி அவர் அதை மறுத்து சத்தியத்தை சொல்ல தயக்கமென்ன? என்ற நோக்கத்தில் பி ஜெ உரையாற்றிய பிறகுதான் மாற்றங்கள் வளர்ச்சிகள் பிரச்சினை என்ற பெயரில் ஆரம்பித்தது!

அதன் பிறகு கைகால் நடுங்கியவராக பி ஜே வை அழைத்து உங்களால்தான் மக்கள் கொந்தளித்து நிற்கின்றார்கள் என்றெல்லாம் ஒப்பாரி வைத்ததும் அவர்தான்.

அதைத் தொடர்ந்துதான் விவாதமும் நடந்தது.

ஆக அவர் எழுச்சிக்கு காரணமானவர் என்று கூறுவது தவறு! மாறாக சில தேவையற்ற பிரிவினைக்கு காரணமானவர் என்று கூறினால் அதை ஒப்புக்கொள்ளலாம்.

Unknown said...

\எங்களை படுக்கைக்கு அழைத்தார்கள்\

\எங்கள் கையை பிடித்து இழுத்தார்கள்\

\எங்களை பள்ளிவாசலில் வைத்து கற்பழித்து விட்டார்கள்\

இதுபோன்ற சொற்றொடர்கள் கண்டனத்திற்குறியதும், கண்டிப்பாக தவிர்க்க வேண்டியதும் ஆகும். நீங்கள் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஆதரவானவரோ, அனுதாபியோ அல்லது எதிரானவரோ என்பதை உங்களுடைய கட்டுரைகளால் எடை போட முடியவில்லை.

தவ்ஹீத் ஜமாஅத்திற்கு எதிராக இருப்பவர்களை நீங்கள் விமர்சிப்பதால் சில விவரங்கெட்டதுகள் கண்மூடித்தனமாக தவ்ஹீத் ஜமாஅத் மீது புழுதி வாறி தூற்றுவதற்கு ஏதுவாகத்தான் மேற்கண்ட சொற்றொடர்கள் அமைந்துள்ளது. அதுபோன்ற விவரங்கெட்டதுகள் வரிசையில் நீங்கள் இல்லை என்றால் இறைவனுக்கு அஞ்சி இவ்விழிவான சொற்றொடர்களை பயன்படுத்துவதிலிருந்தும் விலகி இருக்கும்படி அன்போடு எச்சரிக்கிறேன்.

asd said...

சகோ. முஹமதின் கருத்து முற்றிலும் ஏற்கப்பட வேண்டிய ஒன்றே. அவர்கள் ஒற்றை வரியில் சொன்னதை பிரச்சனையாக மாற்றுவதற்காகவே இவ்வளவு விரிவுரையும் தந்து எழுதியிருக்கின்றனர். கண்ணியம் குறைந்த வார்த்தைகளை விளம்பரப்படுத்துவதன் மூலம் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது.

இயக்க வெறி முற்றிப் போய்விட்டதாலேயே
இன்னொரு நண்பர் கமாலுத்தீன் மதனிக்கு பிரிவினைவாதி என்று பட்டமும் தந்துள்ளார். இவைகள் களையப்படும் முன் எந்த சமுதாய நலனும் ஏற்படாது என்பதை ஏனோ கவனிக்கத் தவறிவிடுகின்றார்கள்

shahul said...

Assalamu Alaikkum,

I accept Abu Noora Comments

shahul said...

ASSALAMU ALAIKKUM,

I accept ABU NOORA COMMENTS

bremadasa said...

salam.

Dear Brother (S),

The issue belongs to August 2006 (அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006).

Why Kumari Muslim take this after 2 + years?

What is the intention behind it ??

Kamaludin & co's idea may different from your's but your words (Sorpirayogam)
(எங்களை படுக்கைக்கு அழைத்தார்கள்

எங்கள் கையை பிடித்து இழுத்தார்கள்

எங்களை பள்ளிவாசலில் வைத்து கற்பழித்து விட்டார்கள்) will harm them (our sisters) like anything.

be polite...

Point out it in gentle manner.

Our intention & comments sud be attract them to the right path (Haq) & it sud not harm anyone.

Zadakallahu iLma (May Allah increase ur knowledge)

Jazakallah Khairan.

Kumari Muslim said...

அபு நூறா அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

ஜாக் இயக்கத்தின் மாநில தலைவர் கமாலுதீன் மதனி சிலதேவையற்ற பிரிவினைக்கு காரணமானவர் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. மேலும் அவருடைய கண்ணியமற்ற விமர்சனங்களாலும் அவதூறுகளாலும் தான் ஒன்றுபட முடியாமல் இருக்கின்றோம்.

ஆனால், அவர் தவ்ஹீத் எழுச்சிக்கு காரணமாக இருந்தவர்களில் ஒருவர் என்று நாம் குறிப்பிட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளீர்கள். அவர் மட்டுமே காரணம் என்றோ அவர்தான் முக்கிய காரணம் என்றோ நாம் அதில் குறிப்பிடவில்லை. அன்றைய தவ்ஹீத் சகோதரர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார். அல்ஜன்னத்தின் ஆசிரியராக இருந்து பி.ஜே எழுதிய புத்தகங்களின் வெளியீட்டளராக கமாலுதீன் மதனி இருந்தார். இது போன்ற பல காரணங்களால் தான் நாம் அவ்வாறு எழுதினோம். பீ.ஜேயை போல சத்தியத்தை போட்டு உடைக்காமல் சொந்த ஊர் ஆயிற்றே கொஞ்சம் கொஞ்சமாக மாற்றுவோம் எனக் கருதி இருந்திருக்கலாம்.

ஆரம்ப காலங்களில் அவரும் உறுதியாகத் தான் இருந்தார். நாட்கள் செல்லச் செல்ல பீ.ஜேயின் மீது கொண்ட கோபம் காரணமாக குர்ஆனையும் ஹதீஸையும் மறுக்கும் அளவிற்கு சென்றுவிட்டார். அதற்கு காரணம் அவரோடு இருக்கும் சுயநலவாதிகள் தான். சவுதி அரேபியாவிலுள்ள ஜாலியாத்திற்கு வேலைக்கு செல்ல வேண்டுமானால் தமிழகத்தை பொறுத்தவரை கமாலுதீன் மதனியின் பரிந்துரை வேண்டும். அதனால் சவுதிக்கு செல்ல விரும்பும் மௌலவிகள் அவரை தாஜா செய்தே ஆகவேண்டும். ஊரிலிருக்கும் மௌலவிகள் அவரை தாஜா செய்தால்தான் அவருடைய பள்ளியில் (அல்லாஹ்வின் பள்ளி) இமாமாக நீடிக்க முடியும். மௌலவிகள் அல்லாத மற்றவர்களோ பள்ளிவாசல் நிர்வாக பொறுப்புக்காக அவருக்கு ஜால்ரா போடுகின்றனர். இவர்களெல்லாம் கமாலுதீன் மதனியின் காலத்திற்கு பிறகு சொத்திற்காக அடிபோடுவதை விரைவில் நாம் பார்க்கத் தான் போகின்றோம்(அல்லாஹ் நமக்கு மரணத்தை தரவில்லை என்றால்).

எனவே ஒற்றுமை ஒற்றுமை என வாயளவில் கூறும் கமாலுதீன் மதனி அதை நிறுத்திவிட்டு செயல் வடிவம் ஆக்கும் பொருட்டு குர்ஆன் ஹதீஸை யார் சொன்னாலும் ஏற்பேன் எனும் நிலைக்கு வந்துவிட்டால் இன்ஷர் அல்லாஹ் நம் சமுதாயம் ஒன்றுபடும். அதை விட்டு விட்டு பீ.ஜேயை எதிர்க்க வேண்டும் என்பதற்காக கப்ரு வணங்கிகளையும் கப்ரு வணக்கத்தை ஆதரிக்கும் தமுமுகவையும் கூட்டு சேர்த்தால் மறுமையில் கமாலுதீன் மதனியும் கூட்டத்தாரும் கைசேதப்பட வேண்டி வரும்.

அவர்களுக்காக நாம் இறைவனை இறைஞ்சுவோம்.

கமாலுதீன் மதனியின் வரம்பு மீறிய அவதூறுகளால் நீங்கள் கொதிப்படைந்துள்ளதை நாங்களும் உணருகிறோம். அதற்காக துவக்க காலத்தில் அவருக்கு இருந்த இறையச்சத்தை நாம் குறைத்து மதிப்பிக்கூடாது.

குமரி முஸ்லிம்

Kumari Muslim said...

சகோதரர் முஹம்மது அவர்களுக்கு

அஸ்ஸலாமு அலைக்கும்

//இறைவனுக்கு அஞ்சி இவ்விழிவான சொற்றொடர்களை பயன்படுத்துவதிலிருந்தும் விலகி இருக்கும்படி அன்போடு எச்சரிக்கிறேன்//

நீங்கள் எழுதிய இந்த வாசகம் எங்களை மிகவும் பாதித்தது. நிச்சயமாக தவிர்ப்போம் இன்ஷh அல்லாஹ்!

ஆனால்,

//மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனர்.'

அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006//

என்று எழுதியதன் அர்த்தம் இதுவாகத்தான் இருக்கும் என்ற எண்ணத்திலும் அதை மக்களுக்கு உணர்த்தி இவர்களை அடையாளம் காட்ட வேண்டும் என்ற எண்ணத்திலும் அவ்வாறு எழுதினோம். நீங்கள் விமர்சிக்கின்றீர்கள் நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் அவர்கள் எழுதியதற்கு எந்த விமர்சனமும் இல்லை, மறுப்பும் இல்லை என்பதையும் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகின்றோம்.

உங்கள் அறிவுறுத்தலுக்கு நன்றி!

எங்களுக்காக துஆ செய்யுங்கள்.

குமரி முஸ்லிம்

Kumari Muslim said...

சகோதரர் பிரேமதாஸா அவர்களுக்கு!

அஸ்ஸலாமு அலைக்கும்

ஆகஸ்ட் 2006 ல் வெளிவந்ததை இப்போது ஏன் வெளியிட்டுள்ளீர்கள் என்று கேட்டுள்ளீர்கள்.

2006 ல் வெளிவந்ததற்கு நீங்கள் ஏதேனும் மறுப்பு தெரிவித்திருந்தீர்களா?

அன்று கமாலுதீன் மதனியால் மேலப்பாளையம் பெண்களுக்கு ஏற்படுத்தப் பட்ட களங்கம் இன்று வரை களையப்பட வில்லை. ஆனால் நாங்கள்தான் சத்தியவான்கள் எங்கள் இயக்கத்தை தவிர மற்றவர்கள் எல்லாம் பாவிகள். குற்றம் செய்தவர்கள் என்று பிரச்சாரம் செய்கிறார் கமாலுதீன் மதனி. சொத்துக்காக எதையும் செய்ய தயாராகிவிட்ட கமாலுதீனை அடையாள படுத்த வேண்டுமென்பதற்காவே தற்போது இதை வெளியிடுகிறோம். இரண்டு வருடங்களுக்கு முன்னர் செய்த அநியாயம் இன்று நியாயமாகி விடுமா?


அடுத்ததாக கமாலுதீன் மதனியின் வார்த்தை பிரயோகம் வேறு . நீங்கள் கடுமையான வார்த்தையை உபயோகித்துள்ளீர்கள் என்று கூறியுள்ளீர்கள். அவர்கள் செய்ய இருந்ததை நாங்கள் சொல்லி இருக்கிறோம். செய்தவர்களை விட்டுவிட்டு செய்தியை சொன்ன எங்களை கோபித்தால் எப்படி?

'குஜராத்தில் சங்பரிவார கொடுங்கோலர்கள் முஸ்லிம் பெண்களை கற்பழித்து சின்னாபின்ன மாக்கினார்கள்' என்பது உங்களுக்கு கடுமையாக தெரிகிறது என்பதற்காக 'குஜராத்தில் சங்பரிவார் முஸ்லிம் பெண்களிடம் சுகம் அனுபவித்தது' என்று சொன்னால் நீங்கள் சந்தோஷப்படுவீர்களா?

//மீறி உள்ளே வருபவர்கள் மீது பெண்களை வைத்து தவறான வழக்கு தொடரலாம் என்ற திட்டத்தில் இருக்கின்றனர்.'

அல் ஜன்னத் - ஆகஸ்ட் 2006//

என்று கமாலுதீன் சொன்னதன் அர்த்தம் என்ன என்று உங்களின் கூடுதலான அறிவை பயன்படுத்தி எங்களுக்கு சொன்னால் நாங்கள் திருத்திக் கொள்கிறோம்.

எங்கள் அறிவு வளர இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

உங்களுக்கும் இறைவன் அதற்கான கூலியை வழங்குவானாக!

குமரி முஸ்லிம்

ABU NOORA said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ. அப்துல் அவர்களே!

எண்ணங்கள் என்னவாகிலும் எழுத்துக்கள் எதிரொலித்திருக்கின்றது.

நீங்கள் சொன்ன இரண்டாம் பாராவை நான் முழுவதுமாக ஒப்புக்கொள்கின்றேன். அனைத்துத் தவ்ஹீத் ஜமாஅத் என்ற இயக்கத்தைக் கலைத்துவிடுகின்றோம். அது போன்று ஜாக் என்ற இயக்கத்தின் சர்வாதிகாரியாக இருக்கும் கமாலுத்தீன் மதனியும் பரிவாரங்களும் தத்தம் பதவிகளைத் துறக்கட்டும். பொதுமக்கள் புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கட்டும். அதிலும் கூட பழையவர்கள் போட்டியிடாமல் புதியவர்களுக்கு பாதை அமைக்கட்டும் என்று எல்லோருக்கும் பொருந்தும் யோசனையை அன்னு முன்மொழிந்தனர் இன்றைய தவ்ஹீத் ஜமாஅத்தினர்.

தனது நாற்காலி காலி ஆவதை கனவில் கூட எண்ண நினைக்காத கமாலுத்தீன் மதனி அதற்கு சொன்ன பதிலிருக்கின்றதே அதுதான் இயக்க வெறி.

எனவே உங்கள் எண்ணங்கள் எப்படியிருந்தாலும் வார்த்தைகள் வசமாகவே வந்திருக்கின்றது. உங்கள் பாராவில் சிலருக்கு புரியாமல் போன - மறைந்திருப்பதாக நான் கருதும் வார்த்தைகளையும் மொடுக்காக இணைத்து இதில் தருகின்றேன்.

ஜாக் தலைவரின்இயக்க வெறி முற்றிப் போய்விட்டதாலேயே
இன்னொரு நண்பர் கமாலுத்தீன் மதனிக்கு பிரிவினைவாதி என்று பட்டமும் தந்துள்ளார். ஜாக் மற்றும் பிற இமைப்புகள் கொண்டிருக்கும் இறுமாப்பு முரண்டுகள்....இவைகள் களையப்படும் முன் எந்த சமுதாய நலனும் ஏற்படாது என்பதை ஏனோ கவனிக்கத் தவறிவிடுகின்றார்கள்

அதுதான் மீண்டும் உண்மை!

ABU NOORA said...

அலைக்கும் அஸ்ஸலாம் வரஹ்... குமரியாரே!

நான் சொல்ல வந்த கருத்துக்களையே விரிவாக்கம் செய்திருக்கின்றீர்கள்.

கமாலுத்தீன்மதனி செய்த பணிகளை அவரது பாணியில்தான் பரிபாஷை செய்தோமேயொழிய நாமாக எதையும் கற்பனை செய்யவில்லை! அவர் செய்த பணிகள் சேவைகள் என எத்தனை நூறு வேண்டுமானாலும் இருக்கட்டும். அவைகளை அள்ளி விழுங்கும் பணிகளை பின்னர் அவர் கையிலெடுத்திருப்பதன் மூலம் முந்தைய பணிகள் எல்லாம் பிணிகளாகவன்றோ மாறிவிட்டிருக்கின்றது? அதுதான் நமது கவலை!

எனவே ஒருவர் எத்தனை நன்மை வேண்டுமானாலும் செய்யட்டும். பின்னாட்களில் செய்யப்படுபவைகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்படும். அதாவது இதையே யாரும் திரித்து எழுதாமலிருக்க வேண்டுமென்றால் ஒருவன் செய்திருந்த நன்மைகளை பின்னர் செய்யும் தீமைகள் தின்றுவிடும் என்பதே பொருத்தமாக அமையும். அந்த அடிப்படையில் ஆரம்பத்தில் நாம் காண அவர் நடந்ததை குறையாக குறிப்பிட்டதோடு பின்னர் உருவாக்கிய பிரிவினைகள் இடைப்பட்ட காலத்தில் அவர் என்னதான் செய்திருந்தாலும் அவைகள் எதுவும் நம் கண்முன் பயனற்றதாகவே இருக்கும்.

அடுத்து ஒரு தவறான வாதத்தை வைத்திருக்கின்றீர்கள். அதாவது

//அதற்காக துவக்க காலத்தில் அவருக்கு இருந்த இறையச்சத்தை நாம் குறைத்து மதிப்பிக்கூடாது.//

என்று.

அல்லாஹ் நம்மைப் பாதுகாக்கட்டும். அவரது என்றல்ல! யாருடையவும் இறையச்சத்தை துவக்க காலம் என்றோ நிகழ்காலம் என்றோ எதையும் மதிப்பிடும் அருகதையோ அனுமதியோ வேறு எந்த நபருக்கும் இல்லை! ஒருவேளை அவரிடம் நம்மைவிடவெல்லாம் அதிகமதிகம் இறையச்சம் நிறைந்திருக்கும். நாம் அளவிடுவதென்பது அவரது வெளிப்படையான செயல்பாடுகளை மட்டும்தான். எனவே அந்த வாதத்தை நாம் என்று இணைத்திருப்பதை நான் - நீங்கள் என்று பிரிப்பதற்காகக் கூட உங்களிடம் கேட்கமாட்டேன். அடியோடு மாற்றிவிடுங்கள் என்றே கூறுவேன். சாதாரணமான ஒன்றல்ல!

ஒரு மனிதனிடம் இறையச்சத்தின் வெளிப்பாடாக இருப்பதென்பது கோபத்தை மென்று விழுங்குவதும் வறுமையிலும் இறைவன் பால் செலவிடுவதுமாகும் என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான். இதன் மூலம் அடுத்தவர்களை வைத்து மதிப்பிடுவதற்காக அல்ல! தன்னைத்தான் இறையச்சமுள்ளவன் என்று தெரிந்து உணர்ந்து மென்மேலும் அந்த இறையச்சத்தை அதிகப்படுத்திக் கொள்வதற்காகத்தான். எனவே பிறரது இறையச்சத்தை அளப்பதற்காகவோ கணிப்பதற்காகவோ நாம் முற்படும்போது அதன் மூலம் தமக்கு இருக்கும் இறையச்சத்தை வெளிப்படுத்துவதாகத்தான் ஆகிவிடும்.

இறையச்சம் என்பது பிறருக்கு காண்பிப்பதற்கான ஒன்றல்ல! பிறரது இறையச்சமும் கணக்கிடுவதற்கான ஒன்றல்ல! எனவே இறைவனின் அதிகாரத்தை கையிலெடுக்கும் எந்த காரியத்தையும் நான் செய்ததாகத் தெரியவில்லை! தெரிந்திருந்தால் சுட்டுங்கள். திருத்துகின்றேன். நீங்களும் அவ்வாறே நடந்து கொள்ளுங்கள்.

இறைவனை அதிகமதிகம் அஞ்சும் நபர்களில் நம்மையும் கமாலுத்தீன் மதனியையும் அல்லாஹ் ஆக்கியருளட்டும்.

asd said...

அலைக்கும் அஸ்ஸலாம்.

நண்பரின் வார்த்தை ஜாலம் நன்றாக உள்ளது. "அமைப்புகள்" என்பதற்கு "இமைப்புகள்" என்று எழுதியிருக்கின்றீர்கள். தெரியாமல் வந்துவிட்டதா அல்லது வேறு பொருளை வைத்திருக்கின்றீர்களா என்பது புதிராக உள்ளது!

பாராட்டுக்கள்.

Unknown said...

//சொத்துக்காக அடித்துக் கொள்பவர்கள் அடித்துக் கொள்ளட்டும், பள்ளிவாசலில் தொழுகையை தடை செய்யாதவரைக்கும் ஓ.கே//

1. கோயம்புத்தூர் குண்டு வழக்கில் பக்கம் பக்கமாகச் சொந்தச் சகோதரர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது??

2. சொந்தச் சகோதரர்களுக்கு எதிராக இஸ்லாம் காண்பித்துத் தராத விதத்தில் முபாஹலா என்ற சாபமிடும் நிகழ்ச்சியை இஸ்லாத்தின் பெயரைக் கூறியே நடத்தியது??

3. இஸ்லாத்தின் அடிப்படையான "சுவர்க்கம் படைக்கப்பட்டதை மறுக்கும் விதத்தில்" தனது குர் ஆன் மொழிபெயர்ப்பில் "இனி சுவர்க்கம் படைக்கப்படும்" என்றது??

4. கடையநல்லூர் பள்ளிவாசலில் சுப்ஹு தொழுகையின் போது ஜமாஅத்தில் இமாமுக்கும் வரிசயின் ஊடாகவும் தொழாமல் அமர்ந்து இருந்து அல்லாஹ்வுக்கான இபாதத்திலேயே அநியாயம் இழைத்தது??

5. நபி(ஸல்) அவர்கள் இளைப்பாற அமர்ந்திருக்கும் நேரத்தில் அவர்களிடம் இருந்த குறைந்தபட்ச ஆடையில் சிறிது விலகி அவர்களின் தொடை வெளியில் தெரிந்ததை ஆதாரமாகக் காட்டி, தொழுகையில் முட்டுகால் மறைக்க வேண்டிய அவசியம் இன்றி டவுசர் போட்டும் தொழலாம் என பத்வா கொடுத்தது??

6. மக்கா பள்ளியில் தொழ வைக்கும் இமாம் குர் ஆன் ஓதும் பொழுது அழுகிறாரே? என்ற கேள்விக்கு, "இறைவனின் வசனத்தைக் கேட்பவர்களின் கண்களிலிருந்து நீர் வடிவதைக் காண்பீர், என்ற வசனத்தின் படி கண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் கண்ணீர் விடுவது நம்பும்படி இல்லை" என ஒரு காஃபிர் கூட சொல்லாத வார்த்தையைக் கூரியது??

7. "ஒரே இருக்கையில் அன்னிய பெண்ணருகே ஒட்டி உரசி அமர்ந்து பயணம் செய்த பாக்கரை நிர்வாகத்திலிருந்து மாற்றி விட்டு அதற்கு நியாயம் கூறும் வகையில் ஒரு வீடியோவை "அப்படிம்மா, இப்படிம்மா" என விவரம் கெட்டரீதியில் ஒரு விளக்கம் கொடுத்து இவர்கள் இணையதளத்தில் ஏற்றி விட்டு விட்டு, பின்னர் பாக்கர் மாற்றம் தனக்கு வினையாக வருகிறது என தெரிந்தவுடன் பல சால்ஜாப்புகளைக் கூறி திரும்பவும் அவரை நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டமை(இது தான் "தௌஹீத் ஜமாஅத்தின்" தரம்). சம்பந்தப்பட்ட விளக்க வீடியோவை இணையதளத்திலிருந்து எடுத்து மாற்றியமை??

8. சுனாமிக்காகப் பிரித்த பணத்துக்கான கணக்கில், "உணர்வு விளம்பரத்துக்கு இத்தனை, தொண்டர்படைக்கு தொப்பி, பனியன், ஜட்டி இன்னபிற வாங்கியமைக்கு இத்தனை" என அமானிதத்தின் மீது எவ்வித பயமும் இன்றி கணக்கு காண்பித்து மந்தைகளை முட்டாளாக்கி விட்டு தங்களை யோக்கியசிகாமணிகள் போன்று காண்பித்தமை??

ABU NOORA said...

நன்றி!

என்பது கி ருக்கின்றது. வ்வளவே! தில் ரண்டு ர்த்தம் ல்லவே ல்லை!

Unknown said...

என் கேள்விக்கென்ன பதில்?????????????

1. கோயம்புத்தூர் குண்டு வழக்கில் பக்கம் பக்கமாகச் சொந்தச் சகோதரர்களுக்கு எதிராக வாக்குமூலம் கொடுத்தது??

2. சொந்தச் சகோதரர்களுக்கு எதிராக இஸ்லாம் காண்பித்துத் தராத விதத்தில் முபாஹலா என்ற சாபமிடும் நிகழ்ச்சியை இஸ்லாத்தின் பெயரைக் கூறியே நடத்தியது??

3. இஸ்லாத்தின் அடிப்படையான "சுவர்க்கம் படைக்கப்பட்டதை மறுக்கும் விதத்தில்" தனது குர் ஆன் மொழிபெயர்ப்பில் "இனி சுவர்க்கம் படைக்கப்படும்" என்றது??

4. கடையநல்லூர் பள்ளிவாசலில் சுப்ஹு தொழுகையின் போது ஜமாஅத்தில் இமாமுக்கும் வரிசயின் ஊடாகவும் தொழாமல் அமர்ந்து இருந்து அல்லாஹ்வுக்கான இபாதத்திலேயே அநியாயம் இழைத்தது??

5. நபி(ஸல்) அவர்கள் இளைப்பாற அமர்ந்திருக்கும் நேரத்தில் அவர்களிடம் இருந்த குறைந்தபட்ச ஆடையில் சிறிது விலகி அவர்களின் தொடை வெளியில் தெரிந்ததை ஆதாரமாகக் காட்டி, தொழுகையில் முட்டுகால் மறைக்க வேண்டிய அவசியம் இன்றி டவுசர் போட்டும் தொழலாம் என பத்வா கொடுத்தது??

6. மக்கா பள்ளியில் தொழ வைக்கும் இமாம் குர் ஆன் ஓதும் பொழுது அழுகிறாரே? என்ற கேள்விக்கு, "இறைவனின் வசனத்தைக் கேட்பவர்களின் கண்களிலிருந்து நீர் வடிவதைக் காண்பீர், என்ற வசனத்தின் படி கண்ணீர் வர வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் கண்ணீர் விடுவது நம்பும்படி இல்லை" என ஒரு காஃபிர் கூட சொல்லாத வார்த்தையைக் கூரியது??

7. "ஒரே இருக்கையில் அன்னிய பெண்ணருகே ஒட்டி உரசி அமர்ந்து பயணம் செய்த பாக்கரை நிர்வாகத்திலிருந்து மாற்றி விட்டு அதற்கு நியாயம் கூறும் வகையில் ஒரு வீடியோவை "அப்படிம்மா, இப்படிம்மா" என விவரம் கெட்டரீதியில் ஒரு விளக்கம் கொடுத்து இவர்கள் இணையதளத்தில் ஏற்றி விட்டு விட்டு, பின்னர் பாக்கர் மாற்றம் தனக்கு வினையாக வருகிறது என தெரிந்தவுடன் பல சால்ஜாப்புகளைக் கூறி திரும்பவும் அவரை நிர்வாகத்தில் இணைத்துக் கொண்டமை(இது தான் "தௌஹீத் ஜமாஅத்தின்" தரம்). சம்பந்தப்பட்ட விளக்க வீடியோவை இணையதளத்திலிருந்து எடுத்து மாற்றியமை??

8. சுனாமிக்காகப் பிரித்த பணத்துக்கான கணக்கில், "உணர்வு விளம்பரத்துக்கு இத்தனை, தொண்டர்படைக்கு தொப்பி, பனியன், ஜட்டி இன்னபிற வாங்கியமைக்கு இத்தனை" என அமானிதத்தின் மீது எவ்வித பயமும் இன்றி கணக்கு காண்பித்து மந்தைகளை முட்டாளாக்கி விட்டு தங்களை யோக்கியசிகாமணிகள் போன்று காண்பித்தமை?

முதுகெலும்புள்ளவர்களிடம் பதில் இருக்கின்றதா?

Ansari said...

Mr.Muqrin,
Don't just abuse on your own way...
First say what is your answer for his quran translation or where he said to wear trousers in prayers....
Don't think you r asking questions smart but i think just you are bloughing....
Am expecting reply for your questions with you soon...

Ansari said...

கேள்வி கேட்க்க தயாரா ?
என் கேள்விக்கு என்ன பதில் என்று ஒருவர் குமரி முஸ்லீமின் இனையத்தளத்தில் COMMENT போஸ்ட் செய்து இருந்தார் அந்த சகோதருக்கு ஒரு வேண்டுகோள்.
தவ்ஹீத் ஜமாத்திடம் கேள்வி கேட்க்க இந்த இனையத்தளம் இடம் இல்லை. மாறாக உங்களுக்கு திராணி இருந்தால் இப்படி மறைமுகமாக கேள்வி கேட்காமல் தைரியமாக எழுத்து மூலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅதின் தலைமையிடம் "என் கேள்விக்கு என்ன பதில்" என்று குமரி முஸ்லீம் இனையதளத்தில் போஸ்ட் செய்ததை லட்டர் மூலம்
30,அரண்மனைகாரன் தெரு,
மண்னடி,
சென்னை 600001

என்ற முகவரிக்கு அனுப்பி கேட்க்கட்டும் உங்கள் கேள்விக்கு என்ன பதில் என்பதை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைமை கூறும்.
குறிப்பு : உங்கள் உண்மையான பெயர் மற்றும் முகவரியுடன் அனுப்ப வேண்டும் (மொபைல் நம்பரையும் சேர்த்து.....)